என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRHvsGT"

    • முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. நிதிஷ்குமார் ரெட்டி 31 ரன்னும், கிளாசன் 27 ரன்னும், கம்மின்ஸ் 22 ரன்னும் எடுத்தனர்.

    குஜராத் சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சுப்மன் கில் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 49 ரன்னில் அவுட்டானார்.

    ரதர்போர்டு 16 பந்தில் 35 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3வது வெற்றியைப் பதிவு செய்தது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 4வது தோல்வி இதுவாகும்.

    • குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
    • ஐதராபாத் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஏழு மணியில் இருந்து டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மைதானத்தில் இன்னமும் மழை நீடிப்பதால் டாஸ் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.

    • குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
    • ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இன்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், டாஸ் போடப்படாமலேயே போட்டி கைவிடப்பட்டது. இந்த போட்டி கைவிடப்பட்டதை அடுத்து புள்ளிகள் அடிப்பைடையில் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது.

    முன்னதாக குஜராத் அணி விளையாட இருந்த போட்டி இதே போன்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து அந்த அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    ×