என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRHvPBKS"

    • நான் சரியாக விளையாடாத போதும் அணி நிர்வாகமும், கேப்டன் கம்மின்சும் என் மீது நம்பிக்கை வைத்தனர்.
    • ஒட்டுமொத்த அணியும் என்னுடைய பெற்றோருக்காக காத்திருந்தது. அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற அபிஷேக் சர்மா கூறியாதவது:-

    நான் சரியாக விளையாடாத போதும் அணி நிர்வாகமும், கேப்டன் கம்மின்சும் என் மீது நம்பிக்கை வைத்தனர். எனக்கும், டிராவிஸ் ஹெட்டுக்கும் இந்த நாள் மிகவும் சிறப்பானது. ஆடுகளத்தில் இருந்த பவுன்ஸ் காரணமாக பின்புறம் சில ஷாட்டுகளை விளையாடினேன். ஒட்டுமொத்த அணியும் என்னுடைய பெற்றோருக்காக காத்திருந்தது. அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

    அணிக்குள் அதிகம் ஆலோசனையில் ஈடுபடவில்லை. எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்த போட்டி எனக்கு மிகவும் சிறப்பானது. தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன். இளம் வீரராக அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது மிகவும் கடிமனாக இருந்தது. யுவராஜ் சிங்குக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். அவருடன் நான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறேன். அவரது அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. சூர்யகுமார் யாதவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடனும் தொடர்ந்து பேசி வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
    • அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார்

    நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அத்துடன் அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

    போட்டி முடிந்த பின்பு அபிஷேக் சர்மாவின் கொண்டாட்டத்தை பஞ்சாப் அணியின் இணை நிறுவனர் ப்ரீத்தி ஜிந்தா Recreate செய்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருந்த ஐதராபாத் அணி 8 ஆம் இடத்திற்கு முன்னேறியது.
    • புள்ளிப்பட்டியலில் மும்பை 9ம் இடத்தில் உள்ளது

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருந்த ஐதராபாத் அணி 8 ஆம் இடத்திற்கு முன்னேறியது.

    இதனையடுத்து, தொடர் தோல்விகளால் துவண்டு கிடைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குச் சென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி 9ம் இடத்தில் உள்ளது.

    • பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்த போது ப்ரீத்தி ஜிந்தா மகிழ்ச்சியாகவும் இருந்தார்.
    • கடினமாக இலக்கை அசால்ட்டாக ஐதராபாத் அணி எட்டியவுடன் காவ்யா மகிழ்ச்சியாக காணப்பட்டார்.

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் இப்போட்டியை நேரில் கண்டு களித்தனர். பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்த போது காவ்யா வாடிய முகத்துடனும் ப்ரீத்தி ஜிந்தா மகிழ்ச்சியாகவும் இருந்தார்.

    கடினமாக இலக்கை அதிரடியாக ஆடி அசால்ட்டாக ஐதராபாத் அணி எட்டியவுடன் காவ்யா மகிழ்ச்சியாகவும் ப்ரீத்தி ஜிந்தா சோகமாகவும் காணப்பட்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது.
    • அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்ததுடன், அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

    பிரியான்ஷ் ஆர்யா 36 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 42 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    ஷ்ரேயஸ் அய்யர் 36 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 82 ரன்கள் குவித்தார். நேஹல் வதேரா 27 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்.

    ஐதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் முதல் பந்தில் இருந்து விளாசத் தொடங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 66 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் அணியின் 2வது தோல்வி இதுவாகும்.

    • முதலில் ஆடிய பஞ்சாப் அணி 143 ரன்கள் எடுத்தது.
    • மயங்க் மார்க்கண்டே 4 விக்கெட் எடுத்தார்.

    ஐதராபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 66 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சாம் கர்ரன் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் விளையாடுகிறது.

    ஐதராபாத் சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், உம்ரான் மாலிக், ஜேன்சன், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் என அறிவிப்பு.
    • 13 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வந்தார். ஒன்றிரண்டு போட்டிகளுக்குப் பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் துணைக் கேப்டனாக இருந்த ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் கர்ரனை கேப்டனாக பஞ்சாப் அணி நியமித்தது. துணைக் கேப்டனாக ஒருவரை அறிமுகம் செய்துவிட்டு, அவரை கேப்டனாக நியமிக்காமல் மற்றொரு வீரரான சாம் கர்ரனை நியமித்ததற்கு கிரிக்கெட் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    சாம் கர்ரன் தலைமையில் பஞ்சாப் அணி கடுமையாக போராடியது. ஆனால் வெற்றியை முழுமையாக பெறவில்லை. கொல்கத்தா அணிக்கெதிராக 262 இலக்கை எட்டி வரலாற்று சாதனைப் படைத்தது. ஆர்சிபி அணிக்கெதிராக கடந்த 9-ந்தேதி தோல்வியடைந்து பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. இதனால் 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

    கடந்த புதன்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான் ராயல் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றது. நாளை கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின்போது பஞ்சாப் அணி கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்படுவார் என பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும், ரோசோவ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்கள்தான் இடம் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. சாம் கர்ரன் இங்கிலாந்து அணிக்காக விளையாட சொந்த நாடு திரும்பியதாக தெரிகிறது.

    ×