என் மலர்
நீங்கள் தேடியது "ஐயப்பன்"
- குமரியின் சபரிமலையாக இந்த கோவில் திகழ்கிறது.
- கார்த்திகை 1-ந்தேதி முதல் தை 1-ந்தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியன்று (நாளை) விரதத்தை தொடங்குவது வழக்கம். இதற்காக ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.
அதே சமயம் குமரி மாவட்டம் மயிலாடியை அடுத்த பொட்டல்குளம் பகுதியில் உள்ள அய்யன்மலை ஐயப்பசாமி கோவில் தமிழக அளவில் புகழ் பெற்றது ஆகும். இது குமரியின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் மருந்துவாழ் மலைக்கு மிக அருகில் உள்ளது.
இந்த கோவிலிலும் நாளை (வியாழக்கிழமை) ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்க உள்ளனர்.
இந்த கோவிலை பொட்டல் குளத்தை சேர்ந்த தியாகராஜ சுவாமிகள் என்ற சித்தர் நிறுவினார். இவர் பனை ஓலையில் ஐயப்பசாமி குறித்து பல பாடல்கள் எழுதி புகழ்பெற்றவர். இவர் சபரிமலை ஐயப்பசாமி கோவிலுக்கு சென்ற போது, நம் பகுதியிலும், இது போன்று ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று எண்ணியபடி தூங்கினார். அப்போது அவர் கனவில் ஐயப்பசாமி தோன்றி, அதற்கான இடத்தையும் காட்டினார். அதைத்தொடர்ந்து பொட்டல்குளத்தில் அய்யன்மலை குபேரன் ஐயப்பசாமி கோவிலை நிறுவினார்.
இந்த மலைக்கு பாதை அமைக்க ஊரில் உள்ளவர்கள் பலரும் உதவினர். அதைத்தொடர்ந்து மலை உச்சியில் 18 படிகளுடன் 1983-ம் ஆண்டு ஐயப்பசாமி கோவில் கட்டப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் ஏராளமானவர்கள் இங்கு வந்து வழிபட்டனர். அப்போது அவர்கள் குமரியின் சபரிமலையாக இந்த கோவில் திகழ்கிறது என்று கூறினார்கள்.
மேலும், சபரிமலைக்கு செல்ல முடியாத எங்கள் ஏக்கத்தை இந்த கோவில் தீர்த்தது என்றும் தெரிவித்தனர். தற்போது ஏராளமான பக்தர்கள் நேரடியாகவே இங்கு வந்து ஐயப்பசாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை செய்து வழிபடுகிறார்கள். இந்த மலையில் இருந்து சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காணலாம். தினமும் கோவிலுக்கு மேலே கருடன் வட்டமிட்டு செல்வதும் கோவிலின் சிறப்பாகும்.
மலையின் அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 108 படிகள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க தியான மண்டபமும் உள்ளது. கோவிலில் அனைத்து சனிக்கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு ஐயப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தமிழ் மாதங்களில் ஒன்றாம் தேதி முதல் 5-ந் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
கார்த்திகை 1-ந்தேதி முதல் தை 1-ந் தேதி வரை ஐயப்ப பக்தர்களுக்காகவே சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்த கோவிலின் நிர்வாகி சித்தர் தியாகராஜ சுவாமிகள் தினசரிஐயப்ப சாமிக்கு பூஜைகள் நடத்தி வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் நினைத்தது நிறைவேறி வருகிறது என்றும் கூறுகிறார்கள்.
- டிசம்பர் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை லட்சார்ச்சனை நடக்கிறது.
- டிசம்பர் 13-ந்தேதி தேதி களபாபிஷேகம் நடைபெறும்.
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் சுவாமி கோவிலில் மண்டல பூஜை நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது அன்றைய தினம் 4 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் மாலை அணிவதற்காக கோவிலுக்கு வருகை தருவார்கள். மண்டல விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை ஆலயத்தின் தந்திரி பிரம்மஸ்ரீ சிவப்பிரசாத் நம்பூதிரி தலைமையில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் சனி தோச சாந்தி ஜெபமும் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 13-ந்தேதி தேதி ஐயப்பட களபாபிஷேகம் நடைபெறும். மண்டல விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 17-ந் தேதி அகண்ட நாம பஜனையும் 18- தேதி ஞாயிற்றுக்கிழமை நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் பொதுமக்களும் பங்குபெறும் அன்னதானமும் நடைபெற உள்ளது.
27-ந்தேதி மகா கணபதி ஹோமமும் மண்டல விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. மகர விளக்கு காலங்களில் மாலை அணிவதற்கும் இருமுடி கட்டி சபரிமலை பயணம் செல்வதற்காகவும் வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஐயப்பா சேவா சங்கம் செய்துள்ளது. ஜனவரி 14-ந்தேதி மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன், காட்சி சீவேலியும் மாலையில் மகா தீபாராதனையும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது.
- விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது.
கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிந்து, ஐயப்ப விரதம் துவங்கி, ஒரு மண்டலம் என்னும் 48 நாட்கள் விரதத்தை கடைபிடித்தல் வேண்டும்.
காலை உணவை விடுத்து மதிய உணவை ஐயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ண வேண்டும். மாலை பால், பழம், பலகாரம் உண்ணலாம். விரத காலத்தில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கவேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. திருமணமானவர்கள் லௌகீக வாழ்வில் ஈடுபடாமல், மனதால் ஐயப்பனை மட்டும் நினைத்து, ஐயப்ப விரதம் கடைபிடிக்க வேண்டும்.
ருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக மாலையில், ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிந்து கொள்ளுதல் வேண்டும். துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். மேலும் கறுப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணிய வேண்டும். கன்னி ஸ்வாமிகள் கறுப்பு நிற ஆடைகளை மட்டும் அணிந்து கொள்ள வேண்டும்.
காலை, மாலை குளிர்ந்த நீரில் நீராடி விட்டு பின்னர், ஐயப்பனுக்கு துளசி, பால், பழம், கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து, 108 முறை சரண கோஷம் செய்து வழிபடவேண்டும்.
விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது. காலணி, குடை, மழைக்கு போடும் கவசம் என்பவற்றை தவிர்க்கவேண்டும். மது அருந்துதல், பொய் பேசுதல், மாமிசம் உண்ணுதல், கோபம் கொள்ளுதல் இகடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது.
விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும் பேசி நிறைவு செய்யும் போதும் "ஸ்வாமி சரணம்" என்று கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாகும் முன்பாக, மாலையை எந்த விதமான காரணம் கொண்டும் கழட்டுதல் கூடாது. நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும். பின்னர் மறுவருடம் தான் மாலை அணிய வேண்டும்.
விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது. இரவில் பாய் தலையணை என்பவற்றை தவிர்த்து, அணிந்திருக்கும் வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும். மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை "ஐயப்பா" என்றும் பெண்களை "மாளிகைப்புறம்" என்றும் சிறுவர்களை "மணிகண்டன்" என்றும் சிறுமிகளை "கொச்சி" என்றும் அழைக்கபட வேண்டும்.
மாதவிலக்கான பெண்களை பார்ப்பதும், அவர்கள் தயாரிக்கும் உணவை உண்பதும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். மாதவிலக்கான பெண்களை அறியாமல் பார்க்க நேர்ந்தால் நீராடி 108 சரணம் கூறி வழிபாடு நிகழ்த்த வேண்டும்.12 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளலாம்.
- கார்த்திகை முதல் நாள் இன்று தொடங்கியது.
- 60 நாட்கள் வரை விரதம் மேற்கொண்டு பூஜைகள் நடத்துவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1-ந்தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். அவர்கள் ஒரு மண்டலம் முதல் 60 நாட்கள் வரை விரதம் மேற்கொண்டு சிறப்புபூஜைகள் நடத்துவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கார்த்திகை முதல் நாளான இன்று தொடங்கியது. இவ்விழா இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 27-ந்தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.
இதில் பங்கேற்க செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி துளசி மணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
தமிழகத்தில் இருந்தும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலை செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் சங்கிலி துறையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் சங்கிலி துறையில் உள்ள 16 கால் மண்டபத்தில் குருசாமிகள் முன்னிலையில் மாலை அணிந்தனர்.
இதுபோல ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். பின்னர் அவர்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுபோல சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், நாகர்கோவிலில் உள்ள ஐயப்பன் கோவில்களிலும், தக்கலை, குழித்துறை, திருவட்டார், குலசேகரம் பகுதிகளில் உள்ள கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், கோடம்பாக்கம், கே.கே.நகரில் உள்ள ஐயப்பன் கோவில்களிலும் இன்று அதிகாலையிலேயே ஐயப்ப பக்தர்கள் திரண்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் சித்தாபுரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி விட்டு விரதத்தொடங்கினார்கள்.
நெல்லை மாநகர பகுதியில் பாளை பொதிகைநகரில் உள்ள ஐயப்பன்கோவில், வண்ணார்பேட்டை குட்டத்துரை முருகன் கோவில், டவுன் ஈசானவிநாயகர் கோவில், தொண்டர் நயினார் சுவாமி கோவில், நெல்லையப்பர் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், தச்சநல்லூர் சிவன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இன்று பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் வீடான திருச்செந்தூர் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதைமுன்னிட்டு கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் கோவில் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள் குருசாமியின் கைகளினால் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் கோவில் வளாகமே ஐயப்ப பக்தர்களின் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் ஒலித்தது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் உள்ள குற்றால நாத சுவாமி கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வடகிழக்கு பருவமழை காரணமாக மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் கார்த்திகை முதல் நாள் என்பதாலும், சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடைதிறக்கப்பட்டதாலும், காலை முதலே அருவிகளில் பக்தர்கள் குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்கள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் அருவியில் நீராடி விட்டு குற்றால நாதர் கோவிலில் மாலை அணிந்து கொண்டனர்.
அதிகாலை முதலே குற்றால நாதர் கோவிலில் சபரிமலைக்கு மாலை அணிவிக்கும் பக்தர்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து அருவிக்கரை பகுதிகளில் புதிய கடைகள் அமைக்கும் பணிகளில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் தென்காசி பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர்.
- மண்டல மகர விளக்கு பூஜைகள் கொண்டாடப்படுவது வழக்கம்.
- மண்டல மகர விளக்கு பூஜை இந்த கோவிலில் நடந்தது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கக்கூடிய சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைகள் கொண்டாடப்படுவது வழக்கம். இதை தொடர்ந்து மண்டல மகர விளக்கு சீசன் தொடங்கி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து இக்கோயிலுக்கு இணையாக ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் மெயின் சாலையில் ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பேட்டை துள்ளல் உள்ள நிகழ்ச்சிகள் நடைபெற்று ஆராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதன் முதல் நிகழ்ச்சியாக மண்டல மகர விளக்கு பூஜை நேற்று வல்லபை ஐயப்பன் கோவிலில் நடந்தது. கோவில் தலைமை குருசாமி மோகன் தலைமை தாங்கினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டினர். இதைத்தொடர்ந்து குருசாமி மோகன் கூறும்போது, காப்பு கட்டிய ஐயப்ப பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள வேண்டும்.
மண்டல மகர விளக்கு பூஜையானது சபரிமலையில் நடப்பது போன்று இங்கு நடைபெற்று இருக்கிறது என்றார் ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பா சேவை நிலையம், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- விரத காலத்தில் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.
- ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும்.
கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டது. ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகி கொண்டு வருகிறார்கள். சபரிமலை செல்ல விரத விதிமுறைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்பதை பார்க்கலாம்
* கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே மாலை அணிவது சிறந்தது.
* தவறும் பட்சத்தில் 19-ம் தேதிக்குள் அணிய வேண்டும். முதல் நாளில் மாலை அணிந்தால் நல்ல நேரம் பார்க்க வேண்டாம். மற்ற தினங்களில் நல்ல நேரம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
* குறைந்தபட்சம் 41 நாட்களாவது விரதம் இருக்க வேண்டும்.
* துளசிமணி 108 கொண்டதாக இருக்க வேண்டும். அல்லது உத்திராட்சம் மணி 54 கொண்டதாக இருக்க வேண்டும். அதில் ஐயப்ப திருவுருவப் படம் டாலர் ஒன்றை நினைத்து மாலை அணிய வேண்டும்.
* குருசாமியின் கையால் ஆலயத்துக்குச் சென்று பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி இல்லாதபட்சத்தில், கோயிலுக்கு சென்று கடவுள் பாதத்தில் மாலையை வைத்து பூசாரியிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனே குருவாக நினைத்து மாலையை அணிந்துகொள்ளலாம்.
* இது எதுவுமே முடியாதபட்சத்தில் தமது தாயின் ஆசிர்வாதத்துடன் அவர்களின் கையால் மாலையை வாங்கி அணிந்து கொள்ளலாம்.
* காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து சரணங்களை கூறவேண்டும்.
* ருத்ராட்சம் அல்லது துளசி மாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி, அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.
* விரத காலத்தில் கருப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணிய வேண்டும். கன்னி சுவாமிகள் கருப்பு மட்டும் தான் அணிய வேண்டும்.
* காலை, மாலை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு ஐயப்பனிற்கு துளசி, பால், பழம், கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபட வேண்டும்.
* விரத காலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும், பேசி முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்றே கூற வேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாகும் முன்னர் அதை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.
* விரத காலத்தில் பகலில் தூங்கக்கூடாது. இரவில் பாய், தலையணை போன்றவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும்.
* நீலம் கருப்பு காவி பச்சை நிற வேட்டி சட்டை அணியவேண்டும்
* மிக தண்ணிய பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்
* ரத்த சொந்தங்களில் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்
* ஏதேனும் காரணத்தினால் மாலையை கழற்ற நேரிட்டால் அந்த வருடம் சபரிமலை செல்லக்கூடாது
* புகைப்பிடித்தல் மாமிசம் மது மாது அறவே கூடாது
* பெண் வயதுக்கு வந்த குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது
* காலணி அணிய கூடாது
* தன் கண்ணில் படும் அனைத்து ஆண்களையும் ஐயப்பன் ஆகும் பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதி பழக வேண்டும்
* மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் என்று ஆரம்பித்து முடியும்போது சாமி சரணம் என்று கூறி முடிக்க வேண்டும்
* இருமுடி கட்டும் பொழுது கோவிலிலோ வீட்டிலுள்ள அல்லது குருசாமியின் இடத்தில்தான் இருமுடி கட்ட வேண்டும்
* சபரிமலைக்குச் செல்லும் பொழுது யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக்கூடாது
* பம்பை நதியில் குளிக்கும் போது மூதாதையர்களை நினைத்து ஈமக் கடன்களை செய்து நீராட வேண்டும்
* சபரிமலை பயணம் இனிய முறையில் முடிந்தபின் குருசாமி அல்லது தாயார் மூலமாகவே மாலையை கழட்ட வேண்டும்.
* மாலையைக் கழட்டி ஐயப்பனின் படத்துக்கு முன்பு சந்தனத்தில் வைத்து தீபாரதனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும்
- இறை உணர்வைக் காட்டும் ஒரே விரதம் சபரிமலை ஐயப்ப விரதம் தான்.
- ஐயப்ப விரதம் மேற்கொள்ளும் பொது காவி உடை அணிய வேண்டும்.
ஐயப்ப விரதம் ஐம்பது நாட்களுக்குக் குறையாதது. இந்த விரதத்தை விரதத்திற்கு எல்லாம் பெரிய விரதம் என்றே சொல்லலாம்! எல்லா விரதங்களும் மவுனமாக இருக்கவும், பட்டினியிருக்கவும், கண் விழிக்கவும், தெய்வ வழிபாடு செய்யவும் தான் வலியுறுத்தும். ஆனால் ஐம்புலன்களை அடக்கி அதன் வழி இறை உணர்வைக் காட்டும் ஒரே விரதம் சபரிமலை ஐயப்ப விரதம்தான்.
கீதையின் போதனையும் ஞானிகளின் உபதேசமும், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் யாவும் ஆணித் தரமாய் வற்புறுத்துவது ஐம்புலன் அடக்கமே! அதை செயலில் காட்ட செய்வதே ஐயப்ப விரதத்தின் மகிமை!
பிரம்மச்சர்யம்: பிரம்மச் சர்யம் என்றால், ஆண்-பெண் சேர்க்கையைத் தவிர்ப்பது என்பதாகும். ஆனால் ஐயப்ப விரதம் என்ன சொல்கிறது தெரியுமா? மனதாலும் பெண்ணைத் தீண்டாதிருப்பதே பிரம்மச்சர்யம் என்கிறது. அது மட்டுமல்ல இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் அனைவரும் தாங்கள் பார்க்கும் பெண்களை அம்பிகையின் அவதார மாகக் கருதுவதே இவ் விரதத்தின் உயர்ந்த தத்துவம்.
நீராடல் : அனுதினமும் காலை, மாலை இருவேளையும் தவறாது குளிர்ந்த நீரில் நீராடி வழிபட வேண்டும். மழையோ பனியோ குளிரோ எதுவாக இருந்தாலும் தொடர்ந்து 45 நாள் முதல் 50 நாள் வரை நீராடி விரதத்தின் முடிவாக சபரிமலை யாத்திரையில் நேரும் மழை, பனி, குளிர், இயற்கை சீதோஷ்ணத்திற்கு உடல் நிலை பாதிக்கப்படாமல் இருக்க நம்மை பழக்கப்படுத்தி தயார்படுத்துவது இவ் விரதத்தின் சாதனை என்றே சொல்லலாம்.
வழிபாடு: அவரவர் தாய் மொழியில் ஐயப்பன் நாமங்களை சரணம் சொல்லுதல், ஐயப்பனை கிடைக்கும் நேரத்திற்கேற்ப கூடுதலாகவோ குறைத்தோ சொல்லி வழிபட்டு பானகம் கரைத்த நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றி தீப ஆராதனை செய்து வழிபட்டால் போதுமானது.
காவி உடை: ஐயப்ப விரதம் மேற்கொள்ளும் பொது காவி உடை அணிய வேண்டும். ஏன் தெரியுமா? மற்ற மனிதர்களிடமிருந்து பிரித்துக் காட்டவும், ஐயப்பனுக்குரிய மரியாதையை கிடைக்கச் செய்யவும் தன்னைத்தானே உணர்ந்து சதா சர்வகாலமும் ஐயப்பனை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கவும், கொலை, களவு, பொய், வன்முறை பொன்ற எந்த தீமையும் எண்ணத்தில் கூட வராமலிருக்கும் பொருட்டு அறிவுறுத்தும் வகையில் காவி ஆடை விரதம் கொள்வோருக்கு கவசமாக இருந்து உயர்த்துகிறது. மாயையைக் குறிப்பது கறுப்பு. ஐயப்பா! நான் மாயையில் உழன்று தவிக்கிறேன். என்னை மாயையில் இருந்து விடுபடச் செய்! என்று வேண் டிக் கொள்ள ஏதுவாக கறுப்பு நிற ஆடைகள் அமைகிறது.
உணவு பழக்கம் : விரத காலத்தில் நண்பகல் உணவும், இரவு பலகாரமும் உணவும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். தினசரி வாழ்க்கையில் பயன்படுத்திய பாய், தலையணை, போர்வை எதுவுமே விரத காலத்திற்கு உகந்தது அல்ல. இவை இன்றி படுத்துறங்க பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் காட்டுப் பிரதேச பயணத்தில் இவை பெரிதும் உதவும். இந்த நியதி மூலம் எப்படியும் வாழ முடியும் என்ற நிலைக்கு மாற்ற ஐயப்ப விரதம் பக்தர்களை முழுமையாக தயார்படுத்துகிறது.
- உயர்ந்த சிறந்த விரதம் ஐயப்ப விரதமாகும்.
- ஐயனை மனக்கண்ணில் மட்டுமே தரிசிக்க வேண்டும்.
ஐயப்பன் மீது பக்தி கொண்ட ஆண்கள் அனைவருமே விரதம் இருக்க தகுதி உடையவர்களே. பெண்களில் சிறுமிகளும், பெரியவர்களில் வீட்டு விலக்கு நின்று போனவர்களும் மட்டுமே இவ்விரதத்தை கடைபிடித்து சபரிமலை சென்று ஐயனைக் காணவேண்டும்.
ஐயனை மனக்கண்ணில் மட்டுமே தரிசிக்க வேண்டும். விரதத்தின் அம்சம்: "நான்" என்ற அகங்காரம், கெட்டப்புத்தி, எல்லாம் எனக்கே என்ற சுயநலம் என்பன சிறிதளவும் காண முடியாத உயர்ந்த சிறந்த விரதம் ஐயப்ப விரதமாகும்.
இவ்விரதம் இருப்பவர்கள் எல்லோருமே எதிரே ஒரு ஐயப்ப பக்தரைக் கண்டால் சாமி! சாமி! என்றே ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வர். இதனால் ஜாதி, மத, பேதம் ஏதுமின்றி சரிநிகர் சமமாய் ஒருமித்து போற்றக் கூடிய ஐயப்ப விரதம், விரதத்திற்கு எல்லாம் சிறந்த விரதம் என்று கூறலாம்.
- சுவாமி ஐயப்பன் அவதாரம் நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னதமானது
- புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார்.
ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காணவந்தோம்
பால் அபிஷேகம் உனக்கப்பா-இந்தப்
பாலனைகடைக்கண் பாரப்பா!
நெய் அபிஷேகம் உனக்கப்பா- உன்
திவ்ய தரிசனம் எமக்கப்பா!
தையினில் வருவோம் ஐயப்பா-அருள்
செய்யப்பா! மனம் வையப்பா!
ஐயப்பனின் தரிசனத்தைப்போல அவரின் அவதார வரலாறும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம். சுவாமி ஐயப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத வரலாறு ஆகும்.
காலவ மகிஷியின் மகளான லீலாவதி,, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரனை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள்.
பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார். இதன் விளைவாக ஐயப்பன் அவதாரம் நிகழ்ந்தது. அரிகர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டுவிட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர்.
காட்டுக்கு வேட்டை யாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான் இந்த நிலையில் ராணி, ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள் மந்திரியின் துர்போதனையால் அவள் மதிமயங்கினாள் சதி திட்டம் தீட்டப்பட்டது. ராணி தலைவலியால் துடித்தாள் ராணியைக் குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார்.
பம்பை ஆற்றங்கரையில் மணி கண்டனுக்கும் மகிஷிக்கும் இடையே கடும்யுத்தம் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். லீலாவதி யாக அவள் சாப விமோசனம் பெற்றாள். அய்யனை தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு திருவடி பணிந்து நின்றாள். அய்யன் தான் நித்ய பிரம்மச்சாரி. என்றைக்கு தன்னைத்தேடி கன்னி ஐயப்பன்மார் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாக கூறி தமது இடப்பக்கத்தில் மாளி கைப்புறத்து மஞ்சள்மாதா வாக வீற்றிருக்க அருள்பாலித்தார்.
பின்னர் இந்திரன் புலிவடிவம் தாங்கிட ஐயப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார். அதை கண்டு மிரண்டராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். ஐயப்பன் தமது அவதார நோக்கினை எடுத்துக்கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டினார். இதைக்கேட்டதும் ராஜசேகர மன்னன் மனம் உடைந்தார். அவர் திருப்திக்காக ஐயப்பன் சபரிமலையில் தங்கி இருக்க சம்மதித்தார்.
பம்பை நதிக்கரையில் மணிகண்டன் அம்பு எய்தார். அந்த இடத்தில் பந்தளமன்னன் கோவில் கட்டினான். பரசுராமர் அங்கு ஐயப்பன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். சபரி என்ற யோகியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதிவடிவில் இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
- அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.
- நிலையற்றது இந்த வாழ்க்கை.
கடவுளை வணங்குவோருக்கு வேண்டியது கிடைக்கும். அப்படி கிடைத்ததை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் தண்டனையும் உடனே கிடைக்கும். சாகாவரம் பெற்றவர்களுக்குக்கூட ஏதோ ஒரு சக்தியால் அழிவு நிச்சயம். நிலையற்றது இந்த வாழ்க்கை. எனவே வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.
சபரிமலை ஐயப்பனின் வரலாற்றில் முதலில் ஆடம்பரமான அரண்மனை வாழ்வு. இது நிலைத்ததா என்றால் இல்லை. தெய்வப் பிறவியான ஐயப்பனுக்கு கூட இந்த வாழ்வு நிலைக்கவில்லை என்றால் சாதாரண மனிதர்களான நமக்கு மட்டும் நிலைத்துவிடுமா என்ன... எனவே தான் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல எளிமையான ஏற்றத்தாழ்வற்ற சீருடை அணிந்து, ஒன்று போல இருமுடி கட்டி, ஒற்றுமையாய் கூட்டமாய் போய் அவனை வணங்கி விட்டு வருகிறோம்.
- ஐயப்பன் அமர்ந்து தரிசனம் தரும் நிலை வித்தியாசமானது.
- யோக பாதாசனம் அல்லது யோக சித்தாசனம் என்று கூறலாம்.
சபரிமலையில் ஆனந்த சொரூபன் ஐயப்பன், அமர்ந்து தரிசனம் தரும் நிலை வித்தியாசமானது. இது ஆசன ரூபம் அதாவது, யோகபாதாசனம் அல்லது யோக சித்தாசனம் என்று கூறலாம். ஐயப்பன் தபசினைக் காண்பிப்பதாகவும் பூரணதேபாவர தியான ரூபத்திலிருக்கிறார். (மூல விக்ரகத்தில் கண் சற்றே திறந்த தியான ரூபத்தில் தான் சிலை உள்ளது).ஐயப்பனின் கால்களைச் சுற்றியுள்ள வஸ்திரத்திற்கு வஸ்திரபந்தம் அல்லது யோக பட்டம் என்று பெயர் ஐயனின் வலதுகை ஞான முத்திரை காட்டி நம்மை ஆசீர்வதிக்கிறது.
இந்த முறையில் மூன்று விரல் நீட்டியும், ஆள்காட்டி விரல் மடக்கி கட்டை விரலோடு சேர்கிறது. இதன் பொருள் மும்மலமாகிய ஆணவம், கண்மம் மாயை ஆகியவற்றை எவனொருவன் விட்டு விட்டு தெய்வ சன்னதியை அடைகிறானோ அவனுடைய ஜீவாத்மாவானது பரமாத்மாவை வந்து அடைகிறது என்று அர்த்தம்.
சுவாமியின் மூன்று நீட்டிய விரல் ஆணவம், கண்மம் மாயையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவையும், கட்டை விரல் பரமாத்வாவையும் குறிக்கிறது. இது தவிர மூன்று விரல்களையும் சத், சித் ஆனந்தம் (சச்சிதானந்தம்) என்றும் கூறுவர். சின்முத்திரையுடன் பக்தர்களுக்குக் கூறுவதாவது:-
நான் சத்தியமும் ஆனந்தமும் ஆவேன். நான் என்னுடைய தெய்வீக ஆனந்தத்தில் தினமும் லயித்துக் கொண்டிக்கிறேன். என்னைத் தரிசிக்க வருபவருக்கு அவருடைய சகல துன்பங்களிலிருந்தும் மோட்சம் தரும் ஆத்ம ஞானத்தையும் மூன்று காலங்களிலும் சுகம், ஐஸ்வர்யம், சாந்தி இவை எல்லாம் கொடுத்து அருள்கிறேன் என்று ஐயப்பன் சின்முத்திரை காட்டி அருள்பாலிக்கிறார்.
- எல்லோரிடமும் சாந்தமாகப் பழக வேண்டும்.
- குளிப்பதற்குச் சோப்பு உபயோகிக்ககூடாது.
1.சபரிமலை செல்பவர்கள் ஒருமண்டல காலம் (48 நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்
2.கருப்பு, நீலம், பச்சை, காவி போன்றவற்றில் ஏதாவது ஒரு நிற வேஷ்டியையும்,சட்டையையும் அணிய வேண்டும்
3. கார்த்திகை முதல் நாள் பெற்றோர்களை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ளவேண்டும். பெற்றோர் மூலமும் மாலை அணிந்து கொள்ளலாம்.
4.அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும்.இதே போல சூரியன் மறைந்த பின்பு மாலையில் நீராடி 108 சரணம் கூறி ஐயப்பனுக்குப்பூஜை செய்ய வேண்டும். குளிப்பதற்குச் சோப்பு உபயோகிக்ககூடாது.
5. இரவில் தூங்கும் போது தலையணை,மெத்தை உபயோகிக்க கூடாது. பகலில் தூங்குவதைக் தவிர்க்க வேண்டும்.
6. பிரம்மச்சரிய விரதத்தை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது மனோ வலிமையைப் பெருக்கி மனித வாழ்க்கையை உயர்த்துவதற்கு உதவுகிறது. மாதர்கள் யாவரையும் மாதாவாகக் காண வேண்டும். மாதவிலக்குச் சமய மாதர்களுடன் பேசுவதோ, பார்ப்பதோ கூடாது.
7.சைவ உணவு மட்டும் உண்ண வேண்டும்.மது அருந்தக் கூடாது. பீடி, சிகரெட், பான்மசாலா போன்றவற்றை அறவே நீக்கி விட வேண்டும்.
8. திரிகரண சுத்தி(மனம், வாக்கு, செயல்)ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். ஐயப்பனை எண்ணத்தில் எப்பொழுதும் மனதில் நினைத்து, பக்திப்பூர்வமாக ஐயன் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் எண்ணங்கள் தூய்மையாகும். செய்யும் செயல்களும், பேசும் பேச்சுக்களும் நல்லவிதமாக அமையும்.
9. சண்டை, சச்சரவுகளில் கலந்து கொள்ளக்கூடாது. எல்லோரிடமும் சாந்தமாகப் பழக வேண்டும்.
10.காமம், கோபம், கஞ்சத்தனம், மோகம், அகம் பாவம்,துவேஷம் முதலிய குணங்களைக் குறைப்பதற்கு உதவ எப்பொழுதும் ஐயப்பன் திருநாமத்தை உறுதுணையாக் கொள்ள வேண்டும். பக்தனின் நெஞ்சினில் எப்பொழுதும் நிறைந்து நிற்பது ஐயப்பனின் பேரொளி திருவுருவமேயாகும்.
11. உரையாடும் போது சுவாமி சரணம் என்று சொல்லி துவங்குவதும், முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்று சொல்லி முடிப்பதும் நன்மைகளைத் தரும்.
12. ஒரு ஐயப்ப பக்தரை வழியில் காண நேர்ந்தால் அவர் தெரியாதவராக இருந்தாலும் சுவாமி சரணம் என வணங்க வேண்டும்.
13. மாலை அணிந்து காணப்படும் ஆண்களை ஐயப்பன் என்றும் பெண்களை மாளிகைப்புறம் என்றும் சிறுவர்களை மணிகண்டன் என்றும் சிறுமிகளைக் கொச்சு சுவாமி என்றும் அழைக்கவேண்டும்.
14. குடை, காலணிகள், சூதாடுதல், திரைப்படங் களுக்குச் செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
15. விரத காலங்களில் உணவின் அளவைக் குறைத்து உடலைக்குறைத்துக் கொள்ள வேண்டும். மார்கழி மாதத்தில் பதினைந்து தினங்களுக்காவது ஒரு வேளை உணவை விடுத்து விரதம் இருக்க வேண்டும்.
16. இலையில் சாப்பிடுவது நல்லது. உணவு உண்ண ஆரம்பிக்கும் பொழுது ஐயனை மனதில் நினைத்து, சரணம் கூறி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
17. கன்னி சுவாமிகள் கன்னி பூஜை நடத்த வேண்டும் அல்லது ஒரு சுவாமிக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் இயன்ற வரை அன்னதானம் செய்ய வேண்டும்.
18. நமது நெருங்கிய ரத்தத் தொடர்பு உள்ள தாய், தந்தை, சகோதரிகள் போன்றவர்களில் யாருக்காவது மரணம் ஏற்படுமாயின் மாலையைக் கழற்றி விட வேண்டும்.
19. பெண்கள் ருது மங்கல சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக்கூடாது.
20. விரத காலங்களில் தலைமுடி வெட்டிக் கொள்வதோ, சேவிங் செய்து கொள்வதோ கூடாது.
21. மாலை அணிந்த எந்த ஐயப்பன் வீட்டிலும் உணவு அருந்தலாம். கடைகளில் சாப்பிடுவது, தெருக்களில் விற்கும் பலகாரங்களை உண்பது கண்டிப்பாகக்கூடாது.
22. பக்தர்கள் நடத்தும் ஐயப்ப பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.