என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97071"
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டு வாடாவைத் தடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபடுகிறார்கள்.
பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அளிக்கும் தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைத்து இந்த சோதனை நடப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முதலில் கர்நாடகாவில் குமாரசாமி உறவினர், கட்சிக்காரர்களின் வீடுகளில் சோதனை நடந்தது. அதில் பல கோடி ரூபாய் சிக்கியது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் வருமானவரி சோதனை நடந்தது. அதில் ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் கிடைத்தது.
நேற்று மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் உதவியாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. அதில் ரூ.14 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இத்தகைய சோதனைகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வருவாய் துறை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.
அதில், “வருமானவரித் துறையினர், அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தும்போது கட்சி பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும். மேலும் யார் வீட்டில் சோதனை நடந்தாலும் நடுநிலையை கடை பிடிக்க வேண்டும்“ என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
இது தவிர இனி சோதனை நடத்தும்போது தேர்தல் அதிகாரிகளிடம் உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. #ElectionCommission
ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் அமலாக்கத்துறை சார்பிலும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றப்பத்திரிகை நகல் கசிந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றப்பத்திரிகை நகல் முன்கூட்டியே கிடைத்தது எப்படி? என்பது குறித்து விளக்கம் கேட்டு செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மைக்கேலின் தொழில் பங்குதாரரும் மற்றொரு இடைத்தரகருமான டேவிட் நைஜல் ஜான் சிம் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அவரை வரும் மே 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.
இதற்கிடையே ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சூசன மோகன் குப்தாவின் விசாரணைக் காவலை, மே 9-ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதன் மூலம் அவர் நடத்தும் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.
கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வந்துள்ள செய்தி, புதிய செய்தி அல்ல. இது பழைய செய்தி ஆகும்.
6 மாதங்களுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவை தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை ஊர்ஜிதம் செய்துள்ளது. அவ்வளவு தான். இது நீதிமன்ற உத்தரவு அல்ல.
மேலும் இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே தான் இருக்கிறது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு கோர்ட்டு நிலுவையில் உள்ளது.
இவ்வாறு வக்கீல் கூறியுள்ளார். #INXMedia #KartiChidambaram #ED
மிக முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் (அகஸ்டாவெஸ்ட்லேண்ட்) வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.3,600 கோடி முறைகேடாக பணபரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டு, சமீபத்தில் உடல்நலக்குறைவால் ஜாமீன் பெற்றுள்ளார்.
கடந்த 6-ந்தேதி நீதிபதி அறையில் நடந்த ரகசிய விசாரணையில் சக்சேனா அப்ரூவராக விரும்புவதாக வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிபதி அரவிந்த்குமாருக்கு அனுப்பப்பட்டது. டெல்லி கோர்ட்டு இதுபற்றி அமலாக்கத்துறையின் கருத்தை கேட்டது. கோர்ட்டில் இன்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை. அது அமலாக்கத்துறைக்கு உதவியாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற 25-ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேரா மீது 2 வழக்குகள் இருக்கிறது.
லண்டனில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கியது, ராஜஸ்தான் மாநிலம் பீகானிரில் நிலம் வாங்கியது ஆகிய 2 வழக்குகள் வதேரா மீது அமலாக்கத்துறை பதிவு செய்து உள்ளது.
இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் 5 தினங்களில் ராபர்ட் வதேராவிடம் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. #RobertVadra #ED
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியாவின் மருமகனுமான ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்து வாங்கியதில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள இந்த குற்ற வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி சிறப்பு கோர்ட்டு ஏற்கனவே வதேராவுக்கு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி டெல்லி ஜாம்நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி வரை 4 முறை வதேரா ஆஜரானார். இதைத்தொடர்ந்து 5-வது முறையாக நேற்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் அவர் ஆஜரானார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களிடம் விசாரணை நடத்தி பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், வதேராவிடம் நேற்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வதேராவை கைது செய்வதற்கு கோர்ட்டு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #RobertVadra
புதுடெல்லி:
சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது சட்ட விரோத பண மாற்ற வழக்குகள் உள்ளன. இதுபற்றி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
முதலில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைக்க மறுத்தார். டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு வர சம்மதித்தார்.
கடந்த புதன்கிழமை முதன் முதலாக ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அன்று அவரிடம் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்கள். லண்டனில் சட்ட விரோதமாக வாங்கி உள்ள சொத்துக்கள் பற்றி ராபர்ட் வதேராவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
மறுநாள் வியாழக்கிழமையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ராபர்ட் வதேரா ஆஜரானார். அன்றைய தினம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அன்று ஆயுத புரோக்கர் சஞ்சய் பண்டாரியுடன் உள்ள தொடர்பு பற்றி தகவல் பரிமாற்ற ஆதாரங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
ராபர்ட் வதேராவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் அவர் கைப்படவே பதில் எழுதி தரவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் முதல் கட்டமாக நடந்த விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது.
இந்த நிலையில் நேற்று ராபர்ட் வதேரா விசாரணைக்கு அழைக்கப்பட வில்லை. ஆனால் இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருந்தது. அதை ஏற்று 3-வது நாளாக இன்று (சனிக் கிழமை) ராபர்ட் வதேரா ஆஜரானார்.
காலை 10.45 மணிக்கு அவர் தனது காரில் மத்திய டெல்லியில் உள்ள ஜாம்நகர் அவுஸ் அலுவலகத்துக்கு வந்தார். 11 மணிக்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள்.
லண்டனில் சொத்துக்கள் வாங்கியது எப்படி என்று அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்தினார்கள். அதற்கான பண பரிமாற்றம் நடந்தது பற்றியும் கேட்டனர். மேலும் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துக்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்டனர்.
ஆனால் தனக்கு லண்டனில் எந்த சொத்தும் இல்லை என்று ராபர்ட் வதேரா தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பான அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே வருகிற 12-ந்தேதி ராபர்ட் வதேரா ராஜஸ்தான் மாநிலம் சென்று ஜெய்ப்பூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நில மோசடி தொடர்பான வழக்கில் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நடத்தும் அடுத்தடுத்து விசாரணைகளால் ராபர்ட் வதேரா கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு வந்தபோது சற்று சோர்வாக காணப்பட்டார்.
இந்த நிலையில் ராபர்ட் வதேராவிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு ராகுல் கூறுகையில், “எனக்கு அதுபற்றி கவலையில்லை. ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தட்டும் அல்லது சிதம்ரபத்திடம் விசாரணை நடத்தட்டும் அதுபோல ரபேல் போர் விமான ஒப்பந்த மோசடி பற்றியும் விசாரணை நடத்த வேண்டும்.” என்றார். #RobertVadra
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்