என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students drown in river"

    • நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.

    நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 15-16 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.

    திடீரென நீர் மட்டம் உயர்ந்தபோது அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சாம்டோலியில் உள்ள போடார் குரு வளாகத்தில் வசிக்கும் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), மற்றும் ஆர்யன் சிங் (16) என்று அடையாளம் காணப்பட்டனர்.

    நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பொறியியல் மாணவர்களின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.

    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிகசர்லா பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஐந்து மாணவர்கள் நேற்று, அருகில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். 

    அப்போது அவர்களில் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து மற்ற மூன்று பேரும் ஆற்றுல் குதித்து அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நான்கு பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளை தொடங்கினர். இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களும் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 



    இதையடுத்து இன்று நான்கு பேரின் உடல்களையும் மீட்புப்படையினர் மீட்டனர். உயிரிழந்தவர்கள் கிருஷ்ணா சய்தன்யா ரெட்டி, ஸ்ரீநாத், ராஜ் குமார் பில்லா, பிரவீன் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார். 

    இன்ப சுற்றுலா சென்ற இடத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×