search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smoking awarness"

    • நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறது.
    • பெண்களும், குழந்தைகளும் நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும் பான்மையான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டின் தமிழ்நாடு புற்று நோய் பதிவேட்டு திட்டத்திற்கான அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 3500-4000 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறது. சென்னையில் வாழும் ஒரு லட்சம் பேரில் 8.1 பேர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர்.

    பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டம் 2008-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி நடை முறைப்படுத்தப்பட்ட நிலையில், அன்றிலிருந்து கடந்த மார்ச் 31-ம் நாள் வரையிலான பதினைந்தரை ஆண்டுகளில் 3.89 லட்சம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.6.83 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    பொது இடங்களில் புகை பிடிப்பதை தமிழக அரசு தடுக்கத் தவறியதால் தான், பெண்களும், குழந்தைகளும் நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகின்றனர். அலட்சியம், செயலற்ற தன்மை போன்ற தமிழ்நாடு அரசின் குற்றத்திற்கு அப்பாவி மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? இனியும் இந்தக் கொடுமை நீடிக்கக் கூடாது.

    எனவே, தமிழ்நாட்டின் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மிகக் கடுமையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்து கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புகை பழக்கம் காரணமாக உலகம் முழுவதும் தினமும் சுமார் 2,000 பேர்வரை இறக்கின்றனர்.
    • புகை பழக்கத்திற்கு செலவிடும் பணத்தை உங்களுக்கு சேமிக்க சொல்லுங்கள்.

    பல்லடம் :

    பல்லடத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

    பல்லடம் அரசு பெண்கள்மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பாக புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நலகல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.தலைமையாசிரியர் காஞ்சனா வரவேற்றார். புகையிலை பாதிப்புகள் குறித்து பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி பேசியதாவது:- புகையிலை பழக்கமுள்ள நபரை மீட்க கவுன்சிலிங் அவசியம். புகைப்பிடிப்பதன் மூலம் என்ன விளைவு ஏற்படுகிறது என்னென்ன நோய்கள் ஏற்படுகின்றன என்று இங்கு நீங்கள் கேட்டதை வீட்டில் உள்ளவர்களிடம் கூறுங்கள். புகை பழக்கத்திற்கு செலவிடும் பணத்தை உங்களுக்கு சேமிக்க சொல்லுங்கள். புகை பழக்கம் காரணமாக உலகம் முழுவதும் தினமும் சுமார் 2,000 பேர்வரை இறக்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார். பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள், அனைவரும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    ×