search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94530"

    காலை வேளையில் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிட நினைத்தால், பசலைக்கீரை ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 2
    பசலைக்கீரை - 1 கப்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    பால் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பசலைக்கீரையை போட்டு, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின்னர் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, கையால் அதனை லேசாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதில் பசலைக்கீரை மற்றும் கொத்தமல்லியைப் போட்டு, மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை ஆம்லெட் ரெடி!!!

    காலையில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, இந்த பசலைக்கீரை ஆம்லெட்போட்டு சாப்பிட்டால், வயிறு நிறையும்.

    பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    கேரட் - 1
    வெங்காயம் - 1
    முட்டை - 3
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் துருகிய உருளைக்கிழங்கு, கேரட்டை போட்டு வதக்கவும்.

    உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் உப்பு, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற விடவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கலவையை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் ரெடி.

    வழக்கமான முட்டைக்கோஸை விட சிவப்பு முட்டைக்கோஸில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு முட்டைக்கோஸ் - 50 கிராம்
    கேரட் - 50 கிராம்
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    முட்டை - 2
    ப.மிளகாய் - 2
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    சிவப்பு முட்டைக்கோஸ், கேரட், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சிவப்பு முட்டைக்கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் முட்டை கலவையை பரவலாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பு முட்டைக்கோஸ் கேரட் ஆம்லெட் ரெடி.

    குழந்தைகளுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று முட்டையை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 2
    வெங்காயம் - 2
    பூண்டு - 1
    காய்ந்த மிளகாய் - 10
    உப்பு கலந்த தண்ணீர் - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    புளித்தண்ணீர் - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    மிக்ஸ்டு ஆயில் - தேவையான அளவு

    செய்முறை

    முட்டையை வேக வைத்துகொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொரித்து கொள்ளவும். (மொறு மொறு என்று பொரிந்திருக்க வேண்டும்)

    அடுத்து பூண்டைபோட்டு அதே போல் பொரித்து கொள்ளவும்.

    அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரித்து எடுக்கவும்.

    காய்ந்த மிளகாயை கைகளால் நொறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொரித்த வெங்காயம், பூண்டைபோட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு ( காரத்திற்கேற்ப) நொறுக்கிய வறுத்த மிளகாயை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    ஒரு முட்டையை எடுத்து நடுவில் சிறிதளவு கீறிக் அதன் நடுவில் வறுத்த வெங்காய மசாலாவை சிறிதளவு வைத்து மேலே சிறிதளவு உப்பு தண்ணீர், எலுமிச்சை சாறு, புளிக்கரைசல், மிக்ஸ்டு ஆயில் ஊற்றி மேலே கொத்தமல்லி தழை வைத்து பரிமாறவும்.

    சூப்பரான முட்டை பேஜோ ரெடி.

    தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த முட்டை பிரை. 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 6
    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    பூண்டு - 4 பல்
    பெரிய வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து முட்டையை சற்று கீறி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை போட்டு வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் வேக வைத்த முட்டையை சேர்த்து கிளறவும்.

    மசாலா முட்டையில் நன்றாக பரவியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்,

    சூப்பரான முட்டை பிரை ரெடி.

    இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. உணவில் வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், பல நோய்களுக்கு மருந்தாகும்.
    தேவையான பொருட்கள்

    இறால் - 100 கிராம்
    முட்டை - 2
    மிளகு தூள் - சிறிதளவு
    உப்பு - அரை ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிது
    மிளகாய் தூள் - சிறிதளவு
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம்.

    இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.
    சப்பாத்தி, நாண், சாம்பார் சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை பட்டாணி பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 4
    பட்டாணி - 100 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 1
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகுப்பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வெந்தும் தக்காளி, மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான முட்டை, பட்டாணி பொரியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோழி வெப்புடு. இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
    தட்டிய பூண்டு - 30 கிராம்
    வெங்காயம் - 50 கிராம்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 3
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.

    சிக்கன் வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் மிளகுத்தூள் தூவிக் கிளறவும்.

    கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

    ஆந்திரா ஸ்டைல் கோழி வெப்புடு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சீரக சம்பா அரிசி சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ
    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    புதினா - ஒரு கட்டு
    கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
    பால் - கால் லிட்டர்
    தயிர் - 100 மில்லி
    எண்ணெய் - 50 மில்லி
    நெய் - 2 டீஸ்பூன்
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்  - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.

    அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சேர்த்து குழைய வேக விடவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் சிக்கன், தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.

    அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.

    கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இறாலில் கோலா உருண்டை செய்தால் அருமையாக இருக்கும். சாதம், தோசை, சப்பாத்திக்கு அருமையான இறால் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - முக்கால்  கிலோ,
    கடலை மாவு - அரை கப்,
    சின்ன வெங்காயம் - 150 கிராம்,
    பெரிய வெங்காயம் - 3,
    தக்காளி - 4,
    மீன் வறுவல் மசாலா - 50 கிராம்,
    மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    சோம்பு, சீரகம், கசகசா - தலா ஒரு டீஸ்பூன்,
    இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
    தேங்காய் - அரை மூடி,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து தனியே வைக்கவும்.

    கொத்தமல்லி, சின்னவெங்காயம், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மீன் வறுவல் மசாலா, மிளகுத்தூள், இஞ்சி - பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், அரைத்து வைத்த வெங்காய விழுது, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு திக்கான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.

    பின்னர் ஒவ்வொரு இறாலாக தனியாக எடுத்து மாவுடன் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிய பின்னர், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

    அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் கலந்து, திக்கான பதம் வந்ததும் பொரித்த இறால் உருண்டைகளை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து வேகவிடவும்.

    பிறகு, கொத்தமல்லி தூவி இறக்கினால்... சுவையான இறால் கோலா உருண்டை குழம்பு ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த வரமிளகாய் கோழி வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் -  250 கிராம்,
    வரமிளகாய் - 10,
    சாம்பார் வெங்காயம் - 100 கிராம்,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 100 மி.லி.கிராம்,
    உப்பு - தேவைக்கு.
    கொத்தமல்லி - சிறிதளவு,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தனியா - 5 கிராம்.



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்

    கடாயில் வரமிளகாய், தனியாவை சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    இதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

    சிக்கன் வேக சற்று தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமாக தீயில் வேக விடவும்.

    அடுத்து அதில் பொடித்த மசாலாவை போட்டு நன்றாக கிளறி விடவும்.

    சிக்கன் நன்றாக வெந்து மசாலாவுடன் இணைந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.

    சூப்பரான வரமிளகாய் கோழி வறுவல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் நல்ல நிவாரணம் தரும். இன்று நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    நண்டு - 250 கிராம்.
    கொத்தமல்லி - சிறிதளவு

    அரைக்க…

    சாம்பார் வெங்காயம் - 1,
    தக்காளி - 2,
    பச்சைமிளகாய் - 3,
    பூண்டு - 4 பல்,
    இஞ்சி - சிறிது,
    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க:

    கடுகு, மிளகு, சீரகம், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிது.



    செய்முறை:

    நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்.

    மண்சட்டியில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு சேர்த்து, உப்பு போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.

    நண்டு நன்றாக வெந்ததும் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைபோட்டு தாளித்து நண்டு ரசத்தில் கொட்டி கலந்து இறக்கவும்.

    கொத்தமல்லி தூவி சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.

    சூப்பரான நண்டு ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×