என் மலர்
நீங்கள் தேடியது "SRHvsMI"
- நடப்பு சீசனின் முதல் போட்டியிலேயே ஐதராபாத் 286 ரன்கள் குவித்துள்ளது.
- ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும்.
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினார். அவர் மட்டுமல்லாமல் டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார், கிளாசன் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவரில் 286 ரன்கள் குவித்தது.
ஐ.பி.எல். தொடரில் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் அதிக முறை 250 ரன்களுக்கு மேலான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது.
அதற்கு அந்த அணி தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா, ஹெட் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இவர்களையடுத்து இந்த சீசனில் இஷான் கிஷன் இணைந்துள்ளார். அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி உள்ளார். அவரையடுத்து நிதிஷ் ரெட்டி, கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அவர்கள் 300 ரன்களை எடுப்பது வெகு தூரம் இல்லை.
இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 300 ரன்களை எட்டும் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, ஒரு சின்ன கணிப்பு. ஏப்ரல் 17 அன்று ஐபிஎல்லில் முதல் 300 ரன்களைப் பார்ப்போம்.
யாருக்குத் தெரியும், அது நடப்பதைப் பார்க்க நான் கூட அங்கே இருக்கலாம் என கூறியுள்ளார்.
ஏப்.17-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதுகின்றனர்.
- ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
- ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களை குவித்தது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்றது. முன்னதாக ஆர்.சி.பி. அணி 263 ரன்களை குவித்தது ஐ.பி.எல். வரலாற்றில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இது இருந்தது. நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் டிராவில் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்சிர்ச் கிளாசன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

டிராவில் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களையும், அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்களையும், கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை பெற்றதை அடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு டிரெசிங் ரூமில் சிறப்பு பரிசுகளை வழங்கியது. அதன்படி ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது.
அளவில் பெரிதாக காட்சியளிக்கும் சங்கிலி தங்கத்தால் செய்யப்பட்டதாகவே இருக்கும் என்றும் அதன் விலை ரூ. 80 லட்சம் வரை இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.