என் மலர்
நீங்கள் தேடியது "SVe Shekher"
- சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை நேரடியாக சந்தித்து விளக்கமளிக்க தயார் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
- எதிர்மனுதாரராக புகார் அளித்த பெண் பத்திரிகையாளரையும் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து எஸ்.வி. சேகர் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை நேரடியாக சந்தித்து விளக்கமளிக்க தயார் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
இதையடுத்து எஸ்.வி.சேகரின் முறையீட்டை ஏற்று அவர் சரண் அடைவதற்கு அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தனது தரப்பு விளக்கமளித்து மன்னிப்பு கோர தயார் என எஸ்.வி.சேகர் கூறி உள்ளதால் சரணடைவதற்கான காலத்தை நீட்டுகிறோம் என்று தெரிவித்த நீதிபதிகள், எஸ்.வி.சேகர் சரணடைவதற்கான காலஅவகாசத்தை ஜூலை மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.
மேலும் எதிர்மனுதாரராக புகார் அளித்த பெண் பத்திரிகையாளரையும் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
- எஸ்.வி. சேகரின் செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
- விஷ ஊசி போட்டு டாக்டர் கொலை செய்வதுபோல் சீன் இருந்தால் டாக்டர்கள் மீது கோபம் கொள்வதா?
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 27-ந்தேதியன்று நாரதகான சபாவில் நடைபெற்ற நாடகத்தில் மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியும் நடித்தும் அவர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் அரங்கேற்றியதாக அவர் மீது புகார் எழுந்தது.
எஸ்.வி. சேகரின் இந்த செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.வி. சேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியது நான் இல்லை, நான் நடித்த எம்.எல்.ஏ. கதாபாத்திரம் தான் அப்படி பேசியது.
* வேறொருவர் எழுதிய வசனத்தை பேசிய நடிகனான என்னை இழிவுபடுத்துவது சரியா?
* விஷ ஊசி போட்டு டாக்டர் கொலை செய்வதுபோல் சீன் இருந்தால் டாக்டர்கள் மீது கோபம் கொள்வதா?
* பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக சினிமாவில் வசனமே வரவில்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.
- நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார்.
- அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.
பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.
அதன் காரணமாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு 1 மாத சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது வழக்கை எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 27-ந்தேதியன்று நாரதகான சபாவில் நடைபெற்ற நாடகத்தில் மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக அவர் பேசி உள்ளார்.
நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் அரசியல்வாதியாக நடிக்கிறார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக ஒரு பெண் பத்திரிகையாளர் வருகிறார். அந்த பெண் பத்திரிகையாளரை உட்காருங்க என்று அவர் சொல்கிறார். ஆனால் அங்கு நாற்காலிகள் எதுவும் இல்லை.
அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.
அவர் தன் தொடையை காண்பித்து எவ்வளவு இடம் இருக்கிறது. இந்த பத்திரிகைகாரங்களே ரொம்ப திமிர் பிடிச்சவங்கபா... இவ்வளவு இடம் இருக்கே... இங்கே உட்கார கூடாதா? என்று கூறுகிறார். அவருடைய இந்த செயல் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் உள்ளது.
இது தொடர்பாக சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
- சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
- தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.
சென்னை:
பா.ஜனதாவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர். கடந்த 2018-ம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுதிவைக்கிறேன். மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
- ஜெயலலிதா இருந்து இருந்தால் முதல் ஆளாக ராமர் கோவிலுக்கு சென்று இருப்பார் என அண்ணாமலை கூறினார்.
- சகோதரி ஜெயலலிதா ஒரு இந்துத்துவ வாதி என அழைப்பதை அவரே விரும்பமாட்டார்.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீவிரமான இந்துத்துவ வாதி என கூறினார்.
அண்ணாமலை கருத்துக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று பேட்டியில், மீண்டும் சொல்கிறேன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீவிரமான இந்துத்துவ வாதி. இந்துத்துவ என்பது ஒரு மதம் சார்ந்து கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வினருடன் விவாதிக்க தயார். இந்துத்துவா என்பது திரித்து சொல்லப்படுகிறது. இந்துத்துவா என்னவென்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா இருந்து இருந்தால் முதல் ஆளாக ராமர் கோவிலுக்கு சென்று இருப்பார் என கூறினார்.
ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கருத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் தளத்தில் அளித்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சகோதரி ஜெயலலிதா ஒரு இந்துத்துவ வாதி என அழைப்பதை அவரே விரும்பமாட்டார். சமுதாயத்தின் அனைத்து சாதி மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஒரு ஆன்மீக வாதியாக மத சார்பற்றவராகவே வாழ்ந்தவர்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
சகோதரி #DRJJAYALALITHA ஒரு இந்துத்துவவாதி என அழைப்பதை அவரே விரும்ப மாட்டார். சமுதாயத்தின் அனைத்து ஜாதி மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஒரு ஆன்மீகவாதியாக மதச்சார்பற்றவராகவே வாழ்ந்தவர். ஆண்டவர். pic.twitter.com/fGpLDbyTL2
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) May 27, 2024
- சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.
- சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சித்து ஒரு பதிவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடத்தின.
இதனிடையே எஸ்வி சேகருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்போது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு எதிராக தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒருமாத சிறை தண்டனையை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் இன்று உறுதி செய்துள்ளார். மேலும் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
பா.ஜனதாவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க.பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நடிகர் எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக தலித் விடுதலை இயக்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் தலித்பாண்டியன், கரூர் குற்றவியல் கோர்ட்டு எண்-2ல் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக வேண்டுமென எஸ்.வி.சேகருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் பலமுறை ஆஜராகாமல் இருந்து வந்தார். மேலும் வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததையடுத்து, அவருக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா கிறிஸ்டி, வருகிற 23-ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2018, ஜூலை 19-ந்தேதி முதல் 6 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடை உத்தரவை நீக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தலித் பாண்டியன் தொடர்ந்த வழக்கு விசாரணை வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி வழங்கக்கோரி போலீஸ் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.

பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு கரூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வழக்குகள் சம்பந்தமாக 6 வாரத்திற்கு கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிபதி, அவர் 6 வாரம் கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். அதை அவரது வக்கீல் கரூர் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.
இந்நிலையில் இன்று கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுப்பையா, அடுத்த மாதம் 15-ந்தேதி நடிகர் எஸ்.வி. சேகர் கரூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். #SVeShekher
நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான எஸ். வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எஸ்.வி.சேகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்ககத்தின் சார்பில் சேகரன் என்பவர் அம்பத்தூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று காலை நீதிபதி அனிதாஆனந்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக நடிகர் எஸ்.வி.சேகர் காலை 11 மணியளவில் அம்பத்தூர் நீதிமன்றத்துக்கு வந்தார். பின்னர் அவர் தனது வக்கீல்களுடன் ஆஜர் ஆனார்.
அப்போது எஸ்.வி.சேகர் தரப்பு வக்கீல்கள் கூறும் போது, இது தொடர்பாக பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. அனைத்தையும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரே வழக்காக விசாரிக்க மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவின் நகலை தாக்கல் செய்யும்படியும் எஸ்.வி.சேகரை அன்றும் ஆஜராகும்படியும் தெரிவித்தார். #SVeShekher
சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கோட்டையில் விநாயகர் சிலையை சேதப்படுத்தியவர்களை விட்டுவிட்டு பா.ஜ.க.வினர் கைது செய்யப்படுவதை கண்டித்து வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தாமிரபரணி புஷ்கரணி விழா சுமுகமாக நடைபெற அரசு அனைத்து ஆயத்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி நெல்லையில் உண்ணாவிரதம் நடக்கிறது.
அரசியல் தலைவர்களை கைது செய்வதில் அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறதா? என்பதை காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும். சர்ச்சைக்குரிய பேச்சில் இடம்பெற்றுள்ள குரல் தன்னுடையது அல்ல என்று எச்.ராஜா கூறியுள்ளார். கோர்ட்டில் வழக்காடி உண்மை இருக்கும் பட்சத்தில் அவர் வெளியே வருவார்.
பெட்ரோல், டீசல் விலை நிச்சயமாக குறைக்கப்படும். பஸ் கட்டணத்தை உயர்த்த முயற்சி செய்வதை விட பெட்ரோலுக்கான வாட் வரியை குறைக்க தமிழக அரசு முயற்சி செய்யலாம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர ஆதரவு தரலாம். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்கிறது.
ரபேல் விமான விவகாரம் பற்றி மத்திய மந்திரிகள் தெளிவாக விளக்கம் அளித்து விட்டனர். பிரதமர் மோடி அரசில் ஒரு சதவீதம் கூட ஊழலுக்கு இடம் இல்லை. போபர்ஸ் ஊழல் பற்றி மக்கள் மறக்காததால் ராகுல்காந்தி எதையாவது சொல்லி கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், தமிழக பா.ஜனதா தலைவர் பதவியை தந்தால் சிறப்பாக செயல்படுவேன் என்றும், தற்போது உள்ள நிலையைவிட கட்சியை வலுப்படுத்துவேன் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், ‘இதற்கு பதில் சொல்வதை விட சிரித்துவிட்டு விட்டுவிடலாம். பல நகைச்சுவை நாடகங்களில் நடித்துள்ள அவர், நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசியிருப்பார். பா.ஜ.க. தலைவர் பதவி என்ன அவ்வளவு இலகுவான விஷயமா?’ என்று தெரிவித்தார். #BJP #Tamilisai #SVeShekher