என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்ஏ20 லீக் 2025"
- பந்தை பிடிக்கும் முன்னரே விக்கெட் கீப்பர் ஸ்டெம்பை காலால் மீதித்து விட்டார்.
- இதனை அறியாத தினேஷ் கார்த்திக் அவுட் என நினைத்து க்ரீசுக்குள் வராமல் வெளியே நின்றார்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 3-வது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - ஜோ ரூட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இதில் அபாரமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 26 ரன்களிலும் பிரிட்டோரியஸும் 26 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் பார்ல் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இத்தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்ய தமிழக வீரர் களமிறங்கினர். அப்போது அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அணியின் ஃபினிஷராக தேர்வுசெய்யப்பட்ட தினேஷ் கார்த்திக் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது.
ஆனால் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை ரன் அவுட் மூலம் வீணாக்கி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளார். இன்னிங்சின் 13-வது ஓவரை ஜார்ஜ் லிண்டே வீசிய நிலையில், அந்த ஓவரின் 2-வது பந்தை தினேஷ் கார்த்திக் ஆஃப் சைடில் அடித்துவிட்டு சிங்கிள் எடுப்பதற்காக ஓடினார்.
ஆனால் மறுபக்கம் நான் ஸ்டிரைக்கர் திசையில் இருந்த பிஜோர்ன் ஃபோர்டுயின் முதலில் ரன்னிற்கு ஓடுவது போல் கிரீஸை விட்டு வெளியேறி அதன்பின், வரமறுத்து எதிர்முனையின் க்ரீஸிக்கு திரும்பினார்.
ஆனால் அச்சமயத்தில் தினேஷ் கார்த்திக் பாதி பிட்சை கடந்திருந்த காரணத்தால் அவரால் மீண்டும் க்ரீஸுக்குள் நுழையமுடியவில்லை. அதேசமயம் பந்தை பிடிக்கும் முன்னரே விக்கெட் கீப்பர் ஸ்டெம்பை காலால் மீதித்து விட்டார். இதனை அறியாத தினேஷ் கார்த்திக் அவுட் என நினைத்து க்ரீசுக்குள் வராமல் எதிர் முனையில் இருந்த வீரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.
இதனை சுதாரித்து கொண்ட விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கெல்டன் பந்தை கையில் வைத்து கொண்டு ஸ்டெம்பை தூக்கி ரன் அவுட்டை உறுதி செய்தார். தினேஷ் கார்த்திக் உள்ளே வந்திருந்தால் கூட ரன் அவுட்டை தவிர்த்திருக்கலாம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலில் பேட் செய்த பார்ல் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பார்ல்:
தென் ஆப்பிரிக்காவில் உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பார்ல் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகமாக ஜோ ரூட் 78 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து, 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது. பிரிட்டோரியா தரப்பில் வில் ஜாக்ஸ் 56 ரன்கள் அடித்தார்.
பார்ல் தரப்பில் ரூட், பிஜோர்ன் போர்டுயின் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி சார்பில் 20 ஓவரையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 20 ஓவரையும் சுழற்பந்தாக வீசிய முதல் அணி என்ற சாதனையை பார்ல் ராயல்ஸ் படைத்துள்ளது.