என் மலர்
நீங்கள் தேடியது "பூத் கமிட்டி மாநாடு"
- பூத் கமிட்டி நடைபெறும் இடத்திற்கு காரில் சென்றபடி ரோடு ஷோ நடத்தினார் விஜய்.
- கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும் பூத் கமிட்டியை பலப்படுத்துவதில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் வீதம் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 70 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்ததும், பூத் கமிட்டி மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டியது. இந்த மாநாட்டை மொத்தமாக இல்லாமல், மண்டலங்கள் வாரியாக பிரித்து நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தற்போது மாநாடு நடத்த உள்ளனர். அதன்படி, முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்றும், நாளையும் கோவையில் நடக்கிறது.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்க ஏற்கனவே அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.
கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், கோவை விமான நிலையத்தில் இருந்து தனியார் ஓட்டலுக்கு சென்ற விஜய் சிறிது ஓய்வுக்கு பிறகு பூத் கமிட்டி நடைபெறும் இடத்திற்கு காரில் சென்றபடி ரோடு ஷோ நடத்தினார்.
அப்போது, வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு சிலர் விஜய்யின் கார் மீது ஏறினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.
- மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது.
- அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது.
2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும் பூத் கமிட்டியை பலப்படுத்துவதில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் வீதம் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 70 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்ததும், பூத் கமிட்டி மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டியது. இந்த மாநாட்டை மொத்தமாக இல்லாமல், மண்டலங்கள் வாரியாக பிரித்து நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தற்போது மாநாடு நடத்த உள்ளனர். அதன்படி, முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்றும், நாளையும் கோவையில் நடக்கிறது.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்க ஏற்கனவே அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 26-ந்தேதி மதியம் 3 மணிக்கு மாநாடு தொடங்குகிறது.
- புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:
வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கட்சி வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கட்சியில் புதிதாக சேர்ந்த வர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி இருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் கட்சி ரீதியாக 2 தொகுதிகளுக்கு 1 மாவட்டங்களாகவும் சில மாவட்டங்கள் 1 தொகுதிக்கு ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 144 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 6 மாவட்ட செயலாளர்களுக்கான பட்டியலை அறிவிப்பு விரைவில் விஜய் வெளியிட இருக்கிறார்.
இதற்கிடையே கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த மாதம் நடந்தது. கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதி ராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த கட்டமாக பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி கடந்த சில மாதங்களாக கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 35 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டது. மொத்தம் 70 ஆயிரம் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பணிகள் முடி வடைந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு வருகிற 26, 27-ந் தேதிகளில் கோவை சரவணம்பட்டியில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாடு 2 மண்டலங்களாக நடக்கிறது. கொங்கு மண்டலத்துக்குட்பட்ட கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி மாவட்டங்களுக்கான மாநாடு நடைபெறுகிறது.
26-ந்தேதி மதியம் 3 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டில் தேர்தல் ணிகள், மக்களிடையே தமிழக வெற்றிக் கழக திட்டங்களை கொண்டு செல்வது மற்றும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான யூகங்கள் பற்றி விஜய் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அதிரடி அரசியல் பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநாடு நடைபெறும் இடத்தை சமீபத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாநாட்டுக்கான முன் ஏற்பாட்டு பணிகளில் கோவை மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
- பூத் கமிட்டி மாநாட்டில் தலைவர் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு பூத் கமிட்டி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு 5 மண்டலங்களில் நடத்த நேற்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக மேற்கு மண்டலமான கோவையில் முதல் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூத் கமிட்டி மாநாட்டில் தலைவர் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு, டெல்டா என 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பூத் கமிட்டி மாநாடு முடிந்தபின் தங்கள் கட்சியின் முழு பலம் அனைவருக்கும் தெரியவரும் என த.வெ.க. தலைவர் விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.