என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவன் கல்யாண்"

    • பாகிஸ்தானின் தாக்குதலின் போது ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி உயிரிழந்தார்.
    • பவன் கல்யாண் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஆந்திராவை சேரந்த முடவத் முரணி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணைந்தவர்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலின் போது உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக்கின் உடலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், முரளியின் குடும்பத்திற்கு பவன் கல்யாண் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

    • பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் மீது ஒரு வலுவான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    திருப்பதி:

    பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சிந்தூர் ஆபரேஷன் குறித்து ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் கூறியதாவது:-

    பஹல்காம் தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த 2 பேர் இறந்து உள்ளனர். பயங்கரவாதிகளின் தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது பாராட்டத்தக்கது.

    பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் மீது ஒரு வலுவான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.

    இந்த நேரத்தில் கட்சி வேறுபாடுகளை மறந்து மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். சமூக வலைதளங்களில் சிந்தூர் ஆபரேஷன் குறித்து நாட்டிற்கு எதிராக கருத்து தெரிவிக்க கூடாது.

    செல்வாக்கு மிக்கவர்கள் தங்கள் விருப்பப்படி பேசக்கூடாது. எல்லை மீறினால் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்.

    பிரதமர் மோடி தலைமையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடந்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    மியான்மரில் நடந்து வரும் உள்ளூர் போர் காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி பல்வேறு நகரங்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.

    அவர்களால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள ரோஹிங்கியாக்களை தொடர்ந்து மாநில அரசு கண்காணிக்க வேண்டும்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலுங்கானா முதல் மந்திரி இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது ஆயுதப்படைகள் பாராட்டத்தக்க செயலை செய்துள்ளது.
    • இது நீடித்த போருக்கான நேரம். இஸ்ரேலை போல இந்தியா தீர்க்கமான தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை சுமார் 25 நிமிடத்திற்குள் இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 24 தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    பயங்கரவாதிகளை ஒழிக்க மத்திய அரசுடன் ஒன்றிணைந்து நிற்போம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஆந்திர மாநில துணை முதல்வரான பவன் கல்யாண், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை வீழ்த்துவதில் இஸ்ரேலை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பவன் கல்யாண் கூறியதாவது:-

    நமது ஆயுதப்படைகள் பாராட்டத்தக்க செயலை செய்துள்ளது. இது நீடித்த போருக்கான நேரம். இஸ்ரேலை போல இந்தியா தீர்க்கமான தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் பெருமைக்குரிய தருணம். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

    • நாடு பிரிக்கப்பட்டபோது பாகிஸ்தானில் உள்ள அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று ஜின்னா கூறினார்.
    • பாகிஸ்தானில் எவ்வளவு முஸ்லிம்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு இந்தியாவிலும் முஸ்லிம்கள் உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மங்களகிரியில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க. அனைவரும் ஒன்றிணைந்து பிரதமருக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

    நாடு பிரிக்கப்பட்டபோது பாகிஸ்தானில் உள்ள அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று ஜின்னா கூறினார்.

    இப்போது அங்கு லட்சக்கணக்கான இந்துக்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

    பாகிஸ்தானில் எவ்வளவு முஸ்லிம்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு இந்தியாவிலும் முஸ்லிம்கள் உள்ளனர்.

    இந்துக்கள் பாகுபாடு காட்டினால் இவ்வளவு முஸ்லிம்கள் இங்கே இருக்க முடியுமா? இந்துக்களுக்கான ஒரே நாடு இந்தியா.

    அவர்கள் இங்கே கொல்லப்பட்டால் எங்கே போவார்கள். நாட்டில் மத நல்லிணக்கம் மிகவும் அவசியம். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் பேச அனுமதிக்கப்பட வேண்டாமா? மதச்சார்பின்மைக்கு வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

    இதுதான் புதிய இந்தியா. இதற்கு முன்பு இருந்த நாடு அல்ல. அவர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதை நாங்கள் சும்மா உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

    உண்மையை பேசுவதால் அது வெறுப்பு என்று அர்த்தமல்ல. இது பயங்கரவாதிகள் மீதான வெறுப்பு மட்டுமே. நம் நாட்டில் ஏராளமான முஸ்லிம் தலைவர்கள் உள்ளனர்.

    நாம் எப்போதாவது அவர்கள் மீது வெறுப்பைக் காட்டியிருக்கிறோமா?

    மதம் குறித்து எதுவும் பேசாத சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக் கொன்றாலும், அந்த பயங்கரவாதிகளுக்கும், அவர்களை ஊக்குவித்த பாகிஸ்தான் நாட்டுக்கும் இங்கு ஆதரவாக பேசுவது மிகவும் தவறு.

    ஆயினும் நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்று கூறுபவர்கள் அந்த நாட்டுக்கே சென்று விடுங்கள். பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒரே மாதிரி நடந்து கொள்வது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • அஜித் குமார் ஃபார்முலா- 2 பந்தய வீரராக சிறந்து விளங்குகிறார்.

    டெல்லியில் நேற்று நடிகர் அஜித்குமாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருது வழங்கினார்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.

    அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழையாக பொழிந்தது.

    இந்த நிலையில், அஜித் குமாருக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

    பத்ம பூஷண் விருதைப் பெற்ற புகழ்பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்.

    திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் அவர் பதித்துள்ளார். ஃபார்முலா- 2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அஜித் குமார் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     

    • பவன் கல்யாண் திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
    • கோசாலையில் பசுக்கள் ஏன் இறந்து விடுகிறது என தெளிவுபடுத்த வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து விட்டதாக முன்னாள் திருப்பதி தேவஸ்தான ஆங்காவல குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் கோசாலையில் பசுக்கள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து முன்னாள் மந்திரி ரோஜா கூறியதாவது:-

    எங்காவது ஏதாவது நடந்தால் அதை வெளிப்படையாக பேசி சனாதான தர்மத்தை பாதுகாப்பதாக துணை முதல் மந்திரி பவன் கல்யாண் பேசுகிறார். திருப்பதியில் அநியாயங்கள், தவறான செயல்கள் நடக்கும் போது ஏன் அவர் வாய் திறக்கவில்லை. பவன் கல்யாண் திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தவறு செய்தவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை.

    இதுதான் பவனின் நேர்மையா? பதவியும், சலுகையும் கொடுத்தால் அவர் வாயை மூடிக் கொண்டு இருப்பாரா?.

    கோசாலையில் பசுக்கள் ஏன் இறந்து விடுகிறது என தெளிவுபடுத்த வேண்டும். ஏழுமலையானுக்கு துரோகம் செய்தால் என்ன நடக்கும் என சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு தெரியும். அவர்கள் அதை அனுபவித்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புகையை சுவாசித்ததால், சிறுவனுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.
    • அன்ன லெஜினோவா நேற்று மாலை திருப்பதி கோவிலுக்கு வந்து தேவஸ்தானம் விதிகளின்படி காயத்ரி சதனில் உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

    ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியாக இருப்பவர் பவன் கல்யாண். இவருடைய மனைவி அன்ன லெஜினோவா. இவர்களுடைய மகன் மார்க் சங்கர். சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் மார்க் சங்கர் படித்து வருகிறான். சமீபத்தில் அந்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் மார்க் சங்கர் சிக்கினான். இதில் அவன் லேசான காயம் அடைந்தான். மேலும் புகையை சுவாசித்ததால், நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பவன் கல்யாண் சிங்கப்பூர் விரைந்து சென்று, மகனுக்கு ஆறுதல் கூறினார். தற்போது சிறுவன் உடல் நலம் தேறியதால், ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியுள்ளான். இதையடுத்து மகனையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு பவன் கல்யாண் ஐதராபாத் வந்தார்.

    இந்த நிலையில், பவன் கல்யாண் மனைவி அன்ன லெஜினோவா நேற்று மாலை திருப்பதி கோவிலுக்கு வந்து தேவஸ்தானம் விதிகளின்படி காயத்ரி சதனில் உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார். கிறிஸ்தவர் என்பதால் ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதாக கூறி, ஆவணத்தில் கையெழுத்திட்டு தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார்.

    முதலில் ஸ்ரீ வராக சுவாமி கோவிலில் தரிசனம் செய்து தீர்த்த பிரசாதம் பெற்ற பிறகு, புனித பத்மாவதி கல்யாண கட்டாவில் தலைமுடியை காணிக்கையாக கொடுத்தார்.

    தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய மகனுக்காக பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஜினோவா திருப்பதியில் தலைமுடியை காணிக்கையாக கொடுத்து தனது விரதத்தை பூர்த்தி செய்தார்.

    • மலேசியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • பவன் கல்யாண் தனது மனைவியுடன் சிங்கப்பூர் சென்றார்.

    ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் நடந்த தீ விபத்தில் மார்க் ஷங்கர் சிக்கி காயமடைந்தார்.

    அவருக்கு மலேசியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பவன் கல்யாண் தனது மனைவி அன்னலெஜினோவாவுடன் சிங்கப்பூர் சென்றார். இன்று காலை சிங்கப்பூரில் இருந்து மகனை அழைத்துக் கொண்டு ஷம்ஷாபாத் விமான நிலையம் வந்தடைந்தார்.

    விமானத்தில் இருந்து தனது மகனை பவன் கல்யாண் தோளில் சுமந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
    • ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.

    பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.

    பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.

    ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்த்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு . திரைப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் டப்பிங் , ரீ ரெகார்டிங், சவுண்ட் எஃபக்ட்ஸ், பணிகளை படக்குழு தற்பொழுது மேற்கொண்டு வருகிறது.

    • பவன் கல்யாண் மகன் (வயது 7) சிங்கப்பூரில் படித்து வருகிறார்.
    • பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாண் மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண். இவரது மகன் மார்க் ஷங்கர் (7 வயது) சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான். மார்க் ஷங்கர் படித்து வந்த பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் பவன் கல்யாண் மகனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், புகைக் காரணமாக நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மகனுக்கு தீக்காயம் ஏற்பட்ட செய்தியை கேட்டதும், உடனடியாக பவன் கல்யாண் சிங்கப்பூர் புறப்பட்டார். சிங்கப்பூர் சென்ற பவன் கல்யாண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மகனை சந்தித்துள்ளார். தற்போது பவன் கல்யாண் மகன் மார்க் ஷங்கர் சீராக குணமடைந்து வருவதாக, அவரது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்ளட்ளது.

    மேலும், தீ விபத்தின்போது புகை உடலுக்குள் சென்றதால், நுரையீரல் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன, மேலும் அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது.

    இன்று காலை எமர்ஜென்சி வார்டில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். டாக்டர்கள் சிறுவனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மெற்கொண்ட பரிசோதனை அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" எனவும் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஐதராபாத்தில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பவன் கல்யாண், மகன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று மகனை பார்த்துள்ளார்.

    • பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாணின்மகன் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    • தீக்காயமடைந்த மார்க் சங்கர் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிங்கப்பூரில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் படிக்கும் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாணின் 8 வயது இளைய மகன் மார்க் சங்கர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீக்காயமடைந்த மார்க் சங்கர் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையடுத்து பவன் கல்யாண் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு மகனை பார்க்க சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தினந்தோறும் பஸ் இயக்க கோரிக்கை.
    • 505 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 11 மணி நேரம் ஆகும்.

    திருப்பதி:

    திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி அரசு சொகுசு பஸ் போக்குவரத்தை துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் நேற்று தொடங்கி வைத்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் யாத்திரையாக பழனிக்கு சென்ற போது அங்கிருந்த பக்தர்கள் திருப்பதிக்கு நேரடி பஸ் வசதி இல்லை என தனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். தினந்தோறும் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டி ஆகியோருடன் கலந்து பேசினேன்.

    உடனடியாக பழனிக்கு பஸ் வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டது. 2 ஆன்மிக தலங்களுக்கும் இடையே பஸ் வசதி தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் அரசு பஸ் காலை 7 மணிக்கு பழனியை சென்றடைகிறது. 505 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 11 மணி நேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது.

    இதேபோல் பழனியில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திருப்பதியை வந்து அடைகிறது.

    பெரியவர்களுக்கு ரூ.680, சிறியவர்களுக்கு ரூ.380 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து நேரடியாக பழனிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×