என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunil Kumar"

    • வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சுனில் குமாருடன் சீனாவின் ஜியாக்சின் ஹுவாங் மோதினார்.
    • ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5-வது முறையாக சுனில் குமார் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி ஜோர்டன் நாட்டில் உள்ள அம்மான் நகரில் நடந்து வருகிறது. இதில் 87 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    87 கிலோ பிரிவில் காலிறுதியில் தஜிகிஸ்தானின் சுக்ரோப் அப்துல்கயேவை 10-1 என்ற கணக்கில் சுனில் குமார் வீழ்த்தினார். அரையிறுதியில் ஈரானின் யாசின் யாஸ்டியிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

    இதனையடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஜியாக்சின் ஹுவாங்கை எதிர் கொண்டார். இதில் சீனாவின் ஜியாக்சின் ஹுவாங்கை வீழ்த்தி சுனில் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5-வது முறையாக சுனில் குமார் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் தமன்னா, அக்‌ஷயா, நயனா, அபினய் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
    • 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் புஷ்ரா கான் வெள்ளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென் கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், இன்று நடந்த டெகாத்லான் பிரிவில் 7003 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதே போன்று பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் தமன்னா, அக்ஷயா, நயனா, அபினய் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.

    மற்றொரு 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் புஷ்ரா கான் வெள்ளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என தலா 12 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் 10 தங்கம் மற்றும் 17 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 14 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    • கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக உள்ளார்.
    • சுனில் குமாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பியது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் டோவினோ தாமஸ், கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக உள்ளார்.

    இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுனில்குமார் சந்தித்துள்ளார். மேலும் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட சுனில்குமார், அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

    இது தொடர்பாக திருச்சூர் மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சுனில் குமாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பியது.

    இதற்கு பதில் அளித்த சுனில்குமார், நடிகர் டொவினோ தாமஸ் தேர்தல் ஆணையத்தின் தூதர் என்பது தனக்குத் தெரியாது என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் இது போன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தது.

    ×