என் மலர்
நீங்கள் தேடியது "ஜகதாம்பிகா பால்"
- ஏழை இஸ்லாமிய மக்கள் பயனடையப் போகிறார்கள்.
- எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த பலன்.
புதுடெல்லி:
வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, 8 மணி நேரம் விவாதம் நடத்த உள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் விவாத நேரத்தை அதிகரிக்க உள்ளதாகவும் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால் கூறியதாவது:-
இன்று திருத்தப்பட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. இது நிச்சயமாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம், ஏழை இஸ்லாமிய மக்கள் பயனடையப் போகிறார்கள்.
கடந்த 6 மாதங்களாக நாங்கள் கூட்டுக் குழுவில் ஆலோசித்துள்ளோம். எதிர்க்கட்சிகள் நாள்தோறும் 8 மணிநேரம் பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம். மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பது எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த பலன்.
எதிர்க்கட்சிகளும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் ரம்ஜான் தொழுகையின்போது மசூதிகளில் கருப்பு பட்டை அணியுமாறு கூறியது, இந்த பிரச்சனையை அரசியலாக்குகின்றனர் என்றார்.