search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96424"

    ஹாங் கூறும் போது, ‘என்னை ஓட்டலில் அனுமதிக்காதது தவறு. என்னால் அதிக உணவு சாப்பிட முடிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை.

    பீஜிங்:

    சீனாவில் உள்ள ஷாங்ஷா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹாங். இவர் மிக அதிகமாக சாப்பிடும் சாப்பாட்டு ராமனாக வலம் வருகிறார். இவர் அதிகமாக உணவு சாப்பிடுவதை வீடியோக்கள் எடுத்து வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

    அந்த நகரில் ஹன்டாடி பார்பிக்யூ ஓட்டலுக்கு சென்று அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இவர் அந்த ஓட்டலுக்கு முதல்முறை சென்றபோது 1½ கிலோ பன்றி இறைச்சி சாப்பிட்டார்.

    அடுத்த முறை ஓட்டலுக்கு சென்றபோது இதேபோல அதிக உணவுகளை சாப்பிட்டார். சமீபத்தில் அவர் அந்த ஓட்டலில் 4 கிலோ இறால் உணவுகளை சாப்பிட்டு தீர்த்தார்.

    இதனால் அந்த ஓட்டலில் இனி ஹாங் நுழையக்கூடாது என்று ஓட்டல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக அந்த நிர்வாகத்தினர் கூறும்போது. அவர் எப்போது ஓட்டலுக்கு வந்தாலும் நாங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உணவின் பெரும் பகுதியை சாப்பிட்டு காலி செய்து விடுகிறார்.

    எனவே மற்ற வாடிக்கையாளர்களுக்கு எங்களால் உணவு வழங்க முடியவில்லை. எனவே தான் அவர் ஓட்டலுக்கு வரக்கூடாது என நாங்கள் தடை விதித்திருக்கிறோம்’ என்று கூறினார்கள்.

    ஆனால் ஹாங் கூறும் போது, ‘என்னை ஓட்டலில் அனுமதிக்காதது தவறு. என்னால் அதிக உணவு சாப்பிட முடிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை. என்னை ஓட்டல் நிர்வாகம் பாரபட்சத்துடன் நடத்துகிறது’ என்று கூறினார்.

    இதையும் படியுங்கள்... வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்தது

    இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்றுவரும் நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அபுஜா:

    மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களை மீறிய வகையில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க ‘ஹிஸ்பா’ எனப்படும் போலீஸ் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.

    முதல்முறை கைதானவர்கள் என்பதால் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. மீண்டும் இதுபோல் செய்து பிடிபட்டால் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவீர்கள் என ‘ஹிஸ்பா’ போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இத்தகைய நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே. பிற மதத்தினரை ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களின்படி ‘ஹிஸ்பா’ போலீசார் தண்டிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் உணவுக்காக தன்னை தே(நா)டி வரும் குரங்குகளுக்கு பழம், கரும்பு போன்றவைகளை விவசாயி வழங்கி வரும் காட்சி தினமும் நடந்து வருகிறது. #monkeys

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள புது வட வள்ளி பண்ணாரியம்மன் நகரில் வசித்து வருபவர் ராமலிங்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். விவசாயி. இவரது வீட்டின் எதிரே கால்நடை துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இதில் ஏராளமான மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.

    அருகே வனப்பகுதி உள்ளதால் அங்கிருந்து ஏராளமான குரங்குகள் இந்த இடத்தில் நமக்கு ஏதாவது உணவு மற்றும் தண்ணீர் கிடைக்குமா? என வந்து செல்லும்.

    இதை கண்ட ராமலிங்கம் அந்த குரங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க எண்ணினார்.

    குரங்குகளுக்கு முதலில் குடிப்பதற்கு தண்ணீர் வழங்கி வந்த ராமலிங்கத்திடம் குரங்குகள் அன்பாக பழக தொடங்கியது. அவரும் குரங்குகளுக்கு தோழனாகி விட்டார்.


    தண்ணீர் மட்டும் வழங்கி வந்த ராமலிங்கம் பிறகு தன்னை தே(நா)டி வரும் குரங்குகளுக்கு பழம், கரும்பு போன்ற உணவுகளையும் வழங்கி வருகிறார்.

    மேலும் அந்த குரங்குகள் விளையாட ஊஞ்சலும் கட்டி உள்ளார். உணவை ருசித்த குரங்குகள் அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடி உற்சாகமாக விளையாடுகிறது.

    தினமும் அங்கு 20 குரங்குகள் வருகிறது. ராமலிங்கம் கொடுக்கும் உணவை சாப்பிட்டு அவரது தோளில் உரிமையுடன் உட்கார்ந்து அவர் ஊட்டும் உணவை சாப்பிடுகிறது.

    இந்த அபூர்வ காட்சி தினமும் நடந்து வருகிறது.  #monkeys

    நேற்று என்பது முடிந்த ஒன்று. நாளை என்பது வந்தால் உண்டு. இன்று மட்டுமே உண்மை என்று உணர்ந்து நம்மைப் போற்றும் உறவுகளை நாம் போற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் சுகமே!
    நம் வாழ்வின் வசந்த நிமிடங்கள் இனிய உறவுகளால் உருவாக்கப்படுகிறது. ஒன்றின் விழுது, அடுத்தடுத்து வேராய் தரை நோக்கிக் கால்பரப்பிப் பாரத்தைத் தாங்குவதால் குடும்பமும் ஒருவகையில் கால மரம்தான். பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, மாமா, அத்தை, தம்பி, தங்கை, மகன், மகள் என உறவுகளால் இணைத்து ஒவ்வொரு குடும்பங்களும் நிம்மதியின் சன்னிதிகளாகக் காலம் கட்டமைத்திருக்கிறது.

    திருக்கடையூர் போனால் மூத்தோரின் எண்பதுக்கு எண்பது கல்யாணக் காட்சிகளைக் காணமுடிகிறது. அறுபது ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து பேரன் பேத்திகள் எடுத்து, அவர்களுக்கு முன்னால் பாட்டிக்குத் தாலிகட்டும் பொழுதில் எண்பது வயதுப் பெரியவரின், பெரிய மனிஷியின் முகத்தில்தான் எவ்வளவு வெட்கம் கலந்த பெருமிதம்.

    அரை நூற்றாண்டு இல்லறத்தில் எத்தனை சிகரங்களை, எத்தனை சறுக்கல்களை அவர்கள் சந்தித்திருப்பார்கள். ஆனாலும் அவற்றைத் துணிச்சலோடு எதிர்கொண்டு இதோ இந்த நிமிடம் வரை அவர்களை அன்போடு வைத்திருப்பது அவர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் உறவுகள்தான்.

    ஆனால் இன்றைய கால கட்டத்தில் உறவுகளின் இனிய பக்கங்களில் உன்னதமாகப் பதிவு செய்யப்பட வேண்டியவர்களை நாம் வேரோடு பிடுங்கிக்கொண்டிருக்கிறோம். சில நிமிட சினத்தால் சின்னாபின்னமாகிப்போன உறவுகள் எத்தனை? நம் இனிய இருப்பை வெறுப்பால் ஏன் நிரப்பவேண்டும்? புரிதல்களில் சரிதல்கள் ஏற்பட்டு கண்ணாடிபோல் கண்எதிரே நொறுங்கிப் போவதைப் பார்க்கிறோமே.

    வீட்டில் மனம் விட்டுப் பேசும் பேச்சு சுருங்கிவிட்டது, கைக்கொரு செல்போனோடு மாயத்திரையில் மயங்கி ஆளுக்கொருபக்கம் தலைகுனிந்தபடி தனித்தனியே சிரித்துக்கொண்டிருக்கிறோம். நேரில் சந்தித்து அரட்டை அடித்துச் சிரித்த உறவுகள் இன்று வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். முகநூலில், பத்தாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தேன் தெரியுமா? என்று ஊருக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

    கூட்டுக் குடும்பங்களின் சிதைவு குடும்ப உறவுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பின்பற்ற வேண்டிய முன்மாதிரி உறவுகள் இல்லாத நிலையில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. பிடிவாதங்களும் சந்தேகங்களும் கணவன்-மனைவி உறவைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி அவர்களை நீதிமன்றங்களில் கொண்டு நிறுத்திக்கொண்டிருகின்றன.



    சொந்த கிராமத்திற்குச் சென்று உறவினர்களுடன் ஒன்றாக இணைந்து குலதெய்வ வழிபாடுகள் நடத்திய காலங்கள் பழங்கனவாய் அப்பால் போய்க்கொண்டிருக்கின்றன. குழந்தைகளுடன் ஒன்றாக உறவினர் இல்லத்திருமணத்திற்குச் செல்லும் வழக்கம் குறைந்துவிட்டது.

    அன்பான இதயங்களால் நிரப்பவேண்டிய இல்லங்களைப் பொருட்களால் நிரப்பி வைத்திருக்கிறோம். வரவுக்கு ஏற்ப செலவு செய்யக் குழந்தைகளைப் பழக்கும் இடம் இல்லம்தான். விட்டுக்கொடுத்தலையும் பொறுமையையும் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவதையும் சகமனிதர்களை வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்வதையும் குடும்பம்தான் கற்றுத்தருகிறது.

    குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும்தான் நாம் இவ்வளவு பாடுபடுகிறோம், ஆனால் அவர்களுடன் நிம்மதியாக இருக்கமுடியவில்லை எனும் போது எதற்காக இப்படி ஓடியாடி உழைக்கிறோம் என்று நம்மை நாமே கேட்கத் தோன்றுகிறது. நம் வாழ்வின் முதல்பகுதி பொருளைத் தேடி ஓடுவதிலும் இரண்டாம் பகுதி அவற்றைக் காப்பற்றுவதிலுமே கழிகிறது.

    பொதுவாழ்வில் சாதனை படைத்த மனிதர்கள்கூடக் குடும்பவாழ்வில் மனஅழுத்தம் தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொள்வதைக் காண்கிறோம். இன்றைய காலகட்டத்தில் காதலை விட கள்ளக்காதல் மேன்மையானது, புனிதம்மிக்கது என்ற மோசமான செயல்பாடுகளை நோக்கி சமூகம் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த கொடிய நோயின் பிடியில் சிக்கி பலர் தங்கள் குடும்ப உறவுகளை தொலைத்து வருகின்றனர். இந்த மோசமான காதலுக்காக பெற்ற மகனை உயிரோடு எரித்தல், கணவனை கொல்லுதல், மனைவியை கொல்லுதல் என்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதை காண்கிறோம்.

    இந்த கொடூர எண்ணங்களுக்கு எல்லாம் விதை போடுவது உறவுகளை விட்டு மெல்ல, மெல்ல பிரிந்து வருவதுதான். கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ மனம் விட்டு பேசினால் இத்தகைய மோசமான செயல்களை நோக்கி எண்ணம் ஓடவே செய்யாதே.

    இந்த வாழ்வில் எல்லாம், வாழப் பொருள்தேட ஓடியோடி ஒருவினாடியில் மூச்சு இறைக்க நின்று திரும்பிப் பார்க்கும்போது நாம் தூக்கிவளர்த்த குழந்தைகள் பெரியவர்களாகி நம்மை விட்டு விலகி நிற்கிறார்கள், வாழ்வின் பொருளை இழந்து நிற்கிறோம். அப்போது நாம் விலக்கிவைத்த உறவுகள் நம்மைவிட்டு வெகுதூரத்தில் போய்க்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை அனுபவங்களைக் கற்பிக்கும் செய்முறைக்கூடம். கற்றுக்கொள்வதற்கும் வாழ்விலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் நம் உறவுகளிடம் நிறைய உண்டு.

    நேற்று என்பது முடிந்த ஒன்று. நாளை என்பது வந்தால் உண்டு. இன்று மட்டுமே உண்மை என்று உணர்ந்து நம்மைப் போற்றும் உறவுகளை நாம் போற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் சுகமே!

    சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறை தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.
    நமது குடும்பத்தில் இருப்போர் போதிய வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் வேளையில், ஆடம்பரத்துக்காக ‘மொபைல் ஆப்’களைப் பயன்படுத்தி பணத்தை வீணாக்குவது அறிவார்ந்த செயலாக இருக்காது.
    இளைய தலைமுறையினருக்கு, நவீன தொழில்நுட்பங்களின் மீதும், புதுப்புது அப்ளிகேஷன்கள் மீதும் தீராத ஆர்வம் இருக்கிறது. இதன் விளைவாக சந்தைக்கு வரும் புதுப்புது கேட்ஜெட்களையும், அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தி பார்க்க ஆசைப்படுகிறார்கள். குறிப்பாக அப்ளிகேஷன் உலகில் தங்களை சிறந்தவர்களாக முன்நிறுத்திக் கொள்ள முயல்கிறார்கள்.

    இன்றைய டிரெண்டிங்கிற்கு ஏற்ப, இன்றைய வைரல் விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதுடன், அப்ளிகேஷன் உலகிலும் அப்-டேட்டாக இருக்கிறார்கள். ‘‘இது மிகவும் பழைய அப்ளிகேஷன், இன்றைக்கு இதுதான் புது டிரெண்டிங்’’ என்று நண்பர்களோடு சிலாகிப்பதோடு, ‘‘அந்த ‘ஆப்’பில் அவ்வளவு சலுகை கிடைக்கிறது, இந்த ‘ஆப்’பில் இவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தினேன்’’ என்று தற்பெருமை பேசுவதற்கும் ஆசைப்படுகிறார்கள்.

    இவர்களது மனநிலைக்கேற்ப, அப்ளிகேஷன் நிறுவனங்களும் சலுகை மழை பொழிந்து வருகிறார்கள். ‘கூகுள் பே’, ‘பேடிஎம்’ போன்ற பணபரிமாற்ற அப்ளிகேஷன்கள் ‘ஸ்கிராட்ச் கார்ட்’ வகையிலான சலுகைகளையும், அமெசான், பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனையகங்கள் ‘கேஷ் பேக்’ சலுகைகளையும் வழங்குகின்றன.

    பிரபல அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, பிரபலமில்லாத ‘ஆப்’களிலும் சலுகைகள் மலிந்துகிடக்கிறது. இப்படி சலுகைகளை அள்ளி வழங்கும் எல்லா ‘ஆப்’களையும் பற்றி நாம் இங்கு ஆய்வு செய்யப்போவதில்லை. சுவையான உணவுகளையும், சூடான சலுகைகளையும் இளைஞர்களுக்கு வழங்கி வரும் சில உணவு ‘ஆப்’களின் நன்மை, தீமைகள் பற்றி மட்டுமே அலசிப்பார்க்க இருக்கிறோம்.

    வங்கி, அலுவலகம், டிக்கெட் முன்பதிவு மையம், செல்போன் ரீ-சார்ஜ் கடை, மின்வாரிய அலுவலகம், இறைச்சி-மீன் மார்க்கெட்... போன்ற எல்லா தேவைகளும், நம்முடைய ஸ்மார்ட் போனிற்குள் அப்ளிகேஷன்களாக வந்துவிட்டன. அந்தவரிசையில் தற்போது ஓட்டல்களும், உணவு ‘ஆப்’ வடிவில் நம் ஸ்மார்ட்போனிற்குள் வந்துவிட்டன.

    ஊபர் ஈட்ஸ், ஸ்விகி, சோமாட்டோ, பாசோஸ்... என பல பெயர்களில் வந்திருக்கும் ‘ஆப்’ ஓட்டல்களில் உங்களுக்கு வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்தால், அவை சில நிமிடங்களிலேயே உங்கள் வீட்டிற்கு வந்துவிடும். அது பிரியாணியாக இருந்தாலும் சரி, பீட்சா-பர்கராக இருந்தாலும் சரி, ஆர்டர் செய்த 15 நிமிடங்களுக்குள் உணவு உங்களை தேடி பறந்துவந்துவிடும்.

    இத்தகைய உணவு ‘ஆப்’களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், உணவுப் பொருட்களைப் பெற்று வழங்குவதற்காகவே பிரபலமான உணவகங்கள் மற்றும் ஓட்டல்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அதனால் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஓட்டல்களில் குறிப்பிட்ட உணவை, ‘ஆப்’களின் மூலம் ஆர்டர் செய்தால், அதை அந்த ‘ஆப்’ நிறுவனத்தின் விநியோக பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள், சுடச்சுட டெலிவரி செய்துவிடுவார்கள்.

    “நாம் இருக்கும் இடத்திலேயே நாம் விரும்பிய உணவு பொருள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்ற அடிப்படையில்தான் இந்த உணவு ‘ஆப்’கள் இயங்குகின்றன. எனக்கு அந்த ஓட்டலில் இருந்து ‘பிரியாணி’, இந்த கடையில் இருந்து ‘பிஷ் பிங்கர்’, அந்த கடையில் இருந்து ‘ஐஸ் கிரீம்’, இந்த கடையில் இருந்து ‘பீட்சா’ என எதை ஆர்டர் செய்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பதால், பல லட்சங்களில் தொடங்கி சில ஆயிரங்களில் வருமானம் ஈட்டும் இளையோர் வரை இத்தகைய ‘ஆப்’களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் பரவலாகி வருகிறது.

    இரவுப் பணியில் இருக்கின்ற பலரும் உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் சேவையை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கின்றனர். நள்ளிரவு நேரத்தில் அருகிலுள்ள எந்தக் கடையாவது திறந்திருக்குமா, நமக்கு பிடித்தது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்த பலரும் இத்தகைய ‘ஆப்’களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதிகாலை 2 மணி வரை இந்த சேவை கிடைப்பது அவர்களுக்கு ஒருவிதத்தில் ஆறுதல்.



    உணவு சேவை ‘ஆப்’கள் மூலம் சில அடையாளம் தெரியாத கடைகளின் சுவையான உணவுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சிறிய அளவில் இருக்கின்ற கடைகளும் உணவு சேவை ‘ஆப்’கள் மூலம் இட்லியும், பழச்சாறும், ஐஸ்கிரீமும் விற்பனை செய்யும் நிலை உருவாகி வருகிறது. இத்தகைய ‘ஆப்’கள் பொருளாதார சுழற்சிக்கு உதவுகின்றன எனினும், ஆடம்பரத்துக்கும், வீண் செலவுக்குமே வழிவகுக்கின்றன என்பது உண்மை.

    அவசரத் தேவைக்காக உணவு ‘ஆப்’களை பயன்படுத்துவது ஒரு புறம் இருக்க, ஆடம்பரத்துக்காகவும் பகட்டுக்காகவும் இவற்றைப் பயன்படுத்துவது பலரிடம் அதிகரித்து வருகிறது. அதாவது, பணத்தைக் காரணமின்றி வீண் விரயம் செய்யும் ஒருவித மனநிலை நமது இளையோர் மத்தியில் வளர்ந்து வருகிறது என்று சொல்லலாம். பணம் இருந்தால் எதையும் நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்க முடியும் என்ற தவறான எண்ணமும் இத்தகைய ‘ஆப்’களின் பயன்பாட்டால் வளர்ச்சி அடைகிறது.

    நமது பணத்தை யாருக்காக, எப்படி, பயனுள்ள விதத்தில் செலவிடுவது என்பதை இக்கால இளையோர் உணர்ந்து கொள்வது அவசியம். நமது பெற்றோரும் உடன்பிறந்தோரும் உறவினர்களும் வறுமையில் வாடும் வேளையில், நாம் சம்பாதித்த பணம் என்பதற்காக வீண் செலவு செய்வது முட்டாள்தனமானது. நமது குடும்பத்தில் இருப்போர் போதிய வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் வேளையில், ஆடம்பரத்துக்காக ‘மொபைல் ஆப்’களைப் பயன்படுத்தி பணத்தை வீணாக்குவது அறிவார்ந்த செயலாக இருக்காது.

    இளையோர் தங்களைத் தனிமனிதராக மட்டும் பார்க்காமல், ஒரு குடும்பத்தின், சமூகத்தின் அங்கத்தினராகப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.

    சில மாதங்களுக்கு முன்பு, உணவு சேவை ‘ஆப்’ நிறுவனங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். ‘ஆப்’கள் மூலம் ஆர்டர் செய்து பெறுகின்ற உணவுப் பொருட்கள் பல நேரங்களில் தரமற்றவையாக இருக்கின்றன என்பது அவற்றில் முக்கியமானக் குற்றச்சாட்டு. இதன் விளைவாக, மத்திய அரசு இத்தகைய நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளையும், ஒழுங்குகளையும் கட்டாயமாக்கியது. அரசிடம் பதிவு செய்யாத கடைகளின் உணவுப் பொருட்களை ‘ஆப்’ நிறுவனங்கள் விநியோகம் செய்யக்கூடாது என்பது கட்டுப்பாடுகளில் முக்கியமானது.

    அரசின் கட்டுப்பாடுகள், எந்த அளவுக்கு தரமான உணவை நாம் பெறுவதற்கு உறுதி அளிக்கின்றன என்பது கேள்விக்குறியே. உணவுப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ‘ஆப்’ நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ள உணவகங்கள் அல்லது கடைகள், வெளியே அனுப்பப்படும் உணவுப்பொருட்களை அவசர கதியில் தயாரித்து அனுப்புகின்றன. நேரில் வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயாரிக்கும் முறையில் ‘ஆப்’ வாடிக்கையாளர்களுக்கான உணவுகளை உணவகங்கள் தயாரிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

    இரண்டாவதாக, ‘ஆப்’ நிறுவனங்கள் வழியாக ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் எண்ணிக்கையின் அடிப்படையில் முன்கூட்டியே உணவுப் பொட்டலங்கள் தயாராகிவிடுகின்றன. விநியோகத்தில் ஏற்படும் கால தாமதம், அந்த உணவுப் பொருட்களின் தரத்தைக் குறைத்து விடுகிறது. சில நேரங்களில், உணவகங்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொட்டலங்களை ‘ஆப்’ நிறுவனங்களின் குடோன்களுக்கு அனுப்பி விடுகின்றன. ஆர்டருக்கு ஏற்ப அந்நிறுவனங்களில் இருந்தே அவை விநியோகிக்கப்படுவதால் தரத்தில் குறைபாடு காணப்படுகிறது என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.

    மூன்றாவதாக, குறிப்பிட்ட உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் சில ‘ஆப்’ நிறுவனங்கள், உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் உரிமையையும் பெற்றுக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. நாம் ஆர்டர் செய்யும் கடைகளின் பெயரில் உணவுப்பொருட்கள் பார்சல் செய்யப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை அந்த உணவகங்களில் தயார் செய்யப்படாததால் சுவையிலும் தரத்திலும் மாறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய உரிமை பெற்ற ‘ஆப்’ நிறுவனங்கள், சுகாதாரமற்ற குடோன்களில் உணவு தயாரிப்பதாகவும் சில சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



    ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை உணவு ‘ஆப்’ நிறுவனங்கள் மறுக்கின்றன. வாடிக்கையாளர்களின் ஆர்டர் பெறப்பட்ட பிறகே தங்கள் பணியாளர்கள் குறிப்பிட்ட கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கி விநியோகிப்பதாகவும், முன்கூட்டியே வாங்கி சேமித்து வைக்கின்ற வழக்கம் இல்லை என்றும், சொந்தமாக தயாரித்து விநியோகிப்பதை விடவும் கடைகளில் வாங்கி விநியோகம் செய்வதே தங்களுக்கு எளிதானது என்றும் ‘ஆப்’ நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அதிக வருவாய் ஈட்டும் இளையோரின் செலவையும் ஆடம்பரத்தையும் ‘ஆப்’ உணவு சேவை நிறுவனங்கள் அதிகரித்தாலும், பல ஏழைகளின் வருமானத்துக்கும் வழியமைத்துக் கொடுக்கின்றன. ஒரு ஆர்டருக்கு, ரூபாய் 40 விநியோக கட்டணமாக கிடைப்பதால் சிலர் பகுதி நேர வேலையாகவும், பலர் முழு நேர வேலையாகவும் செய்து வருகிறார்கள். ஆனால், தங்கள் பணியாளர்களின் நலனில் இந்த நிறுவனங்கள் சரியான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு நியமிக்கப்படும் உணவு விநியோகப் பணியாளர்களுக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    சில ‘ஆப்’ நிறுவனங்கள், தங்கள் விநியோக பணியாளர்களுக்கு குறிப்பிட்ட மாதச் சம்பளம் நிர்ணயிக்காமல், கிடைக்கின்ற ஆர்டர்களுக்கு ஏற்ப கமிஷனை மட்டுமே சம்பளமாக வழங்கும் அவல நிலையும் உள்ளது. ‘உணவு ஆப்’கள் ஒருபுறம் முன்னேற்றமாகவும் ஆடம்பரமாகவும் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் பல்வேறு சோகங்களையும் குழப்பங்களையும் பாதுகாப்பில்லாத நிலையையும் கொண்டிருக்கின்றன.

    ஆகவே, உணவு சேவை நிறுவனங்களின் ‘ஆப்’களைப் பயன்படுத்துவோர் அவற்றின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அறிந்து பயன்படுத்துவது நல்லது. பணியாளர்களுக்கு சரியானப் பாதுகாப்பும், சம்பளமும் கொடுக்காத, தரமான உணவுப் பொருட்களை விநியோகம் செய்யாத நிறுவனங்களை தவிர்ப்பதும் நல்லது. அதேசமயம் அதிகம் பணம் செலவழிப்பது மட்டுமே உணவின் தரத்திற்கும் சுகாதாரத்திற்கும் உத்தரவாதமாக அமையாது. ஆடம்பரத்துக்காக அன்றி, அவசரத்துக்காக மட்டும் சரியான உணவு ‘ஆப்’களைத் தேர்வு செய்து பயன்படுத்துவோம்.

    உணவிற்கு மட்டுமே பாதுகாப்பு

    உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் விநியோக பணியாளர்கள், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு வண்ண டீ-சர்ட்களில் ‘விர்’ என பறந்துக்கொண்டிருக்கிறார்கள். உணவை துரிதமாக கொண்டு சேர்த்தால்தான், இவர்களுக்கு நல்ல விமர்சனங்களும், அடுத்தடுத்த ஆர்டர்களும் கிடைக்குமாம். உணவை தாமதமாக கொண்டு சேர்த்தாலோ, உணவு பொட்டலங்கள் சேதமடைந்திருந்தாலோ, ஆர்டர் செய்தவர்கள் கடும் கோபக்காரர்களாக நடந்து கொள்வதுடன், விநியோக பணியாளர் மீது தவறான விமர்சனங்களையும் பதிவிடுகிறார்கள். இதனால் அவர்களது அடுத்தடுத்த ஆர்டர்கள் மறைமுகமாக பறிக்கப்படுவதுடன், அவர்களது வருமானமும் வெகுவாக குறைக்கப்படுகிறது.

    விநியோக பணியாளர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதைவிட, உணவை பாதுகாப்பாகவும், துரிதகதியிலும் விநியோகிக்கவேண்டும் என்பதே பெரும்பாலான உணவு ‘ஆப்’ நிறுவனங்களின் குறிக்கோளாகஇருக்கிறது.

    போலி ஆர்டர்கள்


    உணவு ‘ஆப்’ நிறுவனங்கள், விநியோக ஊழியர்களிடம் கண்டிப்போடு நடந்துக்கொள்வதற்கும் சில காரணங்கள் உள்ளன. உணவை ஓட்டல்களில் இருந்து வாங்கி, அதை உரியவரிடத்தில் சேர்ப்பதுதான், விநியோக ஊழியர்களின் வேலை. ஆனால் சில சமயங்களில் உணவை ஆர்டர் செய்தவர், அதை பாதியிலேயே ரத்து செய்வதுண்டு. அப்படி பாதியிலேயே ரத்து செய்யப்படும் உணவை ஓட்டல் நிறுவனங்களும் ஏற்றுக்கொள் வதில்லை.

    சுருக்கமாக சொன்னால், அந்த உணவு விநியோக ஊழியர்களுக்கானதாகி விடுகிறது. மேலும் ரத்து செய்த ஆர்டருக்கான விநியோக கட்டணமும் வழங்கப்படும். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சிலர், நண்பர்களின் உதவியோடு போலி ஆர்டர்களை அரங்கேற்றுகிறார்கள். பின்னர் அதை பாதியிலேயே ரத்தும் செய்து விடுகின்றனர். அவர்களது திட்டப்படி உணவிற்கு உணவும், பணத்திற்கும் பணமும் கிடைத்துவிடுகிறது. இப்படியே 6 போலி ஆர்டர்களை அரங்கேற்றினால், உணவு+கட்டணம் ஆகியவற்றுடன் போனஸ் தொகையும் கிடைத்து விடுமாம். இந்த பார்முலாவை பலரும் பயன்படுத்துவதால், ‘ஆப்’ நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன.

    டே. ஆக்னல் ஜோஸ்
    தற்போது நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து உணவை வீட்டுக்கே வரவழைக்கிறோம். இந்த வீடு தேடி வரும் உணவுகளால் மக்களுக்கு லாபமா? நஷ்டமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
    கடந்த காலங்களில் தந்தை தான் கற்று வந்த விஷயங்களை எல்லாம் தனது பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பார். எது நல்லது, எது கெட்டது என்பதனை தந்தை தனது அனுபவத்தில் உணர்ந்திருப்பார். நல்ல விஷயங்களை பிள்ளைக்கு போதிப்பார். கெட்ட விஷயத்தை புறக்கணித்து விடுவார். ஆனால் இது தகவல் தொழில் நுட்ப காலம். இங்கு பிள்ளைகளும், தந்தையும் ஒரு சேர கற்றுக்கொள்கிறார்கள். எனவே அதில் நல்லது? கெட்டது என்பதனை தந்தை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தந்தை அதனை கற்றுணர்ந்து இது தவறு என்று சொல்வதற்குள், அவரது பிள்ளை அதற்கு அடிமையாகி விடுகிறது.

    கடந்த காலங்களில் தந்தை தான் கற்று வந்த விஷயங்களை எல்லாம் தனது பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பார். எது நல்லது, எது கெட்டது என்பதனை தந்தை தனது அனுபவத்தில் உணர்ந்திருப்பார். நல்ல விஷயங்களை பிள்ளைக்கு போதிப்பார். கெட்ட விஷயத்தை புறக்கணித்து விடுவார். ஆனால் இது தகவல் தொழில் நுட்ப காலம். இங்கு பிள்ளைகளும், தந்தையும் ஒரு சேர கற்றுக்கொள்கிறார்கள். எனவே அதில் நல்லது? கெட்டது என்பதனை தந்தை அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தந்தை அதனை கற்றுணர்ந்து இது தவறு என்று சொல்வதற்குள், அவரது பிள்ளை அதற்கு அடிமையாகி விடுகிறது.

    அந்த தகவல் தொழில் நுட்ப அடிமைத்தளத்தில் இருந்து மீண்டு வருவது என்பது இயலாத காரியம் ஆகி விட்டது. மது, மாது ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி விட்டு, தகவல் தொழில் நுட்பம் மனிதனுக்கு மிகப்பெரிய போதையாகி விட்டது.

    செம்மறி ஆடுகள்

    மந்தையாக செல்லும் செம்மறி ஆடுகளில், முன்னே செல்லும் ஒரு ஆடு கிணற்றில் விழுந்தாலும், அதனை பின்தொடரும் அத்தனை ஆடுகளும் கிணற்றில் விழுந்து விடும். அது போல தகவல்தொழில் நுட்பம் என்ற ஒற்றை பாதைக்கு பின்னால் ஒட்டுமொத்த சமூகமும் செம்மறி ஆடுகள் போல் சென்று கொண்டு இருக்கிறது.

    பேசுவதற்காக, கண்டுபிடிக்கப்பட்ட செல்போனில் எதையும் செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது. பல சாதனங்கள் செய்து கொண்டு இருந்த வேலைகளை எல்லாம் செல்போன் ஒன்றே செய்கிறது. செல்போனிலே வீட்டுக்கு தேவைக்கான சாமான்களை வாங்க தொடங்கினோம். கார், ஆட்டோக்களை முன்பதிவு செய்து வரவழைக்கிறோம். தற்போது நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து உணவை வீட்டுக்கே வரவழைக்கிறோம். இது வளர்ச்சிக்குள் இருக்கும் வீழ்ச்சி என்பதனை யாரும் அறிவதில்லை.



    சலுகை

    வீட்டுக்கு வந்து உணவு தரும் சேவையை பல நிறுவனங்கள் மக்களுக்கு அளித்து வருகிறது. இவர்களது செயலி மூலம் நாம் விரும்பும் ஓட்டலில் இருந்து விரும்பும் உணவுகளை ஆர்டர் செய்யலாம். அவர்கள் அதனை நமது வீட்டுக்கு அரை மணி நேரத்தில் டெலிவரி செய்கிறார்கள். மேலும் இந்த நிறுவனங்கள் அளிக்கும் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளால் கவர்ந்திழுக்கப்படும் மக்கள் இதற்கு அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த வீடு தேடி வரும் உணவுகளால் மக்களுக்கு லாபமா? நஷ்டமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

    நேர விரயம்

    லாபம் இருக்கிறது என்று சொன்னவர்களின் கருத்துக்கள் வருமாறு:-

    நகர வாழ்க்கையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. நான்கு பேர் இருக்கும் வீட்டில் மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு செல்ல முடியாது. ஆட்டோவில் செல்ல வேண்டும். அதற்கு கூடுதல் செலவு ஆகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் ஓட்டலுக்கு சென்று வர நேரம் விரயம் ஆகிறது. ஆனால் ஆன்லைனில் பதிவு செய்து விட்டால் போதும். சலுகை விலையில் வீட்டுக்கே வந்து உணவு தருகிறார்கள். விரும்பும் நேரத்தில், விரும்பும் உணவுகளை சாப்பிடலாம். இதை விட என்ன வேண்டும் என்று என்கிறார்கள்.

    எலிப்பொறி

    நஷ்டம் தான் என்று சொன்னவர்கள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

    கடந்த காலங்களில் வெளியூர் பயணங்களின் போது தான் ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவது வழக்கம். ஆனால் தற்போது சுவைக்காகவும், சோம்பேறித்தனத்தாலும் ஓட்டலில் சென்று சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது. வீட்டு சாப்பாடு தான் உடலுக்கு ஆரோக்கியம். ஆனால் ஓட்டல் சாப்பாட்டை வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவது சரியாகுமா? அதில் சலுகை என்பதே எலிப்பொறியில் வைக்கும் தேங்காய் போன்றது. அதில் நாம் சிக்க தான் செய்வோம். நம்மை ஏமாற்றி வியாபாரம் செய்வதற்கான உத்தி அது. ஒரு முறை வீட்டிற்கு உணவுகளை வரவழைத்து சாப்பிட்டு விட்டால், அதற்கு அடிமையாகி மீண்டும், மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில் குடியேறி விடும் என்கிறார்கள். 
    பேராவூரணி நகர மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. #GajaCyclone
    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் கஜா புயலின் பாதிப்பு மிக கடுமையாக இருந்து வருகிறது.

    குறிப்பாக பேராவூரணி பகுதியில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் இல்லாததால் கடந்த 4 நாட்களாக உணவு வழியில்லாமல் மக்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றனர்.

    பேராவூரணி பகுதியில் மெழுகுவர்த்தி, மண்எண்ணெய் இல்லாமல் இரவு நேரத்தை கழிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். செல்போனுக்கு சார்ஜ் போட முடியாமல் வெளியுலகை தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

    இதற்கிடையே பேராவூரணி நகர மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகளை கோவில் நிர்வாகத்தினர் வாங்கி அப்பகுதியில் உள்ள பெண்கள், ஆண்களும் சமையல் செய்து வழங்குகின்றனர்.

    அரசின் நிவாரண முகாமுக்கு செல்ல முடியாத பெண்கள், குழந்தைகள் , வயதானவர்கள் கோவிலுக்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

    கஜா புயலால் பாதித்தவர்களுக்கு மனதாபிமான முறையில் உணவு வழங்கி வரும் கோவில் செயல்அலுவலர் அமரநாதன் மற்றும் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    இதேபோல் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. #GajaCyclone

    பேராவூரணி நகர மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. #GajaCyclone
    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் கஜா புயலின் பாதிப்பு மிக கடுமையாக இருந்து வருகிறது.

    குறிப்பாக பேராவூரணி பகுதியில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் இல்லாததால் கடந்த 4 நாட்களாக உணவு வழியில்லாமல் மக்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றனர்.

    பேராவூரணிபகுதியில் மெழுகுவர்த்தி, மண் எண்ணை இல்லாமல் இரவு நேரத்தை கழிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். செல்போனுக்கு சார்ஜ் போட முடியாமல் வெளியுலகை தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

    இதற்கிடையே பேராவூரணி நகர மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகளை கோவில் நிர்வாகத்தினர் வாங்கி அப்பகுதியில் உள்ள பெண்கள், ஆண்களும் சமையல் செய்து வழங்குகின்றனர்.

    அரசின் நிவாரண முகாமுக்கு செல்ல முடியாத பெண்கள், குழந்தைகள் , வயதானவர்கள் கோவிலுக்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

    கஜா புயலால் பாதித்தவர்களுக்கு மனதாபிமான முறையில் உணவு வழங்கி வரும் கோவில் செயல்அலுவலர் அமர நாதன் மற்றும் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    இதேபோல் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு தன்னார்வலர்கள்மூலம் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
    தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். #Gajastorm #Storm

    சென்னை:

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கடந்த வாரம் சூறையாடிய கஜா புயல் பாதிப்பு துயரம் இன்னமும் நீங்கவில்லை.

    வேதாரண்யம்- நாகப்பட்டினம் இடையே கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கஜா புயல் கரையை கடந்து சென்ற பிறகு புயலால் ஏற்பட்ட பின்விளைவுகளை தேசிய பேரிடர் மேலாண்மை குழு சமாளித்து விட்டதாக முதலில் கருதப்பட்டது.

    ஆனால் மறுநாள் சனிக்கிழமை முதல் கஜா புயல் பாதிப்பு விவரங்கள் மெல்ல மெல்ல தெரிய வந்தன. வேதாரண்யம் மட்டுமே துண்டிக்கப்பட்டதாக தமிழக மக்கள் நினைத்து இருந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் கஜா புயல் நடத்திய கோர தாண்டவம் தெரிய வந்தது.

    குறிப்பாக திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்பட பல ஊர்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருப்பது வெளிஉலகத்துக்கு தெரிய வந்தது. அதன்பிறகுதான் இந்த 4 மாவட்டங்களிலும் குக்கிராம மக்களும் மிக கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    கிராம மக்களின் வாழ்வதாரங்களை கஜா புயல் அழித்து சென்று இருக்கும் வேதனைகளும் வெளிப்பட்டன. இதன் மூலம் கஜா புயல் சேத விவரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கஜா புயலால் வீடுகள், பயிர்கள், மரங்கள், கால்நடைகள், மின்சார கம்பங்கள் என அனைத்து தரப்பிலும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 1 லட்சத்து 17 ஆயிரத்து 624 வீடுகள் சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    1 லட்சத்து 70 ஆயிரத்து 54 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 735 கால்நடைகள் பலியாகி உள்ளன. 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு பயிர்கள் நாசமாகி உள்ளன.


     

    கஜா புயல் தாக்குவதற்கு முன்பே சுமார் 60 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு தமிழக அரசு இடமாற்றம் செய்து இருந்தது. கஜா புயல் தாக்கிய பிறகு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கானவர்கள் வீடுகள் சேதம் அடைந்து பரிதவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    தற்போது சுமார் 500 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு சுமார் 2½ லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும்ஒரு குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை, ஒரு லிட்டர் மண்ணெய் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து தீவிரமாக செய்து வருகிறார்கள். இந்த நிவாரணப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக கூடுதலாக 11 அமைச்சர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

    மின் விநியோகத்தை சீரமைப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது, தேவைக்கு ஏற்ப உணவு மற்றும் உணவு பொருட்களை வினியோகம் செய்வது, சுகாதாரத்துக்காக மருந்து, மாத்திரைகளை வழங்குவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

    இதனால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் முழு வீச்சில் அரசு அதிகாரிகளின் பணிகள் நடந்து வருகிறது.

    4 மாவட்டங்களிலும் சுமார் 5 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. 3,559 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் வயர்கள் அறுந்து விழுந்து நாசமாகி விட்டன. அந்த பகுதிகளில் புதிய மின் கம்பங்களை நட்டு மின் வயர்களை இணைக்கும் பணிகளில் சுமார் 13 ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று வரை சுமார் 50 சதவீத மின் வினியோக சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. திருவாரூர் நகரில் 90 சதவீத இடங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது. கிராமங்களுக்கு மின் உபகரணங்களை கொண்டு செல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


     

    மின் வினியோகம் மற்றும் சுகாதாரத்துக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் கூடுதல் பணியாட்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திராவில் இருந்து 1000 பேர் வந்துள்ளனர். இவர்கள் ஒத்துழைப்புடன் இன்னும் 2 நாட்களில் மின் வினியோகம் முழுமையாக சீரடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிராமப் பகுதிகளில் அதிகளவு மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் தற்காலிகமாக ஜெனரேட்டர் மூலம் சில கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்து வருகிறார்கள். மின் கம்பிகளை கிராமத்துக்குள் இழுத்து செல்வதில் இடையூறு நிலவுவதால் கிராமங்களில் மின் வினியோகம் சீராக கூடுதலாக சில நாட்கள் தேவைப்படும் என்று தெரிகிறது.

    மின்சாரம் இல்லாத நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பு நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக கைவசம் இருந்த பொருட்களை வைத்து பொதுமக்கள் சமாளித்து விட்டனர். இன்று பல கிராமங்களில் சுத்தமான குடிநீர், உணவு கிடைப்பதில் சவாலான நிலை காணப்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு கிராமங்களுக்கு உணவு பொருட்களை வினியோகம் செய்யும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விடும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 150 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் பகுதிகளில் மரங்கள் அகற்றப்படாததாலும், மின் கம்பங்களை சீரமைக்காததாலும், நிவாரண பணிகளுக்கு அதிகாரிகளால் செல்ல முடியவில்லை.

    அங்குள்ள மக்கள் உணவு கிடைக்காமலும், குடிநீர் இல்லாமலும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    நாகை மாவட்டத்தில் அக்கரைபேட்டை, விழுந்த மாவடி, பண்ணைச்சேரி, வேதாரண்யம், வெள்ளப் பள்ளம், தலைஞாயிறு, ஆறு காட்டுத்துறை, கோடியக்கரை மற்றும் அதை சுற்றியுள்ள 40 கிராமங்களில் மக்கள் உணவுக்காக தவிக்கிறார்கள்.

    கீழ்வேளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10 கிராமங்களில் உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம் பட்டிணம், பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம் உள்ளிட்ட 40 கிராமங்களை சேர்ந்த மக்கள் உணவு, குடிநீருக்காக ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, வடுவூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 60 கிராம மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்.

    இந்த பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாததால் அரசு அதிகாரிகளால் நிவாரணம் வழங்க செல்ல முடியவில்லை. அங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களை தேடி வர வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரண முகாம்களை தேடி பொது மக்களால் செல்ல முடியவில்லை.

    அந்த கிராமங்களில் சில தன்னார்வலர்கள் மட்டும் உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு முழுமையான நிவாரண உதவிகளை அவர்களால் வழங்க முடியவில்லை. மின்சப்ளையும் வழங்கப்படாததால் இரவு நேரங்களில் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. #Gajastorm #Storm

    உணவகங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உள்ளூர் உணவு முதல் உலக பிரசித்தி பெற்ற உணவுகள்கூட நடந்து போய் சாப்பிடக்கூடிய அளவுக்கு அருகே வந்துவிட்டது.
    உணவகங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உள்ளூர் உணவு முதல் உலக பிரசித்தி பெற்ற உணவுகள்கூட நடந்து போய் சாப்பிடக்கூடிய அளவுக்கு அருகே வந்துவிட்டது. இவ்வளவு உணவகங்கள் பெருக முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, உணவுக்காக மக்கள் அதிகமாக செலவிட விரும்புவது. இரண்டு, வித்தியாசமான உணவுகளை மக்கள் சுவைக்க விரும்புவது.

    இன்று, உணவகங்களில் வித விதமாக ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகிவிட்டது. எவ்வளவுதான் பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்து சுவைத்தாலும், ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது தனிக் கொண்டாட்டம் தான்.

    ஆண்களைப் போன்று பெண்களும் வேலைக்கு செல்வதால் ஏற்பட்ட மாற்றம் இது. வேலைக்கு சென்றுவிட்டு தாமதமாகவோ, களைத்தோ வீடு திரும்பும்போது, ‘குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வெளியே சாப்பிட்டால் என்ன?’ என்ற சிந்தனை எழுகிறது. திடீர் விருந்தாளிகள் வரும்போதும், திருமணநாள், பிறந்தநாள் போன்ற முக்கிய விழாக்களை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்பும்போதும் உணவுக்காக ஓட்டல்களை நாடுகிறார்கள். பள்ளி விடுமுறையில் குழந்தைகளை மகிழ்விக்க, நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டையடிக்கவும் உணவகங்கள் பயன்படுகின்றன.

    இப்போதெல்லாம் ஆண்களும் சுவையாக சமைக்கிறார்கள். காரணம் உணவகங்கள். ஒரு பொருளை சாப்பிடும் போதே, இது எதனால் செய்யப்பட்டது, எப்படி செய்யப்பட்டது என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே சாப்பிடும் போது அந்த உணவுப் பொருளின் உள்ளடக்கமும், செய்முறையும் தெரிந்துவிடும். பிறகு அதை வீட்டில் செய்துபார்க்கிறார்கள். எதிர்பார்த்த சுவை கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, ஓரளவு அதில் வெற்றிபெற்று மகிழ்ச்சி அடைகிறார்கள். இப்படித்தான் பல பெண்கள் புதிய வகை உணவுகளை சமைக்க கற்றுக் கொள்கிறார்கள். இதனால் உணவகங்களில் சாப்பிடுவது ஒரு படிப்பினையாகிவிடுகிறது. ஒரு சில உணவகங்களில் தங்களது சுவைமிகுந்த ரெசிபிகளை, எப்படி தயாரிப்பது என்று வாடிக்கையாளர் களுக்கு கற்றுக்கொடுக்கவும் செய்கிறார்கள்.

    ஓட்டல்களின் பெயர்கள் மாறினாலும், பெரும்பாலும் உணவுகளுக்கு ஒரே பெயர்தான் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரே மாதிரியான பொருட்களைத்தான் சேர்க்கவும் செய்கிறார்கள். ஆனால் சுவையில் மாற்றம் ஏற்படுகிறது. அப்படி சுவை அதிகமுள்ள உணவகங்களில்தான் கூட்டம் சேருகிறது. சாதாரண உணவுப் பொருட்களைக் கொண்டு இப்படி எல்லாம் தயாரிக்க முடியுமா என்று வியக்கும் வண்ணம் உணவகங்கள் வித்தியாசமான உணவுவகைகளை தயாரிக்கின்றன. பாரம்பரிய உணவுகள், கான்டினென்டல், சைனீஷ், கிரேக்கம், இத்தாலி என்று பல்வேறு நாட்டு உணவுகள் இப்போது தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. வட இந்திய, தென் இந்திய உணவுகளும் மக்களை கவர்கிறவே செய்கிறது.

    உணவகங்கள் இப்போது, ‘உணவுத் திருவிழா’வும் நடத்துகின்றன. அப்போது சிறப்புக்குரிய உணவுகள் பலவற்றை சுடச்சுட தயாரித்து மக்களுக்கு கொடுத்து அவர்களை உணவுப்பிரியர்களாக மாற்றிவிடுகிறது. உணவு மட்டும் சுவையாக இருந்தால் போதாது. அவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் இடத்தின் சூழ்நிலையும், அழகும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கவேண்டும். அதோடு உணவு பரிமாறுகிறவர்களும் இதமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. இப்படி எல்லாவற்றிலும் திருப்திபடுத்தும் உணவகங்களே மக்கள் நாவில் மட்டுமல்ல, மனதிலும் இடம் பிடிக்கின்றன. 
    இன்று நாம் ஆரோக்கியத்தைவிட சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் எந்த உணவகத்தில் சுவையான உணவுகள் கிடைக்கின்றன என்று தேடித்தேடிச் சென்று சுவைக்கின்றோம்.
    நாம் இந்த உலகத்தில் குழந்தையாக பிறக்கும் முன்பே, நமது தாய் மார்பில் நமக்கான (பால்) உணவு பத்திரமாக படைக்கப்பட்டுவிடுகிறது. உலகத்தின் உணவுத் தத்துவமும் இதுதான். உயிர்கள் படைக்கப்படுவதற்கு முன்பே உலகத்தில் அவைகளுக்கான உணவுகள் உருவாக்கப்பட்டுவிட்டன. பாலை (முதல்) உணவாகத் தருகிறவரை ‘தாய்’ என்கிறோம். அதைப்போல் காய், கனி, கிழங்கு, கீரை, தானியங்கள் என்று அத்தனையையும் தருகின்ற மண்ணையும் தாயாகப் போற்றுகிறோம். அதனால்தான் ‘தாய் மண்’ என்று சொல்கிறோம்.

    எப்படியோ ஏதாவது ஒருவகையில் தாய்தான் மனுஷியாகவும், மண்ணாகவும் இருந்து உணவளிக்கிறாள். மனுஷியான தாய், தான் பெற்ற குழந்தைக்கு முதலில் தனது பாலைப் புகட்டினாள். பிற்காலத்தில் அவள் தான் சாப்பிட்டுப்பார்த்து, சரியாக ஜீரணமாகிறது, ஆரோக்கியத்திற்கும் ஏற்றது, என்று நம்பிய உணவை தனது வாயால் நன்றாக மென்று அதை குழந்தைக்கான உணவாக ஊட்டியிருக்கிறாள்.

    இயற்கை, இந்த உலகம் முழுக்க பூமி எங்கும் சமதளங்களில் தானியங்களையும், தாவரங்களையும் படைத்திருக்கிறது. காடு களில் காய், பழம், தேன், மூலிகைகளை உருவாக்கியிருக்கிறது. அதோடு பிராணிகளையும், விலங்குகளையும் தோற்றுவித்தி ருக்கிறது. நீர் நிலைகளிலும், கடலிலும் மீன்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உயிரினங்களையும் படைத்துள்ளது. இவை அனைத்தும் படைக்கப்பட்டு பழங்கால மனிதனைச் சுற்றி பரந்து விரிந்து கிடந்தன.

    ஆதிமனிதனுக்கு பசி உணர்வு ஏற்பட்டது. அவன், தன் பசியை ஆற்ற எதை உண்பது? மண்ணின் மேலே விளைவதையா? கீழே விளைவதையா? மரத்தில் காயாய் தொங்குவதையா? பழமாய் தொங்குவதையா? கடலில் நீந்துவதையா? காட்டில் ஓடுவதையா? எதை உண்பது? எப்படி உண்பது? என்ற ஏகப்பட்ட கேள்விகளோடு, சரியான வழிமுறைகள் தெரியாமல் தவித்தான். கண்டதையும் சாப்பிட முடியுமா? அப்படி சாப்பிட்டு அது உடலுக்கு பொருந்தாத விஷமாகிவிட்டால், உயிர் அல்லவா போய்விடும்.

    உண்மைதான்! இந்த மண்ணுலகில் விளைந்திருக்கும் பொருட்களில் எது சரியான உணவு? எது விஷம்? என்பதை கண்டறிய, விஞ்ஞான அறிவும், தகவல்-தொடர்பும் இல்லாதிருந்த அந்த காலத்தில் (நாம் இன்று சாப்பிடும் முறையான உணவை கண்டுபிடித்து தருவதற்காக) எத்தனை மனிதர்கள் தன் உடலையே ஆராய்ச்சிக் கூடமாக்கி அவஸ்தைபட்டு இறந்திருப்பார்கள்!

    வரலாற்று உண்மைகளை புரிந்துகொள்ள நாம் காலத்தை ‘கிறிஸ்து பிறப்பதற்கு முன்’ ‘கிறிஸ்து பிறப்பதற்கு பின்’ என்று பிரிப் பதுபோல், வரலாற்றுக்கு முந்தைய உணவு காலகட்டத்தை குறிப்பிட ‘தீ.மு’ (தீயை கண்டுபிடிப்பதற்கு முன்பு), `தீ.பி’ (தீயை கண்டுபிடித்த தற்கு பின்பு) என்று குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் தீயை கண்டுபிடித்த பின்புதான் மனிதர்கள் உணவின் சுவையை முழுமையாக உணர்ந்தார்கள்.

    இன்றைய நவீன உணவு உலகம் எத்தனையோ புரட்சிகரமான வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் சந்தித்திருக்கிறது. முன்பெல்லாம் வெளிநாடுகளுக்கு சென்றால்தான் அந்தந்த நாட்டு புகழ்பெற்ற உணவுகளை சாப்பிட முடியும். இன்றைய நிலை அப்படி அல்ல, பல்வேறு நாட்டு புகழ்பெற்ற உணவுகள் அதே சுவையில் இந்தியாவிலும் கிடைக்கிறது. நம் நாட்டு புகழ்பெற்ற உணவுகள் வெளிநாடுகளிலும் கிடைக்கின்றன. இன்று நாம் ஆரோக்கியத்தைவிட சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் எந்த உணவகத்தில் சுவையான உணவுகள் கிடைக்கின்றன என்று தேடித்தேடிச் சென்று சுவைக்கின்றோம்.

    இந்த தேடுதல் வரலாற்று காலத்திலே தொடங்கிவிட்டது. எந்த நாட்டில் ருசி நிறைந்த புதிய வகை உணவுகள் கிடைக்கும் என்று மன்னர்களும் தேடியிருக்கிறார்கள். பிற நாடுகளை கைப்பற்ற வேண்டும், அங்கிருக்கும் பொன், பொருளை அள்ளிக்கொண்டு போகவேண்டும் என்று போருக்கு புறப்பட்ட மன்னர்கள் எதிரிநாடுகளில் பார்த்த வித்தியாசமான உணவுப்பொருட்களை ருசித்து விட்டு, வியந்துபோய் அதற்கு தேவைப்படும் உணவுத் தாவரங்களை தங்கள் நாட்டுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். எதிரி நாடுகளில் உள்ள புதிய உணவுகளையும் தங்கள் நாடுகளில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.



    ஆதிகாலத்து உணவுகளை பற்றி நாம் குறிப்பிடும்போது தேனீக்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டாக வேண்டும். அவை சேகரித்த தேன்தான் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு ருசிமிக்க உணவாக இருந்திருக்கிறது. தேனை கடவுளுக்கு நிகராக கருதி, பிறந்த குழந்தையின் நாக்கில் ஒரு துளியை தொட்டுவைத்து, அது சிரித்ததும் கடவுள் அனுக்கிரகம் அந்த குழந்தைக்கு கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்திருக்கிறார்கள். பண்டைய கிரேக்கர்களும், ரோமானியர்களும் தேனை சாட்சியாக வைத்துதான் திருமணம் செய்திருக்கிறார்கள்.

    அப்படிப்பட்ட தேனின் சுவையை மட்டுமே அறிந்தவன், மன்னன் டேரியஸ். அப்போது பெர்ஷியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈரான் பகுதியை ஆண்ட அவன், கி.மு. 510-ல் இந்தியா மீது படையெடுத்து வந்தான். அதற்கும் வெகுகாலத்திற்கு முன்பே இந்தியாவில் கரும்பு பயிராகி இருந்தது. அதில் ஜூஸ் தயாரித்து இந்தியர்கள் தித்திப்பாக பருகிக்கொண்டிருந்தார்கள். மன்னன் டேரியஸ் பஞ்சாபில் கரும்புத் தோட்டத்தை பார்த்தான். அதில் சுவையான ஜூஸ் தயாரித்து பருகிவிட்டு, ‘இது என்ன மேஜிக் பயிர்’ என்று திகைத்து நின்றான். பஞ்சாபியர்கள் கரும்பின் பூர்வீக கதையையும் அருமை பெருமையையும் சொல்ல, ‘இதை என் நாட்டுக்கு கொண்டு செல்ல என்ன வழி?’ என்று கேட்டு, பத்திரமாக கரும்பை ஈரானுக்கு கொண்டுபோய் அங்கு அறிமுகப்படுத்தினான்.

    கரும்பின் கதை இதுவென்றால், வாழைப்பழம் கிரீஸ் நாட்டிற்கு போனது இன்னும் வித்தியாசமான கதை. மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 327-ல் பஞ்சாபில் போரிட்டு ரொம்ப சோர்ந்து போயிருந்தார். ‘உடனடி உற்சாகத்திற்கு உடனே ஏதாவது உணவு வேண்டும். ஏதாவது இந்தப்பகுதியில் இருக்கிறதா என்று கண்டுபிடித்து கொண்டு வாருங்கள்’ என்று படைவீரர்களிடம் சொல்ல, அவர்கள் வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து வாழைத்தாரில் சில பழங்கள் கனிந்திருப்பதை கண்டிருக்கிறார்கள். அவைகளை சாப்பிட்டு பார்த்து சுவையை அறிந்ததும், அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் எல்லாம் தேடி, கனிந்த பழங்களை கண்டெடுத்து மன்னன் அலெக்சாண்டரிடம் கொண்டுபோய் கொடுத்திருக் கிறார்கள். அதை சுவைத்து மகிழ்ந்த மன்னன், வாழைப்பழத்தின் பெருமையை உணர்ந்து அதனை கிரீஸ் நாட்டிற்கு கொண்டு சென்றான் என்கிறது, வரலாறு.

    இப்போது ஆங்காங்கே ‘ஒயின் ஷாப்’கள் கண்களில்படுகின்றன. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை ஒழித்துவிடுவோம்’ என்று சில கட்சிகளும் தேர்தல் காலங்களில் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இன்று வில்லனாக சித்தரிக்கப்படும் (ஒரிஜினல்) ஒயினை மனிதன், கிறிஸ்து பிறப்பதற்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்துவிட்டான். திராட்சை பழத்தை ஊறவைத்து, புளிக்கவைத்து, மண்ணுக்குள் புதைத்துவைத்து எப்படி எல்லாமோ அதை தயாரித்திருக்கிறார்கள். தாங்கள் தயாரித்த ஒயினோடு, தேனையும் கலந்தும் கிரேக்கர்கள் பருகியிருக்கிறார்கள். இப்படி ‘கலந்து’ சாப்பிட்டால் அறிவுவிருத்திபெறும் என்று ஆதிகாலத்து ஐரோப் பியர்கள் நம்பினார்கள். அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேனை மூலப்பொருளாகக் கொண்டு ஒருவகை ‘பீர்’ தயாரித்து பருகி மக்கள் குஷியடைந்திருக்கிறார்கள்.

    சரித்திரத்தில் இடம்பிடித்த பேரரசர்களில் ‘ருசித்து மகிழ்ந்தவர்’ என்று பெயரெடுத்தவர், பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயி. புதிது புதிதான உணவு வகைகளை ருசித்துக்கொண்டே இருப்பது இவர் வழக்கம். சுவைமிகுந்த உணவுகள் உலகில் எங்கெல்லாம் கிடைக்கும் என்பதை இவருக்கு சொல்லவே ஒரு குழு இயங்கி வந்திருக்கிறது. புதிய உணவு பற்றிய தகவல் கிடைத்த மறுநாளே அந்த நாட்டிற்கு தனது சமையல்கலை நிபுணர்களை அனுப்பி அதை கற்று வந்து, தனக்கு தயார் செய்து தரும்படி பதினான்காம் லூயி சொல்வார்.

    இவரது நாக்கை சுவையால் கவர்ந்த சமையல்கலை நிபுணர்கள் ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரியா, நெதர்லாந்து, பின்லாந்து, இத்தாலி என்று சுற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இவர் தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 150 மதுவகைகளை சுவைத்திருக்கிறார். இன்று உலகம் முழுக்க பரவி இருக்கும் கலந்து குடிக்கும் ‘காக்டெயில்’ கலாசாரம் இவர் காலத்தில்தான் உதயமாகியிருக்கிறது. இத்தாலிக்கு ஆள் அனுப்பி, விஸ்கி தயாரிப்பு கலையை கற்றுவரச் செய்து, தன் நாட்டில் சொந்தமாக மது தயாரிப்பு ஆலையையும் இவர் நிறுவியிருக்கிறார்.

    உலகின் தலைசிறந்த மனிதர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவருக்கும் பசி, தாகம், மோகம் போன்ற உணர்வுகள் இருக்கின்றன. இவற்றில் எப்போதும், எல்லா காலகட்டத்திலும் இருந்து கொண்டிருப்பது பசிதான். மனிதர்கள் தினமும் இரு முறையாவது சாப்பிட்டாக வேண்டும். உடல் இயக்கத்திற்கு உணவே ஆதாரமாக இருக்கிறது. அதே நேரத்தில் பசியைப் போக்க மனிதனுக்கு ருசியும் தேவைப்படுகிறது. அந்த ருசியை மனிதன் தேடத் தொடங்கியதால் உலகில் பல்லாயிரக்கணக்கான உணவு வகைகள் தோன்றி விட்டன. இன்றும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. நல்ல உணவுகளைத் தேடி சுவையுங்கள்! ஆரோக்கியத்தை பேணுங்கள்! ஆரோக்கிய வாழ்க்கையே ஆனந்த வாழ்க்கை!

    கட்டுரை: முனைவர் ஜே.தேவதாஸ்

    (உணவியல் எழுத்தாளர்)

    சென்னை.
    தங்கம் மேல் பூசப்பட்ட உணவு பொருட்கள் பெரிய உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களில் பிரத்யேக உணவாக தயார் செய்யப்பட்டு தரப்படுகிறது.
    தங்கம் உலகம் முழுவதும் அனைவராலும் விலை மதிப்புமிக்க உலோகமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. நகைகள், பண சேமிப்பு, பல் மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் போன், விண்வெளி என பல துறைகளில் தங்கத்தின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வந்துள்ளது. அதுபோல் தற்போது தங்க இலைகள் (அ) பவுடர் போன்றவை உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    தங்கம் மேல் பூசப்பட்ட உணவு பொருட்கள் பெரிய உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களில் பிரத்யேக உணவாக தயார் செய்யப்பட்டு தரப்படுகிறது. இதற்கென பயன்படுத்தப்படும் தங்கம் என்பது 24 காரட் உண்ண கூடிய தங்க இலைகள் (அ) தகடுகள் என்றவாறு விற்பனை செய்யப்படுகின்றன. முன்பெல்லாம் வெள்ளி ரேக் என்பது உணவில் பயன்படுத்தப்பட்டன. அதுபோல் தங்க லீப் என்றவாறு உணவில் மேற்புற அழகை வெளிப்படுத்தும் வகையில் பூசப்பட்டு தரப்படுகின்றன.

    உண்ணக்கூடிய தங்க இலை

    உண்ணக்கூடிய தங்க இலை தங்க ரேக் (அ) இலை என்பது பெரும்பாலும் உணவுகளின் மீது அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட், ஐஸ்கிரீம், டெரெட், கப்கேப் போன்றவைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த தங்க இலைகள் தூய்மையான தங்கத்தில் மெல்லிய அளவில் அதாவது காகித தடிமனின் சுழற்றப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதனை முற்றும் உண்ண கூடிய தங்க இலையாக உள்ளது. நமது உடல் செரிமான திறனுக்கு ஏற்றவாறு செரிக்கும் திறன் கொண்டுள்ளதால் இதனை சாப்பிட பயப்பட வேண்டியதில்லை. இதற்கென உள்ள விற்பனை பெட்டிகள் மீது உண்ணக்கூடியது (மீபீவீதீறீமீ) என்று பொறிக்கப்பட்டுள்ளதை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

    சிறு துகள்கள் மற்றும் காகிதம் போல் மெல்லிய வடிவில் கிடைக்கும் இந்த உண்ணக்கூடிய தங்க இலைகள், தங்க பிளேக்கல்கள் என்பது தனிப்பட்ட விற்பனை நிலையங்கள் பலவற்றில் கிடைக்கின்றன. சில உணவகங்கள் தங்க ரேக் பதித்த உணவுகளை அறிமுகம் செய்து மக்களை கவர்ந்து வருகின்றன. E 175 என்ற வாறு குறியீடு கொடுக்கப்பட்டு உள்ள உணவு பொருளாக தங்க இலைகள் உள்ளன.



    தங்க இலை மேற்பூச்சுடன் சில உணவுகள்

    மேற்கத்திய நாடுகள் விரும்பி உண்ணும் சில பிரபல உணவுகள் அதிக விலையுள்ளவாறு உண்ணக்கூடிய தங்க இலை மேற்பூச்சு மற்றும் முற்றிலும் தங்க இதழ் சுற்றப்பட்ட உணவுகளாக விற்பனைச் செய்யப்படுகின்றன. அவ்வப்போது உணவகங்கள் மக்களை கவர்ந்திழுக்க பெரிய அளவிலான காட்சி தங்க உணவுகளை தயாரித்து தருகின்றன. சில உணவகங்கள் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவுகளின் மீது சிறு அளவு தங்க இலை அழகுபடுத்தபட்டவாறு உணவுகளை தருகின்றன.

    நியூயார்க் நகரில் 666 யூரோ மதிப்புள்ள 6 தங்க இதழ் சுற்றப்பட்ட விலை உயர்ந்த பர்கர்-யை தயார் செய்து தந்தது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பிட்சாவில் தங்க இதழ் அலங்கரித்து டோரோண்டா நகர உணவகம் கடந்த சில வருடங்களாக விற்பனையே செய்து வருகிறது. இதன் விலை 108 யூரோ ஆகும்.

    ஒவ்வொரு நாட்டின் சில பிரபல உணவுகள் பல தங்க இதழ் பூச்சுடன் விற்பனைக்கு வருகின்றன. அதாவது சுஹி, பேஜல், லாஸாங்கனா, பேகன், கேன், காப்போசீனா, காட் பெர்ரி சாக்லேட், நம்மூர் தோசை என பல ரகங்கள் தங்க ரேக் பூசப்பட்ட உணவுகளாக விற்பனைக்கு வருகின்றன. இதனை உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி. உண்ணக்கூடிய தங்க இலைகள் பல நிறுவனங்களில் உணவுகளுடனும், தனிப்பட்ட தங்க பிளேக்களாகவும் விற்பனைக்கு தருகின்றன. அவற்றின் தரம் மற்றும் உண்மை தன்மை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

    இந்தியாவில் சில நட்சத்திர ஹோட்டல்களில் தங்க ரேக் அலங்கரிப்புடன் சில உணவு வகைகள் விழா காலங்களின் போது சிறப்பு விற்பனை செய்யப்படுகின்றன. ஆடம்பர உணவில் ஆர்வம் கொள்பவர்கள் வீட்டிலேயே கூட தங்க இலை பிளேர் உணவுகளை தயார் செய்து சாப்பிட முடியும். 
    ×