என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுக்குடிநீர் திட்டம்"

    • 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
    • துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகாட்சி பொறியாளா் கண்ணன் மற்றும் நீா்பாசன துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ரூ.1.120.57 கோடி மதிப்பீட்டில் திருப்பூா் மாநகராட்சிக்கான 4 -வது கூட்டுகுடிநீா் திட்ட நீரேற்று நிலையத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:- திருப்பூா் மாநகராட்சியில் 4 -வது கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் ரூ.1,120.57 கோடி மதிப்பீட்டில் 6 பகுதிகளாக நடைபெற்று வருகின்றன. இதில், ஒரு நீரேற்று நிலையம், ஒரு குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், 144 கிலோ மீட்டா் தொலைவுக்கு குடிநீா் ஈா்ப்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மொத்தம் உள்ள 29 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளில், 21 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளின் பணிகள் நிறைவடைந்து, நீரேற்றம் செய்யப்பட்டுள்ளது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது ஒருவருக்கு 135 லிட்டா் குடிநீா் வழங்கப்படும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயன்பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இதைத்தொடா்ந்து, அன்னூா் வட்டம், ஒட்டா்பாளையத்தில் 4-வது கூட்டு குடிநீா் திட்ட சுத்திகரிப்பு நிலையம், பவானி சாகா் வடிநிலக்கோட்டம், ஓடந்துறை கிராமத்தில் பவானி ஆற்றின் குறுக்கே ரூ.24.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளையும் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ், மேயா்தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகாட்சி பொறியாளா் கண்ணன் மற்றும் நீா்பாசன துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

    ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் ரூ. 4 கோடியில் திருமண மண்டபம் அமைத்து கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    ராஜபாளையம்


    ராஜபாளையம் நகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள்,  ெரயில்வே மேம்பாலப்பணிகள் குறித்து எம்.பி தனுஷ்குமார், எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தலைமையில் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. 

    இந்த கூட்டத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து பேசுகையில் குடியிருப்பு மற்றும் வணிகப்பயன்பாடுகளை சேர்த்து 48 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. இதில் 39 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 


    மீதமுள்ள 9 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் ஆகஸ்டு மாததத்திற்குள் வழங்கப்படும் எனவும், குடிநீர் கட்டணம் சதுரஅடி கணக்கீடு செய்யப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் குடிநீர் கட்டணம் அதிகமாக உள்ளதாக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு, பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்ததால் அதனை குறைக்க நகராட்சியில்,  வீட்டுப்பயன்பாட்டிற்கு 100 ரூபாயாகவும், வணிக பயன்பாட்டிற்கு 200 முதல் 300 ரூபாயாகவும் கட்டணம்  நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றி சென்னையிலுள்ள நகராட்சிகளின் ஆணையாளர் அனுமதிக்கு அனுபி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ராஜபாளையம் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் இந்தாண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 

    ராஜபாளையம் பச்சமடம் பகுதியில் செயல்பட்டுவரும் குப்பைகளை பிரித்து உரமாக மாற்றும் நுண்ணுர செயலாக்க மையத்தை வேறு இடத்திற்கு மாற்றிடவும், அந்த இடத்தில் ஏழை-எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எம்.பி. நிதியில் ரூ. 1 கோடியும், எம்.எல்.ஏ. நிதியில் ரூ. 1 கோடியும், பொதுநிதியில் ரூ. 2 கோடியும் ஒதுக்கீடு செய்து மொத்தம் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன திருமண மண்டபம் அமைக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. 

    அதுபோல் செட்டியார்பட்டி சேத்தூர் மற்றும் கிராமப்பகுதிகளிலும் இதுபோல் திருமண மண்டபம் அமைக்கப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

    இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி,  தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா,துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு, மேம்பாலப்பணி கோட்டப்பொறியாளர் லிங்குசாமி, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம்,  தாமிரபரணி திட்டப்பணி உதவி பொறியாளர் கற்பகம், பாதாளசாக்கடைத்தி ட்டப்பணி உதவி நிர்வாக பொறியாளர் காளிராஜன், வருவாய்த்துறை ஆய்வாளர் வேல் பிரியா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

    ×