என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "student drowning"
வடவள்ளி:
கோவை மருதமலை அடிவாரத்தில் தனியார் லாட்ஜ் உள்ளது. இங்கு 3 நீச்சல் குளம் இருக்கிறது. இந்த குளத்தில் குளிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு வடவள்ளி இந்திரா நகரை சேர்ந்த கோவை பூமார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் பெரியசாமி மகன் அன்புச்செல்வன் (17), அவரது நண்பர்கள் சுதிஷ், ஆதித்யா, அஸ்வின், கவின் பரிதி ஆகியோர் நீச்சல் குளத்திற்கு குளிக்க சென்றனர்.
அவர்கள் 7 அடி ஆழமுள்ள குளத்தில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது மாணவர் அன்புச் செல்வன் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர்.
இதனை கேட்டதும் நீச்சல் குளத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் குரும்ப பாளையத்தை சேர்ந்த தேவராஜ் ஓடி வந்து மாணவர் அன்பு செல்வனை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.
இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதனை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கதறி துடித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி பலியான மாணவர் அன்புசெல்வன், காவலாளி தேவராஜ் ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான அன்பு செல்வன் வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 பரீட்சை எழுதி உள்ளார். அவரது நண்பர்களும் பிளஸ்-1 எழுதி உள்ளனர்.
இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அருகே உள்ள அங்கேரிபாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் மூர்த்தி. பனியன் தொழிலாளி. இவரது மகன் அசோக் (11). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் அசோக் தனது நண்பர்களுடன் செட்டிப் பாளையம் வெங்கமேடு பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றான்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். அவன் தண்ணீரில் தத்தளித்தான். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங் கள் என சத்தம் போட்டான். அவனது நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
குட்டையில் மூழ்கி அசோக் இறந்தான். இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அசோக் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் நேற்று இரவு வரை தேடியும் உடலை மீட்க முடியவில்லை. இதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. அப்போது அசோக் உடல் சிக்கியது. அதனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்