என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உப்புமா"

    • ரவை உப்புமாவா என்று முகம் சுளிப்பவர்கள் கூட இந்த உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள்.
    • சத்துக்கள் நிறைந்த இந்த உப்புமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    அரிசி நொய் தயாரிக்க:

    பச்சரிசி – 1 கிலோ

    துவரம்பருப்பு- கால் கிலோ

    மிளகு, சீரகம்- தலா 10 கிராம்

    பெருங்காயம் கட்டி- சிறிய கோலி அளவு.

    செய்முறை:

    பச்சரிசியைச் சுத்தம் செய்து நன்றாக கழுவி ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். துவரம் பருப்பையும் சுத்தம் செய்து கழுவி காய வைக்கவும். நன்றாகக் காய்ந்ததும் இரண்டையும் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து மிஷினில் நொய்யாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஆறு மாதங்கள் வரை இந்த அரிசி நொய் கெடாமல் இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    நொய் அரிசி - 1 கப்,

    தாளிக்க:

    கடுகு- 1 டீஸ்பூன்,

    உ.பருப்பு, க.பருப்பு – 1 தேக்கரண்டி,

    வெந்தயம், சீரகம்- தலா 3 டீஸ்பூன்

    வரமிளகாய் -2 பெருங்காயம்,

    நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

    செய்முறை:

    வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு சேர்த்து பொரிந்ததும், உ.பருப்பு, க.பருப்பு, சீரகம், வரமிளகாய், வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் ஒருகப் அரிசி நொய்க்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    தண்ணீர் கொதித்ததும் நொய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு இருபது நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இப்போது சூப்பரான நொய் அரிசி உப்புமா ரெடி.

    • சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை ரவை உகந்தது.
    • டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவை உணவுகளை எடுத்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    வரமிளகாய் - 2

    இஞ்சி - சிறிது

    தேங்காய் துருவல் - அரை கப்

    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - சிறிது

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    * இஞ்சியை தட்டி வைத்து கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, வரமிளகாய், தட்டி வைத்த இஞ்சியை போட்டு தாளித்த பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, ஒரு முறை கிளற வேண்டும்.

    * அடுத்து அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

    * வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * தண்ணீர் கொதித்ததும், அதில் வறுத்த கோதுமை ரவை, தேங்காய் துருவல் சேர்த்து, நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    * பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

    * இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!

    * இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாரத்தில் 2 முறையாவது கம்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    தேவையான பொருட்கள்:

    கம்பு - ஒரு கப்,

    வெங்காயம் - 3,

    பச்சை மிளகாய் - 6,

    கடுகு - அரை ஸ்பூன்,

    உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்,

    கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்,

    உப்பு - ஒன்றரை ஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து,

    எண்ணெய் - 6 ஸ்பூன்.

    செய்முறை:

    * கம்பை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும். பிறகு அதை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் சூடானதும் சலித்து வைத்த கம்பு மாவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    * மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு கப் கம்பிற்கு இரண்டு கப் தண்ணீர் என தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    * தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள கம்பு, உப்பு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.

    * கம்பு வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு இறக்கி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான கம்பு உப்புமா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இட்லி சாப்பிடாத குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.
    • இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி - 8

    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    வேர்க்கடலை - சிறிதளவு

    முந்திரி - 10

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

    அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.

    உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதை செய்து கொடுக்கலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்

    பெரிய வெங்காயம்- 1

    தக்காளி - 1

    கேரட்- 1

    பச்சைப்பட்டாணி- கால் கப்

    உருளைக்கிழங்கு - 1

    முட்டைக்கோஸ்- துருவியது கால் கப்

    இஞ்சி- சிறிய துண்டு

    பச்சை மிளகாய்- 2

    மிளகாய் வற்றல்- 2

    உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் - தேவையான அளவு

    கொத்தமல்லி- அலங்கரிக்க

    தாளிக்க:

    நெய் அல்லது எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு- 1 டீஸ்பூன்

    கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்

    வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை- 1 இணுக்கு

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, காய்கறிகள், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெறும் கடாயில் ரவையை போட்டு சிவக்க வறுக்கவும்.

    * பச்சை பட்டாணியை வேக வைத் கொள்ளவும்.

    * 1 கப் ரவைக்கு 1 1/2 கப் தண்ணீரை வேக வைக்க வேண்டும், அதற்கு 1 1/2 கப் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.

    * வாணலியில் எண்ணெயிட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, ப.மிளகாய், காய்ந்த மிளகாய், வெங்காயத்தை வதக்க வேண்டும்.

    * பிறகு காய்கறிகளைச் சேர்த்து வதக்கின பிறகு கடைசியாகத் தக்காளியைச் சேர்க்க வேண்டும். தக்காளி சீக்கிரம் வதங்கி விடும் என்பதால் இறுதியில் சேர்த்தால் போதும்.

    * அடுத்து அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி வேக விடவும்.

    * அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.

    * காய் வெந்தவுடன் வறுத்த ரவையைக் கொதிக்கும் கலவையுடன் கொட்டிக் கொண்டே கிளற வேண்டும்(இல்லையென்றால் அடி பிடித்து விடும்).

    * ரவை வெந்து எண்ணெயிடும் போது ஒட்டாமல் வரும், அப்போது கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான காய்கறி ரவா உப்புமா ரெடி.

    * பத்து நிமிடங்களில் தயார் செய்து விடக் கூடிய எளிய சுவை மிகுந்த சிற்றுண்டி வகை இது.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடம் தான் பிடிக்கும்.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

    தேவையான பொருட்கள்:

    கல் தோசை - 3

    வெங்காயம் - 2 (மீடியம் சைஸ்)

    தக்காளி - 1

    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    மிளகு தூள் - - அரை டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 4

    கொத்தமல்லி - தேவையான அளவு

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    உப்பு - சுவைக்கு ஏற்ப

    எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

    தாளிக்க…

    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில் கல் தோசையை சிறிய துண்டுகளாக பிய்ந்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தொடர்ந்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    இவையனைத்தும் நன்றாக வதங்கியதும், பிய்ந்து வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    நாம் சேர்த்துள்ள தோசை மசாலாவுடன் நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழையைத் தூவி கீழே இறக்கவும்.

    இப்போது சூப்பரான தோசை உப்புமா தயார். அவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து சுவைக்கலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
    • சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார்.

    அரியலூர்:

    உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பொதுமக்களை சந்தித்தும் அவர் குறைகளை கேட்டறிந்தார். இதன் ஒரு பகுதியாக நல்லாம்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாராகி கொண்டிருந்தது. சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார். அப்போது காலை உணவாக உப்புமா தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து எனக்கு கொஞ்சம் தாருங்கள் என்று தட்டில் வாங்கி, உப்புமாவை சாப்பிட்ட கலெக்டர், என்ன இது உப்புமாவா? பொங்கலா? என்று சந்தேகத்தை கிளப்பினார். அதற்கு சமையலர்கள் விளக்கம் அளித்தனர். ருசி என்னமோ நன்றாகதான் உள்ளது. ஆனால் பொங்கலை போல அரிசியெல்லாம் உள்ளதே என்று கேட்ட கலெக்டர், இனி அந்தந்த உணவை, அந்தந்த உணவு பொருட்களை கொண்டு, அந்தந்த சமையல் முறையில் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • விலைகள் உணவகங்கள் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது.
    • இந்த பதிவு வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உணவுகளை ஆன்லைன் செயலிகள் மூலம் ஆர்டர் செய்து இருக்கும் இடத்திற்கு வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்பவர்கள் உணவுகளின் விலையை கண்டுகொள்வதில்லை.

    ஆனால் ஓட்டல்களில் உணவு வகைகளுக்கு இருக்கும் விலையை விட ஆன்லைன் செயலிகள் மூலம் அந்த உணவு வகைகளை ஆர்டர் செய்யும் போது அவற்றின் விலை சுமார் 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருக்கிறது.

    இதுதொடர்பாக அபிஷேக் கோத்தாரி என்ற பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், சொமோட்டோ மூலம் உப்புமா ஆர்டர் செய்த போது அதன் விலை ரூ.120 என்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று மெனுவில் உள்ள உப்புமா விலையை பார்த்த போது ரூ.40 ஆக இருந்தது.

    இதேபோல ஓட்டலில் தட்டு இட்லி விலை ரூ.60 என இருந்தது. ஆனால் ஆன்லைன் செயலியில் தட்டு இட்லி விலை ரூ.160 என காட்டியது. இதைப்பற்றிய பில்லுடன் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில், அவரது பதிவு வைரலானது.

    இதையடுத்து சொமோட்டோ நிறுவனம், அபிஷேக்கிற்கு அளித்த பதிலில், `எங்கள் செயலியில் உள்ள விலைகள் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். அதே நேரம் பயனர்கள் பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டதால் அவரது பதிவு வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • உப்புமாவில் காய்கறிகளை சேர்த்து செய்வதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்
    • உப்புமாவில் சேமியா உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
    • காலையில் சமைத்து சாப்பிட சேமியா உப்புமா தான் சிறந்தது.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 பாக்கெட்

    வெங்காயம் - 1

    பச்சை பட்டாணி - 1/2 கப்

    கேரட் - 1

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

    வரமிளகாய் - 1

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 1 1/2 கப்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்த பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அத்துடன் மஞ்சள் தூள், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    பிறகு அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால், சேமியா வெஜிடபிள் உப்புமா ரெடி!!!

    ×