என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "t20"

    • இந்திய அணியின் அயர்லாந்து பயணத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்தது.
    • இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது.

    டெஸ்ட் தொடர் ஜூலை 12-ந் தேதியும், ஒருநாள் போட்டிகள் ஜூலை 27-ந் தேதியும், 20 ஓவர் தொடர் ஆகஸ்டு 3-ந் தேதியும் தொடங்குகிறது. ஆகஸ்டு 13-ந் தேதியுடன் இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிவடைகிறது.

    அதை தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

    அயர்லாந்து அணியுடன் இந்தியா மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் அயர்லாந்து பயணத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்தது.

    ஆகஸ்டு 18-ந் தேதி முதல் 20 ஓவர் போட்டியும், 20-ந் தேதி 2-வது ஆட்ட மும் ஆகஸ்டு 23-ந் தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது.

    அயர்லாந்தில் உள்ள மலாஹிட் நகரில் 3 போட்டிகளும் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

    • அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றிவிட்டது.
    • தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி கடைசி போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையில் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துவங்க இருந்த நிலையில், போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே மழை பெய்து வந்ததால், போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி நீண்ட காலத்திற்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு.
    • டி20 கிரிக்கெட்டில் தங்களது எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க பிசிசிஐ இருவருக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளது.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் திகழந்து வருகிறார்கள்.

    நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையுடன் விளையாடினார்கள். தொடர் முழுவதும் அசத்திய இருவரால் உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    ஒவ்வொரு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னரும் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கப்படும். ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. விராட் கோலிக்கு 35 வயதாகிறது.

    டி20 கிரிக்கெட்டில் இருவரின் ஆட்டத்தில் எந்த தொய்வும் இல்லை. என்றபோதிலும், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கிறது.

    அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் 2026-ல் நடக்கிறது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வழி நடத்தும் வகையில் ஹர்திக் பாண்ட்யாவை டி20 அணி கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது.

    தற்போது 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா, விராட் கோலியுடன் செல்ல வெண்டுமா? என்பதைத்தான் பிசிசிஐ எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு.

    உலகக் கோப்பை தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இதற்குள் இந்த கேள்வியை எழுப்பினால் சரியாக இருக்காது என பிசிசிஐ இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    இருந்தபோதிலும், டி20 கிரிக்கெட்டில் உங்களுடைய எதிர்காலம் குறித்து நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அவர்கள் முடிவுக்கே விட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒருவேளை 2024 உலகக்கோப்பை வரை விளையாட விரும்புகிறோம் என்று இருவரும் தெரிவித்தால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிசிசிஐ ஆராயும். இதில் பிசிசிஐ-க்கு உடன்பாடு இல்லை என்றால், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    ரோகித் சர்மா 148 போட்டிகளில் 140 இன்னிங்சில் 4 சதம், 29 அரைசதங்களுடன் 3863 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.32 ஆகும்.

    விராட் கோலி 115 டி20 போட்டிகளில் 107 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 37 அரைசதங்களுடன் 4008 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.73 ஆகும்.

    • சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் முதல் போட்டியில் அரைசதம்.
    • ரிங்கு சிங் நெருக்கடியை எளிதாக சமாளித்து போட்டியை முடித்து வைத்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 2-வது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    முதல் போட்டியில் ஆஸ்திரேலியா சிறப்பாக பேட்டிங் செய்த போதிலும், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் (42 பந்தில் 80 ரன்), இஷான் கிஷன் (39 பந்தில் 58 ரன்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். ரிங்கு சிங் இறுதியில் 14 பந்தில் 22 ரன்கள் எடுத்து பினிஷராக செயல்பட்டார்.

    தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 8 பந்தில் 21 ரன் எடுத்த போதிலும், ருதுராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார். இந்த ஜோடி குறைந்தபட்சம் பவர்பிளேயான முதல் ஆறு ஓவர்கள் விளையாடினால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரும். திலக் வர்மா 10 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். இந்த ஆறு பேட்ஸ்மேன்களில் மூன்று பேருக்கு கிளிக் ஆனால் இந்தியாவின் பேட்டிங் டாப்பாக இருக்கும்.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பிரசித், முகேஷ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். முகேஷ் குமார் மட்டுமே குறைவான ரன்கள் (ஓவரில் 29 ரன்கள்) விட்டுக்கொடுத்தார். அதேபோல் அக்சார் பட்டேல் 32 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மற்ற பந்து வீச்சாளர்கள் கவனம் செலுத்துவது அவசியம்.

    ஆஸ்திரேலியாவை பொறுத்தரை பேட்டிங்கில் ஸ்மித், மேத்யூ ஷார்ட், இங்லிஸ், ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், வடே என உள்ளனர். பந்து வீச்சில்தான் அந்த அணிக்கும் சறுக்கல் ஏற்பட்டது. இதனால் பந்து வீச்சில் கவனம் செலுத்தும்.

    இரு அணிகளில் சிறப்பாக பந்து வீசும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

    • இளம் வீரரான ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.
    • அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 235 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியால் 191 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    போட்டியின்போது பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், 2-வது பேட்டிங் செய்யும்போது பந்து வீச கடினமாக இருக்கும். இதனால் முதலில் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியுமோ, அவ்வளவு ரன்கள் குவிக்க இந்தியா திட்டமிட்டது.

    அதற்கு ஏற்றபடி தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடினார். இவரது அதிரடியால் இந்தியா பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. இதில் ஜெய்ஸ்வால் 25 பந்தில் 53 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

    இதன்மூலம் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 2020-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் 23 பந்தில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்திருந்தார். கே.எல். ராகுல் 2021-ல் துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 19 பந்தில் 50 ரன்கள் அடித்திருந்தார். தற்போது இருவரையும் ஜெய்ஸ்வால் முந்தியுள்ளார்.

    • 2-வது போட்டியில் இந்தியா 235 ரன்கள் குவித்தது.
    • ரிங்கு சிங் 9 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் சேர்த்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது ஒரே ஓவரில் நான்கு சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தபோது, அனைவருடைய கண்ணிலும் பட்டவர்தான் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு சிங்.

    தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டி வேறு, சர்வதேச போட்டி வேறு. இவரால் அதேபோல் சிறப்பாக விளையாட முடியுமா? இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் ரன் குவித்து கொடுப்பாரா? என்ற சந்தேகம் இருந்தது.

    ஆனால், முதல் போட்டியிலேயே இக்கட்டான நிலையில் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இருந்தபோதிலும், அது நோ-பால் என்பதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    ரன்கள் அடிக்க வேண்டுமே, விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருக்கிறதே என்ற கவலை அவரது முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. ஆஹா... நமக்கு ஒரு பினிஷர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டனர். விமர்சகர்களும் முணுமுணுக்க தொடங்கினர்.

    நேற்றைய 2-வது போட்டியிலும் 14 பந்துகள் இருக்கும்போது களம் இறங்கினார். 9 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்தார். 26 வயதேயாகும் ரிங்கு சிங்கை இனிமேல் ஒயிட்பால் கிரிக்கெட் இந்திய அணியில் தொடர்ந்து பார்க்கலாம். இவர்தான் இனிமேல் பினிஷர். தல தோனியை செய்த வேலையை இவர்தான் செய்வார் என ரசிகர்கள் வெளிப்படையாக நம்பிக்கை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

    ரசிகர்களின் கருத்தை தனது புன்னகையால் மறைமுகமாக தெரிவித்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

    போட்டி முடிவடைந்தபின் பரிசு வழங்கும் நிகழ்ச்சியின்போது சூர்யகுமார் யாதவ் பேசுகையில் "இளம் வீரர்கள் என் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அவர்களிடம் முன்னதாகவே, முதல் பேட்டிங்கிற்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். மைதானத்தில் பனி அதிகமாக இருந்தது. பின்னர், ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது குறித்து பேசினோம்.

    ரிங்கு சிங் முதல் போட்டியில் பேட்டிங் செய்தபோது, அவர் வெளிப்படுத்திய நிதானம் அற்புதமானது. எனக்கு அவர் ஒருவரை நினைவூட்டினார் (புன்னகை). ஒவ்வொருவருக்கும் அதன் விடை தெரியும் (மீண்டும் புன்னகை)." என்றார்.

    இந்த அணியின் தலைசிறந்த பினிஷராக எம்.எஸ். டோனி திகழ்ந்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் தனது நிதானத்தை இழக்கமாட்டார். இறுதி கட்ட ஓவரை சிறப்பான வகையில் டார்கெட் செய்வார். தற்போது அதேவழியில் ரிங்கு சிங் செல்கிறார் என்பதை புன்னகை மூலம் சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்திருக்கலாம்.

    • மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நாடு திரும்புகிறார்கள்.
    • நான்கு வீரர்கள் அணியுடன் இணைய உள்ளனர்.

    இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    இன்று 3-வது போட்டி கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த 6 வீரர்களை ஆஸ்திரேலியா ரிலீஸ் செய்துள்ளது.

    உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்லிஸ், அபோட் ஆகியோர் ஆஸ்திரேலியா திரும்புகிறார்கள். இன்றைய போட்டி முடிவடைந்த பின்னர் அவர்கள் சொந்த நாடு திரும்புவார்கள்.

    ஏற்கனவே ஆடம் ஜாம்பா, சுமித் ஆகியோர் ஆஸ்திரேலிய புறப்பட்டு விட்டனர்.

    உலகக் கோப்பையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட் மட்டுமே டி20 அணியில் நீடிக்கிறார்.

    பென் மெக்டெர்மொட், ஜோஷ் பிலிப், பென் திவார்ஷுய்ஸ், கிறிஸ் கிரீன் அணியுடன் இணைய இருக்கிறார்கள்.

    • முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அடுத்த 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.
    • சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த 9-வது இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆவார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 222 ரன்கள் குவித்தது. என்றபோதிலும் மேக்ஸ்வெல் சதத்தால் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கெய்க்வாட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்சர்கள் அடங்கும். 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முதல் 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் அதன்பின் 36 பந்தில் 102 ரன்கள் விளாசினார்.

    நேற்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் பல சாதனைகள் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    சர்வதேச டி20 போட்டியில் ஒரு இந்திய வீரரின் 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்னதாக சுப்மன் கில் 126 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

    கடைசி 3 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் நேற்று 52 ரன்கள் குவித்தார். இது 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் யுவராஜ் சிங் 54 ரன்கள் விளாசியுள்ளார்.

    சர்வதேச டி20 போட்டியில் சதம் விளாசிய 9-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    • தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இரு அணிகளிடையே முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. 

    • தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இரு அணிகளிடையே முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போடப்படாத நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 


    • முதலில் விளையாடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    • வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

    முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் பெறச் செய்தது.

    பின்னர் தொடர் யாருக்கு என்பது நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி நேற்று இரவு (இந்திய நேரப்படி அதிகாலை) நடைபெற்றது.

    முதலில் விளையாடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சால்ட் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார். லிவிங்ஸ்டன் 28 ரன்களும், மொயீன் அலி 23 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரஸல், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் மொதியி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (3), சார்லஸ் (27), பூரன் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 43 ரன்களும், ரூதர்போர்டு 30 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் டி20 தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. 

    • டி20 அணியில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல்.
    • டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினர்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 11-ம் தேதி துவங்க இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக டி20 தொடரில் விளையாட விரும்புவதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்து இருந்தனர்.

     


    2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். இதைத் தொடர்ந்து இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வந்தனர்.

    இவர்களுக்கு மாற்றாக தேர்வுக்குழு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பளித்தது. 

    ×