என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • கூட்டுக்குழுவில் பங்கேற்று பேசிய அனைவரின் குரலும் ஒத்த கருத்துடையதாகவே இருந்தது.
    • அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றம்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது.

    இதையடுத்து தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைவரும் ஒத்தக்கருத்தை முன்வைத்துள்ளனர்.

    * கூட்டுக்குழுவில் பங்கேற்று பேசிய அனைவரின் குரலும் ஒத்த கருத்துடையதாகவே இருந்தது.

    * கூட்டு நடவடிக்கை குழுவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.

    * முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

    * 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியே அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

    * பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும்.

    * அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தீர்மானம் நிறைவேற்றம்.

    * தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிலுவைக்கு வரும்.

    * பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை விரைவில் நடக்கும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.

    * தெளிவை ஏற்படுத்தாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக மத்திய அரசின் அறிவிப்பு உள்ளது.

    * அழைப்பு விடுத்ததில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் நேரில் பங்கேற்க முடியவில்லை, மற்ற அனைவரும் பங்கேற்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு ஊழியர்களும் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர்.
    • தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளதால் 6 மாதத்திற்கு பின் சூழல் மாற வாய்ப்புள்ளது.

    நெல்லை:

    தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு கூட்டத்திற்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு வந்துள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற குழு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் சேர்ந்து கருப்பு கொடி ஏந்தியும், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் எதிர்ப்பை தெரிவித்தார்.

    அப்போது நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம், நிர்வாகி கார்த்திகேயன் உள்பட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. பலவீனமாக உள்ளதால் தேவையில்லாத பிரச்சனையை கையில் எடுக்கிறது. டங்ஸ்டன் விவகாரத்தை கையில் எடுத்தனர். மத்திய அரசு அதனை நேரடியாக கையில் எடுத்து நல்ல முடிவை தந்தது. நமக்கு தண்ணீர் தராத கேரள முதல்-மந்திரி, கர்நாடக துணை முதல்-மந்திரி ஆகியோரை அழைத்து தி.மு.க. அரசு கூட்டம் நடத்துகிறது. மொழி கொள்கை பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    ஏதாவது ஒரு மொழி படிக்கலாம் என்பதை தான் மத்திய அரசு மொழி கொள்கையில் சொல்கிறது. மும்மொழி கொள்கைக்கு 95 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர். பா.ஜ.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் தானாக முன்வந்து கையெழுத்துபோட்டு வருகின்றனர்.

    இந்தி இல்லாவிட்டாலும் தென்னிந்திய மொழி கூட கற்கலாம். தி.மு.க அரசு கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் அறிவிப்புடனேயே நிற்கிறது. அதனால் தான் மத்திய அரசை ஏதாவது ஒரு கதையை வைத்து குறை கூறுகின்றனர்.

    மக்களை திசை திருப்பவே தி.மு.க. இது போன்ற செயலில் ஈடுபடுகிறது.

    டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு படிப்படியாக கடையை உயர்த்தும் நிலையில் உள்ளது. அரசு ஊழியர்களும் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர்.

    மின்கட்டணம், தொழில்வரி, சொத்துவரி உயர்வால் தொழில் முனைவோர் திணறும் நிலைக்கு ஆளாகின்றனர்.

    எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.விற்கு பாதகமான நிலை உண்டாகும். தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளதால் 6 மாதத்திற்கு பின் சூழல் மாற வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
    • பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது:

    * தொகுதி மறுவரையறை என்பது எண்ணிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவான கூட்டாட்சி சம்பந்தப்பட்ட விவகாரம்.

    * தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல் மேற்கொள்ள வேண்டும்.

    * தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.

    * தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறைவது பா.ஜ.க.வின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும்.

    * பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    * ஏற்கனவே மத்திய அரசு நிதிகளை தராமல் நம்மை தண்டித்துள்ளது.

    * மாநிலங்களின் ஒன்றியமே இந்திய நாடு.

    * பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதை உங்கள் வருகை இந்தியாவிற்கு உணர்த்துகிறது.
    • தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு 5 முக்கிய பாதிப்புகள் ஏற்படும் எனக்கூறி விளக்கமாக உரையாற்றினார்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கூட்டாட்சியை காக்கும் மிக மிக முக்கியமான நாளாக வரலாற்றில் இந்த நாள் அமைய போகிறது. இந்திய வரலாற்றில் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்திருப்பது தனிச்சிறப்பு.

    ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதை உங்கள் வருகை இந்தியாவிற்கு உணர்த்துகிறது. மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான் கூட்டாட்சி தன்மை நிலைத்திருக்கும். தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.

    இதன்பின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு 5 முக்கிய பாதிப்புகள் ஏற்படும் எனக்கூறி விளக்கமாக உரையாற்றினார்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் பேச உள்ளனர். இதன்பின் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு வலியுறுத்தல்களை விடுக்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    அதனை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இறுதி முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர்களுடன் ஜனாதிபதியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

    • தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது.
    • மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமது நீதிக்கான குரலும் குறையும்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பல மொழி, இனம் என பன்முகத்தன்மை கொண்ட பல மாநிலங்களில் இருந்து இங்கு ஒன்றுகூடியுள்ளோம்.

    * கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க தலைவர்கள் ஒன்றிணையும் இந்நாள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

    * இந்திய கூட்டாட்சியை காக்கும் மிக மிக முக்கியமான நாளாக வரலாற்றில் இந்த நாள் அமைய போகிறது.

    * இந்திய வரலாற்றில் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்திருப்பது தனிச்சிறப்பு.

    * ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதை உங்கள் வருகை இந்தியாவிற்கு உணர்த்துகிறது.

    * மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான் கூட்டாட்சி தன்மை நிலைத்திருக்கும்.

    * தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம்.

    * தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒரு போதும் ஏற்கக்கூடாது.

    * மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமது நீதிக்கான குரலும் குறையும்.

    * மணிப்பூர் மக்களின் குரலை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை என்றார். 

    ×