search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97689"

    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். 

    முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜா கைப்பற்றி உள்ளார். 

    ஜெயில்

    இந்நிலையில், இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். 

    மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜி.வி.பிரகாஷின் டுவிட்டர் பதிவு
    ஜி.வி.பிரகாஷின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி மாறன் படத்தின் பாடல் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், இப்படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட 4 பாடல்கள் உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். விரைவில் மாறன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் `வாட்ச்மேன்' படத்தின் விமர்சனம். #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde
    ஜி.வி.பிரகாஷ் ஸ்டன்ட் சில்வாவிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார். மறுபுறம் ஜி.வி.பிரகாஷ், சம்யுக்‌தா ஹெக்டே இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் பிடிவாதத்தால், சம்யுக்தாவை ஜி.வி.பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

    அடுத்தநாள் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுவதாக கடன் கொடுத்தவர்கள் மிரட்டுகிறார்கள்.



    இதையடுத்து வேறு வழி தெரியாமல் பங்களா ஒன்றில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு ஒரு நாயிடம் மாட்டிக் கொள்கிறார். நாய் அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சுமனை கொல்வதற்காக மர்ம கும்பல் ஒன்று அந்த வீட்டிற்கு வருகிறது.

    கடைசியில், அந்த வீட்டில் இருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா? அவருக்கு தேவையான பணம் கிடைத்ததா? அவரது நிச்சயதார்த்தம் நடந்ததா? சுமனை கொல்ல வந்தவர்கள் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே வாட்ச்மேனின் மீதிக்கதை.



    ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த படத்தில் நாய்க்கு பயந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு அதிகளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் காட்சிகளில் அழுத்தமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

    யோகி பாபு காமெடி ஆங்காங்கு எடுபடுகிறது. சுமன் அனுபவ நடிப்பையும், ராஜ் அர்ஜூன், ரவி பிரகாஷ், சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.



    காமெடி கலந்த த்ரில்லர் கதையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய். திரைக்கதை ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்ந்தாலும் ஆங்காங்கு தொய்வு இருப்பது போல் தோன்றுகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு வீட்டில் ஒருநாள் நடக்கும் சம்பவங்களை வைத்து கதையை நகர்த்துவது என்பது எளிதில்லை. அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் விஜய்.

    ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் `வாட்ச்மேன்' பரபரப்பு. #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde

    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குழந்தைகளும் ரசிக்கும்படியாக உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Watchman #GVPrakashKumar
    தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படங்கள் சமீபகாலத்தில் குறைந்துவிட்டன. ஜீவி.பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் அதை பூர்த்தி செய்யும் என்று படக்குழு கூறுகிறது.

    விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாயிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. பழம்பெரும் நடிகை மனோரமா வாழ்ந்த வீட்டில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண் மொழிவர்மன் படம் பற்றி கூறும்போது ‘நாயை பார்த்து பயப்படும் ஒரு இளைஞனுக்கு ஒரு நாயுடன் இரவு முழுக்க தங்க நேரிடுகிறது.



    அந்த நாய் தன்னை காப்பாற்ற முயற்சிக்கிறது என்று தெரியாமல் அதை பார்த்து பயப்படுகிறான். இதுதான் கதை. படம் முழுக்க சிரிக்கவும் வைக்கும். திகில் அடையவும் வைக்கும். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகி இருக்கிறது. கோடை விடுமுறையின் தொடக்கமான 12-ந் தேதி ரிலீசாகிறது’. இவ்வாறு அவர் கூறினார். #Watchman #GVPrakashKumar

    ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ’சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி தமிழ் உள்ளிட்ட பிற மொழகளில் நடிப்பதற்காக உடம்பைக் குறைத்து வருவதாக கூறினார். #SarvamThaalaMayam #AparnaBalamurali
    ’எட்டு தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது ’சர்வம் தாள மயம்’ படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் அபர்ணா பாலமுரளி அளித்த பேட்டி:

    எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் என் கதாபாத்திரம் வலுவாக இருக்கவேண்டும். அப்படிதான் ’மகேஷிண்டே பிரதிகாரம்’, `எட்டு தோட்டாக்கள்’ தொடங்கி இப்போது `சர்வம் தாள மயம்‘ படம் வரை என்னோட கதாபாத்திரம் பார்த்துதான் படத்தை தேர்வு செய்து வருகிறேன்.

    ‘சர்வம் தாள மயம்’ படம் ஆசிரியர் - மாணவர் உறவை பேசும் படம். அதனால் என் கதாபாத்திரத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்காது. படம் முழுக்க வர மாட்டேன். சில காட்சிகளில் வந்தாலும் அது படத்துக்கு முக்கியமானதாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும்.



    மலையாள படங்களில் நடிக்கும்போது நான் எவ்வளவு குண்டாக, பப்ளியாக இருந்தாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என் இயக்குனர்களும் அதை பற்றி எதுவும் சொல்வது இல்லை. ஆனால், நான் தமிழ்ப் படங்களிலோ அல்லது வேற மொழிப் படங்களிலோ கமிட்டாகும்போது நான் உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்கு. அதுக்காகத்தான் தற்போது ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை குறைச்சிட்டு இருக்கேன். மலையாளத்தில் நிறைய பாடல்கள் பாடியிருக்கேன். தமிழில் `எட்டு தோட்டாக்கள்’ படத்தில் கூட பாடியிருக்கேன். அப்பா, அம்மா இரண்டு பேருமே இசைக்கலைஞர்கள் தான். எதிர்பாராமல்தான் நடிக்க வந்தேன். எப்பவுமே இசைக்குக்குதான் முன்னுரிமை கொடுப்பேன் என்றார். #SarvamThaalaMayam #AparnaBalamurali #GVPrakashKumar

    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படத்தின் ஒரு புரமோஷன் பாடலுக்காக காமெடி நடிகர் யோகி பாபுவுடன் நடிகை சாயிஷா நடனமாடுகிறார். #WatchMan #YogiBabu #Sayyeshaa
    நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசு பாடலுக்கு யோகி பாபுவுடன் நயன்தாராவும் நடித்தார். இந்த பாடலை வைத்து ஒரு விளம்பர வீடியோ தயாரித்து வெளியிட அந்த வீடியோ பெரிய வரவேற்பு பெற்றது.

    இதேபோல் யோகி பாபு நடிக்க ஒரு விளம்பர பாடல் உருவாகிறது. விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். இந்த படத்துக்கான விளம்பர பாடல் ஒன்று படமாக்கப்படுகிறது. இதில் விஜய் இயக்கிய வனமகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாயிஷாவுடன் இணைந்து யோகி பாபு ஆடுகிறார்.



    ராப் வகை பாடலான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தின் கதாநாயகி. சாயிஷா அடுத்து சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தவிர வேறு படம் அவர் கையில் இல்லாததால் விளம்பர பாடலுக்கு ஆடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். #WatchMan #YogiBabu #Sayyeshaa

    ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் முன்னோட்டம். #SarvamThaalamayam #GVPrakashKumar
    மைன்ட் ஸ்கிரீன் பிலிம் இன்ஸ்ட்டியூட் சார்பாக லதா மேனன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சர்வம் தாள மயம்’.

    ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும், நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.

    இசை - ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு - ரவி யாதவ், படத்தொகுப்பு - ஆண்டனி, பாடல்கள் - அருண்ராஜா காமராஜ், மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கலை இயக்குநர் - ஜி.சி.ஆனந்தன், ஆடை வடிவமைப்பு - சரஸ்வதி மேனன், ஒலி வடிவமைப்பாளர் - விஜய் ரத்தினம், இணை தயாரிப்பாளர் - பிராங்க் பிரியாட், தயாரிப்பாளர் - லதா மேனன், இணை இயக்குநர் - விஜய் பாலாஜி, எழுத்து, இயக்கம் - ராஜீவ் மேனன்.



    ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி படம் முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி உருவாகி இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    படம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

    தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ், மணிரத்னம் வசனம் எழுதிய படத்தில் தனசேகரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். #Maniratnam #GVPrakash
    இசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார்.

    பாலா, ராஜீவ் மேனன், வசந்தபாலன் என்று முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் ஜீ.வி.பிரகாஷ் அடுத்து தனசேகரன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.



    இந்த படத்துக்கு வசனம் எழுத இருக்கிறார் மூத்த இயக்குனர் மணிரத்னம். முன்னதாக இந்த படத்தையே மணிரத்னம் இயக்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் பட இயக்கத்தில் மணிரத்னம் பிசியாக இருப்பதால் வசனம் மட்டும் எழுதுகிறார். 96, சீதக்காதி படங்களின் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Maniratnam #GVPrakash
    ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
    ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    முன்னதாக படத்தை டிசம்பர் 28-ல் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் நீடித்ததால் படம் பிப்ரவரிக்கு தள்ளிப்போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

    ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
    ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருப்பதாவது,


    `பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா.
    அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் - சர்வம் தாளமயம்.
    பிப்ரவரி 2019 முதல்'

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

    ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
    ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். 


    படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 28-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு தரப்பு ட்விட்டரில் அறிவித்துள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

    தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக வைத்து சர்வம் தாளமயம் படம் தான் உருவாகி இருக்கிறது என்று நடிகர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார். #SarvamThaalaMayam #GVPrakashKumar
    கோவையில் சர்வம் தாளமயம் திரைப்பட குழுவினர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடிகரும், இசையமைப்பாளரருமான ஜி.வி.பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் சர்வம் தாளமயம். சமூகத்ததில் அழிந்து வரும் கலை குறித்த படமாக இது அமைந்துள்ளது.

    மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாரின் பாடல் இதில் ஒன்று உள்ளது. கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் ஆன சின்ன முயற்சி செய்தேன். எனது இந்த முயற்சி ஆயிரம் பேரை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை. புயலால் ஏற்பட்ட பேரழிவு அதிகமாக இருக்கின்றது. அதிக இடங்களில் தென்னை, வாழை மரங்கள் விழுந்ததில் அப்பகுதியே உருக்குலைந்துள்ளது வேதனை அளிக்கிறது.



    அரசு மட்டும் முயற்சித்தால் போதாது, எல்லோரும் சேர்ந்து பாதிப்பை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். இன்னும் அதிகமான முயற்சியினை அரசுடன் சேர்ந்து அனைவரும் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினேன்.

    மின்சாரத்துறை ஊழியர்கள் இரவும், பகலும் பாராமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலை செய்து வருவது பாராட்டக் கூடியது. அரசியலில் வருவதற்கு என்ற எண்ணம் உண்டா? என்ற கேள்விக்கு அரசியலுக்கு வரும் அளவுக்கு வயதும் அனுபவமும் என்னிடம் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நடிகை அபர்ணா பாலமுரளி, இயக்குநர் ராஜீவ்மேனன் ஆகியோர் உடன் இருந்தனர். #SarvamThaalaMayam #GVPrakashKumar #AparnaBalamurali

    ×