search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99996"

    • “2001-2006-ம் கல்வியாண்டில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • வெப்படை மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் பாஸ்கரன் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினார்.

    திருச்செங்கோடு,

    திருச்செங்கோடு அருகே உள்ள கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில் "2001-2006-ம் கல்வியாண்டில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பச்சைக்கல் முருகேசன் அவர்கள் தலைமை வகித்தார்.

    முன்னாள் தலைமை ஆசிரியர் செல்லப்பன் முன்னிலை வகித்தார். அவ்வருடங்களில் உதவி தலைமையாசிரியாக இருந்து, தற்போது வெப்படை மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் பாஸ்கரன் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினார்.

    முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியரும் , வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளரும், ஸ்ரீசத்ய சாயி மாவட்டத் தலைவருமாகிய சிங்காரவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் ரமணி, கோபு, காளியப்பன், சேகர், சாந்தி, கந்தசாமி, மகேஸ், மோகனா ஆகியோர் கலந்து கொண்டனர்! அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து ஒன்று கூட 'ஆனந்தப் பறவைகள் ' என்னும் அமைப்பு துவங்கப் பட்டது. மாணவி அனிஷா நன்றி கூறினார் . மாணவர்கள் தியானேஸ்வரும், அனிஷாவும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல் பட்டனர்.

    டெல்லியில் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று சந்தித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான ஆட்சியில் பிரதமர் மோடி நேற்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். மோடியின் பதவியேற்பு விழாவில் 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

    இந்நிலையில், மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று சந்தித்தார். 

    டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று சந்தித்து உரையாடினார். அப்போது, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடிக்கு சிறிசேனா தனது வாழ்த்துக்களை கைகுலுக்கி தெரிவித்தார்.

    இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது  குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    உலகக்கோப்பையில் பங்கேற்கும் 10 நாடுகளின் கிரிக்கெட் கேப்டன்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்தனர்.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை 11 இடங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. 

    இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் கடந்த வாரம் இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 

    இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத்துடன் 10 நாட்டு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் சந்தித்தனர். அவர்கள் ராணியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    தலைநகர் டெல்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சி 352 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, மோடி 30-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்ற தேர்தலில் வென்று பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில், பிரணாப்ஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என பதிவிட்டுள்ளார்.
    ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார்.
    புதுடெல்லி:

    ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மோடி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதா? அல்லது பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜெகன்மோகன் ரெட்டி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என்றும், டெல்லியில் உள்ள ஆந்திர பவன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.



    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு சால்வை போர்த்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 
    ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார்.
    வாஷிங்டன்:

    சமீபத்தில் நடைபெற்ற இந்திய பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானில் ஜூன் மாதம் 28, 29ம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். அப்போது அவர் இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்க உள்ள மோடியை சந்திக்கிறார் என தெரிவித்துள்ளது.

    தேர்தலில் அபார வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யாவை இன்று சந்தித்தார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    2018-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா (22) 410-வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். கேரள மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

    இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில், கேரளாவில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யாவை இன்று சந்தித்தார்.

    வயநாட்டில் உள்ள விருந்தினர் இல்லத்தில் ஸ்ரீதன்யா குடும்பத்தினரை வரவழைத்த ராகுல் காந்தி, அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.  அப்போது அவர் ஸ்ரீதன்யாவுக்கு பாராட்டு தெரிவித்தார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya #RahulGandhi
    பாராளுமன்ற தேர்தலில் பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், பாஜக அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்கா டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். #Congress #RahulGandhi #ShartrughanSinha
    புதுடெல்லி:

    பிரபல இந்தி நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சத்ருகன் சின்கா பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

    ஆனால் பா.ஜனதா மேலிடம் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. அவர் போட்டியிட்டு 2 முறை வென்ற பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை நிறுத்த பா.ஜனதா மேலிடம் முடிவு செய்தது. இதையடுத்து, தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து ஹோலி பண்டிகைக்கு பிறகு அறிவிப்பதாக சத்ருகன் சின்கா தெரிவித்து இருந்தார்.

    தற்போது ரவிசங்கர் பிரசாத் பாட்னா சாகிப் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சத்ருகன் சின்கா அதிருப்தி அடைந்துள்ளார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அதன் தலைவர் ராகுல் காந்தியை சத்ருகன் சின்கா இன்று சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், நவராத்திரி வரை பொறுத்திருங்கள். நல்ல முடிவை அறிவிக்க உள்ளேன் என தெரிவித்தார். அவர் ஏப்ரல் 6-ம் தேதி காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Congress #RahulGandhi #ShartrughanSinha
    இருநாள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு அதிபர் முகம்மது சோலியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #Maldives #IbrahimMohamedSolih
    மாலே:

    வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இருநாள் பயணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சோலியை சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, மாலத்தீவின் உள்துறை மந்திரி இம்ரான் அப்துல்லாவை சந்தித்தார்.



    மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகம்மது சோலி கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற பிறகு, இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அரசுமுறைப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #SushmaSwaraj #Maldives #IbrahimMohamedSolih
    அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். #ParliamentElections #VijayakanthEPS
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பிற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளது. இதனையடுத்து எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தியும், மலர்ச்செண்டு கொடுத்தும் நலம் விசாரித்தார் முதல்வர்.



    உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வருக்கு விஜயகாந்த் பொன்னாடை அணிவித்தார். பின்னர் இருவரும் தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர்  ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElections #VijayakanthEPS

    பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபினந்தனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே அபினந்தனின் பெற்றோரை விமானப்படை அதிகாரிகள் சந்தித்து பேசினர். #Abhinandan
    தாம்பரம்:

    பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர். சேலையூர் அருகே மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர் பகுதியில் அவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

    அபினந்தனின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் டெல்லியில் உள்ளனர். அபினந்தனுக்கு ஒரு சகோதரி உள்ளார். அபினந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் பரவியதால் மாடம்பாக்கம் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

    அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் அங்கு வரத்தொடங்கினர். முக்கியமானவர்களை தவிர பொதுமக்கள், செய்தியாளர்கள் என யாரையும் அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை.

    அபினந்தனின் பெற்றோரை சந்திக்க வந்த அவரது உறவினர் குந்தநாதன் கூறியதாவது:-

    வரதமான் என்னுடைய மாமா. அவரது மகன் தான் அபினந்தன். இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், திருப்பணாமுர். தற்போது மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அபினந்தனுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

    அபினந்தன் குடும்பத்துடன் டெல்லியில் தான் வசித்து வந்தார். அவரை மத்திய அரசு பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே கோரிக்கையையே மற்ற உறவினர்களும் வலியுறுத்தினர்.

    பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா ஆகியோர் அபினந்தன் பெற்றோரை சந்தித்து பேசினர். மேலும் இந்திய விமானப்படை அதிகாரிகள் அபினந்தன் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரை சந்தித்து விட்டு சென்றனர். மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனும் அவர்களை சந்தித்தார்.

    அபினந்தனின் பெற்றோர் டெல்லி புறப்பட்டு செல்வார்கள் என கூறப்படுகிறது. இந்தநிலையில் அபினந்தன் பெற்றோர் வசிக்கும் குடியிருப்பில் கதவுகள் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Abhinandan

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதல் குறித்த தகவல்களை தெரிவித்தார். #PulwamaAttak #PMModi #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    இந்தியாவில் தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி வந்த பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன் அடிப்படையில் இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தானுக்கு பறந்து சென்று அந்த முகாம்கள் மீது குண்டு வீசி அழித்தன. 350-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 10.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது வேறு யாரும் உடனிருக்கவில்லை.

    பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தி, அங்குள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது பற்றியும், அதற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

    அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரிடமும் விமானப்படையின் அதிரடி தாக்குதல்கள் குறித்து எடுத்துரைத்தார்.

    அத்துடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேரில் சந்தித்து பேசினார். அவர் பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி வந்துள்ளது பற்றி விரிவாக விளக்கினார். 
    ×