search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96096"

    புதுவையில் ஏற்பட்ட மழை பாதிப்பு கணக்கெடுப்பு முடிந்து எவ்வளவு பாதிப்பு என தெரிந்த பின் மத்திய அரசிடம் முழு நிவாரணம் கேட்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி வந்த மத்திய குழுவினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.

    சந்திப்பு முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமாக ஆண்டுக்கு 130 செ.மீ. மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக 180 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளன.

    சங்கராபரணி ஆறு, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளன.

    பாகூர் பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான நெற்பயிர், காய்கறி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

    இதனால் கூலித்தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் மத்திய குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர். வெள்ள சேத பகுதிகளை அவர்கள் நாளை (இன்று) பார்வையிட உள்ளனர்.

    புதுச்சேரியில் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு புதுவைக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அரசு முறை பயணமாக டெல்லி சென்றிருந்த பொதுப்பணித்துறை அமைச்சரும், மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து இதை வலியுறுத்தியுள்ளார்.

    தற்போது புதுவையில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு முடிந்து எவ்வளவு பாதிப்பு என தெரிந்த பின் மத்திய அரசிடம் முழு நிவாரணம் கேட்கப்படும். நாம் கேட்கும் நிவாரண தொகையை மத்திய அரசு புதுவைக்கு வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட சிவப்புநிற ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளுக்கும் மழைநிவாரணம் வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மஞ்சள்நிற ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை அடுத்த வாரம் முதல் ரேஷன்கடைகளில் வினியோகம் செய்யப்படும். எங்கள் அரசு சொன்னதை செய்யும். அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள நிவாரணமாக ரூ.5000 வழங்கவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
    புதுச்சேரி:

    வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகர சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி வெள்ளக்காடானது.

    புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  இதனால் வீடுகள், குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து உள்ளன.

    இதற்கிடையே, புதுச்சேரியில் அனைத்து சிவப்பு கார்டுதாரர்களுக்கும் வெள்ள நிவாரண தொகையாக ரூ.5000 வழங்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், தற்போது அனைத்து மஞ்சள் கார்டுதாரர்களுக்கும் நிவாரணம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ஏற்கனவே அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது
    குறிப்பிடத்தக்கது.

    மழை நிவாரணமாக சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த மாத (அக்டோபர்) இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது.

    வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகர சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி வெள்ளக்காடானது.

    தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பெரிய ஏரிகளான ஊசுடு, பாகூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன. பாகூர், திருக்கனூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் விவசாய நிலங்களுக்குள் தேங்கிய மழை நீர் வடியாததால் சுமார் 1,000 ஹெக்டேருக்கும் மேல் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமின்றி விவசாய விளைபொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக அரசு சார்பில் முழுமையான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    மேலும் மழை காரணமாக கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கிடையே மழையினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

    இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் பெய்த கனமழையினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஏற்கனவே அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைப்புசாரா தொழிலாளர், கட்டுமான தொழிலாளர் அல்லாத சிவப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்கள் பயனடைவார்கள். அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகைகள் விரைவில் பட்டுவாடா செய்யப்படும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    பேட்டியின்போது சபாநாயகர் செல்வம் உடன் இருந்தார்.
    புதுச்சேரியில் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கவர்னர் கேட்டறிந்தார்.
    புதுச்சேரி:

    தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.

    கொரோனா தொற்றால் முடங்கி கிடக்கும் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீண்டும் புத்துயிர் பெறும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    கடந்த சில மாதங்களாக பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது.

    புதுவையில் நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.107.79-க்கும், டீசல் ரூ.102.66-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைத்து அறிவித்தது.

    இதனைத்தொடர்ந்து தீபாவளி பரிசாக புதுவை அரசின் சார்பில் தனது பங்கிற்கு மேலும் ரூ.7 வரை வாட்வரியை குறைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    இதனால் புதுவையில் பெட்ரோல்-டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.12.85 குறைந்து ரூ.94.94-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போன்று டீசல் விலை ரூ.19 குறைந்து ரூ.83.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    புதுவை மாநிலத்தின் பிராந்தியங்களான காரைக்காலில் பெட்ரோல் விலை ரூ.94.65, மாகியில் 92.52, ஏனாமில் 95.59 இன்று விற்பனை செய்யப்படுகிறது. மாகியில் டீசல் விலை ரூ 80.94 ஆகும்.

    பெட்ரோல்-டீசல் மீதான வாட்வரியை புதுவை அரசு குறைத்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ரங்கசாமி

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த வரி குறைப்பானது அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தீபாவளி பரிசாக அமையும்.

    இதனால், கொரோனா தொற்றால் முடங்கி கிடக்கும் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீண்டும் புத்துயிர் பெறும் என்று குறிப்பிட்டு உள்ளார்.


    இலவச அரிசி திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி வினியோகம் செய்ய விடாமல் ரங்கசாமி தடுத்ததாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Loksabhaelections2019 #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தொகுதி, தொகுதியாக, வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று உப்பளம் தொகுதியில் வீதி, வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். சின்னமணிக்கூண்டு அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் நாராயணசாமி பிரசாரத்தின் போது பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. ரங்கசாமியை ஜெயலலிதா துரோகி என விமர்சித்தபோதும் அ.தி.மு.க.வினருடன் கூட்டணி வைத்துள்ளார்.

    மோடியும், பேடியும் சேர்ந்து புதுவையில் எந்த திட்டத்தையும் செயல்படுத்த விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு மூலகாரணமாக இருப்பவர் ரங்கசாமி. இதை கண்டித்துத்தான் நாங்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டத்துக்கு பிறகு தான் அரிசி வந்தது. அதையும் தேர்தலை காரணம் காட்டி வினியோகம் செய்ய விடாமல் ரங்கசாமி தடுத்துள்ளார்.

    தமிழகத்திலும், ஆந்திராவிலும் தேர்தல் நடைமுறையில் இருக்கும் போது இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. துறைமுகத்திற்காக ரூ.64 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம். உப்பளத்தில் 900 வீடுகள் கட்ட திட்டமிட்டு உள்ளோம்.

    மீனவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும். இதற்கு கை சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது அமைச்சர் கந்தசாமி, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், முருகன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். #Loksabhaelections2019 #Narayanasamy
    புதுவை நிதி சுமையில் சிக்கி தவிக்க மூல காரணமானவரே ரங்கசாமிதான் என்று நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    மணவெளி தொகுதிக்குட்பட்ட நோணாங்குப்பம், எடையார்பாளையம், தவளகுப்பாம், தானாம்பாளையம், பூரணாங்குப்பம், அபிஷேகப் பாக்கம் உள்ளிட்ட பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டு காலம் உள்ளது. இலவச அரிசி, முதியார் பென்‌ஷன், சென்டாக் உதவித்தொகை தங்கு தடையின்றி கிடைக்க மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார். மக்கள் மீது அக்கறையும், பரிவும் கொண்ட கூட்டணி காங்கிரஸ் கூட்டணி.

    இந்தியாவை மீண்டும் ஒரு முறை நரேந்திர மோடி ஆட்சி செய்ய அனுமதித்தால் அனைவரும் அடிமையாகி விடுவோம். என்ஆர்.காங்கிரஸ் பயந்துபோய் பா.ஜனதாவோடு கூட்டணி அமைத்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பிரச்சினைகளை பற்றி எந்த கவலையும்படாத ரங்கசாமி தேர்தல் என்றவுடன் மக்களிடம் வந்துள்ளார்.

    புதுவை நிதி சுமையில் சிக்கி தவிக்க மூல காரணமானவரே ரங்கசாமிதான். எனவே அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலில் ரங்கசாமி பண அரசியல் செய்கிறார் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கதிர்காமம் தொகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    மத்தியில் ஆளும் நரேந்திர மோடி ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வேலை வாய்ப்புகள் இல்லை. விலைவாசி குறைக்கவில்லை. தொழிற்சாலைகள் கொண்டு வருவேன், விவசாயத்தை மேம்படுத்துவேன், அரசு ஊழியர் சம்பளம் உயர்த்துவேன் என மோடி கூறினார். இதில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை.

    பா.ஜனதாவின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது.

    காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பொது, அரசியல் வாழ்க்கையில் அனுபவம் பெற்றவர். எதிர்கட்சி வேட்பாளருக்கு என்ன அனுபவம் உள்ளது? பணம் இருப்பது மட்டும்தான் அனுபவம். பணம் இருந்தால் என்.ஆர்.காங்கிரசில் சீட் கிடைக்கும். பணம் இல்லாவிட்டால் உழைப்பவர்களுக்கும் சீட் கிடைக்காது. பணம் மட்டும்தான் அவரிடம் உள்ளது. ரங்கசாமி பண அரசியல் செய்கிறார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்த வைத்திலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் வெற்றி பெற்றால் மத்திய அரசிடம் கேட்டு புதுவைக்கு பல புதிய திட்டங்களை கொண்டு வருவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரச்சாரத்தின்போது துணைத்தலைவர் பெத்த பெருமாள், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் கே.எஸ்.பி. ரமேஷ், தி.மு.க. தங்கவேலு, இந்தியகம்யூனிஸ்டு நாரா.கலைநாதன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், மதி.மு.க. கபிரியேல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சஞ்சீவி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

    ராகுல் காந்தி பிரதமரானால் முதல் கையெழுத்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாகத்தான் இருக்கும் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மங்கலத்தில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    மத்திய பா.ஜனதா ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 3 ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் கலந்துரையாடி, 2 மணி நேரம் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்து, இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறினார். 

    இதேபோல இந்த ஆட்சியில் செய்யப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மோடியால் பேச முடியுமா? கவர்னர் கிரண் பேடியால் புதுவைக்கு என்ன பயன்?

    தேர்தல் வந்தால் மட்டும்தான் ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து ஞாபகத்துக்கு வருகிறது. 

    ராகுல் காந்தி பிரதமரானால் முதல் கையெழுத்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாகத்தான் இருக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்து ஒரே மாதிரியான வரி, விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் நாளை பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். 

    என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் டாக்டர் நாராயணசாமி கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்டி வந்தார். 
    என்ஆர்.காங்கிரஸ் சார்பில் நாளை முதல் தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் தொடங்க உள்ளது. நாளை காலை 7 மணிக்கு கனகசெட்டிகுளம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் அருகில் இருந்து பிரசாரம் தொடங்குகிறது. 

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று அவர் பிரசாரம் செய்கிறார். அவர் கங்கையம்மன் கோவில் தேரோடும் வீதி, பெரிய காலாப்பட்டு சந்திப்பு, சுனாமி குடியிருப்பு, பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதி, திடீர் நகர், சின்ன காலாப்பட்டு, நடுத்தெரு, பிள்ளைச்சாவடி சந்திப்பு, ஆதிதிராவிடர் குடியிருப்பு, கருவடிகுப்பம் பாரதிநகர், இடையன்சாவடி வழியாக கருமுத்து மாரியம்மன் கோவில், நாகம்மன் கோவில், நாவற்குளம், கடும்பாடி மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 

    இதைத்தொடர்ந்து புதுவையில் உள்ள 23 தொகுதிகளுக்கும், காரைக்கால், மாகி, ஏனாமிற்கும் சென்று ரங்கசாமி பிரசாரம் செய்ய உள்ளார்.
    என்.ஆர். காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படும் கவர்னர் கிரண்பேடியை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூ. வலியுறுத்தியுள்ளது. #governorkiranbedi

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது:-

    தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த அசோக் ஆனந்த் தொடர்பான வழக்கில் கோர்ட்டு தண்டனை வழங்கியதை அடுத்து அவரது பதவி தானாக பறிபோனது.

    அவர் பதவி இழந்ததாக சபாநாயகர் விதிமுறைகள் படி அறிவிப்பு வெளியிட்டார். இப்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் அசோக் ஆனந்த் தனது பதவி பறிப்பு சம்பந்தமாக கவர்னரிடம் கொடுத்த மனுவை கவர்னர் ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி உள்ளார்.

    அதில் யூனியன் பிரதேச சட்ட விதியின்படி சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி இழப்பு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஜனாதிபதி இதனை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது, புதுவை பிரதேச விதிகளுக்கு எதிரானது.

    புதுவை அலுவல் விதிகள்படி எம்.எல்.ஏ. தகுதி இழப்பு தொடர்பாக கேள்வி எழுமானால் அமைச்சரவையின் முடிவு படிதான் செயல்பட வேண்டும். ஆனால், முதல்-அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் தெரியாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் 15.3.2019 அன்று ஜனாதிபதிக்கும், மத்திய உள்துறை செயலாளருக்கும் அனுப்பி உள்ளனர்.

    தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டது தேர்தல் விதிமுறைகளுக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும் மாறானதாகும்.எனவே, இந்திய தேர்தல் ஆணையமும், புதுவை தேர்தல் துறையும் விசாரித்து பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கவர்னர் கிரண்பேடி பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர். காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனவே அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அல்லது தேர்தல் முடியும் வரை அவரை விடுமுறையில் செல்ல உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியுள்ளோம். இதுதொடர்பாக ஜனாதி பதிக்கும் புகார் மனு அனுப்ப உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

    பாராளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக ரங்கசாமி அக்காள் மகன் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. #rangasamy #nrcongress
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளராக வெங்கடேசன் களம் இறங்கியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடுகிறது. 

    இதுவரை என்.ஆர்.காங்கிரஸ் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளரை அறிவிக்கவில்லை. பதவியை இழந்த அசோக்ஆனந்து தனது குடும்பத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என தெரிவித்து விட்டார். 

    இதனால் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ரியல் எஸ்டேட் அதிபர் புவனா என்ற புவனேஸ்வரன், நந்தா ஸ்ரீதரன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் சொந்த அக்காள் மகன் செழியன் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. 

    பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ரங்கசாமி இன்று அறிவித்தார். ஆனால் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை ரங்கசாமி அறிவிக்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படாமலேயே நேரடியாக மனு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது. #rangasamy #nrcongress
    ×