என் மலர்
நீங்கள் தேடியது "அமெரிக்கா"
- பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா்.
- இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைபேசியில் பேசினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப் பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே மோதல் போக்கை அதிகரிக்க வேண்டாம் என்று இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இது தொடா்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடமும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மாா்கோ ரூபியோ பேச்சுவாா்த்தை மேற்கொள்ளவார் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.
இதேபோல 'இந்தப் பதற்றமான சூழலுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தை மூலம் அமைதித் தீா்வைக் காண வேண்டும்' என்று இங்கிலாந்தும் அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேசினார். சில மணி நேரம் இந்த உரையாடல் நடைபெற்றது.
இதேபோல பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேசினார். இரு நாடுகள் இடையே போர் பதட்டத்தை தணிக்க வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
பஹல்காமில் நடந்த கொடுரமான பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தனது வருத்தத்தை ஜெய்சங்கரிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைப்பதாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் நான் விவாதித்தேன். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப் படும்" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பேசும்போது காஷ்மீரில் நடந்த தாக்குதலை கண்டித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நியாயமற்ற தாக்குதலை விசாரிப்பதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தெற்காசியாவில் பதற்றத்தை தணிக்கவும், நேரடி தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்தவும், அமைதி, பாதுகாப்பை பராமரிக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுமாறு பாகிஸ்தான் பிரதமரிடம் ரூபியோ கேட்டுக் கொண்டார்.
- சில நாடுகள் அமெரிக்கா மீது கூடுதல் வரியை விதித்தன.
- அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக சில நாடுகள் அமெரிக்கா மீது கூடுதல் வரியை விதித்தன.
இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய வர்த்தக கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் 12 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. நியூ யார்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் ஓரிகான், அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், இல்லினாய்ஸ், மைனே, மினசோட்டா, நெவாடா, நியூ மெக்சிகோ, நியூயார்க் மற்றும் வெர்மான்ட் ஆகிய மாகாணங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளன.
அதில் அதிபர் டிரம்ப் வகுத்துள்ள கட்டணக் கொள்கை சட்டவிரோதமானது, இது அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில் டிரம்ப் தன்னிச்சையாக வரிகளை விதிக்க முடியும் என்று கூறுவது தவறானது. வரிகளை விதிக்க பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
அவசரநிலை, வெளிநாட்டில் இருந்து அசாதாரண அச்சுறுத்தல் இருக்கும்போது மட்டுமே அதிபர் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை செயல்படுத்த முடியும்.
எனவே கட்டணங்களை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், அரசு நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள் அவற்றைச் செயல்படுத்துவதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரிசோனா அட்டர்னி ஜெனரல் கிறிஸ் மேயஸ் கூறும்போது, டிரம்பின் கட்டணத் திட்டம் பைத்தியக்காரத்தனமானது. இது பொருளாதார ரீதியாக பொறுப்பற்றது மட்டுமல்ல சட்டவிரோதமானது என்றார்.
- அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
- அவர்கள் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் வசித்து வந்த பல இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டனர்.
30 நாட்கள் கெடு
அமெரிக்காவில் அந்நியர் பிரிவு சட்டம் 1940 அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் படி 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கி இருக்கும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் முறைப்படி பதிவு செய்யவேண்டும். நீண்ட நாட்களாக இந்த சட்டம் பெயர்அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தார்.
இந்த சட்டம் கடந்த 11-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டவர்கள் 30 நாட்களுக்குள் தாமாக வெளியேற வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல தங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை உடனே உள்துறை பாதுகாப்பு அரசு அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
நீங்கள் தாமாக வெளியேறினால் பாதுகாப்பானது. நீங்கள் விரும்பும் விமானத்தில் பயணம் செய்ய சலுகை கிடைக்கும். நீங்களாகவே வெளியேறும் பட்சத்தில் அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ள முடியும். நாங்களாகவே வெளியேற்றாமல் நீங்களே வெளியேறினால் எதிர்காலத்தில் சட்டப்படி அமெரிக்காவுக்கு வர முடியம். இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கு வர நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.
இந்த முடிவு அமெரிக்காவில் எச்.1-பி மாணவர் விசா பெற்றவர்களை நேரடியாக பாதிக்காது. எச்-1 பி. விசாவில் உள்ள ஒருவர் வேலையை இழந்து இருந்தால் அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அமெரிக்க அரசின் இந்த அதிரடி உத்தரவு வெளிநாட்டவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக அமெரிக்க குடியேறிகள், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தானுக்கு வந்த ஓனிஜா மனமுடைந்தார்.
- பேட்டி வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் ஓனிஜா ஆண்ட்ரு ராபின்சன். 33 வயதான இவருக்கு ஆன்-லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நிடல் அகமது மேமன் என்ற 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சமூக வலைதளம் மூலம் பேசி காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஓனிஜா ஆண்ட்ரு ராபின்சன் தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். ஆனால் மேமனின் பெற்றோர் இந்த காதலை ஏற்கவில்லை. இதனால் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். எனவே காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தானுக்கு வந்த ஓனிஜா மனமுடைந்தார்.
ஆனால் அவர் அமெரிக்காவுக்கு திரும்பி செல்ல விரும்பவில்லை. மாறாக பாகிஸ்தானிலேயே இருக்க போவதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானை புனரமைக்க வேண்டும் என்பதே எனது திட்டம். இதற்காக எனக்கு அரசாங்கம் ரூ.1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.87.39 லட்சம்) வேண்டும். இந்த வார இறுதிக்குள் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக தர வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். இங்குள்ள தெருக்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனை சரி செய்ய வேண்டும். பாகிஸ்தானுக்கு புதிய பஸ்கள், டாக்சிகள் மற்றும் கார்கள் தேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அவரது இந்த பேட்டி வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- காதல் விவகாரம் குறித்து இருவரும் பெற்றோர்களுக்கு தெரிவித்தனர்
- விழாவில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தெலுங்கானா மாநிலம்,மேட்சல் மாவட்டம்,மோட்கூர் அடுத்த தச்சரம் பகுதியை சேர்ந்தவர் தர்மைய்யா, லலிதா தம்பதி. இவர்களது மகன் சந்தீப் குமார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு டெக்ஸாசில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் அவனி எலெனா என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார். சந்தீப் குமார் அவனி எலெனா இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியது.
தங்களது காதல் விவகாரம் குறித்து இருவரும் பெற்றோர்களுக்கு தெரிவித்தனர். சந்தீப் குமார் காதலுக்கு அவரது பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். மகனின் எதிர்காலத்தை கருதி பின்னர் சம்மதம் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்ப நிகழ்ச்சி மல்காஜ் கிரி அடுத்த காட் கேசரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி சந்தீப் குமார், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமக்களுக்கு ஏராளமானோர் பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.