search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை"

    • வனச்சரக பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
    • யானை ஒன்று அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் தும்பிக்கையால் கரும்பு உள்ளதா என பார்க்கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக திம்பம், தாளவாடி, ஆசனூர் போன்ற வனச்சரக பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உலா வருவதும், அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு கட்டுகள் உள்ளதா என பார்ப்பதும் தொடர் கதையாகி வருகின்றது.

    இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான காரப்பள்ளம் சோதனை சாவடியில் அருகே நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் தும்பிக்கையால் கரும்பு உள்ளதா என பார்க்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    காரப்பள்ளம் சோதனை சாவடியில் ஒற்றை யானை நடமாடி வருகிறது. கரும்புகளை தேடி அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×