search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97175"

    • தோசை, இட்லி, சப்பாத்திக்கு ருசியாக இருக்கும்.
    • உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மேனியின் அழகையும் பராமரிக்க உதவும்.

    தேவையான பொருட்கள் :

    கேரட் துருவல் - 1 கப்,

    கொள்ளு - 30 கிராம்,

    வெங்காயம் - 1

    பூண்டு - 4 பல்,

    காய்ந்த மிளகாய் -10,

    உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி,

    கடலைப் பருப்பு - 1 கைப்பிடி,

    கடுகு, கறிவேப்பிலை,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    வெங்காயத்தை அரிந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கேரட் துருவல், பூண்டை போட்டு வதக்கவும்.

    பின்பு மிளகாய் வற்றல், கொள்ளு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தனியாக வறுக்கவும்.

    அனைத்தும் சூடு ஆறியவுடன் வதக்கிய கலவையுடன் உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும்.

    இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும்.

    சுவையான கொள்ளு கேரட் துவையல் ரெடி.

    தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். பித்தம் மிகுந்து கல்லீரல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வெள்ளரியை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளரிக்காய் - 2
    தக்காளி - 1 சிறியது
    வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
    துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
    ப.மிளகாய் - 2
    உப்பு - ருசிக்கேற்ப  

    தாளிக்க :

    எண்ணெய்,
    கடுகு,
    கறிவேப்பிலை,
    பெருங்காயம்

    செய்முறை :


    வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும்.

    வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ப.மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதை அரைத்த கலவையில் கொட்டவும்.

    மனதுக்கும், வயிற்றுக்கும் நல்ல திருப்தியான உணர்வைக் கொடுக்கும் இந்தப் புது விதமான சட்னி.

    மாங்காய் சீசன் தொடங்கி விட்டது. இன்று மாங்காயை வைத்து புளிப்பான, காரசாரமான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாங்காய்  - 1,
    காய்ந்த மிளகாய் - 8,
    பச்சை மிளகாய் - 2,
    உ.பருப்பு - 1 கைப்பிடி,
    க.பருப்பு - 2 ஸ்பூன்,
    பெருங்காயம்   சிறு துண்டு,

    தாளிக்க

    எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.



    செய்முறை

    மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும உ.பருப்பு, க.பருப்பு இவைகளை பொன்னிறமாக வறுக்கவும்.

    பின்பு துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    சூடு ஆறியவுடன் மிக்சியில் போட்டு மாங்காய் கலவையை அரைத்த பின்னர் பருப்பு கலவையை சேர்த்து கரகரப்பாய் அரைத்து எடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கலந்து பரிமாறவும்.

    சுவையான மாங்காய் துவையல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எண்ணெய்ச் சத்து மிகுந்த அவகோடா பழத்தின் சதைப் பகுதியில் வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. இந்த பழத்தில் இன்று துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    அவகோடாவில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

    தேவையான பொருட்கள்

    அவகோடா பழக்கூழ் (தோல், கொட்டை நீக்கியது) - 1 கப்
    உளுந்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 8
    பூண்டு - 5 பல்
    புளி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு - அரை டீஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்



    செய்முறை

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வறுத்து ஆறியதும் அதனுடன் புளி சேர்த்துப் பாதி அரைபட்டதும் அவகோடா பழக்கூழைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு கடாயை அடுப்பில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    சத்தான சுவையான அவகோடா துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இன்று கொள்ளுவில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1/4 கப்
    கடலைப் பருப்பு - 1 டேபிள்
    ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    புளி - சிறு நெல்லிக்காய் அளவு
    வரமிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு…

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 3/4 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    அதே வாணலியில் கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து 3 நிமிடம் வறுத்து, பின் அதில் வறுத்த கொள்ளு சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ளபொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், கொள்ளு சட்னி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அஜீரண கோளாறு, வயிறு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி இந்த இஞ்சி பூண்டு சட்னியை செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - 10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு
    இஞ்சி - பெரிய துண்டு
    புளி - சிறு அளவு
    வரமிளகாய் -1
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

    தாளிக்க :

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை  :

    இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். பூண்டை தோலுரித்துக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் புளி, வரமிளகாயைச் சேர்த்து மிளகாய் கருகாமல் வறுத்து ஆறவைக்கவும்.

    நன்றாக ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். வதக்கும்போது இருக்கும் எண்ணெயையும் சேர்த்து அரைக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    சூப்பரான இஞ்சி பூண்டு சட்னி ரெடி.

    இட்லி - தோசை- சப்பாத்திக்கு பொருத்தமான சட்னி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலையை வைத்து எளிய முறையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு
    மிளகாய் வத்தல் - 5
    தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
    புளி - பாக்கு அளவு
    பூண்டு பற்கள் - 6
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுத்து கொள்ளவும்.

    பிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.

    அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.

    வறுத்த கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.

    ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.

    சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.

    இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாயுத் தொல்லை உள்ளவர்கள் அறுகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது. இன்று அருகம்புல் வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    அறுகம்புல் - 1 கட்டு,
    கருப்பு உளுந்து - 20 கிராம்,
    வெங்காயம் - 1,
    பூண்டு - 7 பல்,
    இஞ்சி - சிறு துண்டு,
    புளி - பாக்கு அளவு,
    காய்ந்தமிளகாய் - தேவைக்கு,
    உப்பு - தேவைக்கு,
    கடலை எண்ணெய் - 4 டீஸ்பூன்.



    செய்முறை :

    அறுகம்புல்லை கழுவி சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அறுகம்புல்லை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

    மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கருப்பு உளுந்தை வறுத்து எடுக்கவும்.

    அதே கடாயில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, காய்ந்தமிளகாய், புளி அனைத்தையும் வதக்கவும்.

    வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சி அல்லது அம்மியில் கரகரப்பாக அரைத்து எடுத்து சாதத்துடன் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான அறுகம்புல் துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. இன்று ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வல்லாரை கீரை - அரை கட்டு
    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - இரண்டு
    மிளகு - கால் டீஸ்பூன்
    புளி - ஒரு கோலி குண்டு அளவு
    எண்ணெய் - தேவைகேற்ப
    உப்பு - தேவைகேற்ப
    கடுகு - சிறிதளவு
    கறிவேப்பில்லை - சிறிதளவு



    செய்முறை :

    வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஆற வைக்கவும்.

    அதே கடாயில் சுத்தம் செய்த வல்லாரைக்கீரையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, புளி சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    பிறகு, கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேபில்லை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கிளறி இறக்கவும்.

    ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் இந்தத் துவையல் போட்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிற்று கோளாறுகளை குணமாக்கும். இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,
    புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, கறிவேப்பிலையை போட்டு வதக்கி கொள்ளவும்.

    அடுத்து காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனியாக வறுத்துக்கொள்ளவும்...

    அனைத்தும் நன்றாக ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, உப்பு, சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான இஞ்சி துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூலநோய் போன்றவை குணமாகும்.
    தேவையான பொருட்கள் :

    பிரண்டை இலை - 100 கிராம்,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பூண்டு - 3 பல்,
    மிளகு - 5,
    காய்ந்த மிளகாய் - 3,
    கறிவேப்பிலை - தேவையான அளவு,
    கொத்தமல்லி - தேவையான அளவு
    மஞ்சள், உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - சிறிதளவு



    செய்முறை  :

    பிரண்டை இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டை இலை, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.

    மிக்சியில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்து அதனுடன் வதக்கியவற்றையும், உப்பும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

    சூப்பரான சத்தான பிரண்டை இலைத் துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரையில் சட்னி, துவையல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக் கீரை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,
    காய்ந்த மிளகாய் - 4,
    புளி - கொட்டைப்பாக்களவு,
    உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    கடுகு - தாளிக்க,
    எண்ணெய் - சிறிது,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைபருப்பு, புளி, காய்ந்த மிளகாய் - 3 சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் கீரையை சேர்த்து வதக்கவும். கீரை சற்று வதங்கியதும் ஆறவைக்கவும்.

    நன்றாக ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், 1 காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான முருங்கைக் கீரை துவையல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×