search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிசிசிஐ"

    • வீரர்கள் தங்களது குடும்பத்தினரை ஏதாவது ஒரு போட்டிக்கு மட்டும் அழைத்துச் செல்லலாம்.
    • அந்த ஒரு போட்டியோடு அவர்கள் திரும்பி விட வேண்டும்.

    மும்பை:

    8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை (19-ந் தேதி) முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது.

    முன்னதாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது.

    அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைப்படி 45 நாட்களுக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது மட்டும் 2 வாரங்கள் குடும்பத்தினரை உடன் வைத்துக் கொள்ள வீரர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி 19 நாட்களில் முடிந்து விடுவதால் வீரர்களுடன் குடும்பத்தினர் செல்ல முடியாது என கூறப்பட்டது.

    ஆனால் தற்போது துபாய்க்கு சென்றுள்ள இந்திய அணியில் உள்ள சில மூத்த வீரர்கள் தங்களது குடும்பத்தினர் தங்களுடன் இருக்க வேண்டும் என்றும் அதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதனை பரீசிலித்த பி.சி.சி.ஐ. நிபந்தனையுடன் இந்திய வீரர்களுக்கு சலுகை வழங்கி உள்ளது.

    அதன்படி வீரர்கள் தங்களது குடும்பத்தினரை ஏதாவது ஒரு போட்டிக்கு மட்டும் அழைத்துச் செல்லலாம் என்றும் அந்த ஒரு போட்டியோடு அவர்கள் திரும்பி விட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. அதுமட்டும் இன்றி குடும்ப உறுப்பினர்கள் எந்த போட்டிக்கு முன்பாக வர இருக்கிறார்கள் என்பதை முறையாக தெரிவித்து அனுமதி பெற்ற பிறகே அங்கு செல்ல வேண்டும் என்றும் அப்படி உரிய அனுமதியுடன் சென்றால் ஒருநாள் வீரர்களுடன் இருக்க குடும்பத்தாருக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது.
    • இந்திய அணி போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.

    8 அணிகள் மோதும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஜெர்சி அணிந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புகைப்படங்களின் படி இந்திய அணி ஜெர்சியில் "சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தான்" என்று அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறாது என கூறப்பட்டது. எனினும், தற்போது பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளதை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. சீருடை சார்ந்த ஐ.சி.சி. விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதை உணர்த்தியுள்ளது.

    இது குறித்து பேட்டியளித்த பி.சி.சி.ஐ. செயலாளர் தேவ்ஜித் சைகா, "சாம்பியன்ஸ் டிராபியில் சீருடை சார்ந்து ஐ.சி.சி. பிறப்பிக்கும் அனைத்து விதிகளையும் பி.சி.சி.ஐ. பின்பற்றும்," என்று தெரிவித்தார்.

    ஐ.சி.சி.-யின் சீருடை விதிகளின் படி ஐ.சி.சி. நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியும் அந்த தொடரை நடத்தும் நாட்டின் பெயரை தங்களது ஜெர்சியில் இடம்பெற செய்ய வேண்டும். இது தொடர்பான போட்டிகள் தொடரை நடத்தும் நாட்டை தவிர்த்து பொதுவான இடத்தில் நடந்தாலும், இந்த விதிமுறையை பின்பற்றுவது அவசியம் ஆகும்.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கேப்டன்கள் போட்டோஷூட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் செல்ல மாட்டார் என்று கூறப்பட்டது. எனினும், இதர காரணங்களால் அதிகாரப்பூர்வ போட்டோஷூட் அல்லது கேப்டன்கள் போட்டோஷூட் நடத்தப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.



    • ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் கிடைக்கும் என்று நம்பினேன்.
    • நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வருவேன் என்று நம்புகிறேன்.

    இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ரகானே மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். மேலும் தேர்வு குழு தலைவர் அகர்கர் பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்தும் பேசியிருக்கிறார்.

    இது குறித்து ரகானே கூறியதாவது:-

    சில வருடங்களுக்கு முன்பு அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டேன். பின்பு சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். இறுதிப் போட்டியில் நான் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தேன். இருந்த போதும் நான் மீண்டும் ஏன் நீக்கப்பட்டேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் கிடைக்கும் என்று நம்பினேன். எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. என்னை ஏன் நீக்கி விட்டீர்கள் என்று போய் கேட்கும் நபர் நான் கிடையாது.

    மேலும் இது குறித்து நான் பேச வேண்டும் என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் பேசுவதற்கு தயாராக இருந்தால்தான் முடியும். அப்படி யாரும் என்னிடம் பேச தயாராக இல்லை. என் கையில் என்ன இருக்கிறதோ அதைப்பற்றி மட்டுமே நான் பார்க்கிறேன். மீண்டும் வருவதற்கு நான் கடுமையாக உழைக்கிறேன்.

    எனக்குள் இன்னும் அந்த பழைய நெருப்பும் ஆர்வமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது நான் ரஞ்சி தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறேன். மும்பை அணிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வருவேன் என்று நம்புகிறேன்.

    என்னுடைய நண்பர்கள் சிலர் என்னை என்னுடைய விளம்பரத்திற்கு பிஆர் வைத்துக்கொள்ள சொன்னார்கள். நான் அடிக்கடி செய்திகளில் இடம் பெற வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கான விளம்பரம் என்னுடைய பேட்டிங் மட்டும்தான். நான் அப்படி யாரையும் என் தனிப்பட்ட விளம்பரத்திற்கு வைத்துக் கொள்ளவில்லை.

    என்று ரகானே கூறினார்.

    • கோலி போன்ற பிரபல வீரர்கள் தங்களுக்கு என தனியாக சமையல் கலைஞர்களை அழைத்து வருவார்கள்.
    • உணவுக்கு என தனி சமையல் கலைஞர்களை அழைத்து வரக்கூடாது என பிசிசிஐ தெரிவித்தது.

    துபாய் :

    பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது அடுத்து பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் முக்கிய கட்டுப்பாடுகள் வீரர்கள் வெளிநாட்டு தொடரில் குடும்பத்தினருடன் அதிக நாட்கள் செலவிடக்கூடாது. அதிக உடைமைகளை வீரர்கள் எடுத்து வரக்கூடாது மற்றும் உணவுக்கு என தனி சமையல் கலைஞர்களை அழைத்து வரக்கூடாது என பல விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.

    பொதுவாக வீரர்கள் தங்கும் ஹோட்டலில் இந்திய வீரர்களுக்கு என உணவு கலைஞர்கள் இருப்பார்கள். இல்லையெனில் ஹோட்டலில் இருக்கும் உணவு கலைஞர்கள் தயாரித்து பிரத்தியேக உணவுகளை இந்திய அணியினருக்கு வழங்குவார்கள்.

    ஆனால் விராட் கோலி போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு என தனியாக சமையல் கலைஞர்களை அழைத்து வந்து தங்க வைத்திருந்தார்கள். தற்போது இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து தமக்கு எந்த மாதிரி உணவு வேண்டும் என்பதை விராட் கோலி துபாயில் உள்ள பிரபல ஹோட்டலை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்.

    இதனை அடுத்து அந்த ஹோட்டல் சமையல் கலைஞர்கள் விராட் கோலிக்கு என தனி உணவுகளை சமைத்து அவருக்கு டெலிவரி செய்து இருக்கிறார்கள். இதனால் விராட் கோலி பயிற்சிக்கு வரும்போது கூடவே உணவு பொட்டணங்களையும் எடுத்து வந்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் பயிற்சிக்கு பிறகு விராட் கோலி தனது உணவை எடுத்து சாப்பிட்டு இருக்கிறார். உணவுக் கலைஞர்களுக்கு பிசிசிஐ தடை விதித்ததை அடுத்து விராட் கோலி இந்த முறையில் பின்பற்றுகிறார்.

    • மார்ச் 22-ம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளது
    • மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் சென்னை, மும்பை அணிகள் மோதும் முதல் போட்டியில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த சீசனில் மும்பை அணி 3 போட்டிகளில் மெதுவாக பந்து வீசயதற்காக ஹர்திக் பாண்ட்யாவிற்கு 30 லட்சம் அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மார்ச் 22-ம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளது
    • மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் CSK - MI அணிகள் மோதும் முதல் போட்டிக்கான சிறப்பு போஸ்டரை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

    அதில், இப்போட்டி எல் கிளாசிகோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரு அணிகளும் வென்ற கோப்பைகள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

    • மார்ச் 22-ம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளது.
    • முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இதனிடையே 2025 ஐபிஎல் கோப்பை ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் முன்பு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஐபிஎல் கோப்பைக்கு கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது.

    • சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
    • ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    மார்ச் 23: சி.எஸ்.கே. Vs மும்பை இந்தியன்ஸ்

    மார்ச் 28: சி.எஸ்.கே. Vs பெங்களூரு

    ஏப்ரல் 05: சி.எஸ்.கே. Vs டெல்லி

    ஏப்ரல் 11: சி.எஸ்.கே. Vs கொல்கத்தா

    ஏப்ரல் 25: சி.எஸ்.கே. Vs ஹைதராபாத்

    ஏப்ரல் 30: சி.எஸ்.கே. Vs பஞ்சாப்

    மே 12 : சி.எஸ்.கே. Vs ராஜஸ்தான்

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    மார்ச் 31 : மும்பை Vs கொல்கத்தா

    ஏப்ரல் 7 : மும்பை Vs பெங்களூரு

    ஏப்ரல் 17: மும்பை Vs ஐதாராபாத்

    ஏப்ரல் 20: மும்பை Vs சென்னை

    ஏப்ரல் 27: மும்பை Vs லக்னோ

    மே 6       : மும்பை Vs குஜராத்

    மே 15     : மும்பை Vs டெல்லி

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:

    ஏப்ரல் 2   : பெங்களூரு Vs குஜராத்

    ஏப்ரல் 10 : பெங்களூரு Vs டெல்லி

    ஏப்ரல் 18 : பெங்களூரு Vs பஞ்சாப்

    ஏப்ரல் 24 : பெங்களூரு Vs ராஜஸ்தான்

    மே 3        : பெங்களூரு Vs சென்னை

    மே 13      : பெங்களூரு Vs ஐதாராபாத்

    மே 17      : பெங்களூரு Vs கொல்கத்தா

    குவாலிபியர் 1 போட்டி மே 20 ஆம் தேதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிபியர் 2 போட்டி மே 23 ஆம் தேதியும் ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐபிஎல் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
    • ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

    இந்நிலையில், ஐ.பி.எல். 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

    குவாலிபியர் 1 போட்டி மே 20 ஆம் தேதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிபியர் 2 போட்டி மே 23 ஆம் தேதியும் ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக போட்டிகள் நடைபெறும்- அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, லக்னோ, முலான்பூர், டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் என பத்து இடங்களுடன் கவுகாத்தி மற்றும் தரம்சாலாவிலும் இந்த முறை ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளது.

    • குடும்பத்தினரை வீரர்கள் உடன் அழைத்து செல்லலாம்.
    • மூத்த வீரர் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியாவிலும், ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.

    இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இந்திய அணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் 45 நாட்களுக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது மட்டும் இரண்டு வாரங்கள் குடும்பத்தினரை வீரர்கள் உடன் அழைத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடக்கிறது. இந்தத் தொடர் 19 நாட்கள் நடப்பதால் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல முடியாது. இந்த நிலையில் இந்திய அணி மூத்த வீரர் ஒருவர் தனது குடும்பத்தை சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது உடன் அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.

    தனது குடும்பத்திற்கு விதிவிலக்கு அளிக்க முடியுமா என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதை கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இதுகுறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, இந்த சுற்றுப் பயணத்திற்கு வீரர்கள் தங்கள் மனைவிகளை உடன் அழைத்து வர வாய்ப்பில்லை.

    இதில் விதிவிலக்கு கேட்டு மூத்த வீரர்களில் ஒருவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரிடம் கொள்கை முடிவு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    சுற்றுப்பயணம் ஒரு மாதத்திற்கும் குறைவானது என்பதால், வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் செல்ல அனுமதி இல்லை. ஒருவேளை விதிவிலக்குகள் அளிக்கப்பட்டால் கிரிக்கெட் வாரியம் எந்த செலவையும் ஏற்காது. சம்பந்தப்பட்ட வீரர்தான் முழு செலவுகளையும் ஏற்க வேண்டி இருக்கும்.

    ஆனால் எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது வீரர்களுடன் குடும்பத்தினர் இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தனர். கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்த மூத்த வீரர் யார்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    • ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.
    • ஆர்.சி.பி. அணி கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டார்.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

    ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் வசதி, ரைட் டு மேட்ச் விதிமுறை உள்பட பல மாற்றங்கள் கடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தின் போது கொண்டுவரப்பட்டது. அந்த வகையில், ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இதுவரையிலான ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக ரிஷப் பண்ட் உருவெடுத்தார். இவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ஐ.பி.எல். 2025 தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிமுக போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்.) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிகள் மோதும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்.சி.பி. அணி தனது புதிய கேப்டனாக ரஜத் பட்டிதரை அறிவித்தது.

    ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக போட்டிகள் நடைபெறும்- அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, லக்னோ, முலான்பூர், டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் என பத்து இடங்களுடன் கவுகாத்தி மற்றும் தரம்சாலாவிலும் இந்த முறை ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

    முன்னதாக கடந்த ஜனவரி 12-ம் தேதி பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா வெளியிட்ட தகவல்களில் ஐ.பி.எல். 2025 போட்டிகள் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    மக்களுக்கு உதவக் கூடிய புதிய அத்தியாத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
    பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    1992-ம் ஆண்டில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது. அன்று முதல் கிரிக்கெட் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. முக்கியமாக, உங்களின் பேராதரவு கிடைத்துள்ளது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி.

    இன்று, மக்களுக்கு உதவக் கூடிய புதிய அத்தியாத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். எனது இந்த புதிய திட்டத்திற்கும் உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    கங்குலியின் டுவிட்டர் பதிவையடுத்து, பிசிசிஐ பதவியில் இருந்து கங்குலி விலகப்போவதாக தகவல் பரவியது. அரசியலில் நுழைய திட்டமிட்டு இருப்பதாகவும், பாஜகவில் சேரலாம் என்றும் பேசப்பட்டது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார். பிசிசிஐ தலைவர் பதவியை கங்குலி ராஜினாமா செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்.. தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல்
    ×