என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunil Gavaskar"

    • நீங்கள் போதை பழக்கத்தை விட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் ஏற்கனவே கூறியிருந்தார்.
    • வினோத் காம்ளி உடல் நலத்தை கருத்தில் கொண்டு போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் தொடக்க வீரராக இருந்தவர் வினோத் காம்ளி. சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது நண்பராக இருந்த வினோத் காம்ளி இந்திய அணிக்காக 104 சர்வதேச ஒருநாள் போட்டிகளும், 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

    திறமை வாய்ந்த வீரராக உருவெடுத்த வினோத் காம்ளி, போதை பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். இதன் காரணமாக வினோத் காம்ளிக்கு உடல் நலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தமக்கு உதவி தேவைப்படுவதாக வினோத் காம்ளி வெளிப்படையாக அறிவித்திருந்தார். இந்த சூழலில் வினோத் காம்ப்ளியின் நிலையைப் பார்த்த கவாஸ்கர் உங்களுக்கு உதவி செய்ய தான் தயாராக இருப்பதாகவும், எனினும் அதற்கு முதலில் நீங்கள் போதை பழக்கத்தை விட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    தற்போது வினோத் காம்ளி உடல் நலத்தை கருத்தில் கொண்டு போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார். இதனையடுத்து சுனில் கவாஸ்கர் நடத்தி வரும் சேம்ப்ஸ் என்ற அறக்கட்டளையிலிருந்து மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் வினோத் காம்ளிக்கு வழங்க முடிவெடுத்திருக்கிறார். இதேபோன்று வினோத் காம்ளியின் மருத்துவ செலவுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் தரவும் கவாஸ்கர் அறிவித்திருக்கிறார்.

    அவர் வினோத் காம்ளிக்கு உதவ முன்வந்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் கோடி கோடியாக சம்பளம் பெறும் சச்சின், கோலி போன்ற வீரர்கள் யாரும் வினோத் காம்ளிக்கு உதவ முன் வரவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்

    ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இப்போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "ரிஷப் பண்ட் ரன்களை குவிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு கேப்டனாக அவர் தங்கத்திற்கு நிகரானவர்" என்று புகழாரம் சூட்டினார்.

    இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது தடுமாற்றம் தொடர்கிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.
    • சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

    சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தனது துணை ஊழியர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் என்று கூறிய ராகுல் டிராவிட்டின் முன்மாதிரியை கவுதம் கம்பீர் பின்பற்றுவாரா என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    ஸ்போர்ட்ஸ்டார் இதழில் சுனில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், "2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனது சக துணை ஊழியர்களை விட அதிகமான பரிசுத்தொகை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். மேலும், தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.

    2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. ஆனால் மோர்னே மோர்கெல், திலிப் உள்ளிட்ட துணைப் பயிற்சியாளர்களுக்கு 50 லட்சம் மட்டுமே பரிசாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட் போல எந்த அறிவிப்பும் வெளியிட்டதாக தெரியவில்லை. அப்படியானால் ராகுல் டிராவிட் நல்ல ரோல் மாடலாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடித்தது அவுட்டானார்.
    • அப்போது நேரலையில் இருந்த சுனில் கவாஸ்கர் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என திட்டினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் தோனியையே மிஞ்சி சதத்தை அடித்துள்ள அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2024- 25 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ரிஷப் பண்ட் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

    மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த போது அவர் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடித்தது அவுட்டானார். அதைப் பார்த்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என்று நேரலையில் கடுமையாக விமர்சித்தார்.

    இந்திய அணி தடுமாறும் போது இப்படி விக்கெட்டை பரிசளித்தது உங்களுடைய இயற்கையான ஆட்டம் கிடையாது என்று அவர் ரிஷப் பண்ட்டை சாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலனாதையும் மறக்க முடியாது.

    இந்நிலையில் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என்று கவாஸ்கர் தம்மை திட்டியதையே கலாய்த்து ரிஷப் பண்ட் பேசியுள்ளார். விரைவில் துவங்கும் ஐபிஎல் தொடருக்காக அவர் ஏதோ ஒரு விளம்பரத்தில் நடிப்பதாக தெரிகிறது. அந்த விளம்பரத்தில் கவாஸ்கர் தம்மை திட்டிய ஸ்டுப்பிட் எனும் வார்த்தைகளை சிரித்த முகத்துடன் ரிஷப் பண்ட் மாற்றி ஜாலியாக பேசியுள்ளார்.

    சொல்லப்போனால் கவாஸ்கர் போலவே பேசுவதற்காக அவர் 2 - 3 முறை "ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட்" வெவ்வேறு ஸ்டைல்களில் பேசியுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • இந்திய அணி தனது பந்து வீச்சு குறித்து சிந்திக்க வேண்டும்.
    • ஹர்திக்கை 5-வது பந்து வீச்சாளராக பயன்படுத்தலாம்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவாரா? அல்லது ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழஙகப்படுமா? என்ற விவாதம் சென்று கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என இருவரையும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி தனது பந்து வீச்சு குறித்து சிந்திக்க வேண்டும். 2 சுழற்பந்து வீரர்கள் விளையாட வேண்டுமா? அல்லது ஒரு சுழற்பந்து வீரருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கலாமா என்று முடிவு செய்ய வேண்டும்.

    ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இணைந்து விளையாட முடிந்தால் நன்றாக இருக்கும். இப்படி நடந்தால் சூர்யகுமார் யாதவ் 4-வது வரிசையிலும், ரிஷப் பண்ட் 5-வது வரிசையிலும் ஹர்திக் பாண்ட்யா 6-வது வரிசையிலும், தினேஷ் கார்த்திக் 7-வது வரிசையிலும் விளையாடலாம். பேட்டிங் வரிசையும் வலுவாக இருக்கும்.

    ஹர்திக் பாண்ட்யா தற்போது நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். இதனால் அவரை 5-வது பந்து வீச்சாளராக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • ஷகீன்ஷா அப்ரிடி முழுமையாக பந்து வீச முடியாமல் போனது பாதிப்பை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தோல்விக்கு பிறகு தெரிவித்தார்.
    • பாகிஸ்தான் அணி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஷகீன்ஷா அப்ரிடி.

    நேற்றைய இறுதி போட்டியில் அவர் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹால்சை அவுட் செய்தார்.

    13-வது ஓவரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேரி புரூக்சின் கேட்சை பிடிக்கும் போது ஷகீன்ஷா அப்ரிடிக்கு காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் களத்தை விட்டு வெளியே சென்றார்.

    அவர் 2.1 ஓவர் தான் வீசி இருந்தார். எஞ்சிய 11 பந்துகளை ஷகீன் ஷா அப்ரிடியால் வீச முடியாமல் போனது. அவர் முழுமையாக பந்து வீச முடியாமல் போனது பாதிப்பை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தோல்விக்கு பிறகு தெரிவித்தார். ஷகீன் ஷா அப்ரிடி தொடர்ந்து பந்து வீசி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம் என்றும் அவர் கூறி இருந்தார்.

    பாபர் ஆசமுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். ஷகீன் ஷா அப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஷகீன்ஷா அப்ரிடிக்கு காயம் ஏற்படவில்லை என்றால் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருக்கும் என்று நான் கருதவில்லை. ஏனென்றால் அவர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை.

    பாகிஸ்தான் அணி 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளது. அவர்கள் 150 முதல் 155 ரன்கள் வரை எடுத்து இருந்தால் ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

    ஷகீன்ஷா வீசாத 10 பந்துகள் அவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு வேளை ஷகீன்ஷா வீசி இருந்தால் பாகிஸ்தானுக்கு கூடுதலாக ஒரு விக்கெட் கிடைத்து இருக்கும். ஆனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்.
    • 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும்

    வங்கதேசத்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா 1 -0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. டாக்கா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேச பவுலர்களின் திறமையான பந்து வீச்சில் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய அந்த அணிக்கு லிட்டன் தாஸ் 41, சாகிப் 29, ரஹீம் 18 என முக்கிய கிரிக்கெட் வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து சென்றனர். அதனால் 139/6 என தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணியால் இந்தியாவின் வெற்றி உறுதியான போது விஸ்வரூபம் எடுத்த மெஹதி ஹசன் நங்கூரமாக நின்று வெற்றிக்குப் போராடினார். அப்போது வங்கதேசம் 155/9 ரன்களில் இருந்த போது வெறும் 15 ரன்களில் இருந்த அவர் கொடுத்த அழகான கேட்ச்சை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டை விட்டார்.

    அதை பயன்படுத்திய ஹசன் 38* (39) ரன்கள் விளாசி முஸ்தபிசுர் ரஹ்மானுடன் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்துக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். முன்னதாக இப்போட்டியில் ராகுல் கேட்ச்சை விட்டது தான் தோல்விக்கு காரணமென்று நிறைய ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

    ஆனால் பேட்டிங்கில் 200 ரன்களை கூட எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் மொத்த பழியையும் அவர் மீது போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

    உண்மையாக அது தான் தோல்விக்கு காரணம் என்று நீங்கள் சொல்ல முடியாது. ஆம் அது கடைசி விக்கெட்டாக இருந்ததால் அதைப் பிடித்திருந்தால் போட்டி முடிந்திருக்கும் என்பதால் அதுவும் தோல்விக்கான காரணம் தான். ஆனால் பேட்டிங்கில் நீங்கள் எடுத்த 186 ரன்களையும் பார்க்க வேண்டும்.

    சொல்லப்போனால் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டு 136/9 என்ற நிலைமைக்கு இந்தியாவின் பக்கம் வெற்றியை கொண்டு வந்தார்கள். அப்போது மெஹதி ஹசன் கேட்ச் விட்ட அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அற்புதமாக செயல்பட்டு எதிரணியை அட்டாக் செய்து தைரியமான ஷாட்டுகளை அடித்து வெற்றி பெற வைத்து விட்டார். ஆனால் உண்மையாக இந்தியா 80 - 70 ரன்கள் குறைவாக எடுத்தது. ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்.

    ஏனெனில் ஓவருக்கு வெறும் 4 ரன்களை மட்டும் எடுங்கள் என்று நீங்கள் சொல்லும் போது தாமாகவே எதிரணிக்கு அழுத்தம் குறைந்து விடும். சொல்லப்போனால் அழுத்தம் இல்லாத போதிலும் அதிகப்படியான தடுப்பாட்டத்தை போட்டு வங்கதேசம் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும் என்று கூறினார்.

    அவர் கூறியதை கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் முடிவில் ஒப்புக்கொண்டார். சொல்லப்போனால் சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் இதே வங்கதேசத்துக்கு எதிராக எரிமலையாக வெடித்த லிட்டன் தாஸை அற்புதமாக ஃபீல்டிங் செய்து ரன் அவுட் செய்த ராகுல் தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இப்போட்டியில் கூட பேட்டிங்கில் 73 ரன்கள் எடுத்த அவர் நீண்ட நாட்களுக்கு முதல் முறையாக விக்கெட் கீப்பிங் செய்ததால் துரதிஷ்டவசமாக கேட்ச்சை தவற விட்டார் என்பதால் தோல்விக்கு அவர் மட்டும் காரணமல்ல என்பதே நிதர்சனம்.

    • அவருக்கு இந்திய அணியில் சில போட்டிகள் விளையாட வாய்ப்புக் கிடைத்தது.
    • உம்ரான் மாலிக் 140 மற்றும் 150 கிமீவேகங்களில் பந்துவீசி அசத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டே தனது அதிவேகப் பந்துகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் உம்ரான் மாலிக். இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் மெருகேறி பேட்ஸ்மேன்களை திணறவைத்து வருகிறார். இதையடுத்து அவருக்கு இந்திய அணியில் சில போட்டிகள் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. தற்போது வங்காள தேசம் அணிக்கான தொடரில் விளையாடி வருகிறார்.

    உம்ரான் பந்துவீச்சு குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

    சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்துக்குப் பிறகு இவரின் ஆட்டத்தை நான் ஆர்வமாக பார்க்கிறேன் எனக் கூறி அவரைக் கொண்டாடியுள்ளார். உம்ரான் மாலிக் 140 மற்றும் 150 கிமி வேகங்களில் பந்துவீசி அசத்தி வருகிறார்.

    • தெண்டுல்கர் 40 வயது வரை விளையாடினார். அதற்கான உடல் தகுதியோடும் இருந்தார்.
    • விராட் கோலியும் உடல் திறன் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருபவர்.

    புதுடெல்லி:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட்கோலி இலங்கை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 113 ரன்கள் எடுத்தார். திருவனந்தபுரத்தில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 166 ரன்கள் குவித்தார். இலங்கை தொடரில் 2 செஞ்சூரி அடித்து சாதித்தார்.

    சுமார் 1000 நாட்கள் வரை சதத்தை பதிவு செய்யாமல் தடுமாறி வந்த அவர் தற்போது பேட்டிங்கில் மிகவும் சிறப்பான நிலையில் திகழ்கிறார்.

    34 வயதான விராட்கோலி சர்வதேச போட்டிகளில் 74 சதங்களை அடித்துள்ளார். அதாவது டெஸ்டில் 27 சதமும், ஒருநாள் ஆட்டத்தில் 46 செஞ்சூரியும், 20 ஓவரில் 1 சதமும் அடித்துள்ளார்.

    அதிக சதங்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கும் தெண்டுல்கர் சாதனையை தொட விராட் கோலிக்கு இன்னும் 26 செஞ்சூரிகளே தேவை. தெண்டுல்கர் 100 சதங்கள் அடித்துள்ளார்.

    இந்த நிலையில் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தெண்டுல்கர் 40 வயது வரை விளையாடினார். அதற்கான உடல் தகுதியோடும் இருந்தார். விராட் கோலியும் உடல் திறன் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருபவர்.

    ஆண்டுக்கு 6 முதல் 7 சதங்கள் வரை விராட் கோலி பதிவு செய்தால் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் 100 சதம் என்ற மைல்கல்லை தொடுவார். அதற்கு அவர் 40 வயது வரை விளையாட வேண்டும். அந்த வயதில் அவர் விளையாடினால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • மார்னஸ் லபுஷேன் களத்திற்கு வந்ததுமே ஜடேஜாவின் பந்தில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார்.
    • அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்க்க காரணமாக அமைந்தார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தூர் ஆடுகளம் முதல் ஓவரிலிருந்தே ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது. இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடமுடியாமல் திணறி மளமளவென ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் வெறும் 109 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அறிமுக ஸ்பின்னர் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 197 ரன்கள் அடிக்க, 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 163 ரன்கள் மட்டுமே அடிக்க, 76 ரன்கள் என்ற எளிய இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி பெற்ற 88 ரன்கள் முன்னிலை தான் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதற்கு, ஜடேஜா வீசிய நோ பாலும் ஒரு காரணம். மார்னஸ் லபுஷேன் களத்திற்கு வந்ததுமே ஜடேஜாவின் பந்தில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். ஆனால் அது நோ பாலாக அமைய, லபுஷேன் தப்பித்தார். அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்க்க காரணமாக அமைந்தார்.

    அந்த ஒரு பந்துதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் பேசியதாவது:-

    ஜடேஜா வீசிய நோ பால் காரணமாக அதன்பின்னர் லபுஷேனும் கவாஜாவும் இணைந்து 96 ரன்களை சேர்த்தனர். இந்திய அணி மொத்தமாகவே 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    எனவே ஜடேஜா வீசிய அந்த ஒரு நோ பால் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவர் 5 அல்லது 6-வது வரிசையில் களம் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும்.
    • அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

    இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லோகேஷ் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யலாம் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். அவர் 5 அல்லது 6-வது வரிசையில் களம் இறங்கினால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும். 

    ஏனென்றால் ராகுல் கடந்த ஆண்டு இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக பேட்டிங் செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை தேர்ந்து எடுக்கும் போது லோகேஷ் ராகுலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப்பண்ட் விபத்தில் காயம் அடைந்தார். இதனால் அவர் இந்த ஆண்டு முழுவதும் எந்தவித போட்டியிலும் விளையாடமாட்டார். பண்ட் இடத்துக்கு கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அவரது பேட்டிங் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதனால் தான் அவர் இடத்தில் ராகுலை சேர்க்கலாம் என்று கவாஸ்கர் வலியுறுத்தி இருக்கிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்டில் தொடக்க வீரராக ஆடிய ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3-வது மற்றும் 4-வது டெஸ்டில் அவர் நீக்கப்பட்டார். அதோடு லோகேஷ் ராகுலின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. அவரது இடத்தில் இடம் பெற்ற சுப்மன்கில் தொடக்க வரிசையில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.

    தொடக்க வீரர் வரிசையில் சுப்மன்கில் நல்ல நிலையில் இருப்பதால் ராகுலை விக்கெட் கீப்பராக சேர்த்து 6-வது வீரராக களம் இறக்கலாம் என்ற யோசனையை கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

    • மும்பை அணியின் முக்கியமான குறை என்று பார்த்தால் சுழற்பந்துவீச்சு தான்.
    • ஸ்பின் காம்பினேஷன் சரியாக அமையாதது போன்று உள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாடலாம் எனக்கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்தாண்டு மிகவும் மோசமானதாக அமைந்தது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறினர். எனவே இந்த முறை நிச்சயம் கம்பேக் தர வேண்டும் என முணைப்புடன் உள்ளனர்.

    ஆனால் மும்பையின் தூண்களாக பார்க்கப்படும் பொல்லார்ட் ஓய்வு பெற்றுவிட்டார். இதே போல வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக விளையாடமாட்டார்.

    இந்நிலையில் இதெல்லாம் பிரச்சினையே இல்லை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    இந்தாண்டு ரோகித் சர்மா ஒரு ஸ்பெஷல் திட்டத்துடன் களமிறங்குவார் என நம்புகிறேன். அவரின் செயல்பாடுகள் நிச்சயம் கவனம் ஈர்க்கும். ரோகித்திற்கு உள்ள முக்கிய துருப்புச்சீட்டு ஜோஃப்ரா ஆர்ச்சர் தான். மும்பையின் பலமும் ஆர்ச்சர் என்று கூறலாம்.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக விக்கெட்கள் எடுக்கும் திறமை அவரிடம் உள்ளது. இடையில் ரன்ரேட்டை குறைப்பதற்கும், டெத் ஓவர்களில் எதிரணியை கட்டுப்படுத்துவதற்கும் சிறப்பாக செயல்படுவார். மும்பை அணியின் முக்கியமான குறை என்று பார்த்தால் சுழற்பந்துவீச்சு தான். ஸ்பின் காம்பினேஷன் சரியாக அமையாதது போன்று உள்ளது.

    என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    ×