என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sureshgopi"

    • புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மேல்சபை எம்.பி.யான இவர் கடந்த அக்டோபர் மாதம் கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது ஒரு தனியார் டி.வி. பெண் நிருபரின் தோளில் தொட்டு பேசி உள்ளார். அந்த பெண் நிருபர் விலகிய போதும், மீண்டும் அவரை சுரேஷ் கோபி தொட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அந்த பெண் நிருபர், கோழிக்கோடு நடக்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தனது செயலுக்கு சுரேஷ் கோபி வருத்தம் தெரிவித்தார்.

    இருப்பினும் புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர். அதன்பேரில் சுரேஷ்கோபி, நடக்காவு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு சுரேஷ்கோபி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவில் அரசின் அனுமதியை ஐகோர்ட்டு கேட்டுள்ளது.

    • நாயனாரின் மனைவி சாரதா பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.
    • சுரேஷ்கோபிக்கு, சாரதா இனிப்பு வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாரதிய ஜனதா சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ்கோபி. மத்திய இணை மந்திரி பதவியேற்ற இவர், டெல்லியில் இருந்து கேரளா திரும்பியதும் கோழிக்கோடு தாலி கோவில், பழையாங்கடி மாடைக்காவு கோவில் மற்றும் பரசினிக்கடவு கோவில்களுக்குச் சென்றார்.

    தொடர்ந்து அவர், கண்ணூர் கல்லியசேரியில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், சி.பி.எம். தலைவருமான ஈ.கே.நாயனார் வீட்டுக்குச் சென்றார். அங்கு நாயனாரின் மனைவி சாரதா பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.

    சுரேஷ்கோபிக்கு, சாரதா இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அங்கு மதிய உணவு சாப்பிட்டார். இது தொடர்பாக சாரதா கூறுகையில், சுரேஷ்கோபி, நாயனாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். பலமுறை இங்கு வந்துள்ளார். கண்ணூர் வரும்போதெல்லாம், எனக்கு போன் செய்து அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் என கூறுவார். இப்போது அவர் பழைய சுரேஷ் இல்லை. மிகவும் பிசியாக இருக்கிறார். அவர் என்னை பார்க்க வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்றார்.

    • சுரேஷ் கோபியின் குடும்ப வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
    • திருட்டு போன பொருட்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி. இவர் கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதன் மூலம் கேரளாவின் முதல் பா.ஜ.க. எம்.பி. ஆனார். இதையடுத்து அவருக்கு மத்திய மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அவர் மத்திய பெட்ரோலிய-இயற்கை எரிவாயு துறை மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்து வருகிறார்.

    இந்தநிலையில் கொல் லத்தில் உள்ள மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் குடும்ப வீட்டில் திருட்டு நடந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து பொருட்களை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கொல்லம் இரவிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மத்திய மந்திரி சுரேஷ் கோபி வீட்டில் திருட்டு போன பொருட்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

    ×