என் மலர்
நீங்கள் தேடியது "tag 100430"
திருப்பதி:
ஆந்திர மாநிலம், காக்கிநாடா, வேலங்கி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 75). இவர் அங்குள்ள சிறிய குடிசையில் தங்கி இருந்து கோவில்களில் பிச்சை எடுத்து வந்தார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று இறந்தார். ராமகிருஷ்ணாவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அங்குள்ள போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
ராமகிருஷ்ணா குடிசை வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது.
மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது 2000, 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை நாணயங்கள் இருந்தன. அவற்றை எண்ணி பார்த்த போது ரூ.3 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது.
இதையடுத்து முதியவர் உடலை தகனம் செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை சமூக அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது.
175 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், ஆட்சியமைக்க 88 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பிற்பகல் நிலவரப்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. வரும் 25-ம் தேதி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அவர் சட்டமன்ற கட்சி தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், 30-ம்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெற்றி குறித்து ஜெகன் மோகன் ரெட்டி சமூக வலைத்தளம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த தேர்தல் வெற்றியானது மக்களின் வெற்றி. இது எதிர்பார்த்ததுதான். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்காளர்கள் பெருமளவில் தங்கள் உரிமையை நிலைநாட்டி ஜனநாயகத்தின் மதிப்பை மேம்படுத்தியமைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
இதற்கிடையே தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றிருப்பதால் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவதாகவும் கூறினார்.
இதற்கிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆந்திராவை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார் எனவும் ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதன்படி, 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கையின்போது காலையில் வெளியான முன்னணி நிலவரங்கள் அடிப்படையில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்தது.
காலை 10 மணி நிலவரப்படி 64 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரியவந்தது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 54 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கு தேசம் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இதே நிலை தொடர்ந்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையில் திருப்பாலைவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நிற்கவில்லை. அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை பறக்கும் படையினர் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம் 2 பைகளில் மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில் அவை ஆந்திராவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டவை என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் 10 மதுப்பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் மது பாட்டில்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அருண் (31), சுந்தர்ராஜன் (32) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அருண் எண்ணூர் காட்டாங்குப்பத்தையும், சுந்தர்ராஜன் எர்ணாவூரையும் சேர்ந்தவர்.
கைதானவர்களுக்கு மதுகடத்தும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் கலால் வட்டாட்சியர் சாந்தி தலைமையிலான பறக்கும் படையினர் சின்னநாகபூண்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர்.
காரின் உள்ளே 240 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதில் வந்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் கைது செய்யப்பட்டான். ஆர்.கே. பேட்டை கலால் போலீசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் காத்ரி நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி பஸ் வந்துகொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் தனகல்லு என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த லாரியுடன் மினி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்டதும் இரண்டு வாகனங்களின் டிரைவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #AndhraAccident

இயந்திரக்கோளாறு, மோதல் ஆகியவற்றால் சுமார் 400 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. 6 மணிக்குள் வாக்களிக்க வந்து காத்திருந்த அனைத்து வாக்காளர்களையும் ஓட்டுப்பதிவு செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர். குந்துர், கிருஷ்ணா, நெல்லூர், கர்னூல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் வாக்குப்பதிவு அதிகரித்தது.
மாலை 6 மணி நிலவரப்படி சராசரியாக 74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. வன்முறை உள்ளிட்ட காரணங்களால் பல வாக்குச்சாவடிகளில் இரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றதால், கிட்டத்தட்ட 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019 #AndhraVoterTurnout
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தபோது, கட்சி சின்னம் சரியாக பிரின்ட் செய்யப்படவில்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #TDPWorkerKilled
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில், ஆந்திராவின் குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதன் குப்தா இன்று காலை, கட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தார். அப்போது, வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயர் மற்றும் சின்னம் தெளிவாக தெரியவில்லை என அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

போலீசார் அங்கு வந்து வேட்பாளர் மதுசூதன் குப்தாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaElections2019 #AndhraElections #JanaSenaCandidate
ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிடும்.

இதேப்போல் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் விஜயவாடா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கேசினேனி ஸ்ரீனிவாஸ் தனது குடும்பத்தினருடன் சென்று குண்டெல்லா பகுதியில் வாக்களித்தார். ஆந்திராவில் ஆளும் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #ChandrababuNaidu
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முழுவதுமாக அறிவித்த நிலையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றன. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளுக்கு சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்கின்றனர்.

மேலும் ரெட்டி மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ.36 கோடியில் அசையா சொத்துக்கள் உள்ளன. இதேபோல் மனைவியின் பெயரில் ரூ.1.81 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன.
இருப்பினும் இவர்களிடத்தில் சொந்த கார் , பைக் என எந்த வாகனமும் இல்லை என்பது சுவாரஸ்யமான தகவல் ஆகும்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் விஷ்வேஷ்வர் ரெட்டிதான் பணக்கார வேட்பாளர் ஆவார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை விடவும், கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டியின் சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. #Andrapradesh #Richestcandidate #KondaVishweshwarReddy