என் மலர்
நீங்கள் தேடியது "srh"
- முதல் 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்திற்கான வாய்ப்பை உருவாக்கியிருந்தது.
- ஆனால் கடைந்து ஐந்து போட்டிகளில் மழைக்காரணமாக ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது.
ஐபிஎல் 2024 சீசனில் லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தன. ஒவ்வொரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன. லீக் போட்டிகளின் கடைசி கட்டங்கள் வரை எந்தெந்த அணிகள் பிளேஆஃப் சுற்றுகளுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டே இருந்தது.
இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுகின்றன. ஒவ்வொரு அணியும் முதல் இடங்களை பிடிக்க விரும்பும். ஏனென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஒருமுறை தோல்வியடைந்தால் மறுமுறை மோத வாய்ப்பு கிடைக்கும்.
இந்தத் தொடரில் முதலில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை உறுதி செய்யும் என்ற நிலையில் இருந்தது. கைவசம் 5 போட்டிகள் இருந்ததால் எப்படியும் முதல் இடங்களில் ஒரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து நான்கு போட்டிகளில் அந்த அணிக்கு தோல்விதான் கிடைத்தது. கடைசியாக நேற்று கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2-வது இடத்திற்கு முன்னேறும் நிலை இருந்தது. ஆனால் மழையால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
நாளை செவ்வாய்க்கிழமை (21-ந்தேதி) பிளேஆஃப் சுற்றுகள் தொடங்குகின்றன. நாளை நடைபெறும் குவாலிபையர்-1ல் முதல் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2-வது இடம் பிடித்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி குவாலிபையர்-2ல் விளையாட வேண்டும். இது 24-ந்தேதி நடக்கிறது.
22-ந்தேதி புதன்கிழமை எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இதில் 3-வது இடம் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்- 4-வது இடம் பிடித்த ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறும்.
வெற்றி பெற்ற அணி 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் குவாலிபையர்-2ல் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.
- இந்த சீசன் முழுவதும் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்.
- இந்த சீசன் தொடங்கும்போது எங்களுடைய இலக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான்.
ஐபிஎல் 2024 சீசனின் குவாலிபையர்-2 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 175 ரன்கள் விளாசியது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 139 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-
இந்த சீசன் முழுவதும் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அணி வீரர்களுக்குள் சிறந்த வைப் உள்ளதை நீங்கள் பார்க்க முடியும். இந்த சீசன் தொடங்கும்போது எங்களுடைய இலக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான். அதை செய்துவிட்டோம்.
இது மொத்தமாக அணி உரிமையாளருக்குரியது. அவர்களில் 60 அல்லது 70 பேர் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் இதில் ஈடுபடுத்துகிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் ஒன்றை கடப்போம் என்று நம்புகிறேன்.
எங்கள் பலம் எங்கள் பேட்டிங் என்பது எங்களுக்கு தெரியும். இந்த அணியில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. புவனேஸ்வர் குமார், நடராஜன், உனத்கட் எனது வேலையை எளிதாக்குகின்றனர்.
மிடில் ஓவரில் அபிஷேக் சர்மா சிறப்பாக பந்து வீசினார். வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும்போது அவரை பயன்படுத்தினோம். அவர் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். 170 கடினமான இலக்கு. இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், வாய்ப்பு எங்களுக்குதான் என்பது தெரியும்.
இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
- 23 கோடி ரூபாய் கொடுத்து ஹென்ரிக் கிளாசனை தக்க வைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முடிவு
- அக்டோபர் 31ம் தேதிக்குள் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் வெளியிட வேண்டும்
ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம்.
இதனை குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION எனும் முறையிலும், வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக்கொள்ளும் RTM எனும் முறையிலும் தக்க வைக்கலாம். அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணி நிர்வாகமும் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ கேடு விதித்துள்ளது.
வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 23 கோடி ரூபாய் கொடுத்து தென்னாபிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிக் கிளாசனை தக்க வைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளாசனுக்கு அடுத்தபடியாக கேப்டன் பேட் கம்மின்சுக்கும் 18 கோடி ரூபாய் கொடுத்தும் அபிஷேக் சர்மாவுக்கு 14 கோடி ரூபாய் கொடுத்தும் தக்க வைக்கவும் ஐதராபாத் அணி முடிவு செய்துள்ளது.
மேலும், டிராவிஸ் ஹெட், நிதிஷ்குமார் ரெட்டியையும் தக்க வைக்க ஐதராபாத் அணி திட்டமிட்டு வருவதாகவும் RTM கார்டை பயன்படுத்தி இருவரையும் தக்க வைக்கலாம் என அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளது.
- ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி என 5 வீரர்களை அந்த அணி ரீடெய்ன் செய்துள்ளது. ஒரு ரிடம் கார்டுடன் ஏலத்திற்கு அந்த அணி செல்ல உள்ளது.
ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது. அதில் கிளாசென் ரூ.23 கோடி, பாட் கம்மின்ஸ் 18 கோடி, அபிஷேக் சர்மா ரூ.14 கோடி, டிராவிஸ் ஹெட் ரூ. 14 கோடி, நிதிஷ் ரெட்டி ரூ. 6 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி வசம் ரூ.45 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும். வெறும் 45 கோடியில் 18-20 வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
- என்னுடைய சிறுவயதில் நான் எந்த பாலிவுட் படமும் பார்த்ததில்லை.
- நான் ஷாருக்கானை சந்தித்தபோது அவரிடம் ஒரு ஆரா இருந்தது.
2025 ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.18 கோடி கொடுத்து தக்க வைத்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரிலும் ஐதராபாத் அணியின் கேப்டனாக கம்மின்ஸ் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
பேட் கம்மின்ஸ் 2014 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். முதன்முதலாக கொல்கத்தா அணிக்காக அவர் விளையாடினார்.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரான ஷாருக்கானை தான் முதன்முதலில் சந்தித்த போது அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய கம்மின்ஸ், "நான் சொல்லும் இந்த விஷயம் எனக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். நான் ஷாருக்கானை முதன்முதலில் சந்தித்தபோது அவர் யார் என்று எனக்கு தெரியாது.எனக்கு அப்போது 18 அல்லது 19 வயது இருக்கும் என்று நினைக்கிறேன், இப்போதுவரை நான் எந்த பாலிவுட் படமும் பார்த்ததில்லை.
நான் ஷாருக்கானை சந்தித்தபோது அவரிடம் ஒரு ஆரா இருந்தது. ஷாருக்கான் சிறந்த ஐபிஎல் உரிமையாளர்களில் ஒருவர்.பல ஐபிஎல் உரிமையாளர்கள் வீரர்கள் மீது அழுத்தங்களை சுமத்தும்போது, அவர் வீரர்களை சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாட வேண்டும் என்று கூறுவார்" என்று தெரிவித்தார்.
- கம்மின்ஸ், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட்டை தக்கவைக்க 75 கோடி ரூபாய்.
- இஷான் கிஷன், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, உனத்கட் போன்றோரை ஏலத்தில் எடுத்துள்ளது.
கம்மின்ஸ், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் ஆகியோரை தக்கவைத்துக் கொள்ள 75 கோடி ரூபாய் செலவிட்டாலும் 44.80 கோடி ரூபாயில் 15 பேரை வெற்றிகரமாக ஏலம் எடுத்துள்ளது சன்ரைசரஸ் ஐதாராபாத்.
இஷான் கிஷன், முகமது ஷமி, ஆடம் ஷம்பா, ஹர்ஷல் பட்டேல், ராகுல் சாஹர் என அமர்க்களப்படுத்தியுள்ளது.
பேட்டிங்கில் கிளாசன், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், அதர்வா டைடு உள்ளனர். வேகப்பந்து வீச்சில் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷல் பட்டேல், உனத்கட் முக்கிய நபர்களாக திகழ்வார்கள்.
கடந்த முறை 2-வது இடம் பிடித்த ஐதராபாத் இந்த முறை சாம்பியனுக்கு மல்லுகட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
சன்ரைசரஸ் ஐதாராபாத் அணி விவரம்:-
1. கம்மின்ஸ் (வெளிநாட்டு வீரர்), 2. அபிஷேக் சர்மா, 3. நிதிஷ் ரெட்டி, 4. ஹென்ரிச் கிளாசன் (வெளிநாட்டு வீரர்), 5. டிராவிஸ் ஹெட் (வெளிநாட்டு வீரர்), 6. முகமது ஷமி, 7. ஹர்ஷல் பட்டேல், 8. இஷான் கிஷன், 9. ராகுல் சாஹர், 10. ஆடம் ஜம்பா (வெளிநாட்டு வீரர்), 11. அதர்வா டைடு, 12. அபினவ் மனோகர், 13. சிமர்ஜீத் சிங், 14. ஜீஷன் அன்சாரி, 15. ஜெய்தேவ் உனத்கட், 16. பிரைடன் கார்சே (வெளிநாட்டு வீரர்), 17. அனிகெட் வர்மா, 18. அனிகேத் வர்மா, 19. எஷான் மலிங்கா (வெளிநாட்டு வீரர்), 20. சச்சின் பேபி.
- இங்கிலாந்து வீர்ர கார்ஸை ஏலத்தில் எடுத்திருந்தது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது காயம் ஏற்பட்டதால் விலகியுள்ளார்.
ஐ.பி.எல். 2025 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சிகளை தொடங்கியுள்ளன. கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்ஸை ஏலம் எடுத்திருந்தது.
இவர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது அவரது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவின் வியான் முல்டரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 75 லட்சம் ரூபாய்க்கு மாற்று வீரராக எடுத்துள்ளது.
முல்டர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 18 டெஸ்ட், 25 ஒருநாள், 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மார்ச் 23-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னை அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்து விடும். முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
சென்னை அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து ஐதராபாத், பெங்களூரு அணிகளிடம் தோல்வி கண்டது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கேப்டன் டோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டோனி இதுவரை 314 ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ளார். ‘டாப்-3’ பேட்ஸ்மேன்களான ஷேன் வாட்சன் (147 ரன்), அம்பத்தி ராயுடு (192 ரன்), சுரேஷ் ரெய்னா (207 ரன்) ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாதது சென்னை அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது.

ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (517 ரன்கள்), பேர்ஸ்டோ (445 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் கலக்கி வருகிறார்கள். உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணியில் இடம் பிடித்து இருக்கும் இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பும் முன்பு ஐதராபாத் அணியை அடுத்த சுற்றுக்கு முன்னேற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் தான் சற்று பிரச்சினைக்குரியதாக உள்ளது. கடந்த 2 லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணி முறையே சென்னை, கொல்கத்தா அணிகளை எளிதில் வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் ஐதராபாத் அணி இந்த ஆட்டத்தில் களம் காணும். பந்து வீச்சில் ரஷித் கான், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
சென்னை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதுடன், முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முழு முனைப்பு காட்டும். இந்த சீசனில் சென்னை அணி உள்ளூரில் தோல்வியை சந்திக்காமல் 4 வெற்றியை தொடர்ச்சியாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் ஐதராபாத் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடர எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
சென்னை, ஐதராபாத் அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 8 முறையும், ஐதராபாத் அணி 3 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, ஷர்துல் தாகூர் அல்லது ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.
ஐதராபாத் சன் ரைசர்ஸ்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேவிட் வார்னர், பேர்ஸ்டோ, விஜய் சங்கர், யூசுப் பதான், தீபக் ஹூடா, ரஷித் கான், புவனேஷ்வர்குமார், ஷபாஸ் நதீம், கலீல் அகமது, சந்தீப் ஷர்மா. #IPL2019 #CSK #SRH #CSKvsSRH
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.
இந்த நிலையில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் ஆன்ட்ரூ டை, முருகன் அஸ்வின் நீக்கப்பட்டு முஜீப் ரகுமான், அங்கித் ராஜ்பூத் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் ஆர்.அஸ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினார்கள். பஞ்சாப் அணியினர் தொடக்கத்தில் சிறப்பான பந்து வீச்சு மற்றும் நேர்த்தியான பீல்டிங் மூலம் எதிரணிக்கு நெருக்கடி அளித்து ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்கள். 2-வது ஓவரில் முஜீப் ரகுமான் பந்து வீச்சில் பேர்ஸ்டோ (1 ரன்) கேப்டன் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து களம் கண்ட விஜய் சங்கர் 2-வது ஓவரின் கடைசி பந்தில் முதல் பவுண்டரியை விரட்டினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்னே எடுத்து இருந்தது. 10 ஓவர்களில் அந்த அணி 50 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 56 ரன்னாக இருந்த போது விஜய் சங்கர் (26 ரன், 27 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து களம் இறங்கிய முகமது நபி 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.
அடுத்து மனிஷ் பாண்டே, தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் நிலைத்து நின்று அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 15.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது. டேவிட் வார்னர் 49 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இந்த சீசனில் அவர் அடித்த 4-வது அரைசதம் இதுவாகும், மனிஷ் பாண்டே 15 பந்துகளில் 2 பவுண்டயுடன் 19 ரன் சேர்த்து முகமது ஷமி பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் களம் இறங்கிய தீபக் ஹூடா அதிரடியாக மட்டையை சுழற்றினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 62 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 70 ரன்னும், தீபக் ஹூடா 3 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முஜீப் ரகுமான், முகமது ஷமி, ஆர்.அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (16 ரன், 14 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ரஷித் கான் பந்து வீச்சில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால், தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். 13 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை கடந்தது. லோகேஷ் ராகுல் 34 பந்திலும், மயங்க் அகர்வால் 40 பந்திலும் அரைசதத்தை எட்டினார்கள்.
அணியின் ஸ்கோர் 132 ரன்னாக உயர்ந்த போது மயங்க் அகர்வால் (55 ரன், 43 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால்-லோகேஷ் ராகுல் இணை 114 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த டேவிட் மில்லர் (1 ரன்), மன்தீப் சிங் (2 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். 19.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் 53 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 71 ரன்னும், சாம் குர்ரன் 3 பந்துகளில் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 6-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.
நேற்றைய கடைசி நாள் அன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விக்கெட் கீப்பர் சகா, இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோடான், வெஸ்ட் இண்டீஸ் 20 கேப்டன் கார்லோஸ் பிராத்வைட் ஆகியோரை விடுவித்துள்ளது.

அதேநேரத்தில் ஓராண்டு தடையால் கடந்த சீசனில் விளையாடாத ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை தக்கவைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் விவரம்:-
1. பாசில் தம்பி, 2. புவனேஸ்வர் குமார், 3. தீபக் ஹூடா, 4. மணிஷ் பாண்டே, 5. டி நடராஜன், 6. ரிக்கி புய், 7. சந்தீப் ஷர்மா, 8. சித்தார்த் கவுல், 9. கோஸ்வாமி (விக்கெட் கீப்பர்), 10. கலீல் அஹமது. 11. யூசுப் பதான், 12. பில்லி ஸ்டேன்லேக், 13. டேவிட் வார்னர், 14. கேன் வில்லியம்சன், 15. முகமது நபி, 16. ரஷித் கான், 17. முகமது நபி, 18. ஷாகிப் அல் ஹசன்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:-
1. சச்சின் பேபி, 2. டான்மே அகர்வால், 3. விருத்திமன் சகா, 4. கிறிஸ் ஜோர்டான், 5. சகா, 6. கார்லோஸ் பிராத்வைட், 7. அலெக்ஸ் ஹேல்ஸ், 8. பிபுல் ஷர்மா, 9. மெஹிதி ஹசன்.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 2013-ல் இருந்து விளையாடி வந்த ஷிகர் தவான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு செல்கிறார். இதற்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணி விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, ஷபாஸ் நதீம் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கொடுக்கிறது.

தவானை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5.2 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. அதேவேளையில் டெல்லி டேர்டெவில்ஸ் விஜய் ஷங்கர், நதீம் ஆகியோரை தலா 3.2 கோடி ரூபாய்க்கும், அபிஷேக்கை 50 லட்சம் ரூபாய்க்கும் வாங்கியிருந்தது.
மும்பை:
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கோப்பை யாருக்கு?
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது தடவையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும் உள்ளன. சென்னை அணி 2010, 2011-ம் ஆண்டுகளிலும் , ஐதராபாத் 2016-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.
சென்னை அணியின் பேட்டிங்கும், ஐதராபாத் அணியின் பந்துவீச்சுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். சென்னை அணியின் பலமே பேட்டிங் தான். கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
ரஷீத்கான், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார் ஆகியோர் ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் முத்திரை பதிக்க கூடிய வர்கள்.
சென்னை அணியில் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீரர் நிகிடி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள். ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், தவான், மனீஷ்பாண்டே, யூசுப்பதான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணியிலும் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), வாட்சன், டுபெலிசிஸ், ரெய்னா, அம்பதி ராயுடு, பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங் அல்லது கரண் சர்மா, ஷர்துல் தாகூர், நிகிடி.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), விர்த்திமான் சஹா, ஷிகர் தவான், சகீப்-அல்-ஹசன், தீபக் ஹூடா, யூசுப் பதான், பிரத்வெயிட், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவூல், சந்தீப் சர்மா அல்லது கலீல் அகமது அல்லது பாசில் தம்பி.