என் மலர்
நீங்கள் தேடியது "slug 99216"
திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 170 பயணிகள் பயணித்தனர். விமானம் சென்னையை நெருங்கியபோது எஞ்சினில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதனால் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள் நாட்டு முனையம், வெளி நாட்டு முனையம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து தினந்தோறும் 470 விமான சேவை இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.
தற்போது உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே 70 முதல் 80 பயணிகள் வரை பயணம் செய்யும் சிறிய விமானத்தை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து இயக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இது தொடர்பாக விமான நிலைய அத்தாரிட்டி அதிகாரிகள் கூறும்போது, தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்காக சிறிய பயணிகள் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பான ஆலோசனை முக்கிய அதிகாரிகள் தலைமையில் நடந்துள்ளது. இதுபற்றி இந்திய விமானப் படைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் இது தொடர்பான திட்டத்துக்கு அனுமதி அளித்ததும் உடனடியாக பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.
ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள மெக்ராபாத் விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு, ‘ஈரான் ஏர்’ நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் வந்தது. விமானத்தில் 100 பயணிகளும், விமான ஊழியர்கள் சிலரும் இருந்தனர்.
விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியபோது சற்றும் எதிர்பாரத வகையில் விமானத்தில் தீப்பிடித்தது. இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் பயத்தில் அலறினர்.
இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. விமானத்தில் இருந்து பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விமானத்தில் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது. #Iran #FlightFireAccident

இந்தியாவில் தொடர்ந்து வாலாட்டிக்கொண்டிருந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை நிர்மூலம் ஆக்குவதற்கு 12 ‘மிராஜ்-2000’ விமானங்கள பயன்படுத்தப்பட்டன.
இதன் பின்னணி குறித்து தெரிய வந்துள்ளது.
இந்த விமானங்கள் அதிநவீன வசதிகளைக் கொண்ட நான்காம் தலைமுறை விமானம்.
ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்குகிற பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்புதான், இந்த மிராஜ்-2000 விமானங்களும். இந்தியாவிடம் இந்த விமானங்களின் 3 அணிகள் உள்ளன. அவற்றில் சுமார் 50 விமானங்கள் உள்ளன.
இவை ஒற்றை என்ஜினை கொண்டவை. இந்த விமானங்கள் அதி நவீனமானவை.
இவற்றில் இருந்து ஏவுகணைகளை ஏவ முடியும். லேசர் வழிகாட்டும் குண்டுகளையும் போட முடியும்.
இவை, தாக்குதல் இலக்கை மிகத்துல்லியமாக சென்று நிர்மூலம் ஆக்கும் வல்லமை படைத்தவை ஆகும். ஏனென்றால், இந்த விமானங்களில் ‘தேல்ஸ் ஆர்.டி.ஒய். 2’ ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைதான் 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு வழிநடத்தக்கூடியவை. மேலும் நீண்ட தூர இலக்கை குறிவைப்பதிலும் இந்த ‘மிராஜ்-2000’ விமானங்கள் நிபுணத்துவம் பெற்றவை.
எனவே தான் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்த விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விமானங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. ரூ.20 ஆயிரம் கோடியில் தர மேம்பாடு செய்யப்பட்டுள்ளன.
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில்தான் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின.
இப்போது 48 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
அங்கு உள்ள மலையில் ஏறுவதற்காக 4 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். விமானி மற்றும் மலையேற்ற பயிற்சியாளர் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்தனர்.
இதற்கிடையே பயிற்சி விமானிகள் 3 சிறிய ரக விமானத்தில் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பயிற்சியாளர் விமானத்தில் இருந்தார். சற்றும் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் மாயமாகினர்.
விமான பயிற்சியாளர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து ஹாங்காங்குக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 250 பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது ஒரு பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே விமானத்தை கனடாவில் உள்ள நியூ பவுண்டுலேண்டு என்ற இடத்தில் விமானி அவசரமாக தரை இறக்கினார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து விமானம் புறப்பட தயாரானது. ஆனால் கடும் பனி கொட்டியது. தட்பவெட்ப நிலை மைனஸ் 30 டிகிரி ஆனது. எனவே விமானம் இயங்காமல் என்ஜின் கோளாறு ஏற்பட்டது.
விமானத்தின் கதவு பனிப்பொழிவால் உறைந்து விட்டது. இதனால் திறக்க முடியவில்லை. எனவே பயணிகளால் வெளியே செல்ல முடியவில்லை. பசி, பட்டினியால் அவதிப்பட்டனர். போர்த்திக்கொள்ள மெல்லிய கம்பளி மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் விமானத்துக்குள்ளேயே 16 மணி நேரம் கடும் குளிரில் நடுங்கியபடி அவதிப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து காபி மற்றும் நொறுக்கு தீனி வழங்கப்பட்டது. பொழுது விடிந்த பிறகு வெயில் பட்டதும் விமானத்தின் கதவு திறக்க முடிந்தது. அதன் பின்னர் பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேறி பஸ் மூலம் வேறு விமானத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மதியம் அவர்கள் மீண்டும் அமெரிக்காவின் நெவார்க் நகருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். #Canada #UnitedAirlines
சென்னையைச் சேர்ந்த அனந்தராமன் என்பவர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டு இருந்தார்.
விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அனந்த ராமனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் இருக்கையிலேயே சுயநினைவின்றி மயங்கினார்.
இதை பார்த்த சக பயணிகள் விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் விமானத்தில் டாக்டர் யாராவது பயணம் செய்கிறீர்களா? என்று கேட்டனர்.
விமானத்தில் பயணம் செய்த இந்தூரைச் சேர்ந்த டாக்டர் துபே, அனந்தராமனுக்கு சிகிச்சை அளித்தார்.
அப்போது அவருக்கு நாடி துடிப்பு இல்லாமல் இருந்தது. மேலும் மூச்சும் விடவில்லை. உடனே அனந்தராமனுக்கு கார்டியோபுல் மோனரி மறு இயக்க சிகிச்சை அளித்தார். சுமார் 1½ மணி நேர சிகிச்சைக்கு பிறகு அனந்தராமனின் நாடி துடிப்பு, முச்சு விடுதல் சீரானது.
இதையடுத்து விமானம் தரை இறங்கியதும் அனந்த ராமன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பயணியின் உயிரை காப்பாற்றிய டாக்டர் துபேவை சக பயணிகள், விமான ஊழியர்கள் பாராட்டினர். #Indoredoctor #AkhileshDubey