என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95579"
- கடந்த 2017-ம் ஆண்டு 6 இடங்களுக்கு 2021-ம் ஆண்டு 15 இடங்களுக்கு பெயர்களை மாற்றி அறிவித்து இருந்தது.
- அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயர்களை சூட்டுவது இது 3-வது முறையாகும்.
புதுடெல்லி:
இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தை சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனை இருக்கிறது. மேலும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதலும் ஏற்பட்டது.
இந்த நிலையில் இவ்விவகாரத்தில் சீனா மீண்டும் அடாவடியில் ஈடுபட்டுள்ளது. அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சீன, திபெத்திய மற்றும் பின்யின் ஆசிய மொழிகளில் சீனாவின் சீவிஸ் விவகார அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அருணாசல பிரதேசத்தில் உள்ள இரண்டு நிலப்பகுதிகள் இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள் இரண்டு ஆறுகள் ஆகியவற்றின் பெயர்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள நிர்வாக மாவட்டங்களின் வகையையும் பட்டியலிட்டுள்ளது. இந்த இடங்கள் திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றம் மக்களுக்கு மிக வசதியாகவும் துல்லியமாக நினைவில் வைத்து கொள்ளவும், அடையாளம் காணவும் உதவும் என்று சீனா தெரிவித்துள்ளது.
மேலும் தெற்கு திபெத்திய பகுதிகளின் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகள் இருந்தும் வரை படத்தையும் சீனா வெளியிட்டுள்ளதாக இதில் அருணாசல பிரதேச தலைநகர் இட்ட நகருக்கு அருகில் உள்ள ஒரு நகரமும் அடங்கும்.
அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயர்களை சூட்டுவது இது 3-வது முறையாகும்.
கடந்த 2017-ம் ஆண்டு 6 இடங்களுக்கு 2021-ம் ஆண்டு 15 இடங்களுக்கு பெயர்களை மாற்றி அறிவித்து இருந்தது. இதனை நிராகரித்த இந்தியா தனது கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தான் அருணாசல பிரதேச விவகாரத்தில் சீனா மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, 'எதார்த்தத்தை மாற்றாத பெயர்களை சீனா கண்டுபிடித்து வருகிறது. இதுபோன்ற செய்திகளை நாங்கள் பார்த்தோம். இது போன்ற முயச்சியை சீனா மேற்கொள்வது முதல் முறை அல்ல. இதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம்.
அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது. இருந்து வருகிறது. தொடர்ந்து இருக்கும்.
சீனாவால் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை வழங்க முயற்சிப்பது உண்மையை மாற்றாது என்றார்.
- அரசு ஆலோசகர்கள் கொடுத்த பலே ஐடியா தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
- பல்வேறு கல்லூரிகள் தற்போது இந்த பலே ஐடியாவை பின்பற்றி துவங்கியுள்ளன.
சீனாவில் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அரசு ஆலோசகர்கள் கொடுத்த பலே ஐடியா தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகவும், விவாத பொருளாகவும் மாறி இருக்கிறது. குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு கல்லூரிகள் தற்போது இந்த பலே ஐடியாவை பின்பற்ற துவங்கியுள்ளன.
சீனாவில் செயல்பட்டு வரும் ஒன்பது கல்லூரிகளில் இந்த தேசிய பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில், தடாலடியான திட்டத்தை துவங்கிவிட்டன. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சம் ஒரு வாரம் வேண்டுமானாலும் விடுப்பு எடுத்துக் கொண்டு மாணவர்கள் தங்களின் இணையரை கண்டுபிடித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் சீனாவின் குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை சமன் செய்ய முடியும்.
மார்ச் 23 ஆம் தேதி ஃபேன் மெய் கல்வி குழுமம் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுப்பு அளித்துள்ளது. இந்த ஏழு நாட்கள் விடுப்பு காலம் மாணவர்களை, "இயற்கையை நேசிக்கவும், காதல் வாழ்க்கையை கற்றுக் கொண்டு இலையுதிர் காலத்தில் மகிழ்ச்சியுடன் காதலை கொண்டாடவும்," ஊக்குவிக்கும்.
"மாணவர்கள் பசுமையான நீர்நிலைகள், மலைப்பிரதேசங்களுக்கு சென்று, இலையுதிர்கால அமைதியை உணர்வார்கள் என நம்புகிறேன். இது மாணவர்களின் மனவோட்டத்தை விரிவுப்படுத்துவதோடு, அவர்களின் உணர்வுகளை ஆழமாக்கி, அவர்கள் வகுப்பறையில் அதிக சிறப்பாக பாடங்களை உள்வாங்க உதவியாக இருக்கும்," என்று மியான்யங் ஃபிளையிங் கல்லூரி தலைவர் லியாங் குயோஹூய் தெரிவித்து இருக்கிறார்.
ஒருவார கால விடுப்பின் போது மாணவர்கள், டயரி எழுதுவது, தனிநபர் வளர்ச்சி பற்றி குறித்துக் கொள்வது, பயண வீடியோக்களை எடுப்பது போன்றவற்றை வீட்டுப் பாடமாக செய்ய வேண்டும்.
- குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது.
- இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு செயல்களை தடுப்பதில் உறுதி
இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தை தொடர்ந்து, குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரிகள் கூட்டறிக்கை வெளியிட்டனர். உக்ரைன் மோதல், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களின் நிலைமையை குறிப்பிட்டுள்ளனர்.
அதில் இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு செயல்களை தடுப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது தொடர்பான கொள்கைகளை தீவிரமாக ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சீனா, குவாட் அமைப்புக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டுக்குமான ஒத்துழைப்பு என்பது, அமைதி மற்றும் வளர்ச்சியின் போக்கிற்கு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.
- தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்திற்குள் சீனா ராணுவத்துக்கு சொந்தமான 25 போர் விமானங்கள் தைவான் வான்வெளி பகுதியில் அத்துமீறி நுழைந்து உள்ளது.
பீஜிங்:
உள்நாட்டு போருக்கு பின் கடந்த 1949-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. இருந்தபோதிலும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அவ்வப்போது சீனா, தைவான் எல்லைக்குள் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி அச்சுறுத்தி வருகிறது. மேலும் தைவான் மீது படையெடுக்க போவதாக சீனா மிரட்டல் விடுத்து வருவதால் கடந்த சில மாதங்களாக இரு நாட்டு எல்லையில் பதற்றமான நிலை உருவாகி இருக்கிறது.
இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்று தைவானை நோக்கி 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீனா அனுப்பி உள்ளதாக தைவான் கூறி உள்ளது. இது தொடர்பாக தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 24 மணி நேரத்திற்குள் சீனா ராணுவத்துக்கு சொந்தமான 25 போர் விமானங்கள் தைவான் வான்வெளி பகுதியில் அத்துமீறி நுழைந்து உள்ளது. 3 போர் கப்பல்களும் தைவானின் கடல்பரப்பில் ஊடுருவி இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவானும் எல்லைப்பகுதியில் போர் விமானங்களையும் போர் கப்பல்களையும் அனுப்பி உஷார்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சீனா-தைவான் எல்லைப் பகுதியில் எந்த நேரமும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- சீனா புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்து உள்ளது.
- செல்போனில் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பீஜீங்:
சீனாவின் கண்டுபிடிப்புகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.
அந்த வகையில் இப்போது சீனா புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இந்த செயலி மூலம் தொலை தூரத்தில் இருப்போருக்கு நிஜத்தில் கொடுப்பது போல் முத்தம் கொடுக்க முடியும்.
இதற்காக செல்போனில் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த ஆப் மூலம் தொலை தூரத்தில் இருக்கும் காதலி, அல்லது காதலனை தொடர்பு கொள்ள வேண்டும்.
அவரும் இணைப்பில் வந்ததும் இருவரும் நிஜத்தில் முத்தம் கொடுப்பது போல முத்தம் கொடுத்து கொள்ளலாம்.
இந்த செயலிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதே நேரம் இதற்கு இளம்ஜோடிகள் பலரும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
- பள்ளிக்கூடங்கள் இந்த வார தொடக்கத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன.
- ஷாங்காய் ஆரம்பப் பள்ளி வகுப்பில் நேரில் கற்பிப்பதை நிறுத்தி உள்ளனர்.
பீஜிங் :
சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019-ம் ஆண்டு டிசம்பரில் தோன்றி உலக நாடுகளைப் பதம் பார்த்தது. பல நாடுகள் அந்தத் தொற்றை கட்டுப்படுத்தினாலும், சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக உருமாறிய கொரோனா தாக்கம் அங்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பிற வைரஸ் நோய்கள் பரவலைத் தடுப்பதற்காக பல நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் இந்த வார தொடக்கத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன.
கடந்த வார இறுதியில் இ-காமர்ஸ் மையமான ஹாங்ஜோவில் ஒரே வகுப்பறையில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது, இதனால் உள்ளூர் கல்வி அதிகாரிகள் திங்கட்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு வகுப்புகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினர். அங்கு முதல் முறையாக மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போன்று தொழில் நகரமான ஷாங்காயில் ஒரே நேரத்தில் 4 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பலருக்கு இதே போன்ற அறிகுறிகள் தோன்றியதை அடுத்து, ஷாங்காய் ஆரம்பப் பள்ளி வகுப்பில் நேரில் கற்பிப்பதை நிறுத்தி உள்ளனர். ஜேஜியாங் மாகாணம், சீன தலைநகர் பீஜிங் மற்றும் அருகிலுள்ள நகரமான தியான்ஜின் முழுவதும் உள்ள மற்ற பள்ளிகளிலும் காய்ச்சல் பாதிப்புகள் காரணமாக வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
- மியான்மரில் கடந்த 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
- மியான்மர் ராணுவத்திற்கு சீனா ராணுவ உதவிகளை வழங்குவதாக தகவல்.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள், ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். அதை ராணுவம் ஒடுக்கியது.
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு சீனா ஆதரவு அளித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் மியான்மர் ராணுவத்துக்கு சீனா மேலும் ராஜதந்திர ரீதியிலான மற்றும் ராணுவ உதவிகளை அளித்துள்ளதாக ஐரோப்பா ஆசியா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் மியான்மரின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி 7 ஆயிரத்து 12 கைதிகளை விடுவிக்க இருப்பதாக ராணுவம் தெரிவித்தத. மேலும் இந்த ஆண்டு இறுதியில் மியான்மரில் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு ராணுவ தலைவர் மின் ஆங் தெரிவித்து இருந்தார். தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
- சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியது.
- ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர்.
பீஜிங்:
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 வைரஸ் காரணமாக அந்நாட்டில் நோய் தொற்று மீண்டும் எழுச்சி பெற்றது.
அங்கு தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு சரியான தகவல்களை வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் சீனாவில் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசின் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் ஆ ஜூன்யூ கூறும்போது, நடப்பு சந்திர புத்தாண்டு விடுமுறை காலத்தில் மக்கள் நடமாட்டம் தொற்று நோயை பரப்பலாம். சில பகுதிகளில் தொற்று நோய் அதிகரிக்கலாம்.
ஆனால் 2-வது கொரோனா அலை அடுத்த காலத்தில் வருவதற்கான சாத்தியமில்லை. ஏனென்றால் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2அல்லது 3 மாதங்களில் மீண்டும் அதிக அளவில் கொரோனா பரவல் வருவதற்கான சாத்தியக் கூறுங்கள் தொலைவில் உள்ளன என்றார்.
இதற்கிடையே ஜனவரி மாத நிலவரப்படி சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் ஆஸ்பத்திரியில் உயிரிழந்துள்ளனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நிபுணர்கள் கூறும் போது, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக கணக்கிடப்படுகிறது. ஏனென்றால் வீட்டில் இறந்தவர்களை தவிர்த்து உள்ளனர். மேலும் பல டாக்டர்கள், கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடுவதில்லை என்றனர்.
- இந்தியா வளர்ந்து வருகிறது.
- மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.
டாவோஸ் :
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி அளித்தார்.
அப்போது, சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா என்று இப்போதே சொல்ல முடியாது. ஏனென்றால், தற்போதைய நிலையில் இந்தியா மிகவும் சிறிய பொருளாதாரத்தை கொண்டது. இருப்பினும், அது உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருப்பதால், நிலைமை மாறலாம். இந்தியா வளர்ந்து வருகிறது. மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.
சீன பொருளாதாரம் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மீண்டு எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
- இந்த தகவலை சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பீஜிங் :
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், உலக பொருளாதார வளர்ச்சியை பதம் பார்த்தது.
இதில் உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனாவும் தப்பவில்லை.
அங்கு கடந்த 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீத அளவுக்கு சுருங்கிப்போய் விட்டது.
இது கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்டுள்ள 2-வது மோசமான பொருளாதார வளர்ச்சி ஆகும்.
2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ஆகும்.)
இது அதிகாரப்பூர்வமான இலக்கான 5.5 சதவீதத்திற்கு குறைவு ஆகும்.
இந்த தகவலை சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ளது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான சரிவைக் கண்டிருப்பதற்கு காரணம், அங்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் கொண்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகளும், பொதுமுடக்கமும்தான்.
சீனாவில் 1974-ம் ஆண்டு மிகக்குறைந்த அளவாக 2.3 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது நினைவுகூரத்தக்கது.
- 2021ல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
- முதல் குழந்தையைப் பெற்ற தம்பதியினருக்கு 3,000 யுவான் வழங்கப்படுகிறது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. பல ஆண்டுகளாக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்து வரும் சீனாவில் முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீன தேசத்தில் அதன் வயதை காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
2022ம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை சுமார் 1,411,750,000 ஆக இருந்தது என்று பெய்ஜிங்கின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இறுதியின் மக்கள் தொகையைவிட 850,000 குறைந்துள்ளது.
இதேபோல், பிறப்பு எண்ணிக்கை 9.56 மில்லியன் ஆகவும், இறப்பு எண்ணிக்கை 10.41 மில்லியன் ஆகவும் இருந்தது.
சீனாவின் மக்கள்தொகை கடைசியாக 1960ல் குறைந்தது. 1980ம் ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விதிக்கப்பட்ட கடுமையான "ஒரு குழந்தை கொள்கையை" சீனா 2016 ல் முடித்துக் கொண்டது. 2021ல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்தது. ஆனால் சீன அரசு மக்கள்தொகை சரிவை மாற்றியமைக்க தவறிவிட்டது.
குழந்தை பிறப்பு விகிதம் மந்தநிலையில் இருக்க வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணியிடத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உயர்கல்வியை நாடுவது உள்ளிட்ட காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜியுஜியன் பெங் கூறுகையில், " பல தசாப்தங்களாக ஒரு குழந்தை கொள்கையின் காரணமாக சீன மக்களும் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பிறப்பை ஊக்குவிக்க சீன அரசாங்கம் பயனுள்ள கொள்கைகளைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில், கருவுறுதல் இன்னும் குறைய வாய்ப்புள்ளது" என்று கூறினார்.
மேலும், தம்பதிவகள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை சீனா அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதல் குழந்தையைப் பெற்ற தம்பதியினருக்கு 3,000 யுவான் வழங்கப்படுகிறது. இது அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு 10,000 யுவான்களாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்கில், ஜினான் நகரம் ஜனவரி 1 முதல் இரண்டாவது குழந்தையைப் பெற்ற தம்பதிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 600 யுவான் செலுத்தி வருகிறது.
- பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11-ந்தேதி 90 கோடியை கடந்துவிட்டதாக தகவல்
- கொரோனா வைரசால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகள் பதிவாகி உள்ளன
பீஜிங்:
சீனாவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதையடுத்து மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதை சீன அரசு மறுத்தது. கொரோனாவுக்கு பலியானவர்கள் குறித்த எண்ணிக்கையை சீனா மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11-ந்தேதி 90 கோடியை கடந்துவிட்டதாகவும் நாட்டில் 64 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் கடந்த 35 நாட்களில் மட்டும் கொரோனா தொடர்பான பாதிப்புகளால் சுமார் 60000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரை சீனாவில் 59,938 கொரோனா தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்திற்கு உட்பட்ட மருத்துவ நிர்வாக அலுவலக தலைவர் ஜியோ யாஹுய் செய்தியாளர் சந்திப்பில் கூறி உள்ளார். கொரோனா வைரசால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகளும், கொரோனாவுடன் இணைந்த அடிப்படை நோய்களால் 54,435 இறப்புகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்