என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிபன்"

    • இந்த தோசையை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
    • இந்த தோசை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 1 கரண்டி

    ஸ்வீட் கார்ன் - தேவையான அளவு

    குடைமிளகாய் - சிறியது 1

    வெண்ணெய் - தேவையான அளவு

    மிளகுப் பொடி - 1/2 மேசைக் கரண்டி

    சீஸ் - விருப்பத்திற்கு ஏற்ப

    புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் - 1 மேசைக் கரண்டி

    செய்முறை

    குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி சுற்றி வெண்ணெய் ஊற்ற அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    பின்னர் தோசை மேல் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸை தேய்க்கவும்.

    அடுத்து அதன் மேல் ஸ்வீட் கார்ன், குடைமிளகாயை மேலே தூவி கொள்ளவும்.

    அடுத்து அதன் மேல் மிளகு தூள், சிறிது உப்பு தூவவும்.

    கடைசியாக தோசை மேல் சீஸை துருவி விடவும்.

    சீஸ் உருகியதும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சீஸ் கார்ன் கேப்சிகம் தோசை ரெடி.

    • ஹோட்டலில் இந்த பரோட்டா வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று இந்த பரோட்டாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 500 கிராம்

    தயிர் - 3 தேக்கரண்டி

    பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி

    வெண்ணெய் - 3 தேக்கரண்டி

    முட்டை - 2

    உப்பு - தேவையான அளவு

    கொத்துக்கறி மசாலாவிற்கு தேவையான பொருட்கள்

    கொத்துக் கறி - 500 கிராம்

    பெரிய வெங்காயம் - 2

    பூண்டு - 4 பல்

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - 4 மேஜைக் கரண்டி

    செய்முறை:

    கொத்துக் கறியுடன் மஞ்சள் தூள், சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, கொத்துக் கறியைப் போட்டு கிளறவும்.

    மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு போட்டுக் கிளறி நன்றாக வதக்கி, கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.

    பரோட்டா செய்முறை:

    மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், வெண்ணெய், தயிர் இவற்றைப் போட்டுக் கலந்து, பிசைந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.

    முட்டையுடன் சிறிது உப்புத் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும்.

    மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, மிக மெல்லியதாக தேய்க்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் விரித்த மாவைப் போட்டு, முட்டையை கரண்டியில் எடுத்து பரவலாக தடவவும்.

    கொத்துக்கறி மசாலாவை இதன் மீது பரப்பவும். மாவை, இடது பக்கமும், வலது பக்கமும் மடக்கி மூடவும். கவனமாக திருப்பிப் போட்டு, பொன்நிறமானதும் எடுத்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான முட்டை கொத்துக்கறி பரோட்டா ரெடி.

    • குழந்தைகளுக்கு இந்த சப்பாத்தி மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் துண்டுகள் - 10,

    கோதுமை மாவு - 150 கிராம்,

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    பால் - 100 மில்லி,

    சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,

    நெய் - 4 டீஸ்பூன்.

    செய்முறை:

    பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

    கோது மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடி வைக்கவும்.

    இதை சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

    இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.

    பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.

    • பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.
    • உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த இட்லியை சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - சிறிதளவு

    பச்சை மிளகாய் - 3

    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

    துருவிய கேரட் - 1/4 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    இஞ்சி - 1 துண்டு

    உப்பு - தேவையான அளவு

    Eno - 1 தேக்கரண்டி

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பு நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்துக் வதக்கவும்.

    அடுத்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் துருவிய கேரட், கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

    பின்னர் ஒரு தேக்கரண்டி Eno மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள மாவில் இட்லி ஊற்றவும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும்.

    மிதமான சூட்டில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

    இப்போது சுவையான பாசிப்பருப்பு தாளிச்ச இட்லி தயார்.

    தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

    • சில்லி மசாலா இட்லி மாலை நேர சிற்றுண்டியாக உண்பதற்கு சுவையாக இருக்கும்.
    • மீதமான இட்லியில் உப்புமா செய்யாமல் இப்படி செய்தால் உடனே காலியாகிவிடும்.

    தேவையான பொருட்கள்

    குட்டி இட்லி - 20

    சமையல் எண்ணெய் - ½ கப்

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 2

    இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி

    கொத்தமல்லி - சிறிது

    மிளகாய்த்தூள் - 1 ½ தேக்கரண்டி

    கரம் மசாலா - ½ தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    காஷ்மீரி மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    டொமேட்டோ கெட்சப் - 1 தேக்கரண்டி

    சோயா சாஸ் - ½ தேக்கரண்டி

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    ஒரு பானில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்த பின்னர் அதில் குட்டி இட்லிகளை சேர்த்து கிளறவும்.

    குறைவான தீயில் வைத்து இட்லியின் நிறம் மாறி லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.

    அதே கடாயில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    பின்னர் டொமேட்டோ கெட்சப் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் செய்து வைத்த இட்லியை சேர்த்து பிரட்டிக் விடவும். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்.

    2 நிமிடங்களுக்கு பின்னர் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.

    சுவையான சில்லி மசாலா இட்லி தயார்.

    • ஊத்தாப்பம் அனைவருக்கும் பிடிக்கும்.
    • இன்று பிரெட் வைத்து ஊத்தாப்பம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1 கப்,

    தயிர் - அரை கப்,

    பிரெட் - 5,

    வெங்காயம் - 2,

    பச்சைமிளகாய் - 5,

    கொத்தமல்லி - சிறிது,

    எண்ணெய், உப்பு, சீரகம் - தேவையான அளவு.

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பிரெட்டை பொடித்து போடவும்.

    அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் பிரெட் ஊத்தப்பம் தயார். சூடாக பரிமாறலாம்.

    இதற்கு தொட்டுகொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    • உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி உகந்தது.
    • சர்க்கரை நோயாளிகள் கோதுமை உணவுகளை சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 2 கப்

    வெங்காயம் - 3

    பச்சை மிளகாய் - 5

    சீரகம் - ஒரு டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதை கரைத்து வைத்த மாவில் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து கல்லில் கனமாக விட்டு, இருபுறமும் எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கோதுமை வெங்காய தோசை ரெடி.

    இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, புதினா சட்னி அருமையாக இருக்கும்.

    • இது எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.
    • சளி, இருமலுக்கு இது நல்ல மருந்தாக செயல்படும்.

    தேவையான பொருட்கள்:

    தூதுவளை கீரை - ½ கப்

    இட்லி அரிசி - 1 கப்

    உளுந்து - ¼ கப்

    வெந்தயம் - ½ டீஸ்பூன்

    இஞ்சி - 1 துண்டு

    பச்சை மிளகாய் - 2

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்பு அவற்றை வடிகட்டி இஞ்சி, மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன் பின்னர் மாவுக் கலவையுடன் உப்பு சேர்த்து வழக்கம் போல புளிக்க வைக்க வேண்டும்.

    இப்போது தூதுவளை தோசை மாவு தயார்.

    புளித்த பின் தோசையாகச் சுட்டு சாப்பிடலாம்.

    • ரவை உப்புமாவா என்று முகம் சுளிப்பவர்கள் கூட இந்த உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள்.
    • சத்துக்கள் நிறைந்த இந்த உப்புமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    அரிசி நொய் தயாரிக்க:

    பச்சரிசி – 1 கிலோ

    துவரம்பருப்பு- கால் கிலோ

    மிளகு, சீரகம்- தலா 10 கிராம்

    பெருங்காயம் கட்டி- சிறிய கோலி அளவு.

    செய்முறை:

    பச்சரிசியைச் சுத்தம் செய்து நன்றாக கழுவி ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். துவரம் பருப்பையும் சுத்தம் செய்து கழுவி காய வைக்கவும். நன்றாகக் காய்ந்ததும் இரண்டையும் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து மிஷினில் நொய்யாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஆறு மாதங்கள் வரை இந்த அரிசி நொய் கெடாமல் இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    நொய் அரிசி - 1 கப்,

    தாளிக்க:

    கடுகு- 1 டீஸ்பூன்,

    உ.பருப்பு, க.பருப்பு – 1 தேக்கரண்டி,

    வெந்தயம், சீரகம்- தலா 3 டீஸ்பூன்

    வரமிளகாய் -2 பெருங்காயம்,

    நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

    செய்முறை:

    வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு சேர்த்து பொரிந்ததும், உ.பருப்பு, க.பருப்பு, சீரகம், வரமிளகாய், வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் ஒருகப் அரிசி நொய்க்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    தண்ணீர் கொதித்ததும் நொய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு இருபது நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இப்போது சூப்பரான நொய் அரிசி உப்புமா ரெடி.

    • குழந்தைகளுக்கு ஏற்ற அருமையான டிபன் இது.
    • இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    முட்டை - 2

    டொமேட்டோ கெட்சப் - 1 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    வெள்ளரிக்காய் - 1

    பச்சை மிளகாய் - 3

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

    சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

    எலுமிச்சைபழச்சாறு - பாதி பழம்

    உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், வெள்ளரிக்காயை நீளவாக்கில் மெல்லிதாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

    மற்றொரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், சாட் மசாலா தூள், எலுமிச்சைபழச்சாறு ஊற்றி கலந்து வைத்துக்கொள்ளவும்.

    முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து பராத்தாவாக தேய்த்து வைக்கவும்.

    தேய்த்த பராத்தாவை சூடான பானில் சேர்த்து இருபுறமும் நெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு கரண்டி முட்டை கலவையை ஊற்றவும்.

    பின்பு அதன் மேல் வேகவைத்த பராத்தாவை வைத்து இரண்டு பக்கமும் வேகவிடவும்.

    வேகவைத்த பராத்தாவை தட்டில் வைத்து அதில் நடுவில் வெங்காய கலவையை வைத்து, பிறகு சாட் மசாலாவை தூவி அதன் மேல் டொமேட்டோ கெட்சப்பை ஊற்றவும்.

    பராத்தாவை நன்கு இறுக்கமாக உருட்டி, பட்டர் பேப்பரில் சுருட்டி வைத்து சூடாக பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சப்பாத்தி முட்டை மசாலா ரோல் தயார்!

    • சர்க்கரை நோயாளிகளுக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம்.
    • உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.

    தேவையான பொருட்கள்

    அரிசி - 1 கப்

    கம்பு - 1 கப்

    கொள்ளு - கால் கப்

    காய்ந்த மிளகாய் - 5

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - சுவைக்கு

    செய்முறை

    அரிசியை, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    கொள்ளு, கம்பை நன்றாக கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறியதும் அரிசியை, வெந்தயத்தை தனியாக அரைத்து கொள்ளவும்.

    கொள்ளு, கம்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    உப்பு சேர்த்து புளிக்க விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கம்பு - கொள்ளு தோசை ரெடி.

    • சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
    • அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கம்பில் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    கம்பு - 1 கப்

    உளுந்தம் பருப்பு - 1 குழிக்கரண்டி

    வெந்தயம் - 2 ஸ்பூன்

    கருப்பட்டி - 300 கிராம்

    ஏலக்காய் - 2

    எண்ணெய் - சிறிதளவு

     செய்முறை

    கம்பு, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும்.

    ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.

    ஊறிய கம்பை மிக்சியில் போட்டு அதனுடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்.

    அடுத்து நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து இட்லிப் பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    இந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும்.

    ×