என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports stadium"

    • அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    ஒடிசாவை சேர்ந்த 95 வயதான மூதாட்டி சபித்ரி மஜ்ஹி, பல வருடங்களாக விளையாடுவதற்கு GROUND இல்லாமல் இருந்த கிராமத்து சிறுவர் மற்றும் இளைஞர்களுக்காக தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

    ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் சிங்கஜார் என்ற கிராமம் அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இந்த கிராமத்தில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி போன்ற மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    சிங்கஜார், விளையாட்டுகளை விரும்பும் கிராமமாக மாநிலத்தில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளது. இருந்தபோதிலும், கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    எனவே விளையாட தங்களுக்கென ஒரு மைதானம் இல்லாதது குறித்து குழந்தைகளின் ஏக்கத்தை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த விளையாட்டு ஆர்வலரான 95 வயது மூதாட்டி சபித்ரி மாஜி, விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக தனது ஐந்து ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது, நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் அரசாங்கம் ஒரு அரங்கம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோருகின்றனர்.

    தனது முடிவு குறித்து பேசிய மூதாட்டி சபித்ரி மாஜி ''எங்கள் கிராமத்தின் குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவர்களுக்கு வழங்கிய விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுகிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆரோக்கியமாக இருக்கிறார்கள்'' என்று தெரிவிக்கிறார்.

    முன்னதாக மூதாட்டி, கிராமத்தில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் கோவிலுக்கு நிலங்களை நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சபித்ரி மாஜியின் கணவர் நிலம்பர் மாஜி 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். 

    ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். #afganistan #Blastatstadium
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்கம் மேலோங்கி காணப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது. மேலும், அவ்வப்போது தலிபான்களின் தாக்குதலில் பொதுமக்களும் காவல் அதிகாரிகளும் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. அப்போது, பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 43-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக ஆளுனர் மாளிகையின் அதிகாரி அட்டல்லா கோக்யானி கூறுகையில், ராக்கெட்டுகள் மூலம் அடுத்தடுத்து தொடர்ந்து 3 முறை தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம், மாகாணத்தின் பாதுகாப்பு குறித்த செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாக கூறி, மாகாண ஆளுனர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் தலிபான்களை போன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. #afganistan #Blastatstadium
    ×