என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » southeast bay of bengal
நீங்கள் தேடியது "southeast bay of bengal"
தென்கிழக்கு வங்கக்கடலில் 2 காற்றழுத்த தாழ்வு உருவாகுவதால் நாளை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD #Rain #Bayofbengal
சென்னை:
வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சிகள் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
நேற்று குமரி முதல் தெற்கு ஆந்திரா வரையிலான தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகம் புதுவையில் பரவலாக மிதமான மழை பெய்து வருகி றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரையின் உள் பகுதிக்கு நகர்ந்து சென்று விட்டது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812051125080025_1_rain1._L_styvpf.jpg)
இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகிறது. முதலாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாளை (6-ந்தேதி) உருவாகிறது.
இதன் காரணமாக நாளை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9-ந்தேதி உருவாகிறது.
முதலாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் பகுதியையொட்டியே 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகிறது. இரண்டும் தென்கிழக்கு வங்கக்கடலில் அருகருகே நிலைகொண்டு இருக்கும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து மழையை எதிர்பார்க்கலாம் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தற்போது குமரி கடல் முதல் மேற்கு மத்திய வங்கக்கடல் வரையிலும், மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரத்தையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் வரை மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #IMD #Rain #Bayofbengal
வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சிகள் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
நேற்று குமரி முதல் தெற்கு ஆந்திரா வரையிலான தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகம் புதுவையில் பரவலாக மிதமான மழை பெய்து வருகி றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரையின் உள் பகுதிக்கு நகர்ந்து சென்று விட்டது.
இதனால் இன்று கடலோர பகுதிகளில் மழை குறைந்து உள் பகுதிகளில் மழை நீடிக்கிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812051125080025_1_rain1._L_styvpf.jpg)
இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகிறது. முதலாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாளை (6-ந்தேதி) உருவாகிறது.
இதன் காரணமாக நாளை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9-ந்தேதி உருவாகிறது.
முதலாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் பகுதியையொட்டியே 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகிறது. இரண்டும் தென்கிழக்கு வங்கக்கடலில் அருகருகே நிலைகொண்டு இருக்கும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து மழையை எதிர்பார்க்கலாம் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தற்போது குமரி கடல் முதல் மேற்கு மத்திய வங்கக்கடல் வரையிலும், மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரத்தையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் வரை மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #IMD #Rain #Bayofbengal
×
X