என் மலர்
நீங்கள் தேடியது "suicide young men"
முத்துப்பேட்டை:
நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் காஜா மைதீன் (வயது 35). இவர் மனைவி பாரூக் பானு. இவர்களுக்கு முகமது இரியாஸ்(8) என்ற மகனும், அஜிகா(5) என்ற மகளும் உள்ளனர்.
காஜா மைதீன், மனைவி, குழந்தைகளுடன் முத்துப்பேட்டை பக்ரிவாடி தெருவில் வசித்து வந்தார். அங்குள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் காஜா மைதீன் தினமும் மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த காஜா மைதீன், மதுவில் விஷம் கலந்து குடித்தார். முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் இறந்து கிடந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுபற்றி முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து காஜா மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீதார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தேனி:
தேனி வீரபாண்டி போலீஸ் கோட்டத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவரது மகன் விக்னேஷ்குமார் (வயது 21). கடந்த சில வருடங்களாகவே தந்தை விக்னேஷ்குமாரை ராணுவத்தில் சேர வற்புறுத்தி வந்துள்ளார்.
இருப்பினும் தனக்கு ராணுவத்தில் சேர விருப்பம் இல்லை என்று தந்தையிடம் பல முறை தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் தனது தந்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் விரக்தியடைந்த விக்னேஷ்குமார் தோட்டத்துக்கு சென்று அங்குள்ள தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரையை தின்று விட்டு பின்னர் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த தந்தை கண்ணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் விக்னேஷ் குமாரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.