என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி"

    • ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புது Q5 ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • ஆடி இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் ஸ்பெஷல் எடிஷன் கார் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலை ரூ. 67 லட்சத்தி 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்டர்டு டெக்னாலஜி வேரியண்டை விட ரூ. 84 ஆயிரம் அதிகம் ஆகும். இந்த கார் டாப் எண் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடல் பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜில் கிடைக்கிறது. இந்த கார் பிளாக்டு-அவுட் லோகோ, கிளாஸ் பிளாக் முன்புற கிரில், பிளாக் ரூப், பிளாக் ORVM கேப்கள், 19 இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள் கிராபைட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் ஐபிஸ் வைட் மற்றும் புதிய டிஸ்ட்ரிக்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    இது தவிர ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடல் எல்இடி ஹெட்லேம்ப்கள், பானரோமிக் சன்ரூப், 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 12.2 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், முன்புறம் பவர்டு இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் என்ஜினில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த காரிலும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 249 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய Q8 இ டிரான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்திய சந்தையில் புதிய Q8 இ டிரான் விற்பனை அடுத்த ஆண்டு வாக்கில் துவங்க இருக்கிறது.

    ஆடி நிறுவனம் 2018 வாக்கில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடல்- ஆடி இ டிரான் அறிமுகம் செய்தது. அன்று முதல் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் கார்களை ஆடி விற்பனை செய்துள்ளது. இது உலகளவில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கை ஆகும்.

    2023 ஆண்டிற்காக ஆடி தனது இ டிரான் மாடலை ரிபிராண்டு செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதிய இ டிரான் மாடல் இனி ஆடி Q8 இ டிரான் என அழைக்கப்பட இருக்கிறது. பெயர் மட்டுமின்றி புது கார் ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் - Q8 இ டிரான், SQ8 இ டிரான் மற்றும் Q8 இ டிரான் ஸ்போர்ட்பேக் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    தற்போது ஆடி நிறுவனம் எட்டு முழுமையான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. 2026 வாக்கில் 20-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த ஆடி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2026 முதல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே அறிமுகம் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.

    புதிய ஆடி Q8 இ டிரான் மாடல் மூன்று வித டிரைவ்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 50, 55 மற்றும் டாப் எண்ட் SQ8 என அழைக்கப்படுகின்றன. இதில் அதிக ரேன்ஜ் 55 மாடல்களில் கிடைக்கின்றன. இவை முழு சார்ஜ் செய்தால் 582 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகின்றன. ஸ்போர்ட்பேக் மாடல் 600 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் S ரேன்ஜ் 973 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • ஆடி நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • இதன் மூலம் ஆடி கார்களின் புதிய விலை அடுத்த ஆண்டின் முதல் நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.7 சதவீதம் வரை உயர்த்துகிறது. உற்பத்தி மற்றும் உபகரணங்களின் செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையே ஆடி இம்முறை விலை உயர்வுக்கும் காரணமாக தெரிவித்து இருக்கிறது. விலை உயர்வு 2023 ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஆடி நிறுவனம் மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

    2022 ஜனழரி மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் ஆடி கார்களின் விலை அதிகபட்சம் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. பின் பண்டிகை காலத்தை ஒட்டி செப்டம்பர் மாத வாக்கில் கார்களின் விலை 2.4 சதவீதம் உயர்த்தப்பட்டது.

    "ஆடி இந்தியாவின் வியாபார நுனுக்கம் ஒரு மாடலின் லாபம் மற்றும் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். உற்பத்தி மற்றும் நிர்வாக செலவீனங்கள் அதிகரிப்பதாலேயே விலை மாற்றம் செய்யப்படுகிறது." என ஆடி இந்தியா தலைவர் பல்பிர் சிங் திலான் தெரிவித்து இருக்கிறார்.

    இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் தற்போது ஆடி A4, ஆடி A6, ஆடி A8L, ஆடி Q3, ஆடி Q5, ஆடி Q7, ஆடி S5 ஸ்போர்ட்பேக், ஆடி RS 5 ஸ்போர்ட்பேக், ஆடி RS Q8 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஆடி இ டிரான் 50, இ டிரான் 55, இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்களை கொண்டிருக்கிறது. இதுதவிர இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார்கள், ஆடி இ டிரான் GT மற்றும் ஆடி RS இ டிரான் GT மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    • ஆடி நிறுவனத்தின் Q2 மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் சர்வதேச சந்தையில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆடி நிறுவனத்தின் Q3 மாடல் இந்தியாவில் அந்நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி-ஆக மாறுகிறது.

    ஆடி இந்தியா நிறுவம் தனது Q2 ஆடம்பர காம்பேக்ட் எஸ்யுவி மாடலை சத்தமின்றி தனது வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. இந்திய சந்தையில் ஆடி Q2 மாடல் சிபியு முறையில் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட Q2 மாடல்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலக சந்தையிலும் ஆடி Q2 உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் ஆடி Q2 விற்பனை முடிவுக்கு வந்துள்ளது. மேலும் ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய Q3 மாடலை இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. அந்த வகையில் புதிய தலைமுறை ஆடி Q3 மாடல் இந்திய சந்தையில் ஆடி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி-ஆக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஆடி Q2 மாடல் நிறுத்தப்படும் என ஆடி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    ஆடி நிறுவனம் பெரிய பிரீமியம் கிராஸ்ஓவர் மற்றும் எஸ்யுவி மாடல்கள் மீது அதிக கவனம் செலுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ஆடி Q2 மாடல் அக்டோபர் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யுவி மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 228 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • ஆடி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
    • 2021 ஆண்டை விட கடந்த ஆண்டு 44 சதவீதம் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை ஆடி வினியோகம் செய்து இருக்கிறது.

    ஆடி நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 1.61 மில்லியன் வாகனங்களை வினியோகம் செய்து இருக்கிறது. 2021 ஆண்டு ஐரோப்பா, ஜெர்மனி மற்றும் இதர முக்கிய சந்தைகளில் விற்றதை விட அதிக வாகனங்களை கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் மாடல்கள்- ஆடி Q4 இ டிரான், ஆடி இ டிரான் GT குவாட்ரோ1 மற்றும் ஆடி இ டிரான் உள்ளிட்டவற்றுக்கு அதிக வரவேற்பு கிடைத்தன.

    எலெக்ட்ரிக் பிரிவில் ஆடி Q8 இ டிரான மாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மாடல் 2023 மார்ச் முதல் ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வர இருக்கிறது. அதற்குள் இந்த மாடலை வாங்க பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளனர். 2026 ஆண்டில் இருந்து ஆடி நிறுவனம் சர்வதேச சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆடி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 196 எலெக்ட்ரிக் வாகனங்களை கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. இது 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது 44.3 சதவீதம் அதிகம் ஆகும். இதில் ஆடி A3 (+12.1 சதவீதம்), ஆடி A4 (+8.0 சதவீதம்) மற்றும் ஆடி Q5 (+2.7 சதவீதம்) வளர்ச்சியை பெற்றுள்ளன.

    "எலெக்ட்ரிக் மொபிலிட்டி சரியான பாதையில் இருப்பதை உணர்த்தும் வகையில் எங்களின் ஆல் எலெக்ட்ரிக் மாடல்கள் அமோக விற்பனையை பதிவு செய்கின்றன. போட்டி மற்றும் புதுமைகள் நிறைந்த சூழலில், எங்களின் சர்வதேச குழு கடந்த ஆண்டு மேலும் ஒரு முறை கடினங்களை எதிர்கொண்டுவிட்டது."

    "குழுவினரின் விடா முயற்சி, தலைசிறந்த நிர்வாக திறன் மற்றும் சீரான விற்பனை இலக்கு உள்ளிட்டவைகளுக்கு நன்றி. இதன் காரணமாக கடந்த ஆண்டு வியாபாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தது," என ஆடி நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஹில்டிகார்ட் வொர்ட்மேன் தெரிவித்து இருக்கிறார். 

    • ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 ஸ்போர்ட்பேக் புதிய Q3 மாடலை விட அதிக ஸ்போர்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் Q3 ஸ்போர்ட்பேக் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q3 மாடலை விட அதிக ஸ்போர்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஆடி Q3 விலை ரூ. 44 லட்சத்து 90 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 50 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிது.

    புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடல் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q3 எஸ்யுவி-யை விட புதிய Q3 ஸ்போர்ட்பேக் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புது ஸ்போர்ட்பேக் மாடலில் ஹனி-காம்ப் கிரில், பிளாக்டு-அவுட் எலிமண்ட்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் அலாய் வீல்கள், காரின் பின்புறம் டுவீக் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. புதிய Q3 ஸ்போர்ட்பேக் டிசைன் மற்றும் ஸ்டைலிங் அதிக கவனமுடன் உருாக்கப்பட்டு இருப்பது அதன் தோற்றத்திலேயே அறிந்து கொள்ள முடிகிறது. காரின் கேபின் பகுதியில் Q3 ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்ற தோற்றம், ஸ்போர்ட் அக்செண்ட்கள் உள்ளன.

    இத்துடன் ஆடியின் டிஜிட்டல் காக்பிட், 8.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்டம், MMI நேவிகேஷன், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஆடி ஸ்மார்ட்போன் இண்டர்ஃபேஸ், ஆடி சவுண்ட் சிஸ்டம் உள்ளது. இந்தியாவில் ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 45 TFSI வெர்ஷன் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 241 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.6 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 233 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
    • புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் தனது புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலின் விலை ரூ. 51 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் டெக்னாலஜி + S லைன் என அழைக்கப்படுகிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் கூப் ரூஃப்லைன், ஐந்து ஸ்போக்குகள் கொண்ட 18 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், ஹை-கிலாஸ் ஸ்டைலிங் பேக்கேஜ், எல்இடி டெயில் லைட்கள், S-லைன் எக்ஸ்டீரியர் பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டர்போ புளூ, கிளேசியர் வைட், க்ரோனோஸ் கிரே, மிதோஸ் பிளாக் மற்றும் நவரா புளூ என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    இண்டீரியர்கள் புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், நான்கு வித லம்பர் சப்போர்ட், ஆடி டிரைவ் செலக்ட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில்கேட், குரூயிஸ் கண்ட்ரோல், மூன்று ஸ்போக் வீல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆறு ஏர்பேக், TPMS, பார்கிங் ஏய்ட் பிளஸ் ரியர் வியூ கேமரா, ஆடி சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆடிடோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஆடி நிறுவனத்தின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலுடன் ஐந்து ஆண்டுகளுக்கு RSA சர்வீஸ், 2+3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி குறுகிய காலக்கட்டத்திற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

    • ஆடி இ பைக் மாடலில் 250 வாட் பிரோஸ் மோட்டார் உள்ளது.
    • ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய இ பைக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    எலெக்ட்ரிக் பைக் அல்லது இ பைக் மாடல்கள் சமீப காலங்களில் வழக்கமான மிதிவண்டிகளுக்கு (சைக்கிள்) மாற்றாக அமைந்துள்ளது. காற்று மாசு ஏற்படுத்தாமல் இருப்பது, சுற்றுச்சூழலகுக்கு உகந்தது என ஏராளமான நற்பயன்களை வழங்குவதால் இ-பைக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இ பைக் மாடல்களில் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரிசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை பெட்ரோல் என்ஜின் கொண்ட வாகனங்களை விட பெருமளவுக்கு காற்று மாசு ஏற்படுவதை தடுக்கிறது. கார்களுக்கு மாற்றாக இ பைக் வாங்கும் போது காற்று மாசு ஏற்படுவதை தடுப்பசோடு, நகர்ப்புறங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும்.

     

    ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய இ பைக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. எனினும், இந்த இ பைக் விலை தற்போது விற்பனை செய்யப்படும் வாடிக்கையன கார் மாடல்களை விட அதிகம் ஆகும். இந்த இ பைக் அதிநவீன சொகுசு வசதிகளை கொண்டிருக்கிறது. இது ஆடி நிறுவனத்தின் RS Q E-டிரான் E2 டக்கர் ரேலி ரேசர் போன்ற மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த இ பைக்கில் உள்ள ஏராளமான அம்சங்கள் பைக் ப்ரியர்களை நிச்சயம் கவரும் வகையில் இருக்கிறது. இத்தாலியின் ஃபேண்டிக் உருவாக்கிய இந்த இ பைக் XMfF 1.7 சார்ந்து ருவாகி இருக்கும் ஆடி இ பைக் மாடலில் 250 வாட் பிரோஸ் மோட்டார் உள்ளது. இதே மோட்டார் ஹார்லி டேவிட்சன் சீரியல் 1 பேஷ்/Mtn உள்து. இத்துடன் 720 வாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது. இவை அதிகபட்சம் 66ft/lb டார்க் வெளிப்படுத்துகிறது.

    ஆடியின் புதிய இ பைக் மாடல் மூன்று வித அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலை 8 ஆயிரத்து 499 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 8 லட்சத்து 43 ஆயிரத்து 541 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    • ஆடி நிறுவனத்தின் புதிய Q6 எலெக்ட்ரிக் கார் ரேஞ்ச் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    • புதிய ஆடி Q6 இ டிரான் மாடல் 2024 வாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    ஆடி நிறுவனம் 2024 வாக்கில் Q6 இ டிரான் மாடலை அறிமுகம் செய்யும் என சமீபத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் முழு சார்ஜ் செய்தால் 600கிமீ ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. 2025 வாக்கில் ஆடி அறிமுகம் செய்ய இருக்கும் 20 புதிய மாடல்களில் ஒன்றாக Q6 இ டிரான் இருக்கிறது.

    புதிய ஆடி Q6 இ டிரான் மாடல் பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சரை (PPE) தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பிளாட்ஃபார்ம் போர்ஷே நிறுவனத்துடன் இணைந்து ஆடி உருவாக்கி இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் மக்கன் EV மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பிளாட்ஃபார்மில் அதிகபட்சம் 270 கிலோவாட் சார்ஜிங் ரேட் வழங்கப்படுகிறது.

     

    முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q6 இ டிரான் கான்செப்ட் மாடல் 469 ஹெச்பி பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் மோட்டார், 4 வீல் டிரைவ் பவர்டிரெயின் கொண்டிருக்கிறது. மக்கன் EV மாடலில் உள்ள மோட்டார் 611 ஹெச்பி பவர், 953 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசியை வெளிப்படுத்துகிறது.

    Q6 இ டிரான் எஸ்யுவி-யை தொடர்ந்து கூப் எஸ்யுவி அல்லது ஸ்போர்ட்பேக் மாடலை அறிமுகம் செய்ய ஆடி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. முந்தைய தகவல்களின் படி ஆடி Q6 இ டிரான் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த மாடல் 2024 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.

    • ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதாரத் திருநாள்! பூமாதேவியானவள் ஆண்டாளாக அவதரித்தாள் என்கிறது புராணம்.
    • ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தை மிக்க அற்புதமாக கொண்டாடுகிறார்கள்.

    ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. முன்னோர்கள் ஒரு ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரித்து இருக்கிறார்கள்.

    ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். தை முதல் ஆனிவரை உத்ராயனம். ஒன்று மாரி காலத்தின் ஆரம்பத்தையும் அடுத்தது கோடை காலத்தின் துவக்கத்தையும் காட்டுகின்றன.

    இந்த புண்ணிய காலகட்டங்களில் தீர்த்த ஸ்நானம் மிகவும் விசேஷம். ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் துவக்கமே ஏற்படுகிறது.

    ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்பம்! பூமாதேவி அவதரித்த ஆனந்த் மாதம். அம்மனுக்கு ப்ரீதியான ஆடி மாதம் பண்டிகைகளின் கொண்டாட்டம்.

    ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளியும் செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்! நமக்கு அருள்பாலிக்க அம்மன் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நலமெல்லாம் சொரியும் மங்கல மாதம் தான் இந்த ஆடி மாதம்.

    அதற்கு காரணம் ஆடிப் பூரம்!

    ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதாரத் திருநாள்! பூமாதேவியானவள் ஆண்டாளாக அவதரித்தாள் என்கிறது புராணம்.

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வாரின் பிருந்தாவனத்திலே பிராட்டியார் கோதை அவதரித்தார்கள். 'கோதையா! அவள் கருணையின் கொழுந்து' என்று போற்றி பணிகின்றோம்.

    'சூடிக்கொடுத்த சுடர்க் கொடி நாச்சியார் ஆண்டாள்' தான் பாடிக் கொடுத்த பாமாலையால் பரமனை சேவித்து அவரிடமே ஜக்கியமானாள்.

    ஆண்டாள் பிறந்த அந்த தினத்தை ஆடிப்பூரம் என்று அனைவரும் கொண்டாடிக்களிக்கின்றோம்.

    இன்றும் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடிப்பூரத்தை மிக்க அற்புதமாக கொண்டாடுகிறார்கள்.

    இதேபோல 'ஆடி பதினெட்டு' என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷமான பண்டிகை நாளாகும். அந்த பண்டிகை வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம்.

    முன்பு ஆடிப்பூரத் திருநாளின்போது காவேரியும், தாமிரபரணியும், வைகையும் வெள்ளப் பெருக்கெடுத்து, பொங்கிப் பெருகி ஓடும்.

    ஆடிப்பூர நந்நாளன்று அணங்கையர் புத்தாடை உடுத்திக் கோவிலுக்குச் செல்வர். மாலையில் தேங்காயம் சாதம், தயிர் சாதம், புளியஞ்சாதம், பாயசம் போன்ற சித்ரா அன்னம் தயாரித்து அம்மனுக்கு நிவேதிப்பர். பிறகு குடும்பத்துடன் அனைவரும் மாலையில் நதிக்கரைக்கு சென்று சித்ரா அன்னத்தை உண்டு மகிழ்வர்.

    ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் விசேஷமான பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்.

    கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்குப் பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

    கரக ஆட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை இவைகளுடன் கேளிக்கையும் கொண்டாட்டங்களும் நடைபெறும்.

    இந்த ஆடி மாதத்தில் புன்னைவனம் என்றழைக்கப்படும் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    'அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள் பார்வதி தேவி. அதற்காக புன்னைவனத்தில் தவமிருந்தாள் அம்பிகை.

    அம்பிகையின் தவத்திற்கு திருவுள்ளம் கனிந்த பெருமான் சங்கரநாராயணராக காட்சி தருகிறார். அதே தலத்தில் ஐயன் சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணந்து கொள்கிறார்.

    ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் இந்த ஆடித்தபசு பண்டிகையைக் காண பக்தர்கள் கூட்டம் வெள்ளம் எனப்பெருகும்!

    இவ்வாறு அம்பிகைக்கு உகந்ததான ஆடி மாதத்தில் வரும் செவ்வாயும், வெள்ளியும் விரதம் இருந்து நாம் அம்மனின் பேரருளைப் பெறுவோமாக!

    ஆடி ஸ்பெஷல்

    ஆடிப்பெருக்கு தினத்தில் மன்னார்குடி ஸ்ரீசங்கர மடத்தில் இருந்து மாலை புறப்படும் 'காவிரி அம்மன் உலா' ஆற்றங்கரையை அடையும். திரளான பக்தர்களுடன் மேள தாளத்துடன் இந்த உலா செல்லும். படிக்கரையில், காவிரி அம்மனாக அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்குக்கு பூஜைகள் நடக்கும். சந்தனாபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம் முதலியவற்றை பொதுமக்களின் சங்கல்பத்துடன் துவங்கி, காவிரி அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடக்கும். ஸ்ரீகாஞ்சி மடத்தில் பக்தர்கள் மற்றும் உள்ளூர்க்காரர்கள் முயற்சியுடன் இந்த வைபவம் நடந்து வருகிறது. காவிரி அம்மனுக்கு அர்ச்சகர் தீபாராதனை காட்டும்போது, அங்கு கூடி இருக்கும் உள்ளூர் மக்கள், கங்கையில் ஆரத்தி விடுவது போல் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி நதி நீரில் மிதக்க விடுவர்.

    • நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு.
    • அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.

    அம்மன் கோவில்களில் முளைப்பாரிக்கு தனியிடம் உண்டு. இதனை முளைப்பாலிகை என்று சொல்வது தான் சரியாகும். பேச்சு வழக்கில் முளைப்பாரி என்றே கூறுகிறோம்.

    நெல் நாற்று காற்றில் அசைவது போல் முளைப்பாரிக்கதிர்களும் அலையலையாய் ஆடி அசையும் அழகே அழகு! பெண்கள் இதைச்சுமந்து செல்லும் போது அந்த அழகைக் காணலாம். அதே நேரம் வெறும் அலங்காரத்திற்காகவும் அழகிற்காகவும் மட்டும் முளைப்பாரி எடுத்து வருவதில்லை.

    முளைப்பாரி எப்படி செழித்து உயரமாக வளர்கிறதோ, அதுபோல குடும்பம் தழைக்கும். பெண்ணுக்கு நல்ல கணவன் அமைவான் என்று சொல்வார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நவதானியப் பாலிகை தெளித்து வளர்த்து, தம்பதிகள் அதை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் இதற்காகத் தான்.

    • மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர்.
    • பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருப்பர். குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவர்.

    மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போடமாட்டார்கள்.

    அனைத்தும் தயாரானதும் ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு ஒளவையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர்.

    இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே உண்பார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

    இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாயில் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும், குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

    ×