என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேவிட் சந்துர்ஸ்கி"

    • இரு தரப்புக்கும் சரிசம அளவில் ஆடுகளம் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.
    • கடந்த முறை இந்திய அணி இங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதால் கூடுதல் நம்பிக்கையோடு களம் இறங்குவார்கள்.

    பிரிஸ்பேன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது. கடந்த முறை இந்திய அணி இங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதால் கூடுதல் நம்பிக்கையோடு களம் இறங்குவார்கள்.

    பிரிஸ்பேன் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது குறித்து பிட்ச் பராமரிப்பாளர் டேவிட் சந்துர்ஸ்கி கூறுகையில், 'ஒவ்வொரு முறையும் இந்த ஆடுகளத்தை நல்ல வேகத்துடன், பவுன்ஸ் இருக்கும் வகையிலேயே தயாரிக்கிறோம். கப்பா ஆடுகளம் என்றாலே வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வேகமும், பவுன்சும் இருக்கும் என்பதை அறிவார்கள். அந்த பாரம்பரிய தன்மை மாறாமல் அப்படியே இந்த முறையும் அமைக்க முயற்சிக்கிறோம்.

    பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் இரு தரப்புக்கும் சரிசம அளவில் ஆடுகளம் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். எல்லாவற்றுக்கும் ஏற்றது போல் இருக்கும் என நம்புகிறேன். கடந்த இரு நாட்கள் இங்கு மழை பெய்துள்ளது. ஆனால் போட்டிக்கு 3 நாட்கள் இருப்பதால் அதற்குள் ஆடுகளத்தை சரியான முறையில் தயார் செய்து விடுவோம் ' என்றார்.

    ×