என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய தணிக்கை துறை"
- இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு இனி ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் நடத்தப்படும்.
மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது.
அதன்படி சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு இனி ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படும்.
ஜூன் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 2 முறை நடத்தப்படும் இன்பர்மேஷன் சிஸ்டம் ஆடிட் என்ற தேர்வு இனி பிப்ரவரி, ஜூன், அக்டோபர் மாதங்கள் என ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில் 26-வது கவுன்சில் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது.