என் மலர்
நீங்கள் தேடியது "மின்சார ஏ.சி. பஸ்கள்"
- பஸ்களின் மாதிரி புகைப்படங்களை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
- அடுத்த கட்டமாக மாடி பஸ் விடுவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சாதாரண பஸ்கள், ஏ.சி.பஸ்கள் புழக்கத்தில் உள்ளன. இதன் அடுத்த கட்டமாக மாடி பஸ் விடுவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் 12 மீட்டர் நீளம் கொண்ட ஏ.சி. மின்சார பஸ்கள் மாநகர போக்குவரத்து கழகத் துக்காக வாங்கப்பட உள்ளது. இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனம் 500 சுவிட்ச் இ.ஐ.வி.12 ரக மின்சார பஸ்களை வழங்க ஏற்கனவே டெண்டர் கோரி உள்ளது.

இந்த ஏ.சி. மின்சார பஸ்களை 12 ஆண்டுகளுக்கு பராமரித்து இயக்கும் என்று அசோக் லேலண்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
100 மின்சார பஸ்களை 12 ஆண்டுகளுக்கு பரா மரித்து இயக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதையொட்டி 100 மின்சார பஸ்களுக்கான டெண்டரை போக்குவரத்து துறை கோரி இருந்த நிலையில் இந்த பஸ்களின் மாதிரி புகைப்படங்களை போக்குவரத்து துறை வெளியிட்டு உள்ளது.
மக்கள் பயன்பாட்டுக்கு இந்த பஸ்கள் சென்னை நகரில் மே மாதம் முதல் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.