என் மலர்
நீங்கள் தேடியது "#Ramadoss"
- சித்திரை முழுநிலவு மாநாடு இதுவரை நடந்தவற்றைவிட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.
- மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும்.
சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொளள அன்புமணி நியமனம் செய்யப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025ம் ஆண்டில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது.
சித்திரை முழுநிலவு மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணியை நியமித்திருக்கிறேன். சித்திரை முழுநிலவு மாநாடு இதுவரை நடந்தவற்றைவிட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.
மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும்.
சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
சமூக நீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என தெரிவிக்க வேண்டும்./ அனைத்து சமூகங்களையும் மாநாட்டுக்கு அழைத்து வரவேண்டும்.
மாநாட்டுக்கு வரும் வழியில் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்துவிடாமல் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.
- அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.
- சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.
மாமல்லபுத்திரத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* ராமதாஸின் கொள்கைக்கு இணங்க சித்திரை திருவிழா மாநாடு நடைபெறுகிறது.
* அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.
* சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.
* மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களையும் ராமதாஸ் அழைத்துள்ளார். குறிப்பாக பின்தங்கிய மக்களை அழைத்துள்ளார்.
* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான யோசனைகள் மாநாட்டின் மூலம் வழங்கப்படும்.
* தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருள், மது விற்பனையை ஒழிக்க வேண்டும் என்றார்.
- ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது.
- அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம்.
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்து வருகிறார். கௌரவ தலைவராக ஜி.கே. மணி இருந்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கட்சி நிறுவனர் ஆவார்.
கட்சியில் உறவினருக்கு பதவி வழங்கியது தொடர்பாக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மேடையிலேயே, கட்சியில் இருந்தால் இரு... இல்லையென்றால் வெளியேறு... என டாக்டர் ராமதாஸ் கோபமாக தெரிவித்தார்.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்குவதாக தெரிவித்தார். இதனால் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே கட்சிக் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி கூறுகையில் "மாமல்லபுரத்தில் மே 11ஆம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவருமே கலந்து கொள்வார்கள். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம்" எனத் தெரிவித்தார்.
- பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை ராமதாஸ் திரட்டி வருகிறார்.
- யார் சொல்வதை கேட்பது என்று தெரியாமல் பா.ம.க. நிர்வாகிகள் குழப்பம்.
சென்னை:
பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சத்தை அடைந்து உள்ளது.
தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு தலைவர் பதவியையும் தானே ஏற்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் அறிவித் தார். இதனால் தலைவர் யார் என்ற குழப்பம் கட்சிக்குள் ஏற்பட்டது.
இந்த நிலையில் பொதுக் குழுவில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு தேர்தல் கமிஷனாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். எனவே நானே தலைவராக நீடிக்கிறேன் என்று டாக்டர் அன்புமணி அறிவித்தார்.
இதை அடுத்து இருவரையும் சமாதானப் படுத்தும் முயற்சியில் ஜி.கே.மணி, பு.தா.அருள் மொழி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால் கட்சி தொடர்பாக நான் எடுத்த முடிவு உறுதியானது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அத்துடன் தான் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துவதற்காக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.
ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி தனது தலைவர் பதவிக்கு அங்கீகாரம் பெற்று விட்டால் அன்புமணியின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை அவர் திரட்டி வருகிறார்.
அதே நேரம் தந்தை ஏற்பாடு செய்துள்ள அந்த பொதுக்குழுவுக்குயாரையும் செல்ல விடாமல் தடுப்பதில் அன்புமணி ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். இதனால் யார் சொல்வதை கேட்பது? என்று தெரியாமல் பா.ம.க. நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு இளை ஞர் அணி தலைவர் பதவி கொடுத்ததை அன்புமணி விரும்பவில்லை. அதை வெளிப்படையாகவே எதிர்த்தார். அதனால்தான் இந்த மோதலே உருவானது.
நேற்று முகுந்தன், அன்புமணி வீட்டுக்கு சென் றார். தாத்தா ராமதாசை சமாதானப்படுத்த வரும்படி அப்போது அழைப்பு விடுத் தார். ஆனால் இதுவரை ராமதாசை சந்திக்க அன்பு மணி செல்லவில்லை.
ஆனால் திருவிடந்தையில் அடுத்த மாதம் 11-ந்தேதி நடைபெறும் வன்னியர் இளைஞர் மாநாட்டு பணி களை தலைவர் என்ற முறை யில் டாக்டர் அன்புமணி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும் போது, நானே பா.ம.க. தலைவராக இருக்கிறேன். ராமதாசுடன் ஏற்பட்டுள்ள சண்டை உட்கட்சி பிரச்சினைதான் விரைவில் முடியும் என்றார்.
அதே போல் டாக்டர் ராமதாசும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தீவிரமாக செயல்படுங்கள். கட்சியினர் யாரும் சோர்ந்து போக வேண்டாம் என்று சமூக வலைத் தளத்தில் பதிவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே நீடிக்கும் இந்த மோதல் எப்படி முடியும்? எப்போது முடியும்? என்று தெரியாமல் கட்சி நிர்வாகிகள் தவிக்கிறார்கள்.
சமாதான முயற்சியில் ஈடுபட்டு வரும் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்த போது, வரும் தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தையை தானே நடத்து வேன் என்பதில் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார்.
தலைவர் என்ற ரீதியில் அன்புமணி தனியாக சென்று கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது, யாரையும் சந்திப்பது போன்ற வேலைகளில் அன்புமணி ஈடுபட கூடாது என்பதிலும் கறாராக இருக் கிறார். இதற்கு அன்புமணி சம்மதித்தால் விரைவில் சமாதானம் வரும் என் றார்கள்.
- தைலாபுரம் தோட்டத்தில் பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- அக்கரையில் உள்ள இல்லத்தில் பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ஆலோசனையின் போது, எல்லாம் சரியாகிவிடும் என நிர்வாகிகளிடம் ராமதாஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தைலாபுரம் தோட்டத்தில் பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னை அக்கரையில் உள்ள இல்லத்தில் பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி வருகை தந்தார்.
- தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார்.
விழுப்புரம்:
தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பா.ம.க.வில் குழப்பம் நிலவி வருகிறது. சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகளை ராமதாஸ் சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி வருகை தந்தார். அவர் ராமதாசை சந்தித்து பேசினார்.
இதன்பின் வெளியே வந்த சைதை துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி-யில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்ததற்காக ராமதாஸ் என்னை பாராட்டி இருந்தார். அதனால் ராமதாசை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காகவே வந்தேன்.
இதனிடையே, ராமதாஸ், அன்புமணி என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார்.
- நேற்று சுமார் இரவு 4 மணி நேரமாக டாக்டர் ராமதாசிடம் ஜி .கே. மணி ஆலோசனை மேற்கொண்டார்.
- பா.ம.க. நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைராக நானே செயல்படுவேன். செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் என பரபரப்பாக பேட்டியளித்தார்.
இந்த நிலையில் அவரை சமாதானம் படுத்துவதற்காக கடந்த 3 நாட்களாக பா.ம.க. முக்கிய நிர்வாகிகள், டாக்டர் ராமதாசின் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று சுமார் இரவு 4 மணி நேரமாக டாக்டர் ராமதாசிடம் ஜி .கே. மணி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி, பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மயிலம் எம்.எல்.ஏ.சிவக் குமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்து தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அன்புமணியின் கருத்தை கேட்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள அன்புமணியின் வீட்டில் நிருபர்கள் குவிந்துள்ளனர்.
- காரில் வெளியே புறப்பட்ட அன்புமணியின் மனைவி சவுமியாவிடம், பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர்.
சென்னை:
பா.ம.க. தலைவர் யார்? என்பது தொடர்பாக அந்த கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க. தலைவர் பதவியை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என்று ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவராக நான் நீடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இந்த மோதல் தொடர்பாக அன்புமணியின் கருத்தை கேட்பதற்காக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள அன்புமணியின் வீட்டில் நிருபர்கள் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையில் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்ட அன்புமணியின் மனைவி சவுமியாவிடம், பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள மோதல் பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
- ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ம.க. நிர்வாகிகள், குடும்பத்தினர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
- பாட்டாளி மக்கள் கட்சி மிகுந்த வலிமையாக செயல்படும்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கட்சியின் நிறுவனரான நானே கட்சியின் தலைவராக செயல்படுவேன். கட்சியின் தலைவராக இருக்கும் அப்புமணி ராமதாஸ் கட்சியின் செயல் தலைவராக செயல்படுவார் என ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த தகவல் பா.ம.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ம.க. நிர்வாகிகள், குடும்பத்தினர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு கட்சியிலும் இது போன்ற ஒரு இயல்பு வரும். மாற்றங்கள் வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இருவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவார்கள். பாட்டாளி மக்கள் கட்சி மிகுந்த வலிமையாக செயல்படும். கட்சிக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. அதை இழக்க மாட்டோம். ஒற்றுமையாக இருக்க வேண்டிய எல்லாவற்றையும் செய்வோம்.
அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக இருவரையும் சந்தித்து பேசுவேன். மிக விரைவில் நல்ல அறிவிப்பு வரும். இந்த சலசலப்பு மிக விரைவில் சரியாகும் என்றார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்தார் ராமதாஸ்.
- பாமக நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பேரியக்கத்தை தொடங்கிய நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுகொள்கிறேன்.
தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்துவரும் அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்று நேற்று அவர் அறிவித்தார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் நீக்கியது தொடர்பாக தலைவர் ராமதாசை சந்தித்து சமாதானம் செய்வதற்காக தைலாபுரத்திற்கு ஜி.கே.மணி சென்றார்.
பாமக நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி கூறுகையில், "ராமதாசுடன் என்ன பேசினேன் என்பது குறித்து வெளியில் சொல்ல முடியாது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும்.
நான் சொன்ன அனைத்தையும் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்" என்றார்.
- பா.ம.க. தலைவர் பதவி குறித்த ராமதாசின் அறிவிப்பு எதிர்பாராத ஒன்று.
- நேற்று தான் ஐயா அறிவித்தார், வேகமாக இருப்பார் என்பதால் நேற்று அவரை சந்திக்கவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பேரியக்கத்தை தொடங்கிய நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுகொள்கிறேன்.
தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்துவரும் அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்று நேற்று அவர் அறிவித்தார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் நீக்கியது தொடர்பாக தலைவர் ராமதாசை சந்தித்து சமாதானம் செய்வதற்காக தைலாபுரத்திற்கு ஜி.கே.மணி வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* பா.ம.க. தலைவர் பதவி குறித்த ராமதாசின் அறிவிப்பு எதிர்பாராத ஒன்று.
* நேற்று தான் ஐயா அறிவித்தார், வேகமாக இருப்பார் என்பதால் நேற்று அவரை சந்திக்கவில்லை.
* ராமதாசும், அன்புமணியும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடும்பத்தினர் டாக்டர் ராமதாசிடம் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.
- சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார் .
அப்போது கட்சி நிறுவனரான நான் இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட போவதாக அறிவித்தார். கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில் பா.ம.க. வின் பல்வேறு நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் கட்சியில் தலைவராக தொடர வேண்டும் என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று மாலை 4 மணி அளவில் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோ சனை நடத்துவதற்காக டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் இளைஞர் அணி தலைவர் முகுதனின் தாயாருமான காந்தி, இளைய மகள் கவிதா, மாநில பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன்,மயிலம் எம்.எல்.ஏ.சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி,முன்னாள்எம்.பி. செந்தில்குமார், பா.ம.க. மாநில நிர்வாகி வக்கீல் பாலு ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்திக்க வந்தனர்.
இதில் பா.ம.க. பொரு ளாளர் திலகபாமாவிற்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. மற்றவர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்திவிட்டு ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.
இன்று காலை பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும்பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்திக்க உள்ளனர். அதில் சுமூகமான முடிவு ஏற்படும் என பா.ம.க. வட்டாரம் தெரிவிக்கிறது.
டாக்டர் ராமதாஸ் மகள்கள் மற்றும் பேரன் முகுந்தன் ஆகியோர் கட்சியினர் வெளியே சென்ற பிறகு மீண்டும் ஆலோசனை ஈடுபட்டனர்.
இரவு வரை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. ஆனால் அதில் எந்த முடிவும் ஏற்படாமல் சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
ராமதாசை சந்தித்து விட்டு வந்த வக்கீல் பாலுவிடம் நிருபர்கள், ஆலோசனையில் என்ன பேசினீர்கள் என்று கேட்டனர். அதற்கு பாலு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இது வழக்கமான நிகழ்வு தான் எனக் கூறிவிட்டு எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் கிளம்பி விட்டார்.
3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை முடிந்த நிலையில் டாக்டர் ராமதாசின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்தி, இளைய மகள் கவிதா மற்றும் பா.ம.க. இளைஞரணி தலைவர் முகுந்தன் ஆகியோர் மட்டுமே டாக்டர் ராமதாசிடம் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வக்கீல் பாலு,முன்னாள் எம்.பி. செந்தில்குமார்,தலைமை நிலைய செயலாளர் அன்பழகன்ஆகியோர் டாக்டர் அன்புமணி ராமதாசை இன்று சென்னையில் சந்திக்க உள்ளதாகவும் பா.ம.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.