என் மலர்
நீங்கள் தேடியது "விஷால்"
- விஷாலின் தங்கை கணவரான உம்மிடி கிரிட்டிஸ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
- 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும் நகைக்கடை அதிபர் உம்மிடி உதய்குமார்- உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் மகனான உம்மிடி கிரிட்டிஸ்க்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், வங்கிக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், விஷாலின் தங்கை கணவரான உம்மிடி கிரிட்டிஸ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் ரூ.5.5 கோடி கடன் பெற உடந்தையாக இருந்ததாகவும் ரூ.2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக கிரிட்டிஸ் இருந்துள்ளார்.
மேலும் மோசடி தொடர்பாக நில உரிமையாளர், கட்டுமான நிறுவனர், வங்கி அதிகாரிகள், கடன் வாங்கியவர்கள் என 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் விஷாலுடன் நாடோடிகள், பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநயா காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
- இது குறித்து நடிகை அபிநயா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஷாலும், நடிகை அபிநயாவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் இணைய தளங்களில் கடந்த சில தினங்களாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அபிநயா நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அபிநயா - விஷால்
தற்போது விஷாலுடன் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. விஷாலை ஏற்கனவே சில நடிகைகளுடன் இணைத்து பேசினர். பின்னர் அதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது. அபிநயாவுடனான காதல் உண்மையா? என்று வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

விஷால் - அபிநயா
இந்நிலையில் அபிநயா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நான் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் மனைவியாக நடித்து வருகிறேன். படப்பிடிப்புக்காக நாங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானதை வைத்து நாங்கள் காதலிப்பதாகவும், நிஜத்தில் எங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றும் வதந்திகளை பரப்பி உள்ளனர். இது பொய்யான தகவல்" என்று கூறி காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- நடிகர் விஷால் தன் குடும்பத்துடன் காசியில் தரிசனம் செய்துள்ளார்.
- இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

விஷால்
தற்போது இவர் கைவசம் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.
Dear Modiji, I visited #Kasi, Had a wonderful Darshan/Pooja & touched #HolyWater of #GangaRiver. God bless U for the transformation U hav done to the #Temple by renovating & making it look even more wonderful & easy for anyone to visit #Kasi, Hats off, Salute U@narendramodi
— Vishal (@VishalKOfficial) October 31, 2022
- நடிகர் விஷால் தன் குடும்பத்துடன் காசியில் தரிசனம் செய்தார்.
- இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்கள் உள்ளன.
நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

விஷால்
அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்புகிறது. அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.
இது பற்றி விஷால் கூறியதாவது, "நான் மட்டுமல்ல காசிக்கு யார் சென்று பார்த்தாலும் அங்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் ஆச்சரியப் படுவார்கள். அப்படித்தான் என் உணர்வுகளை நான் பதிவிட்டேனே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது" என்று கூறினார்.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
- இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

விஷால்
இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக விஷாலை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஷாலை லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து பேசி கதையும் சொல்லி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைதி பட பாணியில் கேங்ஸ்டர் படமாக இப்படம் தயாராக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நடிகர் விஷால் தன் குடும்பத்துடன் காசியில் தரிசனம் செய்தார்.
- இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்கள் உள்ளன.

விஷால்
நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி - விஷால்
அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.

பிரகாஷ் ராஜ்
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் அவரின் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "ஷாட் ஓகே... அடுத்து" என கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.
- நடிகர் விஷால் சமீபத்தில் காசிக்கு தரிசனத்திற்காக குடும்பத்துடன் சென்றார்.
- காசி குறித்து அவர் பகிர்ந்துள்ள அனுபவ பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தன் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

விஷால்
அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.

நரேந்திர மோடி
தொடர்ந்து நடிகர் விஷால் 'ஆன்மிக நோக்கத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது' என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் விஷாலின் பதிவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ''காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Glad that you had a wonderful experience in Kashi. https://t.co/e74hLfeMj1
— Narendra Modi (@narendramodi) November 2, 2022
- விஷால் சமீபத்தில் காசிக்கு தரிசனத்திற்காக குடும்பத்துடன் சென்று பின்னர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
- நன்றி தெரிவித்த விஷாலுக்கு பிரதமர் மோடி பதில் பதிவிட்டிருந்தார்.
தமிழ் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோவான நடிகர் விஷால் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுபற்றி கடந்த மாதம் ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது விஷாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால், ஒருவர் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தாலே அவர் அரசியலுக்கு வந்து விட்டதாக அர்த்தம். அதனால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். தீவிர அரசியலுக்கு வர இன்னும் காலமாகும் என்றார்.

குடும்பத்தினருடன் காசிக்கு சென்ற விஷால்
இந்நிலையில் காசிக்கு சென்ற விஷால் அங்கு செய்துள்ள புனரமைப்பு பணிகளை பார்த்து வியந்தார். இதற்காக பிரதமர் மோடியை பாராட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், "அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன். அற்புதமான தரிசனம்-பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களுக்கு தலை வணங்குகிறேன். வணக்கம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி
இவரின் இந்த பதிவுக்கு பிரதமர் மோடியும் பதில் அளித்திருந்தார். அவர் தனது பதிவில் 'காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி அவர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததும் அவர் விஷாலுக்கு பாராட்டு தெரிவித்ததும் அரசியல் தளத்தில் பரபரப்பானது. அவர் பா.ஜனதாவில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.

பிரதமர் மோடி - விஷால்
இதுபற்றி அப்போது விஷால் கூறும்போது, "நான் மட்டுமல்ல காசிக்கு யார் சென்று பார்த்தாலும் அங்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் ஆச்சரியப்படுவார்கள். அப்படித்தான் என் உணர்வுகளை நான் பதிவிட்டேனே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது" என்றார்.

விஷால்
இப்போது மீண்டும் அவர் பா.ஜனதாவில் இணையப் போவதாக தகவல் பரவி வருகிறது. பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி திண்டுக்கல் வருகிறார். அப்போது மோடி முன்னிலையில் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை விஷால் தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
- சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் இன்று இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்.
- பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
சென்னை மாத்தூரில் திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்து கொடுத்து இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை விஷால் மணமக்களுக்கு வழங்கினார்.

11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த விஷால்
அப்பொழுது பேசிய விஷால், 11 ஏழை ஜோடிகள் திருமணத்தை நடத்தி வைத்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 11 தங்கச்சிகளை மாப்பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. எனக்கு பட்டு வேட்டி, சட்டை கட்டுவது ரொம்ப பிடிக்கும். இதற்காக இந்த விழாவுக்கு நான் பட்டு சட்டையில் வந்துள்ளேன்.
படப்பிடிப்பு தளங்களில் எனக்கு பல்வேறு அடிகள் விழுந்தன. ஏதோ எனது மனதை பாதிக்கும் விதமாக சில சம்பவங்கள் நடைபெற்றன. எனக்கு மனதில் தோன்றியதை நான் உடனுக்குடன் செய்து விடுவேன். அது போல ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என எனது மனதில் தோன்றியது.

விஷால்
அதுபோல இன்று இந்த ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. ஏழைகளுக்கு செய்வது பெரும் பாக்கிய மாக கருதுகிறேன். இந்த 11 ஜோடிகளின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் படிப்புக்கு உதவி செய்வேன்.

விஷால்
இந்த இலவச திருமணங்கள் போன்று மற்ற மாவட்டங்களிலும் எனது இயக்கம் சார்பில் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்வேன். ஏழைகளின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. நடிகர் சங்க கட்டிடம் பணிகள் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைய உள்ளன. அந்த விழாவுக்கும் நீங்கள் எல்லோரும் வரவேண்டும். நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்து 500 கலைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்காக நான் பாடுபட்டு வருகிறேன். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி.

விஷால்
நான் யாரிடமும் பிச்சை கேட்கும் பழக்கம் கிடையாது. ஆனால் ஒரு மாணவியின் படிப்புக்காக கல்லூரியில் பிச்சை கேட்டு அந்த மாணவியை உயர்தர கல்வி பெற வைத்து உள்ளேன். தற்போது அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அது எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. இவ்வாறு விஷால் பேசினார்.

குடும்பத்துடன் காசிக்கு சென்ற விஷால்
பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- திரைத்துறையின் அப்துல் கலாம் நான் அல்ல, நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றபின் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்கும்.

பிரதமர் மோடி - விஷால்
தாஜ்மஹாலை பார்த்தால் ஷாஜகானை தான் நாம் வியந்து பார்க்கிறோம். அதுபோல என்னுடைய காசி பயணம், அங்கு நான் பார்த்த விஷயங்களை என்னை வியக்க வைத்தது. அதனால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தேன். அதற்கு அவர் எனக்கு பதில் அளித்தது இன்னும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. இது அரசியல் கிடையாது. மனதார ஒரு விஷயத்தை, சாதாரண ஒரு குடிமகனாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதை பதிவு செய்தேன் பிரதமர் எனக்கு பதிலளித்தது மிகவும் சந்தோஷம். இவ்வாறு அவர் கூறினார்.
- திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு விஷால் திருமணம் செய்து வைத்தார்.
- இந்நிகழ்வில் மணமக்களுக்கு 51 சீர்வரிசை பொருட்களை விஷால் வழ்ங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் சில தினங்களுக்கு முன்பு மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் 11 ஏழை ஜோடிகளுக்கு விஷால் திருமணம் செய்து வைத்து 51 சீர்வரிசை பொருட்கள் வழ்ங்கினார்.

திருமணம் செய்து வைத்த விஷால்
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருவள்ளூர் மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் கண்ணனுக்கு விஷால் தங்க சங்கிலி அணிவித்தார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கு விஷால் தொடர்ந்து பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார்.

விஷால்
அந்த வகையில் தற்போது மிகவும் சிறப்பாக சமூக சேவை பணிகள் செய்த சென்னை மாவட்ட விஷால் மக்கள் நல இயக்க தலைவர் ராபர்ட், சென்னை மாவட்ட மக்கள் நல இளைஞர் அணி தலைவர் கருவாயன், வடசென்னை மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் சீனு, மாவட்ட செயலாளர் யுவராஜ், ராயபுரம் பகுதி தலைவர் அன்பு ஆகியோருக்கு விஷால் தங்க மோதிரம் வழங்கினார்.
- அண்மையில் காசி கோவிலுக்குச் சென்று வந்த விஷால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
- தற்போது தனது நண்பர்களுடன் மங்களூரு அருகே உள்ள மஞ்சுநாதர் கோவிலுக்குச் சென்று நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால், அண்மையில் காசி கோவிலுக்குச் சென்று வந்தார். அங்கு சென்ற போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததோடு, காசி நகரை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

விஷால்
விஷாலின் பதவிற்கு பிரதமர் மோடி பதலளித்து ட்வீட் செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.அதனை தொடர்ந்து அண்மையில் 11 ஏழைகளுக்கு நடிகர் விஷால் இலவச திருமணம் செய்து வைத்தார். அந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார்.

விஷால்
இந்நிலையில் நடிகர் விஷால் கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள மஞ்சுநாதர் கோவிலுக்குச் சென்றுள்ளார். தனது நண்பர்களுடன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த அவர், அங்குள்ள யானையிடம் ஆசீர்வாதம் பெறுவது, கோவில் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவளித்தது உள்ளிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
- வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் லத்தி.
- இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

லத்தி
'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் முதல் லிரிக் பாடலான 'தோட்டா லோடாக வெயிட்டிங்' வெளியானது. இந்நிலையில் லத்தி படத்தின் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுத, பாடகர்கள் ரஞ்சித் கோவிந்த் மற்றும் சுவேதா மோகன் பாடியுள்ளனர். ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம் என்ற வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.