என் மலர்
நீங்கள் தேடியது "tag 109584"
குளம், குட்டைகளில் சேற்றில் வேரூன்றி நீரின் மேற்பரப்பில் மட்டுமே தாமரை வளரும் நிலையில் முருகேசன் அவரது மாடி தோட்டத்தில் வளர்த்து வரும் தாமரையானது தற்போது மொட்டு வைத்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் சிவன் தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், தையல் நிலைய உரிமையாளர் சங்க (பவர்டேபிள்) துணை செயலாளர். இவர் தனது வீட்டு மாடியில் 1500 சதுர அடி பரப்பில் மாடி தோட்டம் பராமரித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் கோவையில் இருந்து தாமரை விதை வாங்கிவந்து மாடித்தோட்டத்தில் வைத்து வளர்த்து வருகிறார்.
குளம், குட்டைகளில் சேற்றில் வேரூன்றி நீரின் மேற்பரப்பில் மட்டுமே தாமரை வளரும் நிலையில் முருகேசன் அவரது மாடி தோட்டத்தில் வளர்த்து வரும் தாமரையானது தற்போது மொட்டு வைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் முருகேசன் வீட்டில் வளர்த்து வரும் தாமரையை அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து முருகேசன் கூறுகையில், பரிச்சார்த்த முறையில் விதை வாங்கி வந்து பூந்தொட்டியில் வளர்க்க தொடங்கினேன். பொதுவாக தண்ணீரில் மிதக்கும் தாமரை எங்கள் மாடி தோட்டத்தில் இரண்டரை அடி வரை வளர்ந்து மொட்டு மலர்ந்துள்ளது என்றார்.
திருப்பூர் சிவன் தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், தையல் நிலைய உரிமையாளர் சங்க (பவர்டேபிள்) துணை செயலாளர். இவர் தனது வீட்டு மாடியில் 1500 சதுர அடி பரப்பில் மாடி தோட்டம் பராமரித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் கோவையில் இருந்து தாமரை விதை வாங்கிவந்து மாடித்தோட்டத்தில் வைத்து வளர்த்து வருகிறார்.
குளம், குட்டைகளில் சேற்றில் வேரூன்றி நீரின் மேற்பரப்பில் மட்டுமே தாமரை வளரும் நிலையில் முருகேசன் அவரது மாடி தோட்டத்தில் வளர்த்து வரும் தாமரையானது தற்போது மொட்டு வைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் முருகேசன் வீட்டில் வளர்த்து வரும் தாமரையை அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து முருகேசன் கூறுகையில், பரிச்சார்த்த முறையில் விதை வாங்கி வந்து பூந்தொட்டியில் வளர்க்க தொடங்கினேன். பொதுவாக தண்ணீரில் மிதக்கும் தாமரை எங்கள் மாடி தோட்டத்தில் இரண்டரை அடி வரை வளர்ந்து மொட்டு மலர்ந்துள்ளது என்றார்.
உத்தரபிரதேசம் கன்னோஜ் தொகுதியில் சைக்கிளுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்தை காட்டியது என சமாஜ்வாடி கட்சி புகார் செய்துள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அப்போது 2 வாக்குச்சாவடிகளில் சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போட்டால் விவிபாட் கருவியில் தாமரை சின்னத்தை காட்டியதாக புகார் எழுந்தது.
அதோடு இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் பலருக்கு போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓட்டு போட்ட பிறகு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர்களை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படு மாநில டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கட்சியினர் கூறினர். இந்த பிரச்சினைகள் தொடர்பாக தேர்தல் அதிகாரியிடமும் புகார் செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அப்போது 2 வாக்குச்சாவடிகளில் சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போட்டால் விவிபாட் கருவியில் தாமரை சின்னத்தை காட்டியதாக புகார் எழுந்தது.
அதோடு இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் பலருக்கு போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓட்டு போட்ட பிறகு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர்களை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படு மாநில டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கட்சியினர் கூறினர். இந்த பிரச்சினைகள் தொடர்பாக தேர்தல் அதிகாரியிடமும் புகார் செய்துள்ளனர்.