search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாகிர் உசைன்"

    • பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் உடல்நலக் குறைவால் காலமானார்.
    • அவருக்கு ஒடிசா மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் சிற்பம் வரைந்து அஞ்சலி செலுத்தினார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    இதற்கிடையே, பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசைன் (73), உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஜாகிர் உசைன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகளவில் உள்ள திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மணல் சிற்பல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஜாகிர் உசைனுக்கு மணல் சிற்பம் வரைந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதில் தபேலாவின் சக்கரவர்த்தி என்ற வாரத்தைகளையும், தபேலாக்களையும் சிற்பமாக வரைந்துள்ளார்.

    • ஜாகிர் உசைன் நான்கு முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார்.
    • ஜாகிர் உசைன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.

    பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்தவர் ஆவார். நெஞ்சுவலி காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜாகிர் உசைன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசைன் நான்கு முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஜாகிர் உசேனுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான பதிவில் அவர், "ஜாகிர் பாய், அவர் சீக்கிரமே சென்றுவிட்டார், எனினும், அவர் தனது கலையின் மூலம் விட்டுச் சென்றவை மற்றும் அவர் நமக்கு கொடுத்த பொன்னான காலத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.நன்றி," குறிப்பிட்டுள்ளார். 

    ×