என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் விருது"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா-தி.மு.க. பவள விழா வருகிற 17-ந்தேதி வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, முன்னாள் அமைச்சர் மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது, பெங்களூரு ந.ராமசாமிக்கு பேராசிரியர் விருது வழங்கப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கினார்.
    • தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனான எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.

    முத்தமிழ் பேரவையின் பொன்விழா ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

    அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கினார்.

    விருது பெற்ற நடிகர் சத்யராஜ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சி மிக மிக சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதற்கு மிகப்பெரிய உதாரணம், கோவைக்கு முதலமைச்சர் வந்திருந்தபோது இதுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது.

    ஓய்வறியா சூரியன் என்று டாக்டர் கலைஞரை கூறுவார்கள். அதேபோல், ஸ்டாலின் அவர்களும் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுற்றுபவர். ஓயாமல் உழைப்புக்கு சொந்தக்காரர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

    அவர்களின் தலைமையில் தினந்தினம் திட்டங்களை யோசித்து அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்து தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆராய்ந்து தொடர்ந்து நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

    அதுதான் தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனான எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.

    நான் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடிக்கிறேன். ஒவ்வொறு ஊருக்கும் சென்றுவிட்டு வரும்போது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து தெரிகிறது.

    அதிகபட்சமாக, அந்த மாநிலங்களின் தலைநகர் மட்டும் ஓகோ என்று இருக்கும். ஆனால், தலைநகரைவிட்டு பிற இடங்களுக்கு செல்லும்போதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்னவென்று புரியும்.

    தமிழ்நாட்டை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். ஏன் என்றால், இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களில் இருந்து ஏன் வேலை தேடி வருகிறார்கள் என்றால், இரண்டு விஷயம்.

    தமிழ்நாட்டின் வாழ்க்கைதரம் உயர்ந்துவிட்டது. அவர்களின் வாழ்க்கை தரம் குறைவாக இருக்கிறது. நம் மக்கள் நன்றாக படித்து எங்கேயோ சென்றுவிட்டனர்.

    1967க்கு பிறகு, திராவிட கருத்தியல் கூடிய ஆட்சியில் தமிழ்நாடு சிறப்பாக நடத்த ஏய்திவிட்டது. அதனால்தான், தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு திராவிட கருத்தியலை போதிக்கவேண்டும்.

    தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளாலும், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளாலும், கலைஞரின் சிந்தனைகளாலும், செயல் திட்டங்களாலும்தான் தமிழ்நாட்டு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று வட மாநில தொழிலாளர்கள் அவர்களின் மாநிலத்தில் சொல்ல வேண்டும்.

    சிறப்பான முதல்வர் கையில் இருந்து கலைஞர் விருது பெற்றதில் பெருமைக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பரிசுத் தொகை ரூபாய் பத்து இலட்சமும் வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3 அன்று வழங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

    விருதாளரைத் தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில்,  நடிகர் சங்கத் தலைவர் திரு.நாசர்,  திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட  குழு அமைக்கப்பட்டு, 2022-ஆம் ஆண்டிற்கான  கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்காக பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிய புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 90) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 

    நடிகருக்கென்று தனிபாணி கொள்ளாமல்,  தன்னை முன்னிறுத்தாமல், கதாபாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்.   

    திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், முன்னணி நடிகர்கள்,  நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த 1,000  திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார்.  60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த  அனுபவம் ஒரு சாதனையாகும்.  

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினமான நாளை (3.6.2022) ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பரிசுத் தொகை ரூபாய் பத்து இலட்சமும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
    ×