என் மலர்
நீங்கள் தேடியது "Bill"
- வக்பு திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
- வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கத்தில் போராட்டம் நடைபெற்றது.
வக்பு திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதா பாத், சுதி, அம்தாலா, துலியன் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு பிரிவினர் நேற்று மாலை போராட்டத்தில் குதித்தனர்.
நிம்நிதா ரெயில் நிலையத்தில் அவர்கள் பல மணி நேரம் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ரெயில் மீது சரமாரியாக கற்களையும் வீசினார்கள். ரெயில் நிலையத்தில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடினார்கள். இதையடுத்து வன்முறையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் 10 போலீசார் படுகாயம் அடைந்தனர். சில ரெயில் பயணிகளும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினார்கள். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.
இந்த வன்முறையால் அப்பகுதி வழியாக செல்லும் 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 5 ரெயில்கள் திருப்பி விடப்பட்டது. சர்வ தேச எல்லையில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
- சோனியா காந்தி வக்பு திருத்த மசோ தாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
- சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும்.
வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் நேற்று நள்ளிரவில் நிறைவேறியது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , மேல் சபை எம்.பி. யுமான சோனியா காந்தி வக்பு திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார்.
இன்று நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். இந்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கும் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவிக்கும். அரசியல் அமைப்பை தகர்க்கும் மற்றொரு முயற்சி இதுவாகும்.
கல்வி, சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள், நமது கூட்டாட்சி அமைப்பு அல்லது தேர்தல்களை நடத்துதல் என எதுவாக இருந்தாலும், மோடி அரசு நாட்டை ஒரு படுகுழியில் இழுத்துச் செல்கிறது.அங்கு அரசியல் அமைப்பு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அரசியல் அமைப்பை அழிப்பதுதான் அவர்களது நோக்கமாகும்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்படாதது நமது ஜனநாயகத்திற்கு மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும். இதேபோல், மேல்சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கேவும் தான் சொல்ல விரும்புவதையும் சொல்ல வேண்டியதையும் பதில் அளிக்க மீண்டும் மீண்டும் அனுமதிக்கப்படுவது இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.