search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students of JC School"

    • சதுரங்க போட்டி–யில் இந்த பள்ளியின் 9-ம்வகுப்பு மாணவர் ஏ.அஜய் ஜோலூயிஸ் 2-வது இடம் பிடித்தார்.
    • அகாடமி இயக்குனர் பி.சாவித்திரி மற்றும் முதல்வர்பி.சுப்பிரமணி ஆகியோர் பாராட்டி, பரிசளித்தனர்.

    காங்கயம்:

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான தடகள போட்டி திருவண்ணாமலையில் நடந்தது. இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 64 மாணவர்கள் வட்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டனர். சிவன்மலை ஜேசீஸ் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் கே.லிங்கேஷ் 14-வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாநில அளவில் 4-வது இடம் பிடித்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார். மேலும் நாமக்கல் பிரைம் செஸ் அகாடமி நடத்திய சதுரங்க போட்டியில் இந்த பள்ளியின் 9-ம்வகுப்பு மாணவர் ஏ.அஜய் ஜோலூயிஸ் 2-வது இடம் பிடித்தார்.

    மேலும் மாவட்ட அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பி.சிவகாந்தஸ்ரூபன் 3-வது இடமும், 19 -வயதுக்கு உட்பட்ட டேக்வாண்டா போட்டியில் 12-ம் வகுப்பு மாணவர் எஸ்.கேசவன் 3-வது இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சி.பழனிச்சாமி, பொருளாளர் பி.மோகனசுந்தரம், அகாடமி இயக்குனர் பி.சாவித்திரி மற்றும் முதல்வர்பி.சுப்பிரமணி ஆகியோர் பாராட்டி, பரிசளித்தனர். 

    ×