என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா"

    • மகேஷ்பாபு ஐதராபாத்தில் இயங்கி வரும் சூரானா குழுமம் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவன விளம்பரங்களில் நடித்தார்.
    • நடிகர் மகேஷ்பாபு சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.5.90 கோடி பெற்றார்.

    தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு ஐதராபாத்தில் இயங்கி வரும் சூரானா குழுமம் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவன விளம்பரங்களில் நடித்தார்.இவர் நடித்து கொடுத்த பில்டர்ஸ் நிறுவனம் மக்களை ஏமாற்றியுள்ளதாக சில வாரங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களின் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்ததால் மகேஷ் பாபுவிறுகு அமலாக்கத்துறை சம்மனை அனுப்பியது.

    விளம்பர படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ்பாபு சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.5.90 கோடி பெற்றார். இதில் ரூ.2.50 கோடி ரொக்கமாகவும், மீதம் உள்ள பணம் வங்கிக் கணக்கில் பெறப்பட்டது.

    பணம் பெற்றது சம்பந்தமாக நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் விசாரணைக்கு தற்போது ஆஜராக முடியாது என மகேஷ்பாபு அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    அதில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அட்டைவனையின்படி சினிமா படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது. விசாரணைக்கு ஆஜராக வேறு ஒரு தேதியை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    • கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
    • கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘ஆலப்புழா ஜிம்கானா’.

    கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதில் சமீபத்தில் ஒரு ஒட்டலுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனைக்கு சென்ற போது அங்கிருந்த பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ, மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு விடுவித்தனர். இந்த நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்திய நிலையில் தவறாக அணுகிய தாக நடிகை வின்சி புகார் கொடுத்தார்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஆலப்புழா ஜிம்கானா'. இந்த படத்தை இயக்கியவர் காலித் ரகுமான். அதேபோல் மற்றொரு இயக்குநர் அஷ்ரப் ஹம்சா.இவர் தமாஷா, பீமன்டே வழி, சுலைகா மன்சில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர்கள் கொச்சியில் உள்ள ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபட்டனர்.

    இங்கு இன்று அதிகாலை கலால் துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 இயக்குநர்கள் உள்பட 3 பேர் அங்கு இருந்தனர். அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1½ கிராம் கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இயக்குநர்களுடன் இருந்த 3-வது நபர் ஷாகித் முகமது.இவர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இருப்பினும் போலீசார் சோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக விசாரணைக்கு பிறகு 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் போதைப் பொருளை எங்கிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது.

    இது தொடர்பாக கலால் துறை அதிகாரி ஓருவர் கூறுகையில், கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் சோதனைக்கு சென்றோம். அங்கிருந்த 3 பேரிடம் இருந்து கலப்பின கஞ்சாவை பறிமுதல் செய்தோம்.

    அவர்கள் மீது போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரும் தொடர்ந்து போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    இயக்குநர் காலித் ரகு மான், அனுராகா கரிக்கின் வெல்லம், உண்டா, காதல், தள்ளுமாலா போன்ற படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நடிகர் ஒருவர் போதையில் தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் புகார் தெரிவித்தார்.
    • நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனக்கு இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.

    கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை வின்சி அலோசியஸ், படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், அது போன்ற நடிகர்களுடன் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    மேலும் அந்த நடிகர் பற்றி விவரங்களை நடிகை வின்சி அலோசியஸ், நடிகர்கள் சங்கத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகர் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. இந்த சம்பவத்தால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கு மத்தியில் போதை பொருள் வியாபாரம் தொடர்பாக ஒரு நபரை தேடி போலீசார் சோதனை நடத்தியபோது, ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடினார். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு வழங்கியதன்பேரில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.

    இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் உன்னி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

    படப்பிடிப்பில் நடிகர் ஒருவர் போதையில் தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். நடிகரின் பெயரை வெளியிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். அவரிடம் சட்டத்தின்படி உள்புகார்கள் குழுவில் புகார் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் போதைப் பொருள் பயன்படுத்துவது தொடர்பாக விசாரிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவையும் அழைத்தோம். அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எங்களிடம் கூறினார். இதுகுறித்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துடன், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு விவாதித்தது.

    போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களுடன் நாங்கள் ஒத்துழைக்க முடியாது. போதைப் பொருட்களுடன் பிடிபட்ட ஒப்பனை கலைஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஷைன் டாம் சாக்கோவை திரைப் படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

    நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனக்கு இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுப்போம். தற்போது நாங்கள் உள் புகார்கள் குழு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார்.
    • வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.

    நடிகர் பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சுகுமார். பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ள போதிலும் காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

    47 வயதானவர். திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் வடபழனி பகுதியைச் சேர்ந்த 36 வயதான துணை நடிகையுடன் காதல் சுகுமார் நெருங்கி பழகியுள்ளார்.

    அப்போது தனக்கு திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்றும் அவர் துணை நடிகையிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பி துணை நடிகையும் சகுமாருடன் பழகி இருக்கிறார்.

    அந்த துணை நடிகை கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையிலும் சுகுமார் அவரை ஏற்றுக் கொள்வதாகவே தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து துணை நடிகை சுகுமாருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

    அப்போது காதல் சுகுமார் துணை நடிகை இடம் தேவைப்படும் போதெல்லாம் நகை பணத்தை வாங்கியுள்ளார்.துணை நடிகையும் சுகுமாருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே என எண்ணி நகை-பணத்தை கொடுத்துள்ளார்.

    இப்படி துணை நடிகை இடம் இருந்து நகை பணத்தை சுருட்டிய பிறகு காதல் சுகுமார் அவருடன் பழகுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதன் பின்னர் துணை நடிகை செல்போனில் அழைத்தாலும் காதல் சுகுமார் போனை எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.

    இதையடுத்து காதல் சுகுமார் பற்றி துணை நடிகை விசாரித்துள்ளார்.அப்போது காதல் சுகுமார் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பதும் மதுரவாயல் கிருஷ்ணா நகரில் அவர் குடும்பத்தோடு வசித்து வருவதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகை இது பற்றி வடபழனி போலீசில் புகார் அளித்தார்.கடந்த ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட இந்த புகார் மீது வடபழனி மகளிர் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்து வந்தனர்.

    இதன் காரணமாக போலீஸ் கமிஷனர் அருண் துணை நடிகை அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மாம்பலம் மகளிர் போலீசார் சுகுமார் மீது நம்பிக்கை மோசடி. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் தன்மீது வழக்கு பதிவு செய்ததை அறிந்ததும் சுகுமார் தலை மறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதை தொடர்ந்து நடிகர் காதல் சுகுமார் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • நடிகர் அஜீத்தின் குட் பேட் அக்லி உள்பட பல தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஷைன் டாம் சாக்கோ.
    • கேரளாவில் பிரபலமான இவர், போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வழக்கை சந்தித்து வருகிறார்.

    நடிகர் அஜீத்தின் குட் பேட் அக்லி உள்பட பல தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. கேரளாவில் பிரபலமான இவர், போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வழக்கை சந்தித்து வருகிறார்.

    கடந்த புதன்கிழமை கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சோதனைக்கு சென்ற போது, அங்கிருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. இது தொடர்பான சி.சி.டி.வி. கேமரா பதிவுளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். 3-வது மாடியில் இருந்து குதித்து அவர் தப்பித்தது ஏன்? என்பது தொடர்பாக விசாரிக்க போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

    நடிகர் ஷைன் டாம் சாக்கோ தலைமறைவானதால் அவரது தந்தையிடம் போலீசார் சம்மனை வழங்கினர். இதனை தொடர்ந்து நேற்று காலை நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில்  ஆஜரானார். அவரிடம் போலீசார் ஓட்டலில் இருந்து தப்பி ஓடியது ஏன்? என்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். போதைப் பொருள் கும்பலுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் கேள்வி எழுப்பி னர்.

    முதலில் தான் போதைப் பொருள் பயன்படுத்துவதில்லை என்று கூறிய அவர், போலீசார் பல்வேறு ஆதாரங்களை காண்பித்த பிறகு தனக்கு போதைப் பழக்கம் இருப்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் சம்பவத்தன்று ஓட்டலில் இருந்த போது போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றும், தன்னை யாரோ தாக்க வருகிறார்கள் என்ற பயத்திலேயே ஓட்டலில் இருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் அவருக்கு போதைப்பொருள் வியாபாரி சஜீர் என்பவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஷைன் டாம் சாக்கோவை கைது செய்தனர். தொடர்ந்து அறிவியல் பரிசோதனைக்காக அவரது தலைமுடி மற்றும் நகங்களை சேகரித்த போலீசார் பினனர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். மேலும் விசாரணைக்காக நாளை (21-ந் தேதி) காலை 10 மணிக்கு மீண்டும் ஆஜராக போலீசார் அறிவுறுத்தினர்.

    இந்த விசாரணையின் போது நடிகை வின்சி அலோ சியஸ் புகார் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அந்த புகாரில் எந்த அடிப்படையும் இல்லை. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களே உண்மையை சொல்லட்டும். நான் படப்பிடிப்பு தளத்தில் நடிகையிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றார்.

    • நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்று தகவல் வெளியானது.
    • நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் போலீசார் கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியல் படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னிடம் போதையில் அத்துமீறியதாகவும், ஆகையால் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகருடன் நடிக்கமாட்டேன் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

    அதே நேரத்தில் நடிகை வின்சியிடம் அத்துமீறியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளி யாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித் துள்ளார்.

    இந்தநிலையில் கேரளாவில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நபராக இருக்கும் சஜீரை போலீசார் தேடிவந்தனர். அவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுடன் தங்கியிருக்கலாம் என்று கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.

    அவர் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள், ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகியிருந்தது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ எதற்காக தப்பி ஓடினார்? என்ற சந்தேகம் போலீசா ருக்கு எழுந்தது. ஆகவே அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக அவரை போலீசார் தேடினர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் தமிழகத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை.

    ஆகவே அவரை விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு வழங்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலைய அதிகாரிகள், திருச்சூர் முண்டூரில் உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இல்லத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை.

    நடிகரின் தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் நடிகர் விசார ணைக்கு ஆஜராக வேண்டிய நோட்டீசை போலீசார் கொடுத்தனர். இன்று காலை 10 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று நடிகருக்கு நோட்டீசு வழங்கப்பட்டு இருக்கிறது.

    நடிகர் ஒரு பயணத்தில் இருப்பதாவும், ஆகவே அவர் இன்று பிற்பகல் 3 மணிக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் எனவும் அவரது தந்தை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் இன்று காலை ஆஜரானார்.

    அவரிடம், போலீசார் வந்தபோது தப்பி ஓடியது ஏன்? ஓட்டலில் எதற்காக அறை எடுத்து தங்கியிருந்தார்? தப்பியோடி தலைமறைவாகியது ஏன்? என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்து வதற்காக 32 கேள்விகளை போலீசார் தயாரித்து வைத்திருந்தனர்.

    விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடம் போலீசார் சரமாரியாக கிடுக்கிப்படி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

    சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார்.
    • பாபா சித்திக் கொல்லப்பட்டதையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.

    பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், சமீபத்தில் அவரது வீடு அருகே துப்பாக்கி சூடு நடந்தது.

    இதற்கிடையே மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டது.

    மும்பை போக்குவரத்து போலீசின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ரூ.5 கோடி கேட்டு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஷேக் ஹுசைன் ஷேக் மவுசின் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அதேபோல் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தயீப் அன்சாரி (வயது20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில் சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் அனுப்பிய தகவலில், நடிகர் சல்மான்கான் ரூ.2 கோடி தராவிட்டால் அவரை கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தார். அந்த மர்ம நபர் மீது மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மிரட்டல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர் சசிகுமார் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.
    • அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ருசிகரமாக பதில் அளித்தார்.

    மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர் சசிகுமார் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ருசிகரமாக பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கல்லூரிக்கு பக்கத்து ஊரு தான் எனது வீடு. அடிக்கடி இந்த வழியாகத்தான் செல்வேன். இவ்வளவு பெரிய கல்லூரி இருக்கின்றது இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது. மேடையில் பேச வேண்டும் என்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை. அதுவும் கல்லூரிக்கு செல்லும் போது மாணவர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும், அதனால் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்ப்பேன்.

    என்னை இங்கு அழைத்துக்கொண்டு வரவில்லை இழுத்து வந்துள்ளார்கள். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே, அதற்காகத் தான் இங்கு வந்துள்ளேன். எனக்காக இதை செய்யுங்கள் என்று நண்பன் கேட்டதால் இங்கு வந்துள்ளேன், நண்பன் கேட்டால் உயிரையும் கொடுப்போம். நட்பை விட்டு விடாதீர்கள். நான் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன். குத்துனது நண்பனா இருந்தாலும் செத்தா கூட சொல்லக் கூடாது.

    நான் நடித்த அயோத்தி திரைப்படம் மனிதத்தை பேசும். மொழி, மதம், ஜாதிகளை கடந்து நமக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் உதவக் கூடாது, தெரியாதவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருத்துள்ள படம். மனிதம் நமக்குள்ளே என்றும் இருக்க வேண்டும்.

    அடுத்த படம் மதுரையில் தான் இயக்க உள்ளேன். காதலா நட்பா என்று பார்த்தால் எப்பவுமே நட்பு தான் காதலாக இருக்கும், காதல் நட்பாக இருக்காது. மாணவர்கள் அனைவரும் நன்றாக படியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சசிக்குமார் தற்பொழுது டூரிஸ்ட் பேமிலி  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் ராஜுமுருகன் இயக்கத்தில் ௨ மை லார்ட் திரைப்படத்திலும் நடித்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    ×