search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95271"

    பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.
    சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    1. முகப்பருவுக்கு பூண்டு சிறந்த நிவாரணம் அளிக்கும். பூண்டுவை தோல் நீக்கி நன்றாக நசுக்கி சாறாக்கவும். முகப்பரு இருக்கும் இடங்களில் பூண்டு சாறுவை தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவிவிடலாம். முகத்தில் சிவப்பு நிறத்தில் திட்டுகள், வீக்கம் இருந்தாலும் பூண்டுச் சாறை பயன்படுத்தலாம்.

    2. சிலருக்கு முகத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்படும். ஒரு பூண்டுவை தோல் நீக்கி அதனுடன் பாதி தக்காளி பழத்தை சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் முகம் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.

    3. பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் படர்ந்திருக்கும் தழும்புகளை நீக்குவதற்கும் பூண்டை பயன்படுத்தலாம். பூண்டு சாறுடன் 100 மி.லி. ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கி தழும்பு இருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.

    4. உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்களில் சிலருக்கு சருமம் சிவத்தல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இத்தகைய சரும அழற்சிக்கு பூண்டுவை நசுக்கி சருமத்தில் தடவி வரலாம்.

    5. வயதாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இளம் வயதிலேயே நிறைய பேர் சரும சுருக்க பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு சாறை கலந்து பருகி வந்தால் முகத்தில் சுருக்கங்கள் தோன்றாது. இளமையை பாதுகாக்கும் தன்மையும் பூண்டுக்கு இருக்கிறது.
    உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
    முதுமை தெரியாத அளவுக்கு இளமையோடு வாழவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், சிலர் மட்டுமே வெகுகாலமாக இளமையுடன் தோன்றுகிறார்கள். பலர் இளம் வயதிலேயே முதிய தோற்றத்துடன் வலம் வருவதையும் காணமுடிகிறது. உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

    சமச்சீரான சத்துணவை போதுமான அளவில் தினமும் உட்கொண்டால் இளமையை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது, ஆரோக்கியத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். அப்போது நோய்கள் ஏற்படாது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது இளமையின் முதல் படி என்பதை உணரவேண்டும்.

    ஒருவர் இளமையோடு இருக்கிறார் என்பதை அவரது சருமம்தான் முதலில் அடையாளம் காட்டுகிறது. சருமத்தில் இளமையை பொலிவூட்டவேண்டும் என்றால் சிலவகை உணவுகளை தவிர்க்கவேண்டும். குளிர்பானத்தை அறவே தவிர்த்திடுங்கள். காபி, டீ பருகுவதை குறைத்திடுங்கள். மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் சரும அழகின் எதிரிகள் என்பதை உணர்ந்திடுங்கள். பழங்களை சாப்பிடலாம். பால், சர்க்கரை போன்றவை சேர்க்காத கிரீன் டீ பருகுவதையும் பழக்கத்தில் கொண்டுவரலாம்.

    உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் உங்கள் உடலை இளமை ததும்பச் செய்ய முடியாது. உடல் இயக்கத்தை சீராக்கி, சிறப்பாக்க தினமும் 45 நிமிட இலகுவான உடற்பயிற்சி அவசியம். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்றவை எலும்பு, மூட்டுகளின் இயக்கத்திற்கு சிறந்த பயிற்சிகள் என்றாலும், இவைகளில் எதையும் செய்ய முடியாவிட்டாலும் தினமும் முக்கால் மணிநேரம் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியையாவது செய்யுங்கள். வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரர்களை நம்பியிருக்காமல் நீங்களே செய்யுங்கள். வீட்டிலே சிறிதாக ஒரு தோட்டத்தை உருவாக்கி பராமரியுங்கள். சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு வீட்டு மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். உடலுக்கு ஏதாவது ஒருவகையில் வேலைகொடுங்கள்.

    உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, அதில் உங்கள் இளமைக்கு எதிராக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். கண்களில் கருவளையம் இருந்தால் பளிச்சென்று மற்றவர்களுக்கு தெரிந்துவிடும். கண்களை சுற்றியுள்ள சருமத்தில் இருக்கும் ஹுமோகுளோபினை சில என்சைம்கள் சிதைக்கும்போது, அது கருவளையமாக தென்படும். இதற்கு சரும டாக்டர்களிடம் இருந்து ‘ஜெல்’ வாங்கி பூசலாம் என்றாலும், இயற்கையான சிறந்த மருந்து ஆழ்ந்த உறக்கம்தான். தினமும் எட்டு மணிநேரம் நன்றாக தூங்கி எழுந்தால் கருவளையம் அகலும். தினமும் போதுமான அளவு தண்ணீரும் பருகவேண்டும்.

    சிலரது முகத்தில் இளமை கொலுவிருக்கும். ஆனால் அவர்களது கையின் புறப்பகுதியில் சரும சுருக்கங்கள் ஏற்பட்டு, முதுமையை பறைசாற்றிவிடும். நடுத்தர வயதை கடக்கும்போது உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய தொடங்கும். அப்போது கோலாஜென், எலாஸ்டின் போன்றவை தளர்ச்சியடையும். அதனால்தான் சரும சுருக்கம் தோன்றுகிறது. இதற்கு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழம், காய்கறி, பழம் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ப்பது அவசியம்.

    சிறிதளவு சர்க்கரையை ஆலிவ் எண்ணெய்யில் கலந்து குழைத்து சருமத்தில் பூசும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் இறந்த செல்கள் அகன்று சருமம் புதுப்பொலிவுபெறும். சருமத்தின் அழகுக்கு வெளியே எத்தனை வேலைப்பாடுகள் செய்தாலும், உடலுக்கு உள்ளே அதற்கான சரியான மாற்றங்கள் உருவாகவேண்டும். உள்ளே ஏற்படும் இயக்கங்களில் குறிப்பிடத்தக்கது, சீரான ரத்த ஓட்டம். ரத்தத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தால்தான் ரத்த ஓட்டம் துரிதப்படும். கூடுதல் ஆக்சிஜன் கிடைக்க நன்றாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    எவ்வளவு இளமையோடு நீங்கள் ஜொலித்தாலும், அதற்கு புன்னகைதான் கிரீடம் சூட்டும். அதனால் சிரிப்பை எல்லா நேரங்களிலும் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சிரிக்கும்போது முகத்திற்கு கூடுதல் ரத்த ஓட்டம் செல்லும். ஏராளமான தசைகள் செயல்பட்டு முகத்திற்கு கூடுதல் அழகு கிடைக்கும். இளமை கொலுவிருக்க இதழ்விரித்து சிரியுங்கள்!
    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?
    கடந்த சில வருடங்களாகவே புடவைக்கு அணியும் பிளவுஸ்களுக்கென்று தனிக்கவனத்தை பெண்கள் கொடுத்து வருகிறார்கள்.

    விதவிதமான வேலைப்பாடுகளுடன் அருமையாகத் தைத்து அதற்கேற்றாற்போல் கான்ட்ராஸ்டாக சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய ட்ரெண்ட் என்று சொல்லலாம்.

    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?

    மிகச் சமீபத்திய பிளவுஸ் டிரெண்ட் என்று பட்டன் ரோ பேக் மாடலைச் சொல்லலாம். இவை பட்டு சேலைகளுக்கு அணிந்து கொள்ள சூட்டானவையாகும். இந்த பிளவுஸ்களில் க்ளோஸ் நெக் வைத்து, முதுகுப்புறம் பட்டன்களைத் தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளி விட்டோ தைக்கிறார்கள். ப்ளவுஸ் நிறத்திற்கு கான்ட்ராஸ்டாக பட்டன்களை வைப்பது இன்னும் அழகைக் கூட்டுகின்றது.

    ட்ரெடிஷனல் மற்றும் மாடர்ன் லுக்காக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆஃப் ஹோல்டர் பிளவுஸ் டிசைன் மிகவும் ஏற்றதாக இருக்கும். அம்மா, பாட்டியின் பட்டுப் புடவைகளை இதுபோன்ற பிளவுஸ்களுடன் போடும்பொழுது மிகவும் மாடர்னான தோற்றத்தையே தரும்.

    மக்காம் வேலைப்பாடுகளுடன் முக்கால் கை வரை வைத்துத் தைக்கப்படும் இவ்வகை பிளவுஸ்களையே தென்னிந்திய மணப்பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

    ஃபுல் ஸ்லீவ்ஸ் பிளவுஸ் டிசைன்களை அனைவருமே பட்டுச் சேலைகளுடன் அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த மாடல் பிளவுஸ்கள் மறுபடியும் இன்றைய டிரெண்டில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்.

    அதேபோல் ப்ரோகேட் பிளவுஸ்களை எந்தச் சேலையுடனும் மேட்ச் செய்து அணிந்து கொள்வதற்கு ஏற்றாற்போல் பலவித நிறங்களை ஒரே பிளவுஸில் இருப்பது போல் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றை மிக்ஸ் அண்டு மேட்ச் செய்தோ அல்லது பல சேலைகளுக்கு ஒரே பிளவுஸை அணிந்து கொள்ளவோ வாய்ப்புகளை அதிகமாக வழங்குகிறது. இவற்றின் ரிச்சான லுக்கானது அனைத்து பெண்களின் வாட்ரோப்களிலும் இடம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

    நெட் துணிகளை பிளவுஸ்களின் கைப் பகுதிக்கு மட்டும் வைத்து தைக்க டிசைன் மாறி இப்பொழுது முதுகுப்புரம் முழுவதும் வைத்துத்தைத்து அதில் பேட்ச் வொர்க் அல்லது சிக்கி, குந்தன் வேலைப்பாடுகளுடன் தைத்து அணிவது இப்பொழுது டிரெண்ட் என்று சொல்லலாம்.

    முக்கால் கை வைத்து ஹை நெக்குடன் தைக்கப்படும் பிளவுஸ்களை டிசைனர் சேலைகளுடன் அணியும் போது அவை கூடுதல் கம்பீரத்தை தருகின்றது.

    நார்மல் ஷர்ட்டுகளின் மாடல்களில் பிளவுஸ்களை அணிந்து கொள்வது இன்றைய டீன் ஏஜ் பெண்களின் விருப்பமாக உள்ளது.

    ஹை நெக் முக்கால் கை வைத்து முழுக்கழுத்தும் நகை அணிந்தது போல தங்க நிற நூல்களால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருக்கும் பிளவுஸ்களை பிளெயின் சேலைகளுடன் அணிந்தால் ஒரு சின்ன நகையைக் கூட அணிய வேண்டிய அவசியமில்லை.

    பட்டர்ஃபிளை கட் பேக் நெக் பிளவுஸ்கள் ஒரு தனித்துவமான பாணியில் பூசிய உடல் வாகுடன் இருக்கும் பெண்கள் அணிந்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. இவ்வகை பிளவுஸ்கள் டிசைனர் சேலைகளுடன் அணிய ஏற்றவை.

    சோளி ஸ்டைல் ஃபேஷன் பிளவுஸ்களில் பின்புறம் முடிந்து கொள்வது போல் வந்திருக்கும் மாடலும் இன்றைய டிரெண்ட் எனலாம்.

    ஒரு ஷோல்டர் மாடல், ட்யூப் ஸ்டைல் மாடல், க்நாட்டட் மாடல், பெப்லம் ஸ்டைல், சைனீஸ் காலர் மாடல், பெப்லம் ஸ்டைல், சைனீஸ் காலர் மாடல் என பிளவுஸ்களை விதவிதமாகத் தைத்து அணிவதிலும், தைத்த பிளவுஸ்களில் டிசைன் செய்து அணிவதிலும் இன்றைய இளைம் பெண்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல், சில ஆயிரம் முதல் பல ஆயிரம் வரையிலும் பிளவுஸ்களுக்குச் செலவு செய்யத் தயாராகவும் இருக்கிறார்கள்.
    உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது.
    முக அழகின் பராமரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். பாதங்கள் உடலின் மொத்த எடையையும் தாங்கி நிற்கின்றன. உடலின் அனைத்து நரம்புகளும் பாதங்களில் தான் இணைகின்றன. தற்போது பாத வெடிப்பு பலர் சந்திக்கும் பிரச்சனையாகும். இது அழகை மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

    காரணம்

    உடல் எடை அதிகரிப்பு, சரும வறட்சி, பாதங்களை முறையாக பராமரிக்காதது, பொருத்தமில்லாத காலணிகள் அணிவது போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் இருக்கும் போது வெடிப்புகளில் அழுக்கு சேருவது கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். இதன் காரணமாக சீழ் வடிதல், எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    தீர்வுகள்

    மருதாணி

    பாத வெடிப்புக்களை குணப்படுத்துவதில் மருதாணி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கைப்பிடி மருதாணி இலைகளோடு கிழங்கு மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சிறிது துண்டு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இந்த கலவையை காற்று புகாத டப்பாவில் போட்டு குளிர்பதனப்பெட்டியில் பாதுகாத்து வைத்து பயன்படுத்தலாம். இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு கால்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்துவிட்டு அரைத்து வைத்திருக்கும் கலவையை வெடிப்பு உள்ள இடங்களில் பூச வேண்டும் இவ்வாறு தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தால் பாத வெடிப்பு நீங்கும்.

    எலுமிச்சை சாறு

    இளம் சூடான நீரில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு பாதங்களில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கிவிட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்பு மறையும்.

    மஞ்சள்

    பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளில் கிருமிகளால் தொற்று ஏற்படக்கூடும். எளிய முறையில் கிருமிகளை நீக்குவதற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வரலாம். இதன் மூலம் கிருமிகள் நீங்கி, பாதங்களில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை குணமாகும்.

    மசாஜ்

    பாதங்களில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்காக ஆலிவ் எண்ணெய் பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றையும் சமஅளவு கலந்து மசாஜ் செய்யலாம். இதன் மூலம் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.
    பெண்கள் விரும்பி அணிய எற்றவாறு கண்கவர் உருவகங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்டட் எனும்போது பெண்மைக்கு அழகூட்டும் அம்சங்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன.
    இளம்பெண்கள் விரும்பி அணியக்கூடிய குர்தீஸ் எனப்படும் மேல்சட்டைகள் அனைத்து இடங்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றதாக உள்ளது. பல்வேறு ரகங்களில் உருவாகும் குர்தீஸ்கள் தற்போது புதுமையும், நவீனமும் கலந்தவாறு டெனிம் குர்தீஸ்கள் வருகின்றன. இவை ஒரு நாள் முழுவதும் அணிய ஏற்ற கச்சிதமான ஆடையாகவும், பலரும் பார்த்து வியக்கும் மேம்பட்ட தையல் அமைப்புகளை உள்ளடக்கியவாறு தைக்கப்படுகின்றன. விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் செல்வதற்கு ஏற்ற ஆடையாக திகழ்வதுடன், வெளியூர் மற்றும் சுற்றுலா பயண்களிலும் அணிய ஏற்றதாக உள்ளது. இளவயது பெண்கள் கல்லூரிகள் மற்றும் வகுப்புகளுக்கு அணிந்து செல்ல ஏதுவான ஆடையாகவும் திகழ்கிறது.

    விதவிதமான பிரிண்டட் டெனிம் குர்தீஸ்

    பெண்கள் விரும்பி அணிய எற்றவாறு கண்கவர் உருவகங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்ட் செய்யப்பட்டது எனும்போது சாதாரண டெனிம் குர்தீஸ்-யை விட கூடுதல் பொலிபை தரக்கூடியவை. டெனிம் துணியின் அடர்த்தி நீலத்திற்கு மேற்புறம் மென்மையான வெளிர் நீல நிற சாயலில் இலைகள், பூக்கள், கொடிகள் மற்றும் கணித உருவங்கள் அச்சிடப்பட்டு டெனிம் குர்தீஸ் வருகின்றன. பிரிண்டட் எனும்போது பெண்மைக்கு அழகூட்டும் அம்சங்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன.

    அழகிய வெட்டுகளுடன் கூடிய குர்தீஸ்

    டெனிம் குர்தீஸ் என்பது ஒவ்வொரு விதமாக மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இதன் தோற் அமைப்பு பலவிதமான பெண்களின் விருப்பங்களை பொருத்து அமையும் விதமாக உருவாக்கப்படுகின்றன. கழுத்து மற்றும் கை பகுதிகளில் சில மாறுபட்ட வடிவமைப்பு வெட்டுகளுடன் டெனிம் குர்தீஸ் வருகின்றன. அதாவது கை பகுதி என்பது முக்காலி கை பகுதி மற்றும் முழு நீள கைப்பகுதி கொண்டவாறு உருவாகின்றன.

    அதிலும் இந்த முக்கால் கைப்பகுதி என்பது நடுவில் வளைவு உள்ளவாறு வெட்டப்பட்டு அதில் சில எம்பிராய்டரி செய்யப்பட்டு தரப்படுகிறது. இந்த வெட்டு துலிப் மலர் போன்ற மேல், கீழ் சுழல் பகுதி உள்ளவாறு உள்ளன. கழுத்து பகுதி வி-நெக், வட்டம், டூம் நெக் மற்றும் சில பூ வடிவ கழுத்துக்கள் கொண்டவாறு வடிவமைப்பு செய்யப்படுகிறது.

    இதில் கழுத்து பகுதியிலும், நடு நாயக பகுதியிலும் பட்டன்கள் மற்றும் எம்பிராய்டரி அமைப்பு உருவாக்கம் செய்யப்படுகின்றன. இதில் பட்டன் அமைப்பு நூல் மற்றும் சில பட்டு நூல்களால் அழகுற பொருத்தப்படுகின்றன. மேன்டிரின் காலர், வி-நெக் கொண்ட நீளமான குர்தீஸ் அதிகமாக விரும்பப்படுகிறது. அதுபோல் சில மாடல்கள் ஷார்ட் காலர் அமைப்புடன் வித்தியாசமாக பெரிய அளவுள்ள டெனிம் குர்தீஸ்கள் வருகின்றன. இவை வெளிர்நிற சாயலுடன் அதிக கவனத்தை ஈர்க்கும் குர்தீஸ்களாக உள்ளன.

    ஏற்ற-இறக்க குர்தீஸ்கள்

    அதாவது குர்தீஸ்கள் கீழ் பகுதி என்பது முன்புறம் சற்று எற்றமாகவும், பின்புற கீழ்பகுதி சற்று இறக்கம் உள்ளவாறும் வடிவமைக்கப்படும். இந்த டெனிம் வகை குர்தீஸ்களில் இந்த வடிவமைப்பு குர்தீஸ் அதிகம் வருகின்றன. பதானி வகை ஹை-லோ குர்தீஸ், ஏ-லைன் குர்தீஸ், டியூனிக் குர்தீஸ் என்ற பலவகை குர்தீஸ்கள் டெனிம் ரகத்தில் வருகின்றன. ஹை-லோ குர்தீஸ் என்பதில் சில முன்புற கீழ் பகுதி வித்தியாசமான வளைவுகள் கொண்டவாறு வெட்டப்பட்டு தைத்து தரப்படுகின்றன. பூக்கள் மற்றும் கைப்பை அமைப்புகள் வேறு வகை நூல்கள் மூலம் எம்பிராய்டரி செய்யப்பட்டு குர்தீஸ்ன் அழகை மேம்படுத்துகின்றன.

    டெனிம் ரக துணிகள் ஒரே அடர் நீலம் மற்றும் வெளிர் நீல வகை சார்ந்தவையாகவே இருக்கும். அதனை குர்தீஸ் தயாரிக்க பயன்படுத்தும்போது பெண்களுக்கு உரியவாறு அதிக பொலிவும், வனப்பும் உள்ளவாறு மேம்பட்ட வகையில் வடிவமைப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் டெனிம் ரக துணியின் நிற சாயல் என்பதின் குறை நீங்கி அதுவே அந்த டெனிம் துணிக்கு கூடுதல் மவுசு தரும் வகையில் உருவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது பிரிண்ட், டை, எம்பிராய்டரி, வெட்டுகள் என்றவாறு டெனிம் துணியில் குர்தீஸ் அழகுடன் மாறுபட்ட வகையில் உருவாகின்றன.
    தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
    முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. வெட்டிவேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும்  தரக்கூடியது.

    வெட்டிவேர், ஆவாரம் பூ, ரோஜா இதழ்கள், செம்பருத்தி இதழ்கள் ஆகியவற்றை நன்றாக உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தண்ணீரில் குழைத்து பேஸ் பேக் போல முகத்துக்குப் பயன்படுத்த, முகம் பொலிவடையும். வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.

    செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், வெட்டிவேர், ஆவாரம் பூ, சடாமஞ்சி போன்ற மூலிகைகளைச் சேர்த்து ஊறவைத்து, முடித் தைலமாக உபயோகிக்க, தலைமுடிக்குக் கூடுதல் ஆரோக்கியம்  கிடைக்கும்.

    வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.

    பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

    தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

    வெட்டிவேர் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம் சேர்த்து இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். கூந்தல் வாசனையாக இருக்கும். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்திற்கு எல்லோருமே மயங்குவார்கள்.
    இன்றைய நாளில் பெண்கள் விரும்பி அணியும் பலவித பொருட்களிலும் பூக்கள் இடம் பெறுகின்றன. பெண்கள் மனதை கவர்ந்த பூக்கள் என்பது காலில் அணியும் ஸ்நீக்கர் ஷு-க்களிலும் வந்துள்ளது.
    இளம் வயது பெண்கள் விரும்பி அணியும் ஸ்நீக்கர்ஸ் என்ற ஷுக்கள் இப்போது வண்ணமயமான மலர்கள் பதியப்பட்டவாறு வருகின்றன. கேஸ்வலாக அன்றாடம் அணிய ஏற்ற புத்தம் புதிய வடிவமைப்பில் பூ வேலைப்பாடு ஸ்நீக்கர்ஸ் வந்துள்ளன. அணிகின்ற ஆடைகளுக்கு ஏற்றவாறு விதவிதமான பல வண்ண பூக்கள் பதியப்பட்ட ஸ்நீக்கர்ஸ் என்பது கண்கவர் வடிவில் அனைத்து நிகழ்வுகளுக்கும் அணிய ஏற்ற வகையில் உள்ளன.

    இந்த பூ வேலைப்பாடு ஸ்நீக்கர் என்பது லோ-டாப் மற்றும் ஹை-டாப் என்ற இருவகை பிரிவுகளிலும் கிடைக்கின்றன. அதுபோல் லேஸ் வைக்கப்பட்டும், லேஸ் இல்லாத கட்-ஷுவை போன்றும் புதிய புளோரல் ஸ்நீக்கர்ஸ் வந்துள்ளது.

    பூ வேலைப்பாடு என்பது எம்பிராய்டு செய்யப்பட்டும், வண்ண பூச்சு செய்யப்பட்டவாறும் கிடைக்கின்றன. இதில் பூக்கள் என்பது பளிச்சென தெரிகின்றவாறு அடர்த்தியான வண்ணங்களிலும், மென்மையான வண்ணங்களிலும் பலதரப்பட்ட வகையில் கிடைக்கின்றன. இன்றைய நாளில் பெண்கள் விரும்பி அணியும் பலவித பொருட்களிலும் பூக்கள் இடம் பெறுகின்றன. பெண்கள் மனதை கவர்ந்த பூக்கள் என்பது காலில் அணியும் ஸ்நீக்கர் ஷு-க்களிலும் வந்துள்ளது.

    உறுதியான துணிகளின் மீது எம்பிராய்டரி மற்றும் வண்ண பெயிண்ட் செய்யப்பட்ட இந்த ஸ்நீக்கர் என்பது வெகு நாட்கள் ஆனாலும் அதன் புதுமையும், பொலிவும் மாறாது இருக்கும்படி உறுதியான தன்மை கொண்டதாக உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

    லெதர் பூ வேலைப்பாடு ஸ்நீக்கர்ஸ்

    பூ வேலைப்பாடு செய்யப்பட்ட ஸ்நீக்கர்ஸ் என்பது உறுதியான லெதர் மூலம் உருவாகியுள்ளன. அதாவது டிரிப்ட்வுட் லெதர், பாப்ராய்ஸ் லெதர், டெனிம் லெதர், பன்ச் கோரல் லெதர் போன்றவை மூலம் உறுதியான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் டெனிம் லெதர் என்றால் அதனை சுலபமாக துவைத்து கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

    எடை குறைந்த ஸ்நீக்கர்ஸ்

    அதிக எடையின்றி இலகுவாக அணிய ஏற்றது என்பதால் பெண்களின் விருப்பமான ஸ்நீக்கர்ஸ் ஆக உள்ளது. மேலும் அணிவதற்கு சுலபமான ஷு என்பதாலும் உடனுக்குடன் கழட்டி அணிய ஏற்றது என்பதாலும் கல்லுரி மற்றும் அலுவலக பெண்களின் விருப்ப தேர்வாக உள்ளது.

    வண்ணமயமான மலர்கள் மலர்ந்த ஸ்நீக்கர்ஸ்

    வெள்ளை நிற பின்னணியில் வண்ண மலர்கள் தனிப்பட்டு தெரியும் வகையில் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்நீக்கர்ஸ் உள்ளன. அதுபோல் பிங்க் நிற பின்னணியில் வெள்ளை நிற மலர்களம், கருப்பு நிற பின்னணியில் பல வண்ண மலர்கள் அதாவது பச்சை, மஞ்சள், சிகப்பு நிற மலர்கள் பார்க்க பளிச்சிடும் வகையில் உள்ளன. பெரும்பாலும் பெண்கள் மென்மையான வண்ண சாயல் கொண்ட பூ வேலைப்பாடு ஸ்நீக்கர்ஸ்-யை தான் விரும்பி அணிகின்றனர். ஏனெனில் எந்த விதமான வண்ண ஆடையாய் இருப்பினும் மென்மை வண்ண ஸ்நீக்கர் பொருத்தமான ஷு-வாக இருக்கும்.

    பிரிண்ட் செய்யப்ப்ட ஸ்நீக்கர்ஸ்

    லெதர் மற்றும் துணியின் மீது அந்த பகுதி மக்கள் விரும்பும் மலர்கள் வளைவுகளாய் அழகுற பிரிண்ட் செய்யப்பட்டு வருகின்றன. பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்நீக்கர் என்பது உயிரோட்டமான பூ அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. மேலும் பூவின் அழகு அற்புதமாக வெளிப்படும் பின்னணி வண்ணசாயல் என்பது நீண்ட நாள் மறையாமல் புது பொலிவுடன் காட்சி தருகின்றன. பிரிண்ட் செய்யப்படும் போதும் உலகளாவிய மலர் வடிவம் அனைத்தும் சுலபமாக பிரிண்ட் செய்யப்படுவதால் நவீன யுவதியர் விரும்பும் வடிவில் உள்ளன.

    வானவில் கருத்துறு ஸ்நீக்கர்ஸ்

    வானவில்லின் ஏழு வண்ணங்களும் மலர்களாய், வண்ண அச்சுகளாய் உள்ள ஸ்நீக்கர்ஸ் வருகின்றன. இது கேஸ்வல்-ஆக அணிய எற்றது என்பதால் பார்ட்டி மற்றும் பயணங்களின் போது அணிந்து மகிழலாம். நாம் அணியும் பல வண்ண சாயல் ஆடைகளுக்கு ஏற்ற இணைப்பாக இந்த வானவில் கருத்துறு ஸ்நீக்கர்ஸ் திகழ்கிறது. பெண்களின் மனதை கவரும் வகையில் புதுமை வடிவமைப்புடன் வந்துள்ள புளோரல் ஸ்நீக்கர்ஸ் என்பது எந்தவிதமான ஆடைக்கும் ஏற்ற இணை. அதாவது பெண்களின் மாடர்ன் டிரஸ் மற்றும் ஜீன்ஸ் போன்றவையுடன் பலோலோ, டியூனிக் போன்ற ஆடைகளுக்கும் ஏற்ற வகையாக உள்ளது. பூ வேலைப்பாடு செய்யப்பட்ட ஸ்நீக்கர்ஸ் அணிவதே தற்போதைய டிரெண்ட்.
    சிறிய கட்டங்கள் போட்ட அடர்த்தியான நிறமுள்ள பேண்ட்டிற்கு வெள்ளை நிற முழுக்கை சட்டை அணியும் பொழுது அவை அணிபவருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.
    ஷேர்வானி, கோட்சூட், பிளேஸர்ஸ் - இவை மட்டுமே ஆளுமை தரும் ஆடைகள் என்று நீங்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை இப்பொழுது முதல் மாற்றிக் கொள்ளலாம். ஆம், ஆடவர்கள் அணியும் பேன்ட் மற்றும் ஷர்ட்டுகளும் அணியும் விதத்தில் அணியும் பொழுது அது ஆளுமையைத் தரும் ஆடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

    * காண்ட்ராஸ்ட் நிறத்தில் அணியப்படும் பேன்ட்டும் ஷர்ட்டும் மிகவும் கம்பீரமாகவும் அதே சமயம் ட்ரெண்டியாகவும் இருக்கும். பொதுவாகவே மென்மையான பிங்க் நிறச்சட்டைக்கு அடர்த்தியான நீல நிறப்பேண்ட் அணியும் பொழுது அது அணிபவருக்கு முறையான தோற்றத்தைத் (ஃபார்மல் லுக்) தரும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

    * சிறிய கட்டங்கள் போட்ட அடர்த்தியான நிறமுள்ள பேண்ட்டிற்கு வெள்ளை நிற முழுக்கை சட்டை அணியும் பொழுது அவை அணிபவருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.

    * மிகவும் மென்மையான நிறமுடைய பேண்டிற்கு அடர்த்தியான வண்ணங்களில் அணியப்படும் சட்டைகள் பொருத்தமானதாக இருக்கும். இவை அலுவலகத்திற்கு மட்டுமல்லாது விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஏற்ற ஆடையாக இருக்கும்.

    * மென்மையான கிரே நிறமுடைய பேண்ட்டிற்கு மிகவும் பொருத்தமானது கருப்பு நிறமுடைய சட்டை என்றால் அது நூற்றுக்கு நூறு பொருந்தும். இது போன்ற சேர்க்கையில் பேண்ட் ஷர்ட் அணியும் பொழுது ஷர்ட்டிலிருக்கும் பொத்தான் வெண்ணை நிறத்தில் இருந்தால் அது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கும். இரவு நேர நிகழ்ச்சிகளுக்கு இவற்றை அணியும் பொழுது தனித்துவமாக தெரிவோம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

    * ஃபார்மல் பேன்ட்டிற்கு ஷர்ட், டி-ஷர்ட் மற்றும் போலோவை அணிவது டிரெண்டியிலும் டிரெண்டியாக உள்ளது.

    * வேஷ்டிக்கு ஜிப்பா அல்லது குர்த்தா அணிவதும் ஸ்டைலாகவும் கம்பீரமாகவும் இருக்கும். தென்னிந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக வேஷ்டி சட்டையைச் சொல்லலாம். வேஷ்டி அணியும் பொழுது வேஷ்டியின் கரையானது வலதுபுறமாக இருக்க வேண்டும். அதேபோல் கணுக்காலுக்கு மேலே வேஷ்டி இருந்தால் அது அழகான தோற்றத்தைத் தராது. லெதர் ஷூ அல்லது ஸ்னீக்கரை வேஷ்டி அணியும் பொழுது போட்டுக் கொண்டால் அது ஆண்களின் ஆளுமையை அட்டகாசமாக வெளிப்படுத்தும்.

    * பேண்ட் ஷர்ட் அணியும் பொழுது எதை செய்யக்கூடாது? எதைச் செய்யலாம்? என்பதை தெரிந்து கொண்டு திருத்தமாக அணியும் பொழுது அவை ஆளுமை தோற்றத்தைத் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.

    * டை அணியும் நேரம் தவிர ஷரட்டின் மேல் பட்டனை போடாமல் இருப்பது அழகான கேஷூவலான தோற்றத்தைத் தருவதாக இருக்கும்.

    * அதே போல் கூலர்ஸ்களை தலையில் அணிவதை விட ஷர்ட்டில் தொங்க விடுவது பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இருக்கும்.

    * டையானது பேண்ட்டின் பெல்ட் நுனியை தொட்டவாறு இருக்க வேண்டும். பேண்ட்டின் மேலோ அல்லது கீழோ தொங்குவது ஆளுமைத் தோற்றத்தைத் தருவதாக இருக்காது.

    * ஃபார்மல் உடைகளில் பெல்ட் மற்றும் ஷூஸ் மேட்ச்சாக அணியும் பொழுது அவை அட்டகாசமாக கெத்தான தோற்றத்தைத் தரும்.

    * நம் உடல் வாகுக்கு ஏற்றாற்போல் உடை அணிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

    * அதே போல் நிகழ்வுக்கு ஏற்றாற் போன்ற ஆடைகளை அணிவதும் அணிபவருக்கு ஆளுமை மற்றும் தன்னம்பிக்கையை கூட்டும்.

    * ஆயத்த ஆடையோ அல்லது வாங்கித் தைக்கும் ஆடையோ எதுவாக இருந்தாலும் நம் உடலுக்கு கனக்கச்சிதமாக பொருந்தும் ஆடைகளை அணிவதும் மிகவும் உற்றுநோக்க வேண்டிய ஒன்றாகும்.

    * நாகரீகமான ஆடை என்பதற்காக நமக்கு பொருத்தமில்லாத ஆடையை அணிவது மிகவும் தவறான தேர்வாகும்.

    * ஜீன்ஸ் பேண்ட்டுகளைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அவற்றுடன் நேர்த்தியான ஜாக்கெட்டுகளை அணிவதும் கிளாசிக்கான தோற்றத்தை நிச்சயம் தரும் என்று நம்பலாம்.

    * சரியான உடைகளுக்கு சரியான பாதணிகள், கைக்கடிகாரம் போன்றவற்றை தேர்ந்தெடுத்து அணிவது கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

    பேண்ட், சட்டை அணிவதிலும் இத்தனை விஷயங்கள் உள்ளதா என்பது தெரிந்து கொண்ட யாரும் ஆண்களுக்கென்ன ஒரு சட்டையையும் பேன்ட்டையும் போட்டால் நிமிஷத்தில் தயாராகி விடலாம் என்று இனிமேல் சொல்ல மாட்டார்கள். ‘ஆள் பாதி ஆடை பாதி’யை சிறிதே மாற்றி ‘ஆள் பாதி ஆளுமை பாதி’ என்று சொல்லுமளவுக்கு நாம் அணியும் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது மிகவும் அவசியமாகும்.
    பெண்கள் அணியக்கூடிய பேண்ட்டுகளில் அழகிய மாற்றங்களுடன் வசதியாக அணிந்து கொள்ளும் விதத்தில் வந்தவைதான் பலாஸோ பேன்ட்டுகள். அதிலும் எத்தனையோ வகைகள் வந்துவிட்டன.
    பெல்ட் பலாஸோ:-

    இடுப்பிலிருந்து சிறிது சிறிதாக தளர்வாகத் தொடங்கி கால்களை நெருங்கும் பொழுது அதிகத் தளர்வாக இருக்கும் பலாஸோ பேன்ட்டுகளில் பெல்ட்டுகளானது அதுவும் அதே பேன்ட் துணியிலேயே விதவிதமான வடிவங்களில் வருவது பெல்ட் பலாஸோ என்று அழைக்கப்படுகின்றது.

    பார்டர் பலாஸோ

    இந்த பேன்ட்டுகளின் கீழ்ப்பகுதியில் பார்டர்கள் வைத்து வருபவை பார்டர் பலாஸோக்களாகும். இந்த பார்டர்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டவையாகவோ, பிரிண்டுகள் செய்யப்பட்டவையாகவோ, ஜரி, குந்தன் வேலைப்பாட்டுடனோ அல்லது பார்டர்கள் தனியாக வாங்கி இதன் மேல் வைத்து தைக்கப் பட்டவையாகவோ, லேஸ்கள் வைத்து தைக்கப்பட்டவையாகவோ இருக்கும். பார்டர்கள் மெல்லியதாகவும் கிடைக்கும் அதேபோல் முழுங்கால் வரை பார்டர்கள் இருப்பது போன்றும் கிடைக்கும்.

    ஸ்கர்ட் பலாஸோ

    அச்சு அசலாக பாவாடை போன்ற தோற்றத்துடன் இருக்கும் இவற்றை “லாங் ஸ்கர்ட் பலாஸோ” என்றும் அழைக்கிறார்கள். இடுப்புப் பட்டையிலிருந்தே சுருக்குப் பட்டைகள் துவங்குகின்றன. அதிக ஃப்ளேர்களுடன் வரும் இந்த ஸ்கர்ட் பலாஸோ ஷார்ட் குர்த்தியுடன் அணியும் பொழுது மிகவும் அழகாக இருக்கின்றது. ஸ்கர்ட் பலாஸோக்களின் பக்கவாட்டில் குஞ்சலம் மற்றும் சலங்கைகள் தொங்குவது போல் வருவது மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைத் தருகின்றது.

    பேன்ட் பலாஸோ

    பேன்ட் அமைப்பில் இருக்கும் இவ்வகை பலாஸோக்களை ஷர்ட்டுகள் மற்றும் குட்டை டாப்புகளுடன் அணியலாம். பெரும்பாலும் பிளெயின் மற்றும் கோடுகள் இருப்பது போன்றே இவை வடிவமைக்கப்படுகின்றன. கோடுகளுடன் வரும் பேன்ட்டிற்கு பிளெயின் நிறத்தில் டாப் அணிவதும், பிளெயினாக வரும் பேன்ட்டிற்கு கோடுகள் போட்ட டாப்பை அணிவரும் இப்பொழுது பிரபலமாக உள்ளது.

    ஃபிளீடட் பலாஸோ

    அதிக ஃபிளீட்டுகளுடன் வரும் இவ்வகை பலாஸோக்கள் குர்த்திகள் மற்றும் டாப்புகளுடன் அணிய ஏற்றவை. டாப்புகளை டக்இன் செய்து இவ்வகை பலாஸோவுடன் அணியும் பொழுது அவை ஒரு நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாக இருக்கும்.

    சைட் ஸ்லிட் பலாஸோ

    கணுக்காலிலிருந்து முழங்கால் வரை பக்கவாட்டில் ஸ்லிட்டுகளுடன் வரும் பலாஸோக்கள் இப்பொழுது கல்லூரி மாணவிகளிடையே மிகவும் பிரபலம். குட்டை டாப்புகளுடன் இவற்றை அணியும் பொழுது இது நிச்சயமாக மிகவும் அழகான தோற்றத்தைத் தருவதாகவே இருக்கும். பக்கவாட்டில் வரும் ஸ்லிட்டானது சிலவற்றில் குறைந்த அளவு உடையதாகவும் வருகின்றது.

    வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க உதவும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    வழுக்கைத் தேங்காயை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழிருந்து மேல்நோக்கிப் பூசி, உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம்
    செய்ய வேண்டும். இப்படித் தினமும் செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும், கரும்புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல்
    போய்விடும்.

    வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால் கூட இதுபோன்ற நிலை ஏற்படும். தேங்காய்ப் பால் இரண்டு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசைபோலாக்க வேண்டும். இந்தப் பசையை முகத்தில் பூசிக் கொண்டு உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்தால் முகம் பிரகாசமாகும்.

    ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்துப் பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும்.

    தேன் ஒரு டீஸ்பூன், தக்காளிச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூச, கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும்.

    பால் பவுடர் - ஒரு டீஸ்பூன்,
    தேன் - ஒரு டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்,
    பாதாம் எண்ணெய் - அரை டீஸ்பூன்

    இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். முகத்தை நன்றாகக் கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து, பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

    வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.
    பால் அழகான உடல் சருமத்திற்கு பல பயன்பாடுகளை கொண்டுள்ளது. பாலை கொண்டு இயற்கை முறையில் பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    கோடைக்காலத்தில் பெரிதும் பாதிக்கக்கூடியது சருமம். சூரிய ஒளிக்கதிர்கள் சருமத்தில் விழும்போது, நிறங்கள் மாறுகின்றன. இதனை சன்- டான் என குறிப்பிடுவர். இதற்கான வீட்டிலேயே செய்ய கூடிய இயற்கை மருத்து குணங்கள் கொண்ட முறைகளை எளிதாக தயார் செய்யலாம். குறிப்பாக பச்சை பால், அழகான உடல் சருமத்திற்கு பல பயன்பாடுகளை கொண்டுள்ளது.

    * காய்ச்சாத பால், சிறந்த ஆண்டி-டானிங் குணமுடையது. வெயில் பட்ட மேனிக்கு, கரு நிறத்தை போக்கக்கூடியது. காய்ச்சாத பால், தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து உபயோகித்து வந்தால், வீட்டிலேயே டான் பிரச்சைகளை தீர்க்கலாம்

    ஆண்டி-டான் ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி?

    பாதாம் - 6, பேரிச்சம்பழம் - 6 இவற்றை காய்ச்சாத பாலில் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பிறகு, பாலில் உள்ள பொருட்களை அரைக்க வேண்டும். முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்துவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும். முகத்தை தண்ணீரில் நனைத்தப்படி, 2-3 நிமிடங்களுக்கு அதே கலவையை கொண்டு தேய்க்க வேண்டும். சுத்தமான நீரினால் முகம், கழுத்து பகுதிகளை கழுவ வேண்டும்
     
    * பச்சை பால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க கூடியது. அபத்தான யூவி கதிர்களில் இருந்து முகத்தை காக்க கூடியது. அதுமட்டுமின்றி மிருதுவான சருமத்திற்கு காய்ச்சாத பால் பயன்படுகிறது.

    காய்ச்சாத பால் ஃபேஸ் க்ளென்சிங் மாஸ்க்

    காய்ச்சாத பாலுடன் பயத்தம் பருப்பு சேர்த்து அரைத்து வைக்க வேண்டும். முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் விடவும். 4-5 நிமிடங்களுக்கு தேய்த்த பின் முகத்தை கழுவ வேண்டும். 

    இந்த இயற்கை முறைகள் மூலம், பளிச்சிடும், மென்மையான சருமம் பெறலாம்.
    பருமனைக் குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், வெறுமனே டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
    பருமனைக் குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், வெறுமனே டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். சில உடைகள், பருமனாகவே இருந்தாலும் அவர்களைக் கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும். நம்முடைய அழகு உடல்வாகில் மட்டுமே வெளிப்படுவதில்லை. அதனால் உடுத்தும் உடையிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

    என்ன மாதிரியான உடைகள் உடுத்தும் போது, பருமனான உடலை ஒல்லியாகக் காட்ட முடியும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்களுக்காக ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் தரும் சில ஸ்டைல் டிப்ஸ்கள் இதோ…

    மிடி அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களைவிட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்களும் மிடியைத் தேர்ந்தெடுக்கலாம்.

    அதேசமயம் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக்கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் குட்டை மிடிகளைத் தேர்ந்தெடுங்கள். குட்டையான மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகத் தெரியும்.

    மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. இறுக்கமான ஆடைகள், உங்கள் உடலில் அதிகமாக உள்ள சதைப்பகுதியை அப்படியே மற்றவர்களுக்கு காட்டிக்கொடுத்துவிடும்.

    சரியான அளவில் ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் அணியலாம். அந்த ஜீன்ஸ்க்குத் தகுந்தபடி, சரியான ஹீல்ஸ் அணிவது அவசியம். உயரமான ஹீல்ஸ் அணியும்போது,  உங்கள் உடலை இன்னும் கொஞ்சம் ஒல்லியாகக் காட்ட முடியும்.

    உள்ளாடைகளைத் தேர்வு செய்வதும் முக்கியம். பிரா வாங்கும்போது சரியான அளவும் உங்கள் உடல்வாகுக்குப் பொருத்தமாகவும் இருப்பது அவசியம். இல்லையென்றால், முதுகுப்பகுதியில் சதைகள் வெளியே பிதுங்கிக் கொண்டு இருக்கும். அது மற்றவர்களை ஈர்க்காது. முகம் சுளிக்கவே வைக்கும்.

    நல்ல டார்க் ரெட், கருப்பு ஆகி நிறங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.

    இடுப்புக்கு மேலே பேண்ட் அணியக்கூடாது. இடுப்புக்குக் கீழே, தொப்புள் பகுதியில் பேண்ட் அணிய வேண்டும்.

    கோடு போட்ட டிசைன்களாக இருக்கும்போது, செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை உடுத்த வேண்டும். அவை ஒல்லியாகக் காட்டும். கிடைமட்டமான கோடுகள் உள்ள ஆடைகளாக இருந்தால், அது உங்கள் எடையை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே காட்டும்.
    ×